search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "killing husband"

    உத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனைக் கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    முசாபர்நகர்:

    உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம், கேதி கெம்ரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் என்ற சோனு (வயது 31). இவரது மனைவி ஷிவானி. இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹரிஷ் காணாமல் போனார். இதுபற்றி அவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹரிஷின் மைத்துனர் சிவம் மற்றும் உறவினர் மோகித் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். ஹரிஷின் மனைவி ஷிவானியின் பெயரும் புகாரில் சேர்க்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே ஹரிஷின் உடல் கடந்த 15ம் தேதி சாக்கடையில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது மனைவி ஷிவானியிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தபோது, தனது கள்ளக்காதலன் சிபுவுடன் சேர்ந்து கணவனை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து ஷிவானி, அவரது கள்ளக்காதலன் சிபு, கொலைக்கு உதவியாக இருந்த ஹிமன்சு, லக்மிர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட சிவம் மற்றும் மோகித் ஆகியோருக்கு இந்த கொலையில் எந்த தொடர்பும் இல்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    விராலிமலை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா தேராவூர் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாரி மகன் குமார்(வயது 35). கூலி தொழிலாளி. இவருக்கு கோமதி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். கணவன், மனைவி இடையே நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்தது. 

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த குமார், கோமதியுடன் தகராறு செய்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த கோமதி வீட்டில் கிடந்த அரளைக்கல்லை தூக்கி குமாரின் தலை மீது போட்டார். இதில் படுகாயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் மீது மனைவி அரளைக்கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×