என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • பாவளி பண்டிகை காலங்களில் தற்காலிக உணவு கூடங்கள், திருமண மண்டபங்கள், வீடுகள் மற்றும் சீட்டு நடத்துபவர்கள் ஆர்டரின் பேரில் தயா ரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும்
    • பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையார்களும் உடனடியாக https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் அல்லது பதிவு பெற்றுக் கொள்ள வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகை காலங்களில் தற்காலிக உணவு கூடங்கள், திருமண மண்டபங்கள், வீடுகள் மற்றும் சீட்டு நடத்துபவர்கள் ஆர்டரின் பேரில் தயா ரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.

    இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள், தரமான கலப்பட மில்லாத மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். அனு மதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோ கிக்ககூடாது. தரமான நெய் மற்றும் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்ப டுத்தக்கூடாது. பயன்படுத்திய எண்ணெய்யை பயோ- டீசல் தயாரிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட நிறுவ னத்திற்கு வழங்க வேண்டும்.

    பண்டிகை கால இனிப்பு வகைகளை பரிசு பேக்கிங் செய்யும் போது பால் பொருட்களால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை மற்ற இனிப்பு பொருட்களுடன் பேக்கிங் செய்து விற்பனை செய்யக் கூடாது. சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தூய்மையாக இருக்க வேண்டும். நீரின் தரத்தினை அறியும் பொருட்டு பகுப்பாய்வு சான்றிதழ் பெற்று வைத்திருக்க வேண்டும்.

    பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் சில்லறை இனிப்பு பொருட்களுக்கும், விவரச் சீட்டு கட்டாயம் இருக்க வேண்டும். அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு, பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் எண், பேட்ஜ் எண், லாட் எண் சைவ குறியீடு மற்றும் அதில் பயன்படுத்தும் பொருட்களின் விபரம் ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். தடைசெய்யப்பட்ட நெகிழி பைகளை பயன்படுத்தக் கூடாது, செய்திதாள்களில் உணவு பொருட்களை வைத்து விற்பனை செய்யக்கூடாது.

    உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும். உணவு தயாரிக்கும் பணியாளர்கள் தூய்மையான ஆடைகள் அணிந்து, நகங்களை வெட்டி சுத்தமாக இருக்க வேண்டும். தன் சுத்தம் பேண வேண்டும். மேலும் பணியாளர்கள் தலைகவசம், மேலங்கி மற்றும் கையுறை அணிய வேண்டும். பணியினை தொடரும் முன்பும், கழிவறை பயன்படுத்திய பின்பும் சோப்பு கொண்டு கைகளை சுத்தம் செய்தல் வேண்டும். உணவு பொருட்களை கையாள்பவர்கள் உடற்தகுதி குறித்த மருத்துவ சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

    பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையார்களும் உடனடியாக https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் அல்லது பதிவு பெற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாணிக்கம்பாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் இருவரும் பரமத்தியில் உள்ள அவர்களது உறவினர் வீடு கிரகப் பிரவேசத்திற்காக வந்து கொண்டிருந்தனர்.
    • கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வளர்மதி சிகிச்சை பலனின்றி வளர்மதி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் (55). இவரது மனைவி வளர்மதி (48). இருவரும் தறிப்பட்டறையில் கூலி வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாணிக்கம்பாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் இருவரும் பரமத்தியில் உள்ள அவர்களது உறவினர் வீடு கிரகப் பிரவேசத்திற்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது பரமத்தி அருகே நல்லூர் மின்வாரிய அலுவலகம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார்(34) என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்து லாரி குழந்தைவேல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் குழந்தைவேல் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தைவேலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வளர்மதி திருச்செங்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே குழந்தைவேலுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குழந்தைவேலின் மகன் கவுதம் (27) நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் லாரியை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய ரவிக்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வளர்மதி சிகிச்சை பலனின்றி வளர்மதி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி விபத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் சிகிச்சையில் இருந்த மனைவியும் இறந்த சம்பவம் உறவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தப்பி ஓடிய கூலி தொழிலாளி அல்லி முத்துவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    • விவசாயி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மூலப்பள்ளிபட்டி கிராமம் வைரப்பள்ளி காடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி. (வயது 50), விவசாயி. இவரது மனைவி சித்ரா. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு சித்ரா இறந்து விட்டார்.

    இவர்களது மகள் ஷாலினி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து சேலத்தில் வசித்து வருகிறார். தற்போது ரவியும், அவரது தாய் பொன்னம்மாவும் வைரப்பள்ளி காடு பகுதியில் வசித்து வருகின்றனர்.

    ரவி தோட்டத்தின் அருகில் கூலி தொழிலாளி அல்லிமுத்து (50) மற்றும் இவரது மனைவி வசந்தா (45) தம்பதி குடியிருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விவசாயி ரவிக்கும், அல்லிமுத்து மனைவி வசந்தாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று இரவு ரவி அல்லிமுத்து வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வசந்தா இல்லை. அல்லிமுத்து மட்டும் இருந்துள்ளார். அப்போது அல்லிமுத்து தனது மனைவியுடன் இருக்கும் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறியுள்ளார்.

    அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அல்லிமுத்து வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து ரவியை சுட்டுக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது ரவி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து நாமகிரிபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தப்பி ஓடிய கூலி தொழிலாளி அல்லி முத்துவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    முதற்கட்டமாக விசாரணையில் அல்லிமுத்துவின் வீட்டில் தோட்டா செய்வதற்கான மூலப்பொருட்கள் இருந்து உள்ளது. இந்த தோட்டாவை பயன்படுத்தி ரவியை சுட்டுக்கொன்றது தெரியவந்தது. இந்த மூலப் பொருட்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    விவசாயி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கும்பாபிஷேகத்தையொட்டி ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.
    • கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லால் ஆன 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். உலக பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் கட்டளைதாரர்கள் மூலம் வடமாலை அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

    இந்த கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இக்கோவிலில் நாளை (1-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்தையொட்டி ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெறுகிறது.

    இதையொட்டி நேற்று யாகசாலை பூஜைகள் கோவில் வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தொடர்ந்து இன்று காலையில் வருண தீர்த்தம், புனிதபடுத்துதல், அக்னி பகவான் பூஜை, ஆழ்வார்கள் அருளிய தமிழ் திவ்ய பிரபந்த வேள்வி, அனுதின பெருவேள்வி, மகாசாந்தி ஹோமம், அதிவாச ஹோமம், வேள்வியை நிறைவு செய்தல், தமிழ் திவ்ய பிரபந்த சமர்ப்பணம், அருட்பிரசாதம் வழங்குதல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மாலையில் பிம்ப வாஸ்து, மகாசாந்தி வேள்வியை நிறைவு செய்தல், ஒன்பது கலச திருமஞ்சனம், கங்கணம் கட்டுதல், சயனாதி வாசம், சகல தேவதைகளை வரவழைத்து விசேஷ பூஜை, பிரதான வேள்வியை நிறைவு செய்தல், தமிழ் திவ்ய பிரபந்த சமர்ப்பணம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு, சுகாதாரம், வருவாய், போக்குவரத்து துறை, நகராட்சி, காவல் துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் கும்பாபிஷேகத்துக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்துள்ளனர்.

    விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி, ராமலிங்கம் எம்.எல்.ஏ., கோவில் அறங்காவல் குழுத் தலைவர் நல்லுசாமி, அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இன்று காலை முதலே கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆஞ்சநேயர் பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    • அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக ராமமூர்த்தி (60) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.
    • இதுப்பற்றி ெதரிய வந்ததும் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் புதுச்சத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சி புதூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக ராமமூர்த்தி (60) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.

    இதுப்பற்றி ெதரிய வந்ததும் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டனர். பின்னர் அவர்கள் ஓவிய ஆசிரியரை கண்டித்து திடீரென பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    கைது

    இதுப்பற்றி தெரியவந்ததும் நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்ட கல்வி அலுவலர் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுக வார்த்தை நடத்தினர்.

    . இந்த நிலையில் ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தியை இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து அழைத்து சென்றனர்.

    சஸ்பெண்டு

    பின்னர் ஆசிரியர் ராமமூர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கி கைதான ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தியை கல்வி துறை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

    • அரசு நடுநிலைப்பள்ளி இந்த நடுநிலைப் பள்ளியில் கடந்த 1995-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை படித்த 30 முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ளது துத்திப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி. இந்த நடுநிலைப் பள்ளியில் கடந்த 1995-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை படித்த 30 முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஓசூர், நாமக்கல், கோவை போன்ற பல்வேறு இடங்களில் வசித்து வரும் இவர்களை தனபால் மற்றும் வெங்கடாசலம் ஆகியோர் ஒருங்கிணைத்து பள்ளிக்கு வரவழைத்தனர். இதில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் தங்கள் இளமைக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    மேலும் தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு தங்கள் மரியாதையை செலுத்தி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று அவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினர். அதேபோல் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். ஆண்டுதோறும் இதேபோன்று ஒன்றிணைந்து பள்ளி வாழ்க்கையை நினைவு கூற வேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்தனர்.

    தொடர்ந்து முன்னாள் மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 27 வருடங்களுக்கு முன்பு எடுத்துக் கொண்டதை போல தங்கள் ஆசிரியர்களுடன் மீண்டும் புகைப்படத்தை எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுநாள் (1-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.
    • இன்று மாலை யாக சாலை பூஜைகள் தொடங்குகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுநாள் (1-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து கோவில் அருகில் யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

    யாக சாைல பூஜை

    இன்று மாலை யாக சாலை பூஜைகள் தொடங்குகிறது. ஆச்சார்ய அழைப்பு, இறைவனிடம் அனுமதி பெறுதல், வருண தீர்த்தம் புனிதப்படுத்தி வேள்வி சாலையை சுத்தப்படுத்துதல், திருமண் பரிசோதித்து எழுந்தருளல், திருமுலை இடுதல், பாலிகை தெளித்தல், அக்னி பகவானை கடைந்து எடுத்தல், ஆழ்வார்கள் அருளிய தமிழ் திவ்ய பிரபந்த வேள்வி தொடங்கப்படுகிறது.

    கும்ப பூஜை (கலசபூஜை) திருமாண்பு ஈர்ப்பு செய்தல், கலசத்தில் இறைவனை அமரச்செய்தல், ஐப்பெரும் பூதங்களின் வேள்வி வளர்த்தல் ஆகியவை நடக்கிறது. பின்னர் அனுதின பெருவேள்வி, வேள்வியை நிறைவு செய்தல், தமிழ் திவ்ய ப்ரபந்த சமர்ப்பணம், செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    அஷ்டபந்தன மருந்து சாற்றுதல்

    நாளை (31-ந்தேதி) காலை 8 மணி முதல் 12. 30 மணிக்குள் வருண தீர்த்தம் புனித படுத்துதல், அக்னி பகவான் பூஜை, ஆழ்வார்கள் அருளிய தமிழ் திவ்ய ப்ரபந்த வேள்வி, அனுதின ெபருவிழா மற்றும் அஷ்ட பந்தன மருத்து சாற்றுதல் நடக்கிறது.

    தொடர்ந்து பிம்ப வாஸ்து, மகாசாந்தி வேள்வியை நிறைவு செய்தல் ஆகியவை நடக்கிறது.

    கும்பாபிேஷகம்

    நாளை மறுநாள் (1-ந்தேதி) காலை 7.15 மணிக்கு வருண தீர்த்தம், புனித படுத்துதல் ஆகியவை நடக்கிறது. பின்னர் காலை 10 மணியில் இருந்து 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் வளாகமே மின்ஒளியில் ஜொலிக்கிறது. மேலும் கோவிலில் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் ேபாடப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாமக்கல் நகரமே திருவிழா போல் களை கட்டியுள்ளது.

    கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம். எல்.ஏ.க்கள், அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் சீனிவாசன், டாக்டர் மல்லிகை செல்வா, சீராளன், ரமேஷ் பாபு, அறநிலைய துறை உதவி ஆணையாளர் இளையராஜா, கண்காணிப்பாளர் அம்சா உள்ளிட்டோர் செய்து வருகின்றன.நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுநாள் (1-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.

    • காவிரி ஆற்றின் மேல் உள்ள பாலம் அடுத்த இடத்தில் சேலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ் நிலை தடுமாறி டிவைடரில் மோதி நின்றது தெரியவந்தது.
    • சேலம் - கோவை புறவழிச்சாலையில் நேற்று மாலை வாகனங்கள் செல்ல முடியாதபடி நீண்ட வரிசையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சேலம் - கோவை புறவழிச்சாலையில் நேற்று மாலை வாகனங்கள் செல்ல முடியாதபடி நீண்ட வரிசையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றது. மேலும் விடுமுறை நாள் என்பதால் நேரம் ஆக ஆக வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து குமாரபாளையம் போக்குவரத்து போலீசார் நேரில் சென்று பார்த்த போது காவிரி ஆற்றின் மேல் உள்ள பாலம் அடுத்த இடத்தில் சேலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ் நிலை தடுமாறி டிவைடரில் மோதி நின்றது தெரியவந்தது. நல்வாய்ப்பாக பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

    இதையடுத்து போக்குவரத்து போலீசார் பஸ்சை மீட்டு மற்ற வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இந்த விபத்தால் சுமார் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.,

    • தனது மொபட்டில் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையை கடக்க முயன்றார்.
    • கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் கலா சென்ற மொபட் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கலா (வயது 55). இவர் கூலி வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று மதியம் கீரம்பூரில் இருந்து குஞ்சாம்பாளையம் செல்வதற்காக தனது மொபட்டில் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையை கடக்க முயன்றார். அப்போது கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் கலா சென்ற மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய கலாவை அவ்வழியாக வந்தவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கலா வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த விபத்து பற்றி பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ்நாடு முதல்-அமைச்சர் கால்நடைகளின் நலம் பாதுகாக்கும் பொருட்டு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்திட ஆணை பிறப்பித்து உள்ளார்.
    • முகாம்கள் இந்த மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் நிறைவு பெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கால்நடை மருத்துவ வசதி கிடைக்கப்பெறாத கிராமங்களில் கால்நடைகளின் நலம் பாதுகாக்கும் பொருட்டு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்திட ஆணை பிறப்பித்து உள்ளார்.

    அதன்படி 2023-24-ம் ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலா 20 முகாம்கள் வீதம் 300 முகாம்கள் நடத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    முகாம்கள் இந்த மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் நிறைவு பெற உள்ளது. இம்முகாம்களில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள், குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படும்.

    நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் கிராமங்களில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளது.

    முகாம்கள் நடத்தப்படும் நாள் மற்றும் இடம் அந்தந்த கால்நடை உதவி மருத்து வர்களால் அறிவிக்கப்படும். அந்த நாளில் கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கால்நடைகளை அழைத்து சென்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • தற்போது இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது.

    ராசிபுரம்:

    தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டம் 91-வது தொகுதியாக ராசிபுரத்தில் நடைபயணம் மேற்கொண்டார்.

    ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே தொடங்கிய யாத்திரையானது நகரின் முக்கிய சாலைகள் வழியாக நடைபெற்று புதிய பஸ் நிலையம் சென்றடைந்தது.

    பின்னர் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பங்கேற்று பேசினார். பா.ஜ.க. மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் வரவேற்றார். மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, நரேந்திரன், கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா மலை பேசியதாவது:-

    ஆட்சி தத்தளிக்கிறது

    கடந்த தேர்தலில் 511 வாக்குறுதிகளை கொடுத்த தி.மு.க., கடந்த 30 மாதத்தில் 20 வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பலை போல தி.மு.க. ஆட்சி தத்தளிக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவில் 3-வது அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது. ரூ.5½ லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது ரூ.7 லட்சத்து 53 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. அதன்படி ஒவ்வொருவர் தலையிலும் ரூ.3 லட்சத்து 52 ஆயிரம் கடன் உள்ளது.

    இப்போது இருந்து கடனை வாங்காமல் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த ஆரம்பித்தாலும் அதை அடைக்க 35 ஆண்டுகளாகும். ஆனால் கடன் வாங்காமல் அரசை இயக்க முடியாத நிலை தமிழகத்தில் உள்ளது.

    எதிர்காலம் பாதிப்பு

    டாஸ்மாக்கால் இளை ஞர்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. அரசுக்கு டாஸ்மாக் மூலம் ரூ.44 ஆயிரம் கோடி ஆண்டு வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானம் ரூ.50 ஆயிரம் கோடியாக உயரும். 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை 3-வது முறையாக ஆட்சியில் அமர வைக்கவும் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவும் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

    பல்லடத்தில் 4 பேர் வெட்டி கொல்லப்பட்டனர். அவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் அரசு நஷ்டஈடு வழங்குகிறது. அதை வாங்குவதற்கு கூட அங்கு ஆள் இல்லை. ஆனால் கள்ளச்சாராயத்தை குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுக்கிறார்கள். இதுபோன்ற ஆட்சியை இந்திய துணை கண்டத்தில் பார்த்ததில்லை. ராசிபுரம் நெய்க்கு புவிசார் குறியீடு கிடைக்க தேவையான முயற்சியை எடுப்போம்.

    மருத்துவ கல்லூரிகள்

    நீட் வந்தால் தி.மு.க.வினரின் கல்லூரிகளில் கேபிடேஷன் வைத்து சீட் விற்க முடியாது. தமிழகத்தில் தி.மு.க. தற்போது 6-வது முறையாக ஆட்சி செய்கிறது. இதுவரை அவர்கள் 5 அரசு கல்லூரிகளை மட்டுமே தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

    பிரதமர் மோடி ஒரே முறையில் 11 மருத்துவ கல்லூரி களை தமிழகத்தில் கொண்டு வந்துள்ளார். ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளை அதிக அளவில் கொண்டு வந்துள்ளனர். இதில் இருந்தே அவர்களின் நீட்டுக்கான எதிர்ப்பு புரியும்.

    இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

    முடிவில் ராசிபுரம் நகர தலைவர் வேலு நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணைத்தலைவர் லோகேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் சேதுராமன், வெளிநாடு வாழும் தமிழர் பிரிவு நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 50 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்த அரசு சார்பில் கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டு செயல்படுகிறது.
    • பல்வேறு மக்களுடைய கோரிக்கைகளை சட்டமன்றத்திலே பேசி அவற்றை நிறைவேற்றுகின்ற முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றேன்.

    திருச்செங்கோடு:

    தமிழகம் முழுவதும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தின்போது பொதுமக்களை சந்தித்து பிரதமர் மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறுகிறார். குறிப்பாக பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் மாலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. சட்டமன்ற உரைகளை பற்றியும், தொகுதியில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் விமர்சித்து இருந்தார்.

    இதற்கு பதிலளித்து ஈஸ்வரன் எம்.எல்.ஏ. அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 30 மாதங்களில் பலமுறை நான் சட்டமன்றத்திலே பேசியிருக்கிறேன். திருச்செங்கோடு மலைக்கு ரோப் கார் அமைப்பதை பற்றி சட்டமன்றத்தில் பேசி இருக்கிறேன். ரோப் கார் என்பது சட்டமன்றத்திலேயே அறிவிக்கப்பட்டு திருச்செங்கோடு மலைக்கு ரோப் கார் அமைக்க முடியுமா என்பதை ஒரு குழு ஆய்வு செய்து சாத்தியக்கூறு இல்லை என்பதை அறிவித்த பின் இந்து சமய அறநிலையத்துறை மாற்று சாலையை அமைப்பதற்கு நெடுஞ்சாலை துறையிடம் கருத்துரு அனுப்பி இருக்கிறது. இது நெடுஞ்சாலைத்துறை ஆய்வில் தற்போது இருக்கிறது.

    50 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்த அரசு சார்பில் கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டு செயல்படுகிறது. திருச்செங்கோடு புறவழிச்சாலை 50 சதவீதம் முடிக்கப்பட்டு மீதி பகுதிகளுக்கு ஒப்பந்ததாரர் பணிகளை தொடங்க இருக்கிறார். 9 கோடி ரூபாய் செலவில் வாரச்சந்தை மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 5 கோடி ரூபாய் செலவில் தினசரி சந்தை மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 17 வழித்தடங்களில் புதிதாக பஸ்கள் விடப்பட்டு இருக்கின்றன.

    இன்னும் பல்வேறு பணிகள் தொகுதி முழுவதும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இன்னும் பல்வேறு மக்களுடைய கோரிக்கைகளை சட்டமன்றத்திலே பேசி அவற்றை நிறைவேற்றுகின்ற முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றேன்.

    எதுவுமே தெரியாமல் திருச்செங்கோட்டிலே வந்து பொய்யான கருத்துக்களை பேசி இருப்பது நியாயமா? என்னுடைய செயல்பாடுகளை கேள்வி கேட்க ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமை இருக்கிறது. அதே சமயம் பதில் சொல்ல வேண்டிய கடமையும் எனக்கு இருக்கிறது.

    என்னுடைய சட்டமன்ற உரைகளைப் பற்றியும் சட்டமன்ற உறுப்பினராக என் செயல்பாடுகள் பற்றியும் அண்ணாமலை என்னோடு விவாதிக்க தயாரா? தேதியையும், நேரமும், இடமும் குறிப்பிடுங்கள் விவாதத்திற்கு நான் தயார்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×