என் மலர்
நீலகிரி
- சிறப்பு மலை ரெயில் 6 நாட்கள் இயக்கப்படும்.
- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து தினசரி ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயிலில் உள்ளூர் மட்டுமல்லாமல், வெளிமாவட்டம், வெளிமாநில, மாவட்ட மக்களும் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவார்கள்.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை விடுமுறையையொட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து கேத்திக்கும் தினசரி 3 முறையும் மலை ரெயில் இயக்க சேலம் கோட்ட ரெயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து வரும் டிசம்பர் மாதம் 25, 27, 29, 31 ஆகிய தேதிகளில் காலை 9.10 மணிக்கு சிறப்பு மலை ரெயில் புறப்பட்டு ஊட்டிக்கு மதியம் 2.25 மணிக்கு செல்லும்.
இதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வரும் டிசம்பர் மாதம் 26, 28, 30 மற்றும் வரும் ஜனவரி மாதம் 1-ந் தேதி வரை சிறப்பு மலைரெயில் இயக்கப்படும்.
ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு ரெயில் புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு மாலை 4.20 மணிக்கு வந்தடையும். இதனிடையே மேட்டுப்பாளையம்-குன்னூர் வரை முதல் வகுப்பில் 40 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகள், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகள் இருக்கும்.
இதேபோல் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு வரும் டிசம்பர் 28-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 2-ந் தேதி வரை சிறப்பு மலை ரெயில் 6 நாட்கள் இயக்கப்படும்.
குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு ஊட்டிக்கு 9.40 மணிக்கு சென்றடையும். இதேபோல் ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு குன்னூருக்கு மாலை 5.55 மணிக்கு வந்தடையும். இதில் முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகள் இருக்கும்.
மேலும் ஊட்டியில் இருந்து கேத்திக்கு வரும் டிசம்பர் 28-ந் தேதியில் இருந்து ஜனவரி 2-ந் தேதி வரை 6 நாட்களுக்கு தினசரி 3 முறை மலை ரெயில் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதில் முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகள் இருக்கும். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ராணுவ தளவாட உற்பத்தியில் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம்.
- எதிர்காலத்தில் சவால்களை சந்திக்கும் திறன் ராணுவ வீரர்களுக்கு உண்டு.
ஊட்டி:
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், பின்னர் கார் மூலமாக ஊட்டி ராஜ்பவனுக்கு சென்றார். நேற்று அங்கேயே தங்கி ஓய்வெடுத்தார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று காலை ஊட்டி ராஜ்பவனில் இருந்து கார் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்றார். அங்கு அவருக்கு ராணுவ வீரர்கள் குதிரை படைகளுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
வரவேற்பு முடிந்ததும் ராணுவ பயிற்சி கல்லூரிக்குள் சென்ற ஜனாதிபதி, போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து, ராணுவ பயிற்சி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அங்கு அவர் ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:-
ராணுவம் உள்பட பல்வேறு துறைகளிலும் நமது நாடு வளர்ந்து வருகிறது. பல்வேறு புதிய தொழில் நுட்பங்கள் மூலம் ராணுவ தளவாட உற்பத்தியில் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம்.
எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை சந்திக்கும் திறன் நமது ராணுவ வீரர்களுக்கு உண்டு.
இவ்வாறு அவர் பேசினார்.
- ராணுவ வீரர்கள் குதிரை படைகளுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
- வீரர்களின் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை.
ஊட்டி:
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், பின்னர் கார் மூலமாக ஊட்டி ராஜ்பவனுக்கு சென்றார். நேற்று அங்கேயே தங்கி ஓய்வெடுத்தார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று காலை ஊட்டி ராஜ்பவனில் இருந்து கார் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்றார். அங்கு அவருக்கு ராணுவ வீரர்கள் குதிரை படைகளுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
வரவேற்பு முடிந்ததும் ராணுவ பயிற்சி கல்லூரிக்குள் சென்ற ஜனாதிபதி, போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து, ராணுவ பயிற்சி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அங்கு அவர் ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் அவர் குன்னூரில் இருந்து ஊட்டி ராஜ்பவனுக்கு சென்றார்.
நாளை (வெள்ளிக்கிழமை) ஊட்டி ராஜ்பவனில், நீலகிரியில் உள்ள 6 வகை பழங்குடியின மக்களை சந்தித்து பேசுகிறார். அப்போது அவர்களின் பாரம்பரிய நடனமும் நடக்கிறது.
நீலகிரி பழங்குடியின மக்களின் தலைவர் ஆல்வாஸ் பழங்குடி மக்களின் சிறப்புகள் குறித்து ஜனாதிபதியிடம் பேசுகிறார். மேலும் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உணவு அருந்த உள்ளார்.
ஜனாதிபதி வருகையை யொட்டி குன்னூர், வெலிங்டன் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்ப ட்டிருந்தது. போலீசார் மற்றும் ராணுவத்தினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- ஊட்டி-கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் ஜஹாங்கீர் பாஷா காரை மடக்கி சோதனை செய்தனர்
- ஊட்டி நகராட்சி ஆணையாளர் பொறுப்பிலிருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
ஊட்டியில் லஞ்ச ஒழிப்பு போலீசில் ரூ.11 லட்சத்துடன் சிக்கிய நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் கமிஷனராக பணியாற்றிய ஜஹாங்கீர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நீலகிரி மாவட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
அங்கு அனுமதி இல்லாத மற்றும் விதிகளை மீறிய கட்டடங்களுக்கு அனுமதி, வாகனங்களை நிறுத்த தனியாருக்கு அனுமதி என பணம் வாங்கிக்கொண்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்நிலையில் கடந்த நவம்பர் 9-ந் தேதி பணியை முடித்துக் கொண்டு வாடகை காரில் சொந்த ஊரான சென்னைக்கு ஜஹாங்கீர் பாஷா சென்று கொண்டிருந்தார்.
செல்லும் வழியில் சில மேற்கூறிய செயல்கள் தொடர்பாக லஞ்சப்பணத்தை வாங்கிக்கொண்டு சென்றுகொண்டிருப்பதாக நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
ஊட்டி-கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் ஜஹாங்கீர் பாஷா காரை மடக்கி சோதனை செய்ததில் அவரது காரில் கணக்கில் வராத ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் கண்டெடுக்கப்பட்டது. இது லஞ்ச பணம் என்பதை உறுதி செய்யப்பட்ட பின்னர் ஜஹாங்கீர் பாஷா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நகராட்சி துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் ஜஹாங்கீர் பாஷா ஊட்டி நகராட்சி ஆணையாளர் பொறுப்பிலிருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
அவரை சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது நேருக்கு மாறாக அவர் திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

- ஜனாதிபதி ஊட்டி வருகையை முன்னிட்டு நீலகிரியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- நீலகிரியில் 6 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை தந்தார். இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட ஜனாதிபதி, கோவை விமான நிலையம் வந்தார். கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி மற்றும் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நீலகிரி மாவட்டம் புறப்பட்டுச் சென்றார்.
விமான நிலையத்தில் இருந்து அன்னூர், மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியாக காரில் ஊட்டி ராஜ்பவனுக்கு சென்றார். அங்கு ஜனாதிபதியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இன்று ஜனாதிபதி ராஜ்பவன் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
நாளை காலை ஜனாதிபதி திரவுபதி முர்மு, குன்னூர் வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு செல்கிறார். அங்கு அவருக்கு வரவேற்பு மற்றும் ராணுவ மரியாதை அளிக்கப்பட உள்ளது.
பின்னர் அவர் போரில் உயிர்நீத்த வீரர்களுக்காக வைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். அதனை தொடர்ந்து அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகிறார்.
29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஊட்டி ராஜ்பவனில் நீலகிரி பழங்குடியின மக்கள் மற்றும் படுகர் இன மக்களை சந்திக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
நீலகிரியில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு 30-ந்தேதி (சனிக்கிழமை) கோவை வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் திருச்சி செல்கிறார். அங்கிருந்து திருவாரூர் சென்று, மத்திய பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்குகிறார். அதனை தொடர்ந்து மீண்டும் திருச்சி விமான நிலையம் வந்து, அங்கிருந்து டெல்லிக்கு செல்ல உள்ளார்.
ஜனாதிபதி ஊட்டி வருகையை முன்னிட்டு நீலகிரியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார், நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் மேற்பார்வையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராஜ்பவன், ராஜ்பவனில் இருந்து குன்னூர் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகள் ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுதவிர மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகள் மற்றும் தங்கும் விடுதிகளும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. சந்தேகத்திற்கு இடமாக யாராவது இருந்தால் தகவல் கொடுக்கவும் போலீசார் விடுதி உரிமையாளர்களை அறிவுறுத்தி சென்றனர். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நீலகிரியில் 6 நாட்கள் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜனாதிபதி வருகையையொட்டி நேற்று ஊட்டி ராஜ்பவனில் இருந்து ராணுவ பயிற்சி கல்லூரி மற்றும், கோவையில் இருந்து கோத்தகிரி வழியாக ஊட்டி செல்லும் சாலையிலும் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
முன்னதாக கோவையில் இருந்து ஊட்டிக்கு ஜனாதிபதி ஹெலிகாப்டரில் பயணிப்பதாக இருந்தது. ஆனால் கடந்த சில தினங்களாகவே கோவை, நீலகிரியில் கடும் மேகமூட்டம் நிலவி வந்தது. இன்று காலையும் மேகமூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு, ஜனாதிபதி காரில் சாலை மார்க்கமாக ஊட்டிக்கு பயணமானார்.
- போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைக்கிறார்.
- நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஊட்டி:
ஜனாதிபதி திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 4 நாள் பயணமாக நாளை (புதன்கிழமை) தமிழகம் வருகிறார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார்.
பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டி செல்லும் அவர், உள்ள ராஜ்பவனுக்கு சென்று தங்குகிறார்.
நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஜனாதிபதி திரவுபதி முர்மு கார் மூலமாக குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு செல்கிறார். அங்கு போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைக்கிறார்.
தொடர்ந்து ராணுவ பயிற்சி கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகாரிகள் மத்தியில் பேசுகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் ஊட்டி ராஜ்பவன் சென்று தங்குகிறார்.
29-ந் தேதி ஊட்டி ராஜ்பவனில் தங்கி ஓய்வெடுக்கும் அவர், 30-ந் தேதி காலை ஹெலிகாப்டர் மூலமாக கோவை சூலூர் விமானப்படை தளம் வருகிறார். அங்கிருந்து திருவாரூர் செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். அதன்பின்னர் திருச்சி விமான நிலையம் வந்து, மீண்டு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு, திருப்பூா், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீசார் வரவழை க்கப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இவர்கள் குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரி, ராணுவ பயிற்சி மையம், தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளம், ஊட்டி ராஜ்பவன் மாளிகை, திட்டுக்கல்-ராஜ்பவன் மாளிகை சாலை, ஊட்டி-குன்னூர் சாலை, குன்னூர் வெலிங்டன் ராணுவ வைக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
மேலும் மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை, ரோந்து பணிகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படு த்தப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்து வருகின்றனர்.
இதுதவிர மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளிலும் ரோந்து, கண்காணிப்பு தீவிரப்படு த்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி வந்திறங்க உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு சுழற்றி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று அங்கு ஹெலிகாப்டர் ஒத்திகையும் நடந்தது.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நேற்று முதல் 6 நாட்களுக்கு நீலகிரியில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜனாதிபதி வருகையையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா தலைமையில் பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
மேலும் ஜனாதிபதி வருகையின் போது, காலநிலை மாற்றம் ஏற்பட்டால், ஹெலிகாப்டர் தரையிறங்க மசினகுடியில் உள்ள ஹெலிபேடை பயன்படுத்த முடிவு செய்து, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
- ஹெலிகாப்டர் தளத்தில் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- பிங்கர் போஸ்ட் முதல் வெலிங்டன் வரையுள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி:
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு 27-ந் தேதி தமிழகம் வருகிறார்.
அன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை விமான தளத்திற்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வருகிறார்.
ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் தங்கும் அவர் 28-ந் தேதி குன்னூர் ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெறும் கல்லூரிக்குச் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 29-ந் தேதி ஊட்டி ராஜ்பவனில் பழங்குடியின மக்களை சந்திக்கிறார்.
30-ந் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு செல்லும் அவர் திருவாரூரில் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு டெல்லி திரும்புகிறார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அவர் ஹெலிகாப்டரில் வந்திறங்கும் தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஹெலிகாப்டர் தளத்தில் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் தீட்டுக்கல் ஹெலிகாப்டர் மைதானம் பகுதியில் வெளி ஆட்கள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர். இதேபோல் சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு பிரிவு போலீசார் கூடுதல் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அத்துடன் தீட்டுக்கல் முதல் ராஜ்பவன் வரை உள்ள சாலைகள், பிங்கர் போஸ்ட் முதல் வெலிங்டன் வரையுள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.
- நீலகிரி மாவட்ட பூண்டு அதிக மருத்துவ தன்மை கொண்டதால் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.
- விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறி உற்பத்தி அதிகமாக விளைவிக்கப்படுகிறது.
இதில் நீலகிரியில் விளையும் மலைப்பூண்டு மருத்துவ குணமும் அதிக கார தன்மையும் கொண்டதாகும்.
கடந்த வாரம் வரை மத்திய பிரதேசம, குஜராத், இமாச்சல் பிரதேசத்தில் இருந்து பூண்டு வரத்து இல்லாததால் நீலகிரி மலைப்பூண்டின் விலை மும்மடங்கு உயர்ந்து கிலோ ரூ.600 வரை கொள்முதல் விலையாக கிடைத்தது. இதனால் மலை மாவட்ட விவசாயிகள் பெரும் லாபம் ஈட்டி வந்தனர்.
தற்போது மீண்டும் வெளிமாநில பூண்டு மேட்டுப்பாளையம் மண்டிக்கு வர தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக இமாச்சல் பிரதேச பூண்டு அதிகளவில் வர தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக நாளுக்கு நாள் ஏலத்தில் நீலகிரி பூண்டின் விலை வீழ்ச்சி அடைந்து பூண்டு கொள்முதல் மண்டிகளில் விலை பாதியாக குறைந்த ரூ.350 க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட பூண்டு அதிக மருத்துவ தன்மை கொண்டதால் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.
மாவட்டத்தில் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளான கூக்கல்துறை, கேர் கம்பை, கப்பட்டி மற்றும் கட்டபெட்டு, தொட்டன்னி பகுதிகளில் தற்போது பூண்டு அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
- மழை பெய்யாத நாட்களில் நீர்பனி காணப்பட்டது.
- நீலகிரி மாவட்டத்தில் உறைபனிக்காலம் தொடங்கும் முன்பு வழக்கமாக நீர் பனிப்பொழிவு காணப்படும்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் நீர்பனி விழும். தொடர்ந்து நவம்பர் மாதம் 2-வது வாரத்திற்கு மேல் உறைபனி விழ தொடங்கும்.
இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த வாரம் வரை நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வந்த நிலையில், உறைபனி விழுவதில் தாமதம் ஏற்பட்டது.
அதே சமயம் மழை பெய்யாத நாட்களில் நீர்பனி காணப்பட்டது. இதனால் மாலை நேரங்களில் குளிர் அதிகமாக காணப்பட்டது.
குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்ப்பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இது சுற்றுலா பயணிகளை பரவசப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.
அதிகாலை நேரத்தில் புல்வெளிகள், தேயிலை தோட்டம் மற்றும் மலர் செடிகளில் நீர்ப்பனி கண்ணாடி இழைகள் போல, முத்துக்கள் கொட்டிய மாதிரி காட்சி அளிக்கிறது. அதிலும் குறிப்பாக குன்னூர், ஜிம்கானா, கரும்பாலம், காட்டேரி, குன்னகம்பை, கொலகம்பை, கொல்லிமலை, கேத்திபாலடா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்ப்பனிப்பொழிவு காணப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உறைபனிக்காலம் தொடங்கும் முன்பு வழக்கமாக நீர் பனிப்பொழிவு காணப்படும். அந்த வகையில் தற்போது நீர்ப்பனிப்பொழிவு தொடங்கி இருப்பதால் இன்னும் ஒரு சில வாரங்களில் உறைப்பனிப்பொழிவு தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
- பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகிறார்.
- திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.
ஊட்டி:
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 27-ந்தேதி தமிழகம் வருகிறார்.
இதற்காக அவர் அன்றைய தினம் காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம், கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி தீட்டுக்கல் பகுதிக்கு செல்கிறார்.
அங்கிருந்து கார் மூலம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனுக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.
மறுநாள் 28-ந் தேதி (வியாழக்கிழமை) காலை ஜனாதிபதி ஊட்டி ராஜ்பவனில் இருந்து கார் மூலமாக குன்னூருக்கு செல்கிறார்.
ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெறும் கல்லூரிக்கு செல்லும் அவர் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் ஊட்டி ராஜ்பவன் சென்று தங்குகிறார்.
29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஊட்டி ராஜ்பவனில் நீலகிரி வாழ் பழங்குடி மக்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஊட்டி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு வருகிற 30-ந்தேதி (சனிக்கிழமை) ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்து, அங்கிருந்து விமானம் மூலமாக திருச்சி விமான நிலையத்திற்கு செல்கிறார்.
பின்னர் அங்கிருந்து திருவாரூர் சென்று, அங்கு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடக்க உள்ள பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். பட்டமளிப்பு முடிந்ததும், மீண்டும் திருச்சி வந்து, அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி பயணிக்கிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட எஸ்.பி. நிஷா, மாவட்ட வன அலுவலர் கவுதம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
போலீசார் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, பொதுப்பணித்துறை சார்பில் ராஜ்பவனில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது, நகராட்சி சார்பில் தூய்மை பணி மேற்கொள்வது, சாலை சீரமைப்பு செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில், தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தை சீரமைக்கும் பணிகள் நேற்று தொடங்கியது. அங்கு ஹெலிகாப்டர் தளம் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் ஹெலிகாப்டர் தளத்தில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் அங்குலம், அங்குலமாக சோதனையும் மேற்கொண்டனர். அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தை சுற்றியுள்ள பகுதியில் வெளியாட்கள் நுழையவும் போலீசார் தடைவிதித்தனர்.
ஜனாபதி வருகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் 750-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான முன்னேற்பாடு பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
தீட்டுக்கல், படகு இல்லம், ஹல்பங்க், கலெக்டர் அலுவலகம், ராஜ்பவன் வரையிலான சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சாலையோர முட்புதர்கள் அகற்றப்பட்டு, சரி செய்யப்பட்டு வருகின்றன. தாவரவியல் பூங்காவிலும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஜனாதிபதி வருகையை யொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்த ப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
வாகனங்களில் வருபவர்களிடம் உரிய விசாரணை நடத்தி, அவர்களின் அடையாள அட்டைகளை எல்லாம் வாங்கி பார்த்து சோதித்த பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர்.
- பள்ளியினையொட்டி வனப்பகுதி உள்ளது.
- மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெலாக்கோட்டையில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் பள்ளி முடிந்ததும் மாலையில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாடுவது வழக்கம்.
நேற்று மாலையும் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் வழக்கம் போல பள்ளியில் உள்ள மைதானத்தில் கால்பந்து விளையாடினர். மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக விளையாடி கொண்டிருந்தனர்.
பள்ளியினையொட்டி வனப்பகுதி உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் விளையாடி கொண்டிருந்த நேரத்தில் வனத்தை விட்டு வெளியே வந்த ஒற்றை யானை ஒன்று பள்ளி மைதானத்திற்குள் நுழைந்தது.
யானை வேகமாக வருவதை பார்த்ததும், விளையாடி கொண்டிருந்த மாணவர்கள் அங்கிருந்து அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். பின்னர் வகுப்பறைகளில் சென்று பாதுகாப்பாக இருந்து கொண்டனர்.
சிறிது நேரம் யானை மைதானத்திலேயே வலம் வந்தது. அதன்பின்னர் யானை அங்கிருந்து வெளியேறி வனத்திற்குள் சென்றது. யானை சென்ற பின்னரே மாணவர்கள் நிம்மதி அடைந்தனர்.
காட்டு யானை மைதானத்திற்குள் நுழைந்ததை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- சில இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
- மண் சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது கொட்டி தீர்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி கனமழை பெய்கிறது. மேலும் அங்கு மேகமூட்டத்துடன் கடும்குளிரும் நிலவுவதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் குன்னூர், அருவங்காடு, வெலிங்டன், காட்டேரி , பர்லியார், கரும்பாலம், சின்னவண்டிச்சோலை, கேத்தி, காட்டேரி, சேலாஸ், வண்டிச்சோலை, எடப்பள்ளி, கொலக்கம்பை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை விட்டுவிட்டு மழை பெய்தது.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு மேல் கனமழையாக கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து சென்றது.
மேலும் குன்னூர் நூலக கட்டிட பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் அங்குள்ள மின்கம்பம் சேதம் அடைந்ததுடன் மண்திட்டுகள் மழைநீரில் கரைந்து பஸ் நிலையத்திற்கு அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சேறும் சகதியுமாக படிந்து பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதற்கிடையே குன்னூர் மார்க்கெட் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கிருந்த வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டனர்.
ஓட்டுபட்டறை முத்தாலம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தடுப்புசுவர் இடிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல காந்திபுரம் பகுதியில் ருக்மணி என்பவரின் வீட்டில் முன்புற தடுப்புசுவர் இடிந்து விழுந்ததால், அந்த பகுதியில் உள்ள வீடுகள் அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் தொடர்மழையால் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குறும்பாடி அருகே நள்ளிரவு ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் குன்னூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி மரத்தை அகற்றினர்.
குன்னூர் தாலுகாவில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் சப்-கலெக்டர் மேற்பார்வையில் தாசில்தார் தலைமையில் 10 பேர் அடங்கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணிநேரமும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
குன்னூரில் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருவதால் அதிகாரிகள் குழுவினர் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளுக்கு சென்று, தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நிவாரணக்கூடங்களில் தங்கிக் கொள்ளலாம். உங்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என தெரிவித்து வருகின்றனர்.
குன்னூர் கோட்டாட்சியர், தாசில்தார் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையே தொடர்மழை, சிறிதுநேரம் வெயில், பின்னர் நீர்ப்பனி என காலநிலை அவ்வப்போது மாறி வருவதால் மண் சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே மலைப்பாதைகளில் செல்லும் வாகனஓட்டிகள் மரங்கள் மற்றும் மண் திட்டுகளுக்கு இடையே வாகனங்களை நிறுத்தக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் மிதமான மழை பெய்தது. மேலும் ஒருசில இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
வடவள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளியுடன் பலத்த மழை பெய்ததால் கல்வீரம்பாளையம் எஸ்.பி.கே.நகர் பிரதான சாலையில் இருந்த மே பிளவர் மரம் காற்றில் சாய்ந்து அருகில் சென்ற மின்கம்பியின் மீது விழுந்ததில் அந்த மின்கம்பம் முறிந்து சேதமடைந்தது. மேலும் மரத்தின் அடியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் சேதம் அடைந்தது.

தகவல் அறிந்து வந்த மாநகராட்சி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றி அப்புறப்படுத்தினர். மேலும் உடைந்து விழுந்த மின்கம்பத்தை சரிசெய்யும் பணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன.






