search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drunken dispute"

    • குடிபோதையில் தகராறு செய்த தந்தையை, மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றார்.
    • வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெப்பக்கோட்டை அருகே உள்ள கோட்டையூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகன் கருப்பசாமி. கிருஷ்ணா சாமிக்கு மதுப்பழக்கம் இருந்தது அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் மகனுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு குடித்துவிட்டு வந்து மனைவியுடன் கிருஷ்ண சாமி தகராறு செய்தார் அப்போது அங்கு வந்த கருப்பசாமி தந்தையை கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கருப்பசாமி இருசக்கர வாகனத்திற்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை கிருஷ்ண சாமியின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். அங்கி ருந்தவர்கள் கிருஷ்ணசாமியை மீட்டு காயல்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கிருஷ்ணசாமி இறந்தார்.

    இதுகுறித்து தாயில்பட்டி கிராம நிர்வாக அதிகாரி கணேசனுக்கு தகவல் கிடைத்தது. அவர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் இந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மது போதையில் தகராறு செய்து வந்த தந்தையை மகனே எரித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விராலிமலை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா தேராவூர் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாரி மகன் குமார்(வயது 35). கூலி தொழிலாளி. இவருக்கு கோமதி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். கணவன், மனைவி இடையே நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்தது. 

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த குமார், கோமதியுடன் தகராறு செய்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த கோமதி வீட்டில் கிடந்த அரளைக்கல்லை தூக்கி குமாரின் தலை மீது போட்டார். இதில் படுகாயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் மீது மனைவி அரளைக்கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    குடிபோதையில் தகராறு செய்த தந்தையை மகன் தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த அவர் மகனின் கழுத்தை பிளேடால் அறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருச்சி:

    திருச்சி செந்தண்ணீர்புரம் கோவன் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 57) லாரி டிரைவர். இவரது மகன் மணிகண்டன். இந்நிலையில் சேகர் மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டார். இதை மணிகண்டன் தட்டிக்கேட்டார். அப்போது தந்தை மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் கிரிக்கெட் மட்டையால் சேகரை தாக்கினார்.

    சேகர் பிளேடால் தனது மகன் மணிகண்டன் கழுத்தை அறுத்தார். அவர் வலி தாங்க முடியால் அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து பொன்மலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    கோவையில் குடிபோதையில் போலீசாருடன் தகராறு செய்த வாலிபருக்கு கோர்ட்டு நூதன தண்டணை வழங்கியுள்ளது.

    கோவை:

    கோவை கல்வீரம் பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகன் சுதர்சன் (வயது 28). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் குடிபோதையில் கோவை ஆம்னி பஸ் நிலையம் அருகே போக்குவரத்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார். இதனையடுத்து ரத்தினபுரி போலீசார் சுதர்சன் மீது பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கு ஜே.எம். கோர்ட்டு-2 நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, போலீசாருடன் தகராறு செய்த வாலிபர் சுதர்சனுக்கு நூதன தண்டனை வழங்கினார். எந்த இடத்தில் தகராறு செய்தாரோ அதே இடத்தில் 10 நாட்களுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இதனையடுத்து சுதர்சன் ஆம்னி பஸ் நிலையம் அருகே நேற்று போலீசாருடன் இணைந்து போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். இன்று 2-வது நாளாக போக்குவரத்தை சரி செய்தார். 

    மதுரை அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் மூவேந்திரன் (வயது34) இவரது மனைவி அன்னப்பாண்டி, கணவன்-மனைவி இருவரும் திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படை கிராமத்தில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் மூவேந்திரன் தினமும் மது குடித்து விட்டு சென்று மனைவி அன்னபாண்டியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    வாழ்க்கையில் வெறுப்படைந்த மூவேந்திரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×