என் மலர்
நாமக்கல்
- நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று நரசிம்மர் சன்னதியில் தல விருட்ச மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று தல விருட்ச மரக்கன்றை நட்டு வைத்தார்.
நாமக்கல்:
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று நரசிம்மர் சன்னதியில் தல விருட்ச மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று தல விருட்ச மரக்கன்றை நட்டு வைத்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இன்று(நேற்று) ஒரே நாளில் 12 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது. சட்டப்பேரவை அறிவிப்பின்படி ஆஞ்சநேயர் கோவில் திருப்பணி நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 1,131 கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. கடந்த 28 மாதங்களில் 8,006 கோவில்களுக்கு திருப்பணிகள் நடத்த மாநில தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. தி.மு.க.வினர் கோவில் திருப்பணிக்கு தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.
ஈரோடு மணடலத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ரூ.69.09 கோடிமதிப்பீட்டில் 345 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 1 லட்சம் தல விருட்ச மரங்கள் நடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2,000 கிராம கோவில்களுக்கு ஒரு கால பூஜை செய்வதற்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2022-2023-ம் ஆண்டில் 2,500 கோவில்கள், 2023-2024-ம் ஆண்டு 2,500 கோவில்கள் என 5,000 கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூ.2 லட்சம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 25 ஆயிரம் கோவில்களுக்கு திருப்பணிகள் முடிவுறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 5,436 கோடி ரூபாய் மதிப்புள்ள 5,480 ஏக்கர் இந்து சமய அறநிலையத் துறை நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை மேலும் தொடரும்.
திருச்செங்கோடு அர்த்தநா ரீஸ்வரர் கோவில் ரோப்கார் திட்டம் ஆய்வில் உள்ளது. மலைசார்ந்த கோவில்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. 28 கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சர்கர் ஆகலாம் என்ற அடிப்படையில் அர்ச்சகர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதுபோல் 8 பெண்கள் ஓதுவார்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் 36 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளன. 5 பெண்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்துள்ளனர். அவர்களுக்கும் நீதிமன்ற வழக்கு முடிந்தபின் அர்ச்சர்களாகும் சூழல் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது கலெக்டர் உமா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ., நகர் அமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில், அறங்காவல் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் ராம.சீனிவாசன், மல்லிகா குழந்தைவேலு, செல்வசீராளன், ரமேஷ்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
- வாழ்நாயக்கன் பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் காளிதாஸ் (32). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார்.
- காளிதாஸ் வழக்கம்போல் கட்டிட வேலைக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் காளிதாஸ் வீட்டிற்கு வரவில்லை.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நல்லூர் அருகே வாழ்நாயக்கன் பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் காளிதாஸ் (32). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரஞ்சிதா (30). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் காளிதாஸ் வழக்கம்போல் கட்டிட வேலைக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் காளிதாஸ் வீட்டிற்கு வரவில்லை. ரஞ்சிதா காளிதாஸ் செல்போனுக்கு போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த ரஞ்சிதா உறவினர் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தேடிப் பார்த்தார்.
ஆனால் காளிதாஸை கண்டுபிடிக்க முடிய வில்லை. இதுகுறித்து ரஞ்சிதா நல்லூர் போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்கு பதிவு செய்து காளிதாஸ் தானாக எங்காவது சென்று விட்டாரா அல்லது அவரை எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
- சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.
- இந்த 18 வார்டுகளிலும் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த 18 வார்டுகளிலும் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக 71 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தொடர்ந்து 3 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
முற்றுகை
இதைதொடர்ந்து இன்று காலை பணிக்கு வந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 71 பேரும் பணிக்கு செல்லாமல் நிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தையும் உடனடியாக வழங்க கோரி நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் வாழ்வாதாரமே இந்த சம்பளத்தை நம்பி உள்ளது. வீட்டு வாடகை, மளிகை சாமான்கள், குழந்தைகளுக்கான பள்ளி கட்டணம் கட்ட முடியாமல் தவித்து வருகிறோம். தற்போது தீபாவளி வருவதால் எங்களுக்கு நிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் என முறையிட்டனர்.
இதையடுத்து நகராட்சி ஆணையாளர், நகரமன்ற தலைவர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தூய்மை பணியாளர்களின் இந்த போராட்டத்தால் நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதியிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளாமல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரமத்தி வேலூரில் நேற்று இரவு "என் மண் என் மக்கள்" நடைபயணம் மேற்கொண்டார்.
- பா.ஜ.க. மாநில துணை தலைவர்கள் டாக்டர் ராமலிங்கம், வி.பி.துரைசாமி, கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இணைந்து நடைபயணம் மேற்கொண்டனர்.
பரமத்தி வேலூர்:
தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் "என் மண் என் மக்கள்" என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரமத்தி வேலூரில் நேற்று இரவு "என் மண் என் மக்கள்" நடைபயணம் மேற்கொண்டார். அவருடன், பா.ஜ.க. மாநில துணை தலைவர்கள் டாக்டர் ராமலிங்கம், வி.பி.துரைசாமி, கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இணைந்து நடைபயணம் மேற்கொண்டனர்.
அப்போது பரமத்திவேலூர் பகுதியில் பழைய புறவழிச் சாலை முக்கோண பூங்கா பகுதியில் இருந்து நடைபயணம் தொடங்கி அங்கிருந்து நாமக்கல் சாலை, சுல்தான்பேட்டை- மோகனூர் பிரிவு சாலை, பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக நடந்து சென்று பொதுமக்களை அண்ணாமலை சந்தித்தார்.
தொடர்ந்து பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதியின் "என் மண் என் மக்கள்" நடைபயணத்தின் நிறைவாக பரமத்திவேலூர் நான்கு சாலை பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு பொதுமக்கள் மத்தியில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழகம் முழுவதும் 91 சட்டமன்ற தொகுதிகளில் நடைபயணம் முடித்து பரமத்தி வேலூரில் 92-வது சட்டமன்ற தொகுதி நடைபயணம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும் என்ற நம்பிக்கையோடு இந்த பாதயாத்திரை நடைபயணம் சென்று வருகிறோம். விவசாய தொழில் நிறைந்த பரமத்தி வேலூரில் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை ஆளும் தி.மு.க. அரசு நிறைவேற்ற வில்லை.
சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு உரிய தொகையினை கூட்டுறவு ஆலைகள் வழங்கவில்லை., பரமத்திவேலூர் பகுதியில் உள்ள வெல்லம், கரும்பு போன்றவற்றை அரசுதுறை நிறுவனங்கள் கொள்முதல் செய்யவில்லை. ரேசன் கடைகளில் நாட்டுச்சர்க்கரை வழங்கவில்லை. கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 4,000 ரூபாயாக இதுவரை உயர்த்தி தரவில்லை.
பரமத்திவேலூரில் இருந்த வெற்றிலை ஆராய்ச்சி நிலையத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள். அதனை மீண்டும் பரமத்தி வேலூரிலேயே அமைக்க வேண்டும்.
கவுரவ நிதி
ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்காக பிரதமர் பயிர் காப்பீடு, மண் வள அட்டை, விவசாயிகள் கடன் அட்டை, விவசாயிகள் கவுரவ நிதி, பாசன வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி அரசு விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தி.மு.க. அரசு தமது சுய லாபத்திற்காக கொண்டு வந்த சட்ட மசோதாக்களுக்கு தான் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லையே தவிர, அவர் வேண்டுமென்ரே எந்த கோப்புகளையும் கிடப்பில் போடவில்லை என்பதை முதல்- அமைச்சர், அமைச்சர்கள் உணர வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி 10 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ற இலக்கை நிர்ணயித்து இதுவரை 8.50 லட்சம் மேற்பட்டோருக்கு, ரோஜ்கார் மேளாக்கள் நடத்தப்பட்டு மத்திய அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் வேலை வழங்கும் இலக்கு எய்தப்படும்.
எனவே வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலிலும் 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பங்கேற்றவர்கள்.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில துணை தலைவர்கள் டாக்டர் ராமலிங்கம், வி.பி.துரைசாமி, மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார், என் மண் என் மக்கள் யாத்திரை நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் காந்தி, மாவட்ட பொதுச் செயலாளர் சுபாஷ் , மாவட்ட பொருளாளர் மகேஸ்வரன்,மாவட்ட துணைத் தலைவர்கள் வடிவேல், பழனியப்பன், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் பூபதி, மாவட்ட பிறமொழி பிரிவு தலைவர் ரவிச்சந்திரன், கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் கேப்டன் செல்வராஜ் , பரமத்தி ஒன்றிய தலைவர் அருண், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பத்ம ராஜா,பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், மாவட்ட ,ஒன்றிய, பேரூர், கிளை பொறுப்பாளர்கள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- பள்ளி பாளையம் சுற்று வட்டாரத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாளாக உள்ளது.
- இங்கு சர்ட், வேட்டி, சேலை, லுங்கி, துண்டு உள்ளிட்ட பல வகையான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனைக்கு செல்கிறது.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் சுற்று வட்டாரத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாளாக உள்ளது. இங்கு சர்ட், வேட்டி, சேலை, லுங்கி, துண்டு உள்ளிட்ட பல வகையான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனைக்கு செல்கிறது. பொங்கல், தீபாவளி மற்றும் வடமாநில பண்டிகை காலத்தில் விற்பனை அதிகளவு இருக்கும். அந்தளவுக்கு உற்பத்தியும் இரவு, பகலாக நடக்கும்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் விற்பனையின்றி தேக்க மடைந்துள்ளதால் உற்பத்தி யாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து பள்ளி பாளையம் வட்டார ஜவுளி உற்பத்தியாளர் சங்க தலைவர் கந்தசாமி கூறியதாவது:-
பள்ளிபாளையம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் துணிகள் இந்தியா முழுவதும் விற்பனைக்கு செல்லும். கேரளாவில் ஓணம் பண்டிகை, கர்நாடாகவில் தசரா பண்டிகையின் போது எதிர்பார்த்தளவு விற்பனை இல்லை. இதனால் பல கோடி மதிப்பிலான துணிகள் விற்பனையின்றி தேக்க மடைந்துள்ளது. இதனால் உற்பத்தியா ளர்களுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
விரைவில் தீபாவளி வரவுள்ளதால் உற்பத்தியை நிறுத்தினால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். தொழி லாளர்களுக்கு தீபாவளி போன்ஸ் மற்றும் சம்பளம் உள்ளிட்ட இதர செலவுகள் போன்றவை சமாளிப்பதே கடினமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- குச்சிக்காடு என்ற பகுதியில் கடந்த 12-ந் தேதி வயதான விவசாய தம்பதியினரை மர்மநபர்கள் கொடூரமாக அடித்துக் கொலை செய்தனர்.
- பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை படுகொலை செய்யப்பட்ட வயதான தம்பதியின் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் குப்புச்சிபாளையம் அருகே குச்சிக்காடு என்ற பகுதியில் கடந்த 12-ந் தேதி வயதான விவசாய தம்பதியினரை மர்மநபர்கள் கொடூரமாக அடித்துக் கொலை செய்தனர்.
இந்தநிலையில் என் மண் என் மக்கள் நடைபயணத்திற்காக நேற்று பரமத்திவேலூர் வந்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை படுகொலை செய்யப்பட்ட வயதான தம்பதியின் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது இது போன்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தடுத்து நிறுத்த தொடர்ந்து தமிழ்நாடு போலீசாரிடம் தான் பேச உள்ளதாகவும் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
குற்ற சம்பவங்கள்
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே விவசாய பண்ணை வீடுகளில் தனியாக தங்கி இருக்கும் வயதான தம்பதியரை கொன்று விட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு மன்னிப்பே கிடையாது. பரமத்திவேலூர் இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் விரைந்து கண்டுபிடிக்க வேண்டும்.
தமிழ்நாடு காவல்துறை கடுமையாக இருந்தால் மட்டுமே குற்றங்கள் நடக்கும் முன்பாகவே அவற்றை தடுத்து நிறுத்த முடியும்.
நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகி மீதும், போலீசார் மீதும் தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த மாவட்ட கலெக்டரின் பேச்சைக் கூட கேட்காமல் தி.மு.க.வினர் அராஜக போக்கில் ஈடுபட்டனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பீட் சிஸ்டம்
தமிழ்நாடு காவல்துறை குற்றச்சம்ப வங்களை தடுக்கும் பணிகளில் அதிக முக்கி யத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும். தமிழகத்தின் பழங்கால காவல்துறை போல பீட் சிஸ்டம் கிராமப்புற பகுதிகளிலும் அமைக்க வேண்டும். மிகுந்த கவனமுடன் குற்ற சம்பவங்கள் நடப்பதற்கு முன்பாகவே அது குறித்த தகவல்களை சேகரிக்க வேண்டும். போலீஸ் துறையில் உரிய பணியிடங்களை நிரப்பி குறைபாடுகளை நீக்கி குற்றங்கள் நடப்பதற்கு முன்பாகவே அவற்றை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிப்காட்
தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பெருந்துறை சிப்காட் பகுதியில் நச்சுக் கழிவுகள் அதிகமாக பரவி விவசாய நிலங்கள் பாதிக்கப்ப டுகின்றன. நாமக்கல் அருகே வளையப்பட்டி பகுதிகளிலும் சிப்காட் அமைக்க உள்ளதாக அறிகிறோம். விவசாய நிலங்கள், பொதுமக்களை பாதிக்காத வகையில் இது போன்ற தொழிற்சாலை களையும் சிப்காட்டு களையும் அமைக்கலாம். அதற்கு பாஜக எந்த தடையும் தெரிவிக்காது. எங்களுடைய விவசாய அணி இது போன்ற பிரச்சனை உள்ள இடங்களுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து உண்மை நிலையை அறிந்து செயல்பட்டு வருகிறோம்.
அரசியல் நாடகம்
உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் மீதான தமிழ்நாடு அரசின் வழக்கு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, உயர்கல்வி மத்திய அரசின் பட்டியலில் உள்ளது. வேந்தர் நியமித்தல், சித்தா பல்கலைக்கழகம் தனித் தேர்வு போன்ற உயர்கல்வி சார்ந்த விஷயங்களில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதால்தான் தமிழ்நாடு ஆளுநர் அவரது நிலைப்பாட்டில் உள்ளார்.
ஆளுநர் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக எதையும் செய்யமாட்டார். ஆனால் தி.மு.க. அரசு வேண்டுமென்றே இந்த விஷயத்தில் ஆதாயம் பெற இதுபோன்று நடக்கிறது. என்மீதும் வழக்கு தொடர ஆளுநர் பெயரில் அட்வகேட் ஜெனரல் அனுமதி அளிப்பது போல பல அரசியல் நாடகங்களை தி.மு.க. நடத்தி வருகிறது.
வெளிப்படை தன்மை
அதேபோல தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்திற்கு உயர் பதவிக்கான பணியிடங்களை நியமிக்கும் போது வெளிப்படை தன்மை யோடு அரசு நடந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் தமிழ்நாடு சட்ட அமைச்சரும் பிற அமைச்சர்களும் தமிழக மக்களை குழப்பி வருகிறார்கள்.
தொடர்ந்து கர்நாடக அரசு தமிழ்நாட்டை எதிரிபோல பார்க்கிறது என்ற அமைச்சர் துரைமுருகனின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ்தான் கர்நாடகாவில் ஆட்சி செய்கிறது. அந்த கூட்டணியில் எந்த விதமான கொள்கை சம்பந்தங்களும் இல்லாத கட்சிகள் உள்ளன. காவிரி நதிநீர் பங்கீட்டில் காங்கிரசும் தி.மு.க.வும் அரசியல் நாடகம் நடத்துவதை போலத்தான், இந்தியா கூட்டணியும் இருக்கிறது.
எனவே கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி தான் தமிழகத்தை எதிரி நாடு போல பார்க்கிறது என்பதை அமைச்சர் துரைமுருகன் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்குச்சிக்காடு என்ற பகுதியில் கடந்த 12-ந் தேதி வயதான விவசாய தம்பதியினரை மர்மநபர்கள் கொடூரமாக அடித்துக் கொலை செய்தனர்.
- குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி முகவர்க ளுக்கான ஆலோசனை கூட்டம் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது.
- வருகிற 4, 5 மற்றும் 18, 19-ந் தேதிகளில் ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், பிழை திருத்தம் பணிகள் ஆகியவை நடைபெறவுள்ளது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி முகவர்க ளுக்கான ஆலோசனை கூட்டம் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது. வருகிற 4, 5 மற்றும் 18, 19-ந் தேதிகளில் ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், பிழை திருத்தம் பணிகள் ஆகியவை நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், பொதுமக்களுக்கு உதவிட கோரியும் வாக்குசாவடி முகவர்களுக்கு அறிவு றுத்தப்பட்டது. இதில் வருவாய்த்துறை அலுவ லர்கள் பலர் பங்கேற்றனர்.
- ஆஞ்சநேயர் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவில்.
- சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
நாமக்கல்:
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லால் ஆன 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். உலக பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் கட்டளைதாரர்கள் மூலம் வடமாலை அபிஷேகம் நடைபெற்று வருகிறது.
இக்கோவிலில் கடைசியாக 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கிடையே நடப்பாண்டில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு, ரூ.64 லட்சத்து 60 ஆயிரம் செலவில் பணிகள் முடிக்கப்பட்டன.
மகா கும்பாபிஷேகம்
இதையடுத்து 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (1-ந்தேதி) ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை யொட்டி கோவில் முன்பு வாழை, செங்கரும்பு, காய்,கனிகளால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் அலங்கார பந்தலுடன் யாகசாலை அமைக்கப்பட்டு, நேற்று முன்தினம் யாகசாலை பூஜை தொடங்கி நடைபெற்று வந்தது.
இதையடுத்து இன்று (புதன்கிழமை) காலை 7.15 மணி அளவில் வருண தீர்த்தம், புனித படுத்துதல் அனுதின ஹோமம், ஆழ்வார்கள் அருளிய தமிழ் திவ்ய பிரபந்த வேள்வி, தாரா ஹோமம், வேள்வியை நிறைவு செய்தல், தமிழ் திவ்ய பிரபந்த சமர்ப்பணம், திருவாராதனம், சக்தி சங்கரஹணம், காலை 9.10 மணிக்கு யாத்ராதானம், கும்பப்ரயாணம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு எனும் மகா கும்பாபிஷேக பெருவிழா, மகா சம்ப்ரோஷணம் கோலாகலமாக நடை பெற்றது. ஆஞ்சநேயர் சாமி மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு அருள்பாலித்தார்.
அதனை தொடர்ந்து 10.45 மணிக்கு தசதரிசனம், சிறப்பு திருவாராதனம், தமிழ் திவ்ய பிரபந்த சமர்ப்பணம், பிரம்ம ேகாஷம், அருட்பிரசாதம், தீர்த்த பிரசாதம் வழங்குதல், ஆச்சார்ய பஹுமானம், காலை 11.45 மணிக்கு ஸர்வ தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கே.ஆர்.ராஜேஷ்குமார் எம்.பி., கலெக்டர் உமா, இந்து சமய அறநிலைய துறை சிறப்பு அதிகாரி குமரகுருபரன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், அறங்காவல் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் சீனிவாசன், மல்லிகா குழந்தைவேல், ரமேஷ்பாபு, செல்வசீராளன், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன், நகராட்சி தலைவர் கலாநிதி, துணைதலைவர் பூபதி, நகர்மன்ற உறுப்பினர் டி.டி. சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் குவிந்தனர்
கும்பாபிஷேகத்தை யொட்டி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசம் முழங்க ஆஞ்சநேயரை வழிபட்டனர். பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆயிரகணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் நீண்ட நேரம் நின்று வரிசையில் இரும்பு தடுப்புகள் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவை காண அகன்ற திரை அமைக்கப்பட்டிருந்தது.
கோவில் மற்றும் கோவில் வளாகம் பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. விழாவில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோவில் வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள தெருக்களில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தப்பட்டு கோவில் அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் கண்காணித்தனர். இதேபோல் கண்காணிப்பு கோபுரம் அமைத்தும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பக்தர்களின் கூட்டத்தை முறைப்படுத்த சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடர்ந்து கண்காணித்தப்படி இருந்தனர்.
பக்தர்களுக்கு பல்வேறு குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தீயணைப்பு, சுகாதாரம், வருவாய், போக்குவரத்துதுறை, நகராட்சி, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் சார்பில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
- 1,000 மரக்கன்றுகளை மரத்துக்கு மரம் 15 அடி இடைவெளியில் நடவு செய்ய திட்டமிடப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
- மரங்களை நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டுமென வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 1000 மரக்கன்றுகள் நடுவதன் துவக்க விழா நடைபெற்றது. மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் மருத்துவர் உமா தலைமை வகித்தார்.நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார் மற்றும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநரும், மாவட்ட வருவாய் அலுவலருமான மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் கலந்து கொண்டு குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 1000 மரக்கன்றுகள் நடுவதன் துவக்கமாக, மரக் கன்றுகளை நட்டார்.
அப்போது வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, வனத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ், மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் நாவல் மரம், இலுப்பை மரம், புளிய மரம், மகாகனி மரம், நீர் மருது தலா 250 மரக்கன்றுகள் வீதம் மொத்தம் 1,000 மரக்கன்றுகளை மரத்துக்கு மரம் 15 அடி இடைவெளியில் நடவு செய்ய திட்டமிடப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
காற்றிலுள்ள மாசினைக் கட்டுப்படுத்த, கரியமில வாயுவின் அளவைக் குறைத்து ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும், தேவையான அளவு மழைப்பொழிவைப் பெறவும் குறுங்காடுகள் உதவுகின்றன. அகிரா மியாவாக்கி என்ற ஜப்பான் நாட்டு தாவரவியலாளர் அறிமுகம் செய்த காடு வளர்ப்பு முறைதான் மியாவாக்கி முறையாகும். இந்த முறையில் குறைந்த காலத்தில் அடர்ந்த வனப்பகுதியை ஏற்படுத்த முடியும். மியாவாக்கி முறையினால் பத்து ஆண்டுகளில் ஒரு மரம் எவ்வளவு வளர்ச்சியடையுமோ அந்த வளர்ச்சி இந்த முறையில் இரண்டே ஆண்டுகளில் கிடைத்துவிடும், பொதுவாக இந்த முறையில் மரங்கள் இயற்கை காடுகளை விட 10 மடங்கு அதிக வேகமாகவும், 30 மடங்கு அதிக நெருக்கமாகவும் வளரும்.
கிராமப்புறங்களில் உள்ள பஞ்சாயத்து அல்லது புறம்போக்கு நிலங்களைத் தேர்வு செய்து அதில் குறுங்காடுகளை உருவாக்கலாம் அல்லது பஞ்சாயத்து ஏரிகளில் தண்ணீர் தேங்கி நிற்காத பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி அந்த இடங்களில் குறுங்காடுகளை உருவாக்கலாம். குறுங்காடுகள் உருவாக்குவதால் பல உயிரினங்கள் பயனடையக் கூடும். மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான காலி நிலங்கள் இருப்பின் அவற்றிலும் குறுங்காடுகளை அமைக்கலாம். மேலும், இந்த மரங்களை நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டுமென வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை துணைத் தலைமை பொறியாளர் செங்குட்டுவன், துணைத் தலைமை ரசாயனர் சந்திரசேகரன், கரும்பு பெருக்க அலுவலர் சுப்புராஜ், உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், தொழிலாளர் நல அலுவலர் தியாகராஜன், அலுலக மேலாளர் கணபதி, சிவில் பொறியாளர் தங்கவேலு, சர்க்கரை ஆலை அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாட்டில் 2023-2024 -ம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் சம்பா மற்றும் கோடை பருவங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்) அல்லது தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள விவசாயிகள் கார்னரில் (www.pmfby.gov.in) நேரிடையாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;-
தமிழ்நாட்டில் 2023-2024 -ம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் சம்பா மற்றும் கோடை பருவங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் பியூச்சர் ஜெனரலி காப்பீடு நிறுவனத்தால் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாமக்கல் மாவட்டத்தில் நெல்-II, சிறியவெங்காயம்-II சம்பா (சிறப்பு) பருவத்திலும் உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், பருத்தி, கரும்பு, , வாழை, மரவள்ளி, மற்றும் தக்காளி பயிர்கள் கோடை (ரபி) பருவத்திலும் பிரிமியத் தொகை காப்பிடு செலுத்த வேண்டும்.
விவசாயிகள் பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்க ளிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ மற்றும் கடன் பெற விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்) அல்லது தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள விவசாயிகள் கார்னரில் (www.pmfby.gov.in) நேரிடையாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ-அடங்கல், விதைப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியையோ (www.pmfby.gov.in) அல்லது அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவல ரையோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கி களையோ அல்லது இத்திட்டத்தை செயல்ப டுத்தும் காப்பீட்டு நிறுவனத்தையோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பூக்களை விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் உள்ள 2 பூக்கள் ஏல சந்தைகளுக்கும் கொண்டு வருகின்றனர்.
- பூக்கள் விலை சரிவடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்பொழுது தேய்பிறை நடைபெற்று வருவதால் எந்த விசேஷங்களும் இல்லாததால் பூக்கள் நிலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நகப்பாளையம், செல்லப்பம்பாளையம் கபிலர்மலை, தண்ணீர் பந்தல், ஆனங்கூர், பாகம்பாளையம், சின்ன மருதூர், பெரிய மருதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லி, முல்லைப்பூ , அரளி, ரோஜா, செவ்வந்தி, கனகாம்பரம் சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.
இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் உள்ள 2 பூக்கள் ஏல சந்தைகளுக்கும் கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.
ஏலம் எடுத்த பூக்களை வியாபாரிகள் பல்வேறு வகையான மாலைகளாகவும் தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்கின்றனர். அதேபோல் சில வியாபாரிகள் உதிரிப்பூக்களை பிளாஸ்டிக் கவரில் போட்டு பாக்கெட்டுகளாக உள்ளூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50- க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.200- முல்லைப் பூ கிலோ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150- க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம். போனது.
பூக்கள் விலை சரிவடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்பொழுது தேய்பிறை நடைபெற்று வருவதால் எந்த விசேஷங்களும் இல்லாததால் பூக்கள் நிலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
- பாவளி பண்டிகை காலங்களில் தற்காலிக உணவு கூடங்கள், திருமண மண்டபங்கள், வீடுகள் மற்றும் சீட்டு நடத்துபவர்கள் ஆர்டரின் பேரில் தயா ரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும்
- பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையார்களும் உடனடியாக https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் அல்லது பதிவு பெற்றுக் கொள்ள வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகை காலங்களில் தற்காலிக உணவு கூடங்கள், திருமண மண்டபங்கள், வீடுகள் மற்றும் சீட்டு நடத்துபவர்கள் ஆர்டரின் பேரில் தயா ரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.
இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள், தரமான கலப்பட மில்லாத மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். அனு மதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோ கிக்ககூடாது. தரமான நெய் மற்றும் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்ப டுத்தக்கூடாது. பயன்படுத்திய எண்ணெய்யை பயோ- டீசல் தயாரிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட நிறுவ னத்திற்கு வழங்க வேண்டும்.
பண்டிகை கால இனிப்பு வகைகளை பரிசு பேக்கிங் செய்யும் போது பால் பொருட்களால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை மற்ற இனிப்பு பொருட்களுடன் பேக்கிங் செய்து விற்பனை செய்யக் கூடாது. சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தூய்மையாக இருக்க வேண்டும். நீரின் தரத்தினை அறியும் பொருட்டு பகுப்பாய்வு சான்றிதழ் பெற்று வைத்திருக்க வேண்டும்.
பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் சில்லறை இனிப்பு பொருட்களுக்கும், விவரச் சீட்டு கட்டாயம் இருக்க வேண்டும். அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு, பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் எண், பேட்ஜ் எண், லாட் எண் சைவ குறியீடு மற்றும் அதில் பயன்படுத்தும் பொருட்களின் விபரம் ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். தடைசெய்யப்பட்ட நெகிழி பைகளை பயன்படுத்தக் கூடாது, செய்திதாள்களில் உணவு பொருட்களை வைத்து விற்பனை செய்யக்கூடாது.
உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும். உணவு தயாரிக்கும் பணியாளர்கள் தூய்மையான ஆடைகள் அணிந்து, நகங்களை வெட்டி சுத்தமாக இருக்க வேண்டும். தன் சுத்தம் பேண வேண்டும். மேலும் பணியாளர்கள் தலைகவசம், மேலங்கி மற்றும் கையுறை அணிய வேண்டும். பணியினை தொடரும் முன்பும், கழிவறை பயன்படுத்திய பின்பும் சோப்பு கொண்டு கைகளை சுத்தம் செய்தல் வேண்டும். உணவு பொருட்களை கையாள்பவர்கள் உடற்தகுதி குறித்த மருத்துவ சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையார்களும் உடனடியாக https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் அல்லது பதிவு பெற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






