என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • காலியாக உள்ள ஒரு கணினி இயக்குபவர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
    • வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005-ன் கீழ் பொதுப்பிரிவில் (முன்னுரிமையற்றவர்கள்) காலியாக உள்ள ஒரு கணினி இயக்குபவர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

    இதற்கு மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும், விபரங்களை நாகப்பட்டினம் மாவட்ட இணையதளத்தில் www.nagapattinam.nic.in பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பதிவஞ்சலில் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், திட்ட செயலாக்க அலுவலக வளாகம், தரைத்தளம், புதிய கடற்கரை சாலை செல்லும் வழி, நாகப்பட்டினம்-611 001 என்ற முகவரிக்கு வருகிற 31-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
    • தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

    வேதாரண்யம்:

    காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் சுர்ஜித் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் 15 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற சூழல் உள்ளதால், டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறுவை சாகுபடி பணிகள் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

    மேலும், தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

    நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடி வளர்ந்து 30 நாட்கள் ஆனநிலையில் தண்ணீர் இன்றி முளைப்பு திறன் பாதித்த நிலையில் மகசூல் இனி பயன்தராது என்பதால் நூற்றுக்கணக்கான ஏக்கர் டிராக்டர் விட்டு உழுதுவிட்டனர்.

    இதேநிலை நீடித்தால் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும் எனவே டெல்டா மாவட்ட விவசாயிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு, கர்நாடகா அரசுக்கு அழுத்தம் தெரிவித்து, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக கூட்டி தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் .

    மேலும், குறுவை சாகுபடி பாதித்த பகுதிகளை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மறைமலை நகரில் உள்ள கருமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும்.

    ஆடித்திரு விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

    வெளிப்பாளையம் ஏழைப்பி ள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்ட பூச்சொரிதல் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் அம்மனுக்கு பூதட்டு ஏந்தியவாறு மறைமலைநகர் கருமாரியம்மன் கோவில்வரை ஊர்வலமாக சென்றனர்.

    பின்னர் கோவிலை சென்றடைந்த பக்தர்கள் அங்கு தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற்றும் விதமாக அம்மனுக்கு பூவால் அபிஷேகம் செய்தனர்.

    பூச்சொரிதல் விழாவில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

    • நேர்மையை பாராட்டி அவருக்கு ரூ. 3 ஆயிரம் பரிசாக வழங்கினார்.
    • ஆகாச மாரியம்மன் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தகட்டூர் கடைத்தெருவில் ஒரு பவுன் தங்க செயின் கீழே கிடந்ததுள்ளது.

    அதை அப்பகுதியில் பழக்கடை வைத்துள்ள செந்தில் என்பவர் எடுத்து வர்த்தக சங்கம் மூலம் வாய்மேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    பின், போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நகை பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி பகுதியை சேர்ந்த முனியப்பன் உடையது என்பது தெரியவந்தது.

    பின்னர், ஆவணங்களை சமர்ப்பித்து நகையை பெற்றுக்கொண்ட முனியப்பன், நகையை மீட்ட செந்தில்ன் நேர்மையை பாராட்டி அவருக்கு ரூ. 3 ஆயிரம் பரிசாக வழங்கினார்.

    செந்தில் அந்த பணத்தை வாங்க மறுத்து பின், அதை வாங்கி தகட்டூர் சுப்பிரமணியன்காடு ஆகாச மாரியம்மன் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார்.

    செந்திலின் நேர்மையை வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் பொதுமக்கள் வெகுவாய் பாராட்டினர்.

    • கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் உள்நாட்டு மீனவர்கள் கலந்து கொள்ளலாம்.
    • அடிப்படை தேவைகள், மீன்வளம் மற்றும் இதர துறை சார்ந்த கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    நாகை மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட கூட்டரங்கத்தில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்தார்கள்/கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் உள்நாட்டு மீனவர்கள் கலந்து கொண்டு தங்களது கிராமத்தில் உள்ள அடிப்படை தேவைகள், மீன்வளம் மற்றும் இதர துறை சார்ந்த கோரி க்கைகளை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரச மரத்திற்கும் வேட்டியும், வேப்பமரத்திற்கு புடவையும் கட்டி பூஜைகள் செய்யப்பட்டது.
    • திருமண தடை உள்ள பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வாய்மேடு சிந்தாமணிக்காடு பகுதியில் உள்ள வேம்படி மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் நடைபெற்றது.

    முன்னதாக அரசு, வேம்பு மரங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராத னைகள் நடைபெற்றது.

    பின், அரச மரத்திற்கும் வேட்டியும், வேப்பமரத்திற்கு புடவையும் கட்டி பூஜைகள் செய்யப்பட்டு வேப்பமரத்திற்கு சிவாச்சாரியார் மூலம் தாலி கட்டப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் கலந்து கொண்டால் திருமண தடை உள்ள பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    முடிவில் பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

    • ரூ.3 லட்சம் மதிப்பில் புதிதாக நூலகம் கட்டப்பட்டது.
    • மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கடிநெல்வயல் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

    பள்ளியின் முன்னாள் மாணவர்கள், கிராமத்தினர் இணைந்து நடத்திய விழாவுக்கு, விழாக்குழு தலைவர் முடியப்பன் தலைமை தாங்கினார்.

    ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜசேகரன், ஊராட்சி தலைவர் வைத்திலிங்கம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அறிவொளி, மேலாண்மை க்குழு தலைவர் ஹேமா வைரவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கிராமத்தினரால் ரூ.3 லட்சம் மதிப்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நூலகத்தை கோட்டாட்சியர் மதியழகன் முன்னிலையில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் சட்டப்பே ரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ, தாசில்தார் ஜெயசீலன், கல்வி அலுவர்கள் ராஜமாணிக்கம், விமலா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பையன், பங்குத்தந்தைகள் ஜான்கென்னடி, வின்சென்ட், தலைமையாசிரியர் சிவருகு நாதன், கலை, பண்பாட்டு பயிற்றுநர் அம்பிகாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    முன்னாள் ஊராட்சி தலைவர்கள் செல்லப்பன், ஜான்முத்து, மலர்விழி தமிழழகன், ஹெல ன்ஜான்முத்து, தனியார் நிறுவன மேலாளர் சுந்தரராஜன் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.முன்னதாக தலைமையா சி்ரியை வாணி அனைவ ரையும் வரவேற்றார்.

    ஆசிரியை கலையரசி அறிக்கை வாசித்தார்.

    முடிவில் ஆசிரியை ராஜாத்தி நன்றி கூறினார்.

    விழாவில் பள்ளிக்கு நிலம் கொடுத்த குடும்பத்தினர், சிறப்பிடம் பிடித்த மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

    தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    • ஆண்டு விழா செப்டம்பர் 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • இந்த பேராலயம் கீழை நாடுகளின் ‘லூர்து’ நகர் என்று அழைக்கப்படுகிறது.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பேராலயத்தின்எதிரே வங்கக்கடல் உள்ளதால் வேளாங்கண்ணி சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

    இந்த பேராலயம் கீழை நாடுகளின் 'லூர்து' நகர் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் 29-ந்தேதிஆண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா செப்டம்பர் மாதம் 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பேராலயத்தின் முகப்பு பகுதியில் மரக்கட்டைகள் மூலம் சாரம் அமைத்து தொழிலாளர்கள் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பெண்கள் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகபட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே கூரத்தாங்குடி கிராமத்தில் சிவா விஷ்ணு கோயில் அமைந்துள்ளது. திருக்கடையூரில் எமனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்க எமன் லிங்கம் பிடித்து வழிபட்ட ஸ்தலம் என்பது இதன் சிறப்பு.

    இக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு தாயார் ஸ்ரீ குங்குமவள்ளி அம்மனுக்கு 108 குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர் ,சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து ஏராளமான பெண்கள் சுமங்கலிகள் குத்து விளக்கை அம்பாளாக பாவித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர் அதைத் தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து முன்னரே கண்டறியும் நுண்ணறிவு பயிற்சி.
    • கலவரங்களை போலீசார் எவ்வாறு எளிதாக கையாள வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் பெருகிவரும் குற்றத்தினை தடுக்க பல்வேறு முயற்சிகள் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    அவற்றின் ஒரு பகுதியாக நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் சென்னை மறுபரிசீலனை சிறப்பு கிளை பயிற்சி பள்ளி உளவுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தன் , நாகை மாவட்ட தனிப்பிரிவின் போலீசார் அனைவருக்கும் சிறப்பு நுண்ணறிவு பயிற்சியளித்தார்.

    மேலும் இச் சிறப்பு பயிற்சியில் தீவிரவாத ஊடுருவலை தடுத்தல், பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து முன்னரே கண்டறியும் நுண்ணறிவு பயிற்சி, கோவில் திருவிழாக்களில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு கையாளுதல் , சாதிக் கலவரங்கள், மற்றும் மதக் கலவரங்கள் போன்ற நிகழ்வுகளை போலீசார் எவ்வாறு எளிதாக கையாள வேண்டும் என்ற சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    • ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது.
    • நாகூரில், ரூ.33.20 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளை ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி வார்டு எண் 4, நாகூர் பட்டினச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூபாய் 12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது.

    அதை, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கெளதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்க ப்பட்டன. அதுபோல், நாகூர் மியான் தெரு நகராட்சி இஸ்லாம் நடுநிலைப் பள்ளியில் ரூ.6.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர், வார்டு எண் 02 நாகூர் செய்யது பள்ளி குளத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் ஆகிய திட்டப்பணிகள் உள்பட நாகூரில் ரூ.33.20 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளை ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    இந்நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்கள் அஞ்சலி தேவி நாகரெத்தினம், பதுரு நிஷா மற்றும் நகராட்சி செயற் பொறியாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

    • சென்னை அழைத்து சென்று தர்காவில் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கோடங்கி பூஜை செய்தார்.
    • உமா மகேஸ்வரியை கடத்திய கணவன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் சந்தைப்பேட்டையை சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரை புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் காதலித்து கடந்த 2022 டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்தார்.

    திருமணம் முடிந்த பின்னர் மனைவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு தினமும் அவரை அடித்து துன்புறுத்தியதால், திருமணமான 4 மாதத்தில் உமா மகேஸ்வரி கணவரை பிரிந்து தாயார் தனலெட்சுமியுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி தாயாருடன் சாலையில் நடந்து சென்ற உமாமகேஸ்வரியை மாரிமுத்து தனது நண்பர்களுடன் வந்து காரில் கடத்திச் சென்றார். இதுகுறித்து, தனலெட்சுமி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். உமாமகேஸ்வரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது தாய் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

    இந்நிலையில் மகேஸ்வரி தான் சென்னையில் உள்ளதாக தாயாருக்கு தகவல் அளித்ததன் பேரில் மயிலாடுதுறை போலீசார் உமாமகேஸ்வரியை மீட்டு மயிலாடுதுறை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    இந்நிலையில், போலீசாரிடம் உமாமகேஸ்வரி அளித்துள்ள வாக்குமூலத்தில், தன்னை காரில் கடத்திய கணவன் மாரிமுத்து, மயக்க மருந்து கொடுத்து மயக்கமடைய செய்தார். தொடர்ந்து ராமநாதபுரம் அழைத்து சென்று தனக்கு செய்வினை வைத்துவிட்டதாக அங்கு தர்கா ஒன்றில் மாந்திரீகம் செய்தார். பின்னர் சென்னை அழைத்து சென்று தர்காவில் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கோடங்கி பூஜை செய்தார். அவருடன் வாழ மறுத்ததால் சென்னையில் நடுரோட்டில் விட்டு விட்டு சென்றுவிட்டார் தெரிவித்துள்ளார்.

    கணவன் தன்னை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாக உமாமகேஸ்வரி கூறியதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தாயாருடன் அனுப்பி வைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். இன்று மயிலாடுதுறை நீதிமன்றத்தில் அவர் ஆஜர் படுத்தப்படுகிறார். உமா மகேஸ்வரியை கடத்திய கணவன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×