search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Vijaya baskar"

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தின் முன் ஓ.பன்னீர் செல்வம் நாளை ஆஜராகிறார். #JayaDeathProbe #OPS
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இதில் இதுவரை ஜெயலலிதாவின் உறவினர்கள், உதவியாளர்கள், சசிகலாவின் உறவினர்கள், கார் டிரைவர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், அப்பல்லோ டாக்டர்கள், அரசு டாக்டர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் என 150-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

    சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரிடமும் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. அப்போது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள், அரசு எடுத்த முடிவுகள் குறித்து அவர் விரிவாக வாக்குமூலம் அளித்தார்.

    ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்காததற்கு என்ன காரணம் என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்தார்.

    தற்போது ஆணையத்தின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

    இதைத்தொடர்ந்து துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் விசாரணை நடத்த ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.



    ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரது துறைகளை கவனித்தவர் ஓ.பன்னீர்செல்வம். எனவே ஓ.பன்னீர்செல்வத்தை விசாரித்தால் முழு விவரமும் தெரியவரும் என்ற அடிப்படையில் விசாரணை ஆணையத்தில் நாளை காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு சம்மனில் கூறப்பட்டுள்ளது.

    ஆணையத்தில் ஆஜராகும் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு தெரிந்த தகவல்களை முதலில் கூறுவார்.

    அதன்பிறகு சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் ஓ.பன்னீர் செல்வத்திடம் குறுக்கு விசாரணை நடத்துவார். அப்போது பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்க உள்ளதாக அவரது வக்கீல்கள் தெரிவித்தனர்.

    இதனால் நாளைய விசாரணையின் போது பல்வேறு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. #JayaDeathProbe #OPS
    ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது அமைச்சரவை கூடியது உண்மை தான் என குறுக்கு விசாரணையின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாக, சசிகலாவின் வக்கீல் தெரிவித்தார். #Vijayabaskar #Rajasenthurpandian
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

    ஆணையத்தில் விஜயபாஸ்கர் என்ன சொன்னார்? என்பது பற்றி ராஜா செந்தூர் பாண்டியன் கூறியதாவது:-

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நாங்கள் குறுக்கு விசாரணை நடத்தியபோது பல்வேறு கேள்விகளுக்கு ஒரு தெளிவான விடை கிடைத்தது.

    அவர் கூறும்போது ஜெயலலிதாவை டிரக்கியாஸ்டமி சிகிச்சைக்காக 7.10.2016 அன்று அழைத்து சென்ற போது தன்னை கடந்துதான் ஸ்டிரெச்சரில் ஜெயலலிதாவை கொண்டு சென்றதாகவும், நான் அவரை மிக அருகில் பார்த்தேன் என்றும் சாட்சியம் அளித்தார்.


    ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை தேவையா? அமைச்சரவை கூடியதா? ஜெயலலிதாவுக்கு எப்படிப்பட்ட சிசிச்சை அளிக்கப்பட்டது? எய்ம்ஸ் டாக்டர்களுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது? மத்திய அரசு எந்த அளவு உறுதுணையாக இருந்தது? என்பது உள்ளிட்ட பல வி‌ஷயங்கள் குறித்து ராதாகிருஷ்ணன் என்னவெல்லாம் சொன்னாரோ அதையே அமைச்சர் விஜயபாஸ்கரும், விசாரணையில் குறிப்பிட்டு சொன்னார்.

    விஜயபாஸ்கரிடம் எனது தரப்பிலும், அப்பல்லோ தரப்பிலும் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இதில் பல விஷயங்களை அவர் தெளிவாக பதிவு செய்தார்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே என்ன சொல்லி இருந்தார். இவர் என்ன சொன்னார்? என்பதற்கும் பதில் கிடைத்தது.

    டாக்டர் பாபு மனோகரன் சாட்சியம் அளித்தபோது, ஓ.பன்னீர்செல்வம் 7.10.2016 அன்று ஜெயலலிதாவை பார்த்ததாக கூறி இருக்கிறாரே என்று கேட்டதற்கு, மருத்துவர் சொல்லி உள்ளார் என்றால் அது சரியாகத்தான் இருக்கும் என்று விஜயபாஸ்கர் கூறினார்.

    29.12.2016 அன்று சசிகலாவை, ஓ.பன்னீர் செல்வம் உள்பட முழு மனதாக எல்லோருமே பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தார்கள் என்ற விவரம், 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முதலில் நடைபெற்றபோது எதிர்தரப்பினர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை சவப்பெட்டியில் வைத்து பிரசாரம் செய்தார்கள் என்பது உள்பட பல வி‌ஷயங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் அடுக்கடுக்காக சொன்னார்.

    எய்ம்ஸ் டாக்டர்கள் என்ன செய்தார்கள், என்ன மாதிரி சொன்னார்கள் என்பது பற்றியும் பேசினார். நான் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பல கேள்விகள் கேட்டேன்.

    கேபினட் மீட்டிங் (அமைச்சரவை கூட்டம்) நடந்ததா? யார் தலைமையில் நடந்தது என்று கேட்டேன். அதற்கு அவர் அமைச்சர்கள் எல்லோரும் சேர்ந்துதான் முடிவெடுத்தோம் என்றார்.

    அன்றைக்கு 2-வது இடத்தில் இருந்த ஓ.பன்னீர் செல்வமும், 3-வது இடத்தில் இருந்த திண்டுக்கல் சீனிவாசனும், எடப்பாடி பழனிசாமியும் அங்கு இருந்தார்களா? என்று கேட்டதற்கு ஆமாம், எல்லோரும் இருந்தார்கள் என்று பதில் அளித்தார்.


    ஆனால் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கேபினட் மீட்டிங் நடக்கவே இல்லை என்றும், அதற்கு நான்தான் சான்று என்றும் கூறியிருந்தார். இன்று அதே அமைச்சரவையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் கேபினட் மீட்டிங் நடைபெற்றது என்று ஆணையத்தில் கூறி உள்ளார்.

    இதே கருத்தைத்தான் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கொடுத்த கடிதத்திலும் தெளிவாக உள்ளது.

    19.10.2016 அன்று கேபினட் மீட்டிங் நடைபெற்றது. எல்லா அமைச்சர்களும் சேர்ந்து அம்மாவுக்காக பிரார்த்தனை செய்து அவர் விரைவில் பூரண நலம் பெற்று முதல்வராக பணி தொடரவேண்டும் என்று போட்ட தீர்மானத்தையும் சொன்னார்.

    அந்த கேபினட் மீட்டிங்கிலும் ஓ.பன்னீர்செல்வம் உள்பட யாராவது ஜெயலலிதாவை வெளிநாடு சிகிச்சைக்கு கொண்டு போவது பற்றி பேசினார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர் அந்த மாதிரி எதுவும் பேசவில்லை. அந்த மாதிரி சூழ்நிலை எதுவும் எழவில்லை என்று கூறினார்.

    கேபினட் மீட்டிங்கை யார் கூட்டியது? இதற்கான நடைமுறை என்ன? என்று கேட்டதற்கு பொதுத்துறையிடம் இருந்து எல்லோருக்கும் கடிதம் வரும் என்றார்.

    பொதுத்துறை எப்படி கடிதம் அனுப்புவார்கள் என்று கேட்டதற்கு, தலைமை செயலாளர்தான் கடிதம் எழுதி அதை நடைமுறைப்படுத்துவார் என்பதை விஜயபாஸ்கர் தெளிவுபடுத்தினார். இப்படி பலதரப்பட்ட வி‌ஷயங்களை தெரிவித்தார்.

    ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை 2017 மார்ச் மாதம் 5, 6-ந்தேதிகளில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஒரு கமி‌ஷன் வைக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட வி‌ஷயத்தில் அவர் சொன்ன பேட்டியில், ‘தம்பி விஜயபாஸ்கர், விசாரிக்க வேண்டும் என்று சொன்னால் உன்னைத்தான்பா முதன் முதலில் விசாரிக்கவேண்டும். அதில் முதல் குற்றவாளியா நீதான் இருப்பாய்’ என்று சொன்ன வீடியோ பதிவு பற்றியும், அதற்கு அப்போது விஜயபாஸ்கர் கூறிய பேட்டியில் ‘கமி‌ஷன் போடும்போது முதலில் ஓ.பன்னீர்செல்வத்தைதான் விசாரிப்பார்கள்’ என்று கூறிய பேட்டி பற்றியும் விஜயபாஸ்கரிடம் கேட்டேன். அதற்கு அவர் இந்த பேட்டியும் உண்மை. அந்த பேட்டியும் உண்மை என்று கூறினார்.

    உடனே நான் இதுவும் உண்மை, அதுவும் உண்மை என்றால் எது சரியானது என்று கேட்டேன். அதற்கு அவர் கருத்து சொல்ல விருப்பமில்லை என்றார்.

    நீங்கள் கருத்து சொல்ல விருப்பம் இல்லாததற்கு 29.8.2017-ல் இருந்து இப்போது துணை முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் உங்கள் அமைச்சரவையில் இருக்கிறாரே? அதுதான் காரணமா? என்று கேட்டேன். அதற்கும் கருத்து சொல்ல விருப்பம் இல்லை என்றார்.

    ஓ.பன்னீர்செல்வம் தொடர்பாக காழ்ப்புணர்ச்சியோடு தான் அவர் செயல்பட்டார். எல்லாம் அறிந்து கொண்டும், தெரிந்துகொண்டும் மருத்துவ சிகிச்சை பற்றி முழுமையாக தெரிந்திருந்தும் அவர் மறைத்து சொன்னார் என்பது போன்ற பல வி‌ஷயங்களை விஜயபாஸ்கர் வாயிலாகவே நான் சாட்சியமாக வாங்கி இருக்கிறேன்.

    விஜயபாஸ்கர் இதற்கு ஒத்துழைத்தார் என்று சொல்ல முடியாது. மிக கடினமாக பல கேள்விகளை போட்டு அதில் இருந்து கிடைக்க கூடிய பதில்களை வைத்து எங்களுக்கு உபயோகமாக இருக்கும் வகையில் ஆதாரங்களை உருவாக்க உள்ளேன்.

    இவ்வாறு ராஜா செந்தூர் பாண்டியன் கூறினார்.  #Vijayabaskar #Rajasenthurpandian
    குட்கா ஊழல் விசாரணைக்காக ஆஜராக வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் சி.பி.ஐ. அலுவலகத்திற்கு வாடகை காரில் ரகசியமாக வந்து சென்றது தெரியவந்துள்ளது. #GutkhaScam #Vijayabaskar
    சென்னை:

    குட்கா ஊழல் விசாரணைக்காக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்கள்.

    அமைச்சர் ரமணா முன்வாசல் வழியாகவே வந்து சென்றார். ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரணைக்கு எப்போது வருகிறார்? எப்போது செல்கிறார்? என்பது தெரியவே இல்லை. அவரை படம் பிடிப்பதற்காக சி.பி.ஐ. அலுவலக வாசலில் பத்திரிகை புகைப்பட கலைஞர்களும், வீடியோ கேமராமேன்களும் காத்து கிடந்தனர்.

    ஆனால் 2 நாட்கள் நடந்த விசாரணைக்கும் முன்வாசல் வழியே வரவில்லை. வாடகை காரில் பின்வாசல் வழியாக யாருக்கும் தெரியாமல் வந்து சென்றார். குட்கா விவகாரம் பற்றி பலமுறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இதற்கு முன்னர் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அதற்கு பதில் அளித்துள்ள அவர், என் மீதான குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று கூறி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு அவர் ரகசியமாக வந்து செல்வது புரியாத புதிராக உள்ளது. #GutkhaScam #MinisterVijayabaskar #Vijayabaskar
    புதுக்கோட்டை மாவட்டத்தில் உயிரை துச்சமென நினைத்து பணியாற்றிய மின்வாரிய ஊழியர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் சப்பாத்தி தயாரித்து கொடுத்து அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். #GajaCyclone #Vijayabaskar
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் 4 ஆயிரத்து 62 குக்கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான மின் கம்பங்களும், 8 ஆயிரத்து 300 மின் மாற்றிகளும் முழுமையாக சேதம் அடைந்தன.

    அவற்றை சீரமைக்கும் பணியில் தமிழகம், கேரளா, கர்நாடாக மாநில மின் வாரிய ஊழியர்கள் முழுமூச்சில் ஈடுபட்டுள்ளனர். கொட்டும் மழையிலும் உயிரை துச்சமென மதித்து மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு உடனடியாக மின் விநியோகம் செய்யும் வகையில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

    இதில் கடந்த வாரம் கீரனூர் பகுதியில் ஆபத்தான முறையில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் பரிதாபமாக இறந்தார். இதுபோன்று உயிரை பணயம் வைத்து மின் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருவோரை அமைச்சர்கள் முதல் அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சீரமைப்பு பணிகளுக்காக வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில்  இருந்து வந்துள்ள ஊழியர்கள் மாத்தூர் பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கேயே உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.

    புதுக்கோட்டை அருகே மாத்தூர் பள்ளியில் தங்கியுள்ள மின் வாரிய ஊழியர்களுக்கு சப்பாத்தி தயாரித்து கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர், அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட காட்சி.

    இந்தநிலையில் நேற்று இரவு திருச்சியில் இருந்து புதுக்கோட்டை சென்ற அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மாத்தூரில் மின்வாரிய ஊழியர்கள் தங்கியுள்ள பள்ளிக்கு சென்றார். அவர்களது பணியை பாராட்டிய பின்னர் இரவு உணவாக அவர்களுக்கு சப்பாத்தி தயாரித்து, தானே சுட்டு பரிமாறினார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து தானும் சாப்பிட்டார்.

    இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்னும் 3 நாட்களுக்குள் 100 சதவீதம் மின்சார விநியோகம் செய்யப்படும். இதுவரை 4062 குக்கிராமங்களில் 2000 கிராமங்களில் மின்சார விநியோகம் சீரடைந்துள்ளது. இதற்கான பணிகள் கடந்த 10 நாட்களில் இரவு, பகல் பாராது நடந்துள்ளது. இதில் பல்வேறு சவால்களை மின் வாரிய ஊழியர்கள் சந்தித்துள்ளனர்.

    அதேபோல் பழுதான, சேதமடைந்த 8300 மின் மாற்றிகளில் 5100 சரி செய்யப்பட்டு விட்டது. மீதமுள்ளவைக்கு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் நிவாரண மற்றும் மீட்பு பணிகளை பாராட்டியுள்ளது எங்களுக்கு மேலும் ஊக்கமளிக்கிறது.

    இதன் மூலம் நாங்கள் உறங்கும் நேரத்தை குறைத்துக்கொண்டு உழைக்கும் நேரத்தை அதிகரித்துக் கொள்வோம். அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #GajaCyclone #Vijayabaskar
    உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருபவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு மற்றும் சலுகைகளில் முன்னுரிமை அளிக்க திட்டம் உள்ளது’ என்று டெல்லியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #OrganDonate #GovernmentJob #MinisterVijayaBaskar
    புதுடெல்லி:

    தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு சார்பில், 9-வது இந்திய உறுப்பு தான நாள் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    அந்த வகையில் முதலிடத்துக்கான விருது தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரிகள் அஷ்வின்குமார் சவுவே மற்றும் அனுபிரியா பட்டேல் ஆகியோரிடம் இருந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பெற்றுக்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உறுப்பு தானத்துக்காக ஏற்கனவே 3 முறை தமிழக அரசு விருது பெற்று இருக்கிறது. தற்போது தொடர்ச்சியாக 4-வது முறையாக விருது பெற்றதில் பெருமைப்படுகிறோம்.

    உறுப்பு தானத்தில் 1,198 கொடையாளர்கள் மூலம் 6,886 பேர் மறுவாழ்வு பெற்று இருக்கிறார்கள். இருதயம், கல்லீரல், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை அதிகமாக மேற்கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.

    உலக அளவில் சொற்பமாக நடைபெறக்கூடிய கைகள் மாற்று அறுவை சிகிச்சையும் தமிழகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. சமீபத்தில் 2 கைகளையும் இழந்த ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் எந்தவித கட்டணமும் இல்லாமல் கைகள் பொருத்தப்பட்டன.

    தற்போது தமிழ்நாட்டில் 4,674 பேர் மாற்று சிறுநீரகத்துக்காக காத்திருக்கிறார்கள். 416 பேர் கல்லீரல் மாற்றுக்காகவும், 40 பேர் இருதய மாற்றுக்காகவும், 33 பேர் நுரையீரல் மாற்றுக்காகவும் காத்திருக்கிறார்கள். 2 கைகள் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து 14 பேர் கைகள் மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

    இந்த எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். உறுப்புகள் தானம் அதிகமாகும்போது, உறுப்புகளுக்காக காத்திருப்பவர்களுக்கான மறுவாழ்வை உறுதிப்படுத்த முடியும். உறுப்புதானம் செய்ய முன்வருபவர்களை அரசு சார்பில் பாராட்டி கவுரவிக்கிறோம். அவர்களை வேலைவாய்ப்பு உள்ளிட்ட சலுகைகளில் முன்னுரிமை பட்டியலில் கொண்டுவரவும் ஒரு திட்டம் உள்ளது. இது உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் புயல் பாதித்த மாவட்டங்களில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்கு உதவுவதற்காக, விண்ணப்பிக்கும் தேதியை (கடைசி தேதி நவம்பர் 30-ந்தேதி) நீட்டிக்க கோருவீர்களா? என்ற கேள்விக்கு, அதுபற்றி “முதல்-அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம்” என்று பதில் அளித்தார்.

    தமிழகத்தில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி கேட்டதற்கு, “மதுரையில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். அதற்கான நிதி ஒப்புதல் ஏற்கனவே பெறப்பட்டு விட்டது. ஏற்கனவே கூறியபடி, மந்திரிசபை ஒப்புதலுக்கான நடவடிக்கைகள் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கும்” என அமைச்சர் கூறினார். #OrganDonate #GovernmentJob #MinisterVijayaBaskar
    தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை அமைச்சரிடம்தான் கேட்க வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆர்.வெள்ளோடு, ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் தம்பிதுரை மக்களை சந்தித்து குறைகள் கேட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இலங்கையில் ராஜபக்சேவை பிரதமராக நியமித்திருப்பது சரியான நடைமுறை இல்லை. பிரதமராக உள்ள ரணில்விக்கிரமசிங்கிற்கு போதிய மெஜாரிட்டி இருக்கும்போது ராஜபக்சேவை நியமனம் செய்திருப்பது ஜனநாயக விரோத செயல். 1½ லட்சம் தமிழர்களை கொன்று குவித்தவர் ராஜபக்சே. இவர் மீண்டும் பதவிக்கு வந்துள்ளதால் உலகத்தில் உள்ள தமிழர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் டெங்கு, பன்றிகாய்ச்சல் பரவல் குறித்தும், அது தொடர்பான நடவடிக்கை குறித்தும் சுகாதாரத்துறை அமைச்சரிடம்தான் கேட்க வேண்டும்.

    அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 பேருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அவர்கள் எம்.எல்.ஏ.க்களே இல்லை என அறிவித்தபிறகு தாராளமாக ஆலோசனை கூட்டத்தை நடத்தலாம். அவர்களால் அ.தி.மு.க. ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க அரசை கண்டித்து புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 18-ந்தேதி காலை9 மணியளவில் புதுக்கோட்டை திலகர் திடலில் நடக்கிறது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர்கள் எஸ்.ரகுபதி எம்.எல்.ஏ., கே.கே.செல்லப்பாண்டியன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க அரசில் இன்னல்களுக்கு ஆளாகாத மக்களே இல்லை என்ற நிலையில் அ.தி.மு.க ஆட்சி தொடர்கிறது. அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் செய்யாத அமைச்சர்களே இல்லை என்ற வண்ணம், அனைத்து துறைகளிலும், குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழல், ஸ்மார்ட் சிட்டி ஊழல், முட்டை மற்றும் பருப்பு கொள்முதலில் ஊழல், பேருந்து வாங்குவதில் ஊழல், குட்கா ஊழல் போன்ற ஊழல்கள் நடந்துள்ளது.

    ஊழல் கறை படிந்த இந்த அ.தி.மு.க அரசை தூக்கி எறிவோம் என்ற தி.மு.க. தலைவரின் அறை கூவலுக்கு ஆக்கம் சேர்க்கும் வகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க அரசை கண்டித்து புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 18-ந்தேதி காலை9 மணியளவில் புதுக்கோட்டை திலகர் திடலில் நடக்கிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள, இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை, வட்டக்கழக செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னோடிகள், செயல்வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு அ.தி.மு.க. அரசில் நடைபெற்று வரும் ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் ஒன்று கூடி இப்போராட்டம் மாபெரும் வெற்றியடைய செய்யபாடுபடுவோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
    அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட அ.தி.மு.க.வில் புதிதாக 8 அமைப்பு செயலாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளர்களாக முன்னாள் மத்திய மந்திரி என்.செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் எம்.பரஞ்சோதி, ப.மோகன் மற்றும் முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ., சின்னத்துரை ஆகிய 5 பேர் புதிதாக நியமிக்கப்பட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் மேலும் 3 பேரை அமைப்பு செயலாளர்களாக நியமித்து அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

    அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ஏ.பாப்பா சுந்தரம், மதுரை புறநகர் மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முத்துராமலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கட்சியில் அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே குட்கா ஊழல் தொடர்பாக சமீபத்தில்தான் அவரது வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தி இருந்தது.

    இந்த 3 பேரையும் சேர்த்து அ.தி.மு.க.வில் புதிதாக 8 பேர் அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இதே போல அ.தி.மு.க.வின் சட்ட ஆலோசகராக பி.எச்.பாண்டியன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் காஞ்சி பன்னீர் செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். #ADMK
    குட்கா முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் வீடுகள் உள்ளிட்டோர் வீடுகளில் நடந்த சிபிஐ சோதனை முடிவடைந்துள்ளது. #GutkhaScam
    சென்னை:

    தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்வதற்கு கடந்த 2013-ம் ஆண்டு அரசு தடை விதித்தது.  இந்த தடையை மீறி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது. போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து விட்டு சிறிய கடைகளில் குட்கா விற்பனை படுஜோராக நடக்கிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் நடக்கும் குட்கா விற்பனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடப்பதாக மத்திய வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல்கள் சென்றன. அதன்பேரில் சென்னை செங்குன்றத்தில் செயல்பட்டு வந்த எம்.டி.எம். குட்கா ஆலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அந்த ஆலையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் தயாரிக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. இங்கிருந்து தமிழ்நாடு முழுவதும் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு விற்பனை ஆவதும் வெளிச்சத்துக்கு வந்தது.

    குட்கா ஆலை பங்குதாரர் மாதவராவ் வீட்டிலும், குடோனிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மாதவராவ் உதவியாளர் வீட்டில் இருந்து ரகசிய டைரி ஒன்று சிக்கியது.

    அந்த டைரியில் குட்கா தயாரிப்பு மற்றும் விற்பனையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக மாநகராட்சி உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவரம் இடம் பெற்று இருந்தது.

    ஒவ்வொரு போலீஸ் அதிகாரிக்கும் எந்தெந்த தேதிகளில் எத்தனை லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்ற விவரமும் துல்லியமாக எழுதப்பட்டு இருந்தது.

    அதிகாரிகள் துணையோடு குட்கா விற்ற வகையில் எவ்வளவு வரி கட்டப்பட்டு இருக்கிறது என்ற குறிப்புகளும் இருந்தன. இந்த டைரி தகவல்தான் அதிகாரிகள் சிக்குவதற்கு ஆதாரமாக அமைந்தது.

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரும் அந்த டைரியில் இடம் பெற்று இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து அப்போதைய சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் உள்பட 23 அதிகாரிகளுக்கு ரூ.60 லட்சம் வீதம் மொத்தம் ரூ.40 கோடி லஞ்சம் வழங்கியதாக தகவல்கள் வெளியானது. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக குட்கா பங்குதாரர் மாதவராவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மாதாமாதம் தவிர தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களிலும் லஞ்சம் கொடுத்து இருப்பதாக வருமான வரித்துறையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு வருமான வரித்துறை முதன்மை ஆணையர் கடிதம் எழுதி இருந்தார்.

    இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பெயரளவுக்கு விசாரணை நடத்தி சில போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை ஏற்று குட்கா ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

    அதன்பேரில் சி.பி.ஐ. சார்பில் பெயர் குறிப்பிடாமல் கலால் துறை, உணவு பாதுகாப்புத் துறை, போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சட்ட விரோத பணபரிவர்த்தனை நடந்து இருப்பதால் இது தொடர்பாக அமலாக்கப் பிரிவும் வழக்குப்பதிவு செய்தது. இதிலும் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை.

    சமீபத்தில் டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா பங்குதாரர் மாதவராவிடம் விசாரணை நடத்தினார்கள். சுமார் 10 மணி நேரம் நீடித்த இந்த விசாரணையில் குட்கா ஊழல் தொடர்பாக ஏராளமான தகவல்கள் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கிடைத்தது. எனவே சி.பி.ஐ.யின் அடுத்த அதிரடி எந்த நேரத்திலும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு காலை 8 மணிக்கு 5 அதிகாரிகள் சென்றனர். வீட்டை பூட்டிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.

    அதே நேரத்தில் முகப்பேர் மேற்கில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    நொளம்பூர் புதிய போலீஸ் நிலையம் அருகில் உள்ள அவரது வீட்டில் 10 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். குட்கா ஊழலில் பரபரப்பாக பேசப்பட்ட முன்னாள் போலீஸ் கமி‌ஷனரான ஜார்ஜின் வீட்டிலும் சோதனை நடந்தது.

    நொளம்பூர் பாரிசாலையில் உள்ள அவரது வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இங்கு 5 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    போலீஸ் அதிகாரிகளான டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் இருவரது வீடுகளும் ஒரே பகுதியில் அமைந்துள்ளன. இதனால் இன்று நடைபெற்ற இந்த சோதனை அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

    சென்னை போலீஸ் வட்டாரத்தில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் அதிகாரிகள் மட்டத்திலும் சி.பி.ஐ. நடத்திய இந்த அதிரடி வேட்டை உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டி.ஜி.பி.யாக பொறுப்பில் இருக்கும் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு இருப்பதும், அது தொடர்பாக, சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பதும், தமிழக காவல்துறை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
    குட்கா முறைகேடு தொடர்பாக விசாரணையைத் தொடங்கி உள்ள சிபிஐ அதிகாரிகள் இன்று பல்வேறு குழுக்களாக 40 இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். #GutkhaScam #CBIRaid
    சென்னை:

    தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்வதற்கு கடந்த 2013-ம் ஆண்டு அரசு தடை விதித்தது.

    இந்த தடையை மீறி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது. போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து விட்டு சிறிய கடைகளில் குட்கா விற்பனை படுஜோராக நடக்கிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் நடக்கும் குட்கா விற்பனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடப்பதாக மத்திய வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல்கள் சென்றன. அதன்பேரில் சென்னை செங்குன்றத்தில் செயல்பட்டு வந்த எம்.டி.எம். குட்கா ஆலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அந்த ஆலையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் தயாரிக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. இங்கிருந்து தமிழ்நாடு முழுவதும் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு விற்பனை ஆவதும் வெளிச்சத்துக்கு வந்தது.

    குட்கா ஆலை பங்குதாரர் மாதவராவ் வீட்டிலும், குடோனிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மாதவராவ் உதவியாளர் வீட்டில் இருந்து ரகசிய டைரி ஒன்று சிக்கியது.

    அந்த டைரியில் குட்கா தயாரிப்பு மற்றும் விற்பனையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக மாநகராட்சி உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவரம் இடம் பெற்று இருந்தது.

    ஒவ்வொரு போலீஸ் அதிகாரிக்கும் எந்தெந்த தேதிகளில் எத்தனை லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்ற விவரமும் துல்லியமாக எழுதப்பட்டு இருந்தது.

    அதிகாரிகள் துணையோடு குட்கா விற்ற வகையில் எவ்வளவு வரி கட்டப்பட்டு இருக்கிறது என்ற குறிப்புகளும் இருந்தன. இந்த டைரி தகவல்தான் அதிகாரிகள் சிக்குவதற்கு ஆதாரமாக அமைந்தது.

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரும் அந்த டைரியில் இடம் பெற்று இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து அப்போதைய சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் உள்பட 23 அதிகாரிகளுக்கு ரூ.60 லட்சம் வீதம் மொத்தம் ரூ.40 கோடி லஞ்சம் வழங்கியதாக தகவல்கள் வெளியானது. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக குட்கா பங்குதாரர் மாதவராவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மாதாமாதம் தவிர தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களிலும் லஞ்சம் கொடுத்து இருப்பதாக வருமான வரித்துறையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு வருமான வரித்துறை முதன்மை ஆணையர் கடிதம் எழுதி இருந்தார்.

    இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பெயரளவுக்கு விசாரணை நடத்தி சில போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை ஏற்று குட்கா ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

    அதன்பேரில் சி.பி.ஐ. சார்பில் பெயர் குறிப்பிடாமல் கலால் துறை, உணவு பாதுகாப்புத் துறை, போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சட்ட விரோத பணபரிவர்த்தனை நடந்து இருப்பதால் இது தொடர்பாக அமலாக்கப் பிரிவும் வழக்குப்பதிவு செய்தது. இதிலும் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை.

    சமீபத்தில் டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா பங்குதாரர் மாதவராவிடம் விசாரணை நடத்தினார்கள். சுமார் 10 மணி நேரம் நீடித்த இந்த விசாரணையில் குட்கா ஊழல் தொடர்பாக ஏராளமான தகவல்கள் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கிடைத்தது. எனவே சி.பி.ஐ.யின் அடுத்த அதிரடி எந்த நேரத்திலும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு காலை 8 மணிக்கு 5 அதிகாரிகள் சென்றனர். வீட்டை பூட்டிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.

    அதே நேரத்தில் முகப்பேர் மேற்கில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    நொளம்பூர் புதிய போலீஸ் நிலையம் அருகில் உள்ள அவரது வீட்டில் 10 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். குட்கா ஊழலில் பரபரப்பாக பேசப்பட்ட முன்னாள் போலீஸ் கமி‌ஷனரான ஜார்ஜின் வீட்டிலும் சோதனை நடந்தது.

    நொளம்பூர் பாரிசாலையில் உள்ள அவரது வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இங்கு 5 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


    போலீஸ் அதிகாரிகளான டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் இருவரது வீடுகளும் ஒரே பகுதியில் அமைந்துள்ளன. இதனால் இன்று நடைபெற்ற இந்த சோதனை அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

    சென்னை போலீஸ் வட்டாரத்தில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் அதிகாரிகள் மட்டத்திலும் சி.பி.ஐ. நடத்திய இந்த அதிரடி வேட்டை உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டி.ஜி.பி.யாக பொறுப்பில் இருக்கும் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு இருப்பதும், அது தொடர்பாக, சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பதும், தமிழக காவல்துறை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

    இவர்கள் தவிர முக்கிய உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளிலும் சி.பி.ஐ. சோதனை நடந்து வருகிறது.

    அமைச்சரின் உதவியாளர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் சில பினாமிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் உள்பட தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 40 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குட்கா விற்பதற்கு லஞ்சம் பெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் யார்- யார்? அவர்களுக்கு எவ்வளவு பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டது? என்பது போன்ற தகவல்களை ஏற்கனவே டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் திரட்டி விட்டனர். இந்த ஊழ லில் ஏராளமான அரசு ஊழியர்கள் மிகப்பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்பட்டதையும் சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.

    ஆனால் இந்த ஊழலில் மொத்தம் 23 அதிகாரிகளுக்கு மட்டுமே தொடர்பு இருப்பதாக வருமான வரித்துறை தகவலில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதுபோல லஞ்ச ஒழிப்புத்துறையினரும் சில அதிகாரிகள் பெயரை மட்டுமே குறிப்பிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தி குட்கா ஊழலில் தொடர்புடைய மேலும் சில அதிகாரிகளை கண்டுபிடித்துள்ளனர். அதன் அடிப்படையில் தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையில் சி.பி.ஐ. இறங்கி உள்ளது.

    குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 உயர் போலீஸ் அதிகாரிகள், கலால் துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

    குட்கா ஊழல் விசாரணையில் சி.பி.ஐ. பிடி இறுகுவதால் இதில் தொடர்புடைய அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். #GutkhaScam #CBIRaid
    அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் 50 நாட்களில் 2010 பேர் பரிசோதனை செய்து பயன் அடைந்துள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #TNMinister #Vijayabaskar
    சென்னை:

    ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் உள்ள அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் ரத்த வகை கண்டறியும் அதிநவீன கருவியினை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் துவக்கி வைத்து பேசுகையில்,

    இம்மையத்தில் கடந்த 50 நாட்களில் 2010 பேர் பரிசோதனை செய்து பயன் அடைந்துள்ளனர். மேலும், அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்ததில் 177 பேருக்கு உயர் ரத்த அழுத்தமும், 355 பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பும், 4 பேருக்கு இருதயம் சம்பந்தப்பட்ட நோய் பாதிப்பு, 14 பேருக்கு தைராய்டு பாதிப்பு, 23 பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் அறிகுறிகள், 17 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அறிகுறிகள், 11 பேருக்கு பித்தப்பையில் கல் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும், படிப்படியாக இதுபோன்ற மையங்கள் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் விரிவுபடுத்தப்படும் என்றார்.  #TNMinister #Vijayabaskar
    அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவில் 73 மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #InternationalYogaDay2018
    சென்னை:

    சர்வதேச யோகா தினத்தை யொட்டி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் யோகா பயிற்சி நடைபெற்றது.

    இதில் 300-க்கும் மேற்பட்ட அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி முடிவில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

    யோகா என்பது உடலையும், மனதையும் சமநிலையில் வைத்திருக்க உதவும் அறிவியல் பூர்வ கலையாகும்.

    மன அழுத்தம், மனச்சோர்வு, கவலை, பதட்டம் போன்றவற்றை குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது.


    தமிழகத்தில் 31 அரசு வட்ட மருத்துவமனையிலும் சென்னையில் 4 அரசு மருத்துவமனைகளிலும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் மூலம் சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 165 யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிலையங்கள் உள்ளன.

    அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவில் 73 மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். பொதுமக்கள் இவ்வசதிகளை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Vijayabaskar #InternationalYogaDay2018
    ×