search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "book launch"

    • ஜம்புத்தீவு பிரகடனம் குறித்த நூல் வெளியீட்டு விழா-பொதுக்கூட்டம் நடந்தது.
    • பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அரண்மனை வாசலில் மாமன்னர் மருதுபாண்டி யர்கள் அறிவித்த ஜம்புத்தீவு பிரகடனத்தை இந்திய சுதந்திரப் போராட்ட மாக மத்திய, மாநில அரசுகள் அறிவுப்புச்செய்ய வலியுறுத்தி சிவகங்கையின் அனைத்துசமூக மக்கள், அனைத்து சமூக அமைப்பு களின் சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது.

    இதில் பங்கேற்றவர்கள் 1801-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் நாள் திருச்சியில் மாமன்னர்கள் மருது சகோதரர்கள் ஜம்பு தீவு பிரகடனத்தை அறிவித்தனர். இதனை மத்திய, மாநில அரசுகளின் பார்வைக்கு கொண்டு சென்று முதல் சுதந்திர போராட்டமாக அறிவிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினர் மேலும் ஜம்பு தீவு பிரகடனம் சம்பந்தப்பட்ட நூல் வெளியீட்டு விழா வும் நடைபெற்றது

    இவ்விழாவில் இளைய மன்னர் மகேஷ் துரை, முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சி யப்பன், கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணி முத்து முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் குண சேகரன், நாகராஜன், மற்றும் நகர்மன்ற உறுப்பி னர்கள், இஸ்லாமிய தலை வர்கள், மூத்த கல்வியாளர்கள், பல்வேறு சமூக அமைப்பின் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
    • விழாவுக்கு பள்ளியின் செயலாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார்.

    மதுரை

    மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பாரதியாயார் பிறந்தநாள் மற்றும் குழந்தைகள் தினம், புலவர் சங்கரலிங்கம் எழுதிய சர்தார் வல்ல பாய்படேல் வரலாற்று புத்தகம் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் செயலாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். ஜெயபிரபா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கே.வி.கே.ஆர். பிரபாகரன், தொழிலதிபர்கள் பிரான்சிஸ் பாண்டியன், பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் சர்தார் வல்லபாய் பட்டேல் நூலினை தொழிலதிபர் நாகரத்தினம் வெளியிட்டார். அன்னை பாத்திமா கல்லூரி குழுமத்தலைவர் ஷா பெற்றுக்கொண்டார். இதில் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்களும், பள்ளி மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் பங்கேற்ற னர்.

    முடிவில் புலவர் சங்கரலிங்கம் நூல் ஏற்புரை மற்றும் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

    ×