search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    20 பஸ்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்
    X

    காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள காட்சி.

    20 பஸ்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

    • 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை சோதனை செய்து, அதில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்த காற்று ஒலிப்பான்களை அகற்றி பறிமுதல் செய்தனர்.
    • காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை எச்சரித்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் பொறுப்பு சரவணன் உள்ளிட்ட அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை சோதனை செய்து, அதில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்த காற்று ஒலிப்பான்களை அகற்றி பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதுபோல் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை எச்சரித்தார்.

    அதேபோல் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தங்கள் கைகளில் தங்களது ஓட்டுநர் உரிமத்தையும் நடத்துனர் உரிமத்தையும் வைத்திருக்க வேண்டும் எனவும் பெயர் பேட்ச் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாமல் இருந்தால் நோட்டீஸ் கொடுத்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

    Next Story
    ×