search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கொன்ற பெண்
    X

    கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கொன்ற பெண்

    உத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனைக் கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    முசாபர்நகர்:

    உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம், கேதி கெம்ரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் என்ற சோனு (வயது 31). இவரது மனைவி ஷிவானி. இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹரிஷ் காணாமல் போனார். இதுபற்றி அவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹரிஷின் மைத்துனர் சிவம் மற்றும் உறவினர் மோகித் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். ஹரிஷின் மனைவி ஷிவானியின் பெயரும் புகாரில் சேர்க்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே ஹரிஷின் உடல் கடந்த 15ம் தேதி சாக்கடையில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது மனைவி ஷிவானியிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தபோது, தனது கள்ளக்காதலன் சிபுவுடன் சேர்ந்து கணவனை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து ஷிவானி, அவரது கள்ளக்காதலன் சிபு, கொலைக்கு உதவியாக இருந்த ஹிமன்சு, லக்மிர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட சிவம் மற்றும் மோகித் ஆகியோருக்கு இந்த கொலையில் எந்த தொடர்பும் இல்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×