search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிபோதையில் தகராறு: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
    X

    குடிபோதையில் தகராறு: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

    மதுரை அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் மூவேந்திரன் (வயது34) இவரது மனைவி அன்னப்பாண்டி, கணவன்-மனைவி இருவரும் திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படை கிராமத்தில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் மூவேந்திரன் தினமும் மது குடித்து விட்டு சென்று மனைவி அன்னபாண்டியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    வாழ்க்கையில் வெறுப்படைந்த மூவேந்திரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×