என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் புதிதாக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வருபவர்களின் வசதிக்காக குடிதண்ணீர் தொட்டி அந்த நிழற்குடையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிறுத்தத்திலிருந்து உள்நோயாளிகள் பிரிவு வரை நோயாளிகளும், நடக்க இயலாதவர்களும் செல்வதற்காக இலவச பேட்டரி கார் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இதை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், கடும் வெயிலினால் மக்களும் நோயாளிகளும் அவதிப்படுவதை கருத்தில் கொண்டு ஒரே நாளில் இந்த நிழற்குடை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நகராட்சியின் துணையோடு குடி தண்ணீர் தொட்டி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை உடனடியாக ஏற்படுத்தி தந்த நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் கோடை கால வெயிலில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பஸ் நிறுத்தத்திலிருந்து உள்நோயாளி பிரிவு வரை செல்வதற்காக இலவச பேட்டரி கார் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் உள்நோயாளி பிரிவிற்கு எதிரிலும் நிழற்குடை அமைக்க ஏற்பாடு செய்யப்படும். இதை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறினார். இந்த ஆய்வின் போது மருத்துவர் ரவிநாதன் மற்றும் உதவி மருத்துவர் இந்திராணி ஆகியோர் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அடுத்து உள்ள புதுக்குளத்தின் அருகே நேற்று மாலை பொது மக்கள் நடந்து சென்றனர். அப்போது குளத்தில் ஒரு வாலிபரின் உடல் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்ரகுமான் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குளத்தில் பிணமாக மிதந்தது புதுக்கோட்டை காமராஜபுரம் 14-ம் வீதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கணேசன் (22) என்றும், புதுக்கோட்டையில் உள்ள தனியார் கியாஸ் ஏஜென்சியில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் காதல் விவகாரத்தில் அவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், சுல்லாம்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுப்பிரமணி (வயது 35). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பொன்னமராவதி அருகே பெருமாள் கோவில் பின்புறத்தில் கழுத்தில் கத்தியால் குத்திய நிலையில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்பிரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் முதற்கட்ட விசாரணையில், சுல்லாம்பட்டியை சேர்ந்த தினேஷ் (28) என்பவருக்கும், சுப்பிரமணிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக சுப்பிரமணி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், காங்கிரஸ் சார்பில் ஜோதிமணியும் போட்டியிடுகின்றனர். இரண்டு கட்சிகளின் தலைவர்களும் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருவர் மீது மற்றொருவர் விமர்சனக் கணைகளை வீசி வருவதால் பிரசார களம் சூடுபிடித்துள்ளது.
அவ்வகையில், சமீபத்தில் தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் பேசிய திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு சொந்தமான 45 கல்லூரிகள் இருப்பதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரும் தங்கள் பிரசாரத்தில் இதனை குறிப்பிட்டனர்.

எனக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வரும் மு.க.ஸ்டாலின், ஜோதிமணி, செந்தில் பாலாஜி ஆகியோர் மீது வழக்கு தொடருவேன். எனக்கு சொந்தமாக 45 கல்லூரிகள் இருப்பதாக ஸ்டாலின் தவறான பிரசாரம் செய்கிறார். எனக்கு 45 கல்லூரிகள் இருப்பதாக அவர் நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலக தயாராக இருக்கிறேன். இல்லாவிட்டால் அரசியலை விட்டு ஸ்டாலின் விலக தயாரா?
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Thambidurai
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை சாலையில் அரசு ஆஸ்பத்திரி அருகே 8 அடி உயரம் கொண்ட பெரியார் சிலை உள்ளது. கடந்த 1998-ம் ஆண்டு தி.க. தலைவர் கி.வீரமணி இந்த சிலையை திறந்து வைத்தார்.
பெரியாரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் தி.க., தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பெரியார் சிலை சாக்குகளால் போர்த்தி மூடி வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மறைந்த பழைய தலைவர்களின் சிலைகளை மூடி வைக்க தேவையில்லை என்று அறிவித்திருந்தார். அதனடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறந்தாங்கியில் மூடி வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை சாக்குகள் அகற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

காலையில் அந்த பகுதிக்கு வந்தவர்கள் பெரியார் சிலை உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறந்தாங்கி முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. அடுத்த சில நிமிடங்களில் அங்கு தி.க., தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். மேலும் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. சிவ.மெய்யநாதனும் வந்தார்.
பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்திய மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தி.க. அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் யோகராஜ் அறந்தாங்கி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், டி.எஸ்.பி. கோகிலா ஆகியோரும் வந்து விசாரித்தனர்.
இதற்கிடையே தி.க. மண்டல தலைவர் ராவணன் தலைமையில் அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் கட்சியினர் திடீரென அமர்ந்து மறியல் செய்தனர். உடனடியாக பெரியார் சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றனர். அவர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தார். இந்த மறியலால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சென்றனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதேபோல் அறந்தாங்கியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதையும் மீறி இன்று அதிகாலை பெரியார் சிலை உடைக்கப்பட்டது பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசியதை இந்து முன்னணியினர் கண்டித்தனர். இதில் பயங்கர மோதல் உருவானது.
அதேபோல் இந்து கடவுள் கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த தி.க. தலைவர் கி.வீரமணிக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் தற்போது அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. #PeriyarStatueVandalised
புதுக்கோட்டை:
திருச்சி பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போதும் குறைசொல்வதையே வழக்கமாக கொண்டுள்ளார். அதனால்தான் அவரை ஒட்டுமொத்த தமிழக மக்களும் புறக்கணிக்கின்றனர். அவரை குறை சொல்வதில் புகழ்பெற்ற ஸ்டாலின் என்று அழைப்போம். பிரதமர் வேட்பாளர் மோடிதான் என்று சொல்லி வாக்கு சேகரிக்கிறோம். ஆனால் அந்த கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அவர்களால் உறுதியாக கூற முடியுமா?
சாதிக்பாட்சா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் யார்? என்று மு.க.ஸ்டாலின் சொல்லிவிட்டு கொடநாடு பிரச்சினை குறித்து பேசட்டும். 2011ல் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் சேர்ந்து அமைத்த அதே கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. அ.தி.மு.க. கூட்டணியை எதிர்த்து போட்டியிடுவோரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #premalatha #mkstalin
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பெரியாளூர் விலக்கு ரோடு பகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:-
தற்போது நடக்கும் பாராளுமன்ற தேர்தல் முடிந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானவுடன், தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத, ஊழல் மலிந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்.
அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராவார். இதைத்தான் தமிழக மக்களும் எதிர்நோக்கி உள்ளனர்.

எனவே தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளை சேர்ந்தவர்கள் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலையும் மனதில் வைத்து தயாராக வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக நாடு சோதனையில் உள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த நரேந்திர மோடி, கடந்த தேர்தலில் மக்களை ஏமாற்றி பிரதமரானார்.
அவர் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், சொல்லாத வாக்குறுதிகளான பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்றவற்றை கொண்டு வந்து இந்த நாட்டையே நாசப்படுத்தி விட்டார்.
மதவெறி கொண்ட மோடி நாட்டை மதங்களின் பெயரால் தூண்ட நினைக்கிறார். இந்தியாவில் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்து விட்டு ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்து பல லட்சம் பேர் வேலை இழக்க காரணமாகி விட்டார்.
கஜா புயலின்போது, பாதிக்கப்பட்ட மக்களின் வேதனைகளை நேரில் சென்று நான் பார்வையிட்டேன். ஆனால் நாட்டின் பிரதமர் பெயரளவிற்குகூட வந்து செல்லவில்லை. ஒரு வேளை புதுக்கோட்டை தனி நாடாக இருந்தால், வந்திருப்பார்போல. மத்தியில் காங்கிரஸ் கட்சியும், அதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வும் ஆட்சிக்கு வந்தவுடன், கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நியாயமான நிவாரணம் வழங்கப்படும்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பார்த்து, இதை எப்படி செயல்படுத்த முடியும் எனக்கேட்ட பா.ஜ.க. இப்போதும், வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் எப்படி ரூ.72 ஆயிரம் வழங்க முடியும் எனக்கேட்கிறது. காங்கிரஸ் கட்சியும், நானும் என்றும் முடியாததை சொல்ல மாட் டோம். சொல்லியதை பா. ஜ.க. போல செய்யாமல் இருக்க மாட்டோம்.
நிச்சயம் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தவுடன், வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும். அதை காங்கிரஸ் செய்து காட்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #pchidambaran #rahulgandhi #mkstalin






