என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருடன் எச்.ராஜா வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #HRaja #BJP

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கே.பள்ளி வாசல் மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி உயர்நீதி மன்ற மதுரை கிளையில் அனுமதி பெற்று மெய்யபுரம் மகாமுத்து மாரியம்மன் கோவில் முன்பு விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    நேற்று விஜர்சனம் செய்வதற்காக அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் மெய்யபுரம் ஊருக்குள் வீதிகளில் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலமாக செல்ல பொது மக்கள் முயன்றனர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இரும்பு தடுப்புகள் போட்டு தடுத்து நிறுத்தினர். இதற்கு எச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் போலீசாரை கண்டித்து, மதுரை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் எச்.ராஜா மற்றும் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், வருவாய் அதிகாரி கோகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஊர்வலம் ஊருக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

    இதையடுத்து விநாயகர் சிலை மெய்யபுரத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, மெய்யபுரத்தில் உள்ள குளத்தில் கரைக்கப்பட்டது.

    ஊர்வலத்தில் எச்.ராஜா பேசுகையில், ‘‘மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்கு போலீசார் அனுமதி அளிக்காதது அதிர்ச்சியை அளிக்கிறது. இங்கு நான் நின்று பேசுவதற்கான மேடையை போடக்கூடாது என்று திருமயம் போலீசார் பொதுமக்களை மிரட்டி உள்ளனர். என்னை எதிரியாக பார்க்கின்றார்கள்.

    நாங்கள் இதுவரை ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நினைத்து கொண்டிருந்தோம். தற்போது போலீசார் எதிர்க்க சொல்கின்றனர். இனி எதிர்த்து நின்று பார்ப்போம்’’ என்றார். இதனிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பாக எச்.ராஜா மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளனர். #HRaja #BJP

    அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க அரசை கண்டித்து புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 18-ந்தேதி காலை9 மணியளவில் புதுக்கோட்டை திலகர் திடலில் நடக்கிறது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர்கள் எஸ்.ரகுபதி எம்.எல்.ஏ., கே.கே.செல்லப்பாண்டியன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க அரசில் இன்னல்களுக்கு ஆளாகாத மக்களே இல்லை என்ற நிலையில் அ.தி.மு.க ஆட்சி தொடர்கிறது. அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் செய்யாத அமைச்சர்களே இல்லை என்ற வண்ணம், அனைத்து துறைகளிலும், குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழல், ஸ்மார்ட் சிட்டி ஊழல், முட்டை மற்றும் பருப்பு கொள்முதலில் ஊழல், பேருந்து வாங்குவதில் ஊழல், குட்கா ஊழல் போன்ற ஊழல்கள் நடந்துள்ளது.

    ஊழல் கறை படிந்த இந்த அ.தி.மு.க அரசை தூக்கி எறிவோம் என்ற தி.மு.க. தலைவரின் அறை கூவலுக்கு ஆக்கம் சேர்க்கும் வகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க அரசை கண்டித்து புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 18-ந்தேதி காலை9 மணியளவில் புதுக்கோட்டை திலகர் திடலில் நடக்கிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள, இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை, வட்டக்கழக செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னோடிகள், செயல்வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு அ.தி.மு.க. அரசில் நடைபெற்று வரும் ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் ஒன்று கூடி இப்போராட்டம் மாபெரும் வெற்றியடைய செய்யபாடுபடுவோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
    ஆண்டிற்கு 80 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக அரசு மருத்துவகல்லூரி மனநல ஆலோசகர் கூறியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு நலச்சங்கம் மற்றும் பாலன் நகர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் சார்பில் உலக தற்கொலை தடுப்பு தின கருத்தரங்கம் நடைபெற்றது. அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் ராமர் தலைமை தாங்கினார். பயிற்சி அலுவலர்கள் சுந்தர கணபதி, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச்சங்கத் தலைவர் மாருதி க.மோகன் ராஜ் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், பலர் பிரச்சினைகளுக்கு தீர்வு தற்கொலை என எண்ணுகின்றனர். தற்கொலை பிரச்சினைகளுக்கு தீர்வு ஆகாது. அதனை எதிர்கொண்டால் தற்கொலை செய்யும் எண்ணம் வராது. மேலும் மன அழுத்தமும் தற்கொலைகளுக்கு காரணமாக உள்ளது என்றார்.

    அரசு மருத்துவக்கல்லூரி மனநல மருத்துவர் அஸ்மா நிஜாமுதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மனநல விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது, உலக அளவில் வருடத்திற்கு 80 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்தியாவில் மட்டும் ஒரு லட்சம் ஆண்களில் 15 சதவீதம் பேர் தற்கொலை செய்கிறார்கள். ஒரு லட்சம் பெண்களில் 8 சதவீதம் பேர் தற்கொலைக்கு ஆளாகிறார்கள். இதில் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வது, துன்புறுத்துவது போன்ற செயல்களில் பெரும்பாலும் இளம் வயதினர் குறிப்பாக பெண்களே ஈடுபடுகின்றனர்.

    இதில் மரபணு சார்ந்த கோளாறுகள், குடும்ப சூழ்நிலை, கடன் தொல்லை, தாய்-தந்தை இடையில் சண்டை, குடிகார தந்தை, தற்கொலையில் ஈடுபட்டு இறந்து போன தாய், மற்றும் சுற்றுச் சூழலால் முக்கியமாக காதல் தோல்வி, மது போதைக்கு அடிமை ஆகுதல், முகநூல், வலைதளம், இன்ஸ்டாகிராம், இது தவிர மோமோ போன்ற காரணங்களால் தற்கொலை அதிகமாக வருகிறது.

    தனிமை, விரக்தி காரணம் இல்லாமல் கோபம் அதிகமாக வருவது ,தாழ்வு மனப்பான்மை, தற்கொலை எண்ணங்கள் பற்றி பேசுவது, இறப்பு பற்றி பேசுவது, மற்றவர்களிடம் பாரமாக இருப்பது போன்று எண்ணுவது, தற்கொலை செய்து கொல்வேன் என மிரட்டுவது போன்றவையே தற்கொலைக்கான எண்ணங்களாக தோன்றும்.

    இதனை தடுக்க மனநல மருத்துவரை அணுகுதல், பிசியோதெரப்பி வழங்குதல் தற்கொலை செய்து கொள்ள தூண்டும் பொருட்கள் (கத்தி, வி‌ஷம், ஆசிட், அரிவாள்) அவர்கள் பார்வையில் படாதவாறு வைத்துக்கொள்ள வேண்டும். மனநோய் இருந்தால் உரிய மருத்துவம் எடுத்துக்கொள்ள வேண்டும்.அவர்கள் தனிமையில் இல்லாதவாறு தீவிர கண்காணிப்பு அவசியம். மேலும் உடனடியாக தீர்வு வேண்டுமெனில் அரசின் இலவச தொலைபேசியை பயன்படுத்தி ஆலோசனை பெறலாம்.மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் அணுகலாம் என்றார்.

    முன்னதாக நாட்டுநலப்ணித்திட்ட அலுவலர் ஜோதி மணி வரவேற்றார். முடிவில் பயிற்சி அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார். இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். #tamilnews
    புதுக்கோட்டை அருகே கல் குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர் உடல் சிதறி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    விராலிமலை:

    புதுக்கோட்டை அருகே முத்துடையான்பட்டி கிராமத்தில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு ஜல்லி மற்றும் பாறாங்கற்களாக அனுப்பப்படுகிறது. இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பாறைகளை உடைப்பதற்காக சக்தி வாய்ந்த வெடிகள் வைக்கப்பட்டன. அந்த பகுதியில் பெய்த மழை காரணமாக அந்த வெடிகள் வெடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து நேற்று மாலை குவாரிக்கு வந்த மேற்பார்வையாளரான முத்துடையான்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 50) அந்த வெடிக்காத வெடியை கையில் எடுத்து வைத்து பார்த்துக்கொண்டு இருந்தார். அவருக்கு அருகில் மற்ற தொழிலாளர்கள் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஆறுமுகம் கையில் இருந்த வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். மேலும் அங்கிருந்த வர தாவயல் பகுதியை சேர்ந்த பழனிவேல் (67) உள்பட 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    புதுக்கோட்டை அருகே முத்துடையான்பட்டியில் வெடி விபத்து ஏற்பட்ட கல் குவாரியை படத்தில் காணலாம்.

    உடனடியாக அங்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வேன் மூலம் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று அதிகாலை பழனிவேல் என்பவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    மற்றவர்கள் தொடர்ந்து சிசிக்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குவாரி வெடி விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, தொழிலாளர்களிடம் பீதியை உருவாக்கியுள்ளது.

    இதற்கிடையே வெடி விபத்தில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மகன் இறந்த செய்தியை கேட்டு முத்துடையான்பட்டியில் வசித்து வரும் ஆறுமுகத்தின் தாய் தீர்த்தாயி கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறிவந்தனர். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

    மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் மரணம் அடைந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தமிழக அரசின் ஆயுள் காலத்தை தீர்மானிக்கும் இடத்தில் பிரதமர் மோடி உள்ளார் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். #mutharasan #pmmodi #tngovt

    புதுக்கோட்டை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் ஒருவர் மீது ஒருவர் குறை கூறிக்கொண்டு மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். ஆனால், அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் கேட்பது பணி நிரந்தரம். எனவே அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

    காவிரியில் தண்ணீர் வந்தும் கடைமடை பகுதியை தண்ணீர் சென்றடையாததால் நேரடி விதைப்பின் மூலம் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகி வருகின்றன. கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்வதற்கும், கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தம்பிதுரை கூறுவது போன்று தி.மு.க.- பா.ஜ.க. இடையே உறவு எதுவும் கிடையாது.


    பொதுக்குழுவில் மோடி அரசை வீழ்த்த அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்று ஸ்டாலினே கூறியுள்ளார். சொந்த எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் ஆகியோரின் நம்பிக்கையை இழந்து பிரதமரின் தயவால் பழனிச்சாமி அரசு நாட்களை நகர்த்தி கொண்டிருக்கிறது. தமிழக அரசின் ஆயுள் காலத்தை தீர்மானிக்கும் இடத்தில் மோடி உள்ளார். 

    இவ்வாறு அவர் கூறினார். #mutharasan #pmmodi #tngovt 

    புதுக்கோட்டையில் குடும்ப தகராறில் ஆசிட்டை குடித்து கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 30). இவர் அன்னவாசல் அருகே உள்ள பரம்பூரில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். நேற்று முனதினம் காலை அருண்குமார் வேலைக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. 

    இந்தநிலையில் அருண்குமார் புல்வயல் பகுதியில் உள்ள காட்டு பகுதிக்குள் ஆசிட் குடித்த நிலையில் உயிருக்கு போராடுவதாக அவரது நண்பர்களுக்கு தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து அவரது நண்பர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அருண்குமாரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அருண்குமார் பரிதாபமாக இறந்தார்.

    அவர் குடும்ப தகராறு காரணமாக ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் பணிச்சுமையால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும்  அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அருண்குமாருக்கு திருமணமாகி மீனாட்சி என்ற மனைவியும், 10 மாத ஆண் குழந்தையும் உள்ளது.
    அன்னவாசல் அருகே அனுமதி இன்றி மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை பகுதியில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் குடுமியான்மலையை அடுத்த அண்ணாபண்ணை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த லாரியை பறிமுதல் செய்து, அதனை ஓட்டி வந்த டிரைவர் கன்னியாகுமரியை சேர்ந்த சுசீந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விற்பனை முனையக் கருவி மூலம் உரங்கள் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் ஆதார் அட்டையினை அவசியம் கொண்டு வந்து உரங்களை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில், தற்போது சம்பா பருவ பணிகள் தொடங்க உள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை மண்வள அட்டை பரிந்துரையின் அடிப்படையில் உரமிடுவதால் மண்வளத்தினை பாதுகாப்பதுடன், உர செலவும் குறைகிறது.

    எனவே விவசாயிகள் மண்வள அட்டையின் பரிந்துரைப்படி பயிருக்கு உரமிட வேண்டும். தற்போது விற்பனை முனையக் கருவி மூலம் உரங்கள் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டையினை அவசியம் கொண்டு செல்வதுடன் தங்களின் கைரேகையினை பதிவு செய்து உரங்களை பெற வேண்டும். உரங்களை விற்பனை நிலையங்களில் வாங்கும்போது தவறாது ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். விவசாயிகளை தவிர மற்றவர்களின் ஆதார் எண் மற்றும் கைரேகை பெற்றுக் விற்பனை முனைய கருவி மூலம் உரங்கள் விற்பனை செய்யப்பட்டால் உர விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மொத்த உர விற்பனையாளர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உரங்களை பிற மாவட்டங்களுக்கு மாற்றம் செய்திடக் கூடாது. விவசாயிகளுக்கு உரங்களை விற்பனை செய்யும்போது அதிகபட்ச விற்பனை விலைக்கு உட்பட்டு விற்பனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 
    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. #BharathBandh #PetrolDieselPriceHike

    புதுக்கோட்டை:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி மாவட்டத்திற்குட்பட்ட கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

    புதுக்கோட்டை நகரில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கீழராஜவீதி, பிருந்தாவனம், டி.வி.எஸ். கார்னர் ஆகிய இடங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. ஓட்டல்களும் மூடப்பட்டன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.

    இருப்பினும் பஸ் நிலையங்களுக்கு குறைவான பயணிகளே வந்திருந்தனர். 50 சதவீத ஆட்டோக்கள் இயக்கப்பட வில்லை. புதுக்கோட்டை நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் பஜார் பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடின.

    இந்தநிலையில் பெட் ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து புதுக் கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் -தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியண்ணன் அரசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீன வர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் அளவுக்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கரூர் மாவட்டத்தில் இன்று கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. ஆட்டோக்கள், லாரிகள் இயங்க வில்லை. சரக்குகள் ஏற்றி செல்ல முடியாததால் மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான கொசு வலைகள், சிமெண்ட், காகிதம், முருங்கைக்காய், ஜவுளிகள் உள்ளிட்ட பொருட்கள் தேக்கமடைந்துள்ளன.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ராஜூ கூறுகையில், எங்களது பேரமைப்பு சார்பில் கடையடைப்பு தொடர்பாக எங்களுக்கு எந்தவித தகவலும் வரவில்லை. ஆனால் கோரிக்கைக்கு தார்மீக ஆதரவு தெரிவிக்கிறோம் என்றார். மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. கரூர் உழவர்சந்தை, காய்கறி மார்க்கெட் வழக்கம் போல் இயங்கின.

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. தனியார் பஸ்கள் ஒரு சில மட்டும் இயக்கப்பட வில்லை.

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஸ்டிரைக்கால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சி.ஐ.டி.யு. சங்கத்திற்கு உட்பட்ட ஆட்டோக்கள் மட்டும் இயங்கவில்லை. மற்ற வாகனங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கின. மேலும் கடைகளும் திறக்கப்பட்டன.

    திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, துறையூர், லால்குடி, திருவெறும்பூர், துவாக்குடி, முசிறி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. திருச்சி மாநகர பகுதியில் இன்று காலை வழக்கம்போல் திறக்கப் பட்ட கடைகள் காலை 10 மணிக்கு மேல் அடைக்கப்பட்டன.

    பெரியகடை வீதி, என். எஸ்.பி. ரோடு, மலைக்கோட்டை, மெயின்கார்டு கேட், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட இடங்களில் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடின. அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின.  #BharathBandh #PetrolDieselPriceHike 

    அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    அரிமளம்:

    அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பள்ளி தலைமையாசியர் சேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு ஏம்பல் சாலை, மார்க்கெட் சாலை, சிவன் கோவில், போலீஸ் நிலையம் வழியாக ஜெயவிளங்கி அம்மன் கோவில் திடலை வந்தடைந்தது.

    ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பிளாஸ்டிக் தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். இதில் பள்ளி உதவி தலைமையாசிரியர் முத்து உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்ட னர். 
    திருமயம் பகுதியில் நாளை மறுநாள் பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    புதுக்கோட்டை:

    திருமயம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் திருமயம், மணவாளன்கரை, இளஞ்சாவூர், ராமச்சந்திரபுரம், கண்ணங்காரக்குடி, ஊனைïர், சவேரியார்புரம், குளத்துப்பட்டி, பட்டணம், மலைக்குடிப்பட்டி, மாவூர், கோனாபட்டு, துலையானூர், தேத்தாம்பட்டி, பள்ளி வாசல் , பி. அலகாபுரி, நெய்வாசல், நல்லூர், வாரியப்பட்டி, கொல்லக்காட்டுப்பட்டி, ராங்கியம், கண்ணனூர், மேலூர், அம்மன்பட்டி, அரசம்பட்டி, வீ.லெட்சுமிபுரம், ஏனப்பட்டி, விராச்சிலை , பெல் தொழிற்சாலை ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. 

    என மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோற்றால் அ.ம.மு.க.வுடன் இணைய தயாரா? என்று தங்க தமிழ்செல்வன் சவால் விடுத்துள்ளார். #TTVDhinakaran #ADMK #ThangaTamilselvan
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் வருகிற 15-ந்தேதி அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கலந்து கொள்ள உள்ளார். இதற்கான கால்கோல் விழா இன்று நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட டி.டி. வி.தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போது குட்கா விவகாரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆகையால் குற்றத்திற்கு ஆளான அமைச்சர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோர் பதவி விலகி தங்களை குற்றமற்றவர் என்று நிரூபித்து அதன் பின்னர் மீண்டும் பதவியில் அமர வேண்டும்.


    ஜெயலலிதாவின் இறப்பு இயற்கையானதே. எங்கள்மீது பழி சுமத்தவே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையம் இதுவரை ஓ.பி.எஸ்.ஐ. அழைத்து விசாரணை செய்யாதது ஏன்? இந்த ஆணையத்தால் உண்மை வெளிவராது.

    குட்கா ஊழல் தொடர்பாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் உண்மையை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மறைத்து விட்டனர். அப்போதே உண்மை தெரிந்திருந்தால் பதவியிலிருந்து அவர்களை தூக்கி இருப்பார்.

    திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் நாங்கள் அவர்களுடன் செல்ல தயார். இதேபோல் நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுடன் அ.தி.மு.க. வர தயாரா என்று சவால் விடுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ADMK #ThangaTamilselvan
    ×