என் மலர்
நாகப்பட்டினம்
- அரச மரத்திற்கும் வேட்டியும், வேப்பமரத்திற்கு புடவையும் கட்டி பூஜைகள் செய்யப்பட்டது.
- திருமண தடை உள்ள பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வாய்மேடு சிந்தாமணிக்காடு பகுதியில் உள்ள வேம்படி மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் நடைபெற்றது.
முன்னதாக அரசு, வேம்பு மரங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராத னைகள் நடைபெற்றது.
பின், அரச மரத்திற்கும் வேட்டியும், வேப்பமரத்திற்கு புடவையும் கட்டி பூஜைகள் செய்யப்பட்டு வேப்பமரத்திற்கு சிவாச்சாரியார் மூலம் தாலி கட்டப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டால் திருமண தடை உள்ள பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
முடிவில் பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
- ரூ.3 லட்சம் மதிப்பில் புதிதாக நூலகம் கட்டப்பட்டது.
- மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கடிநெல்வயல் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
பள்ளியின் முன்னாள் மாணவர்கள், கிராமத்தினர் இணைந்து நடத்திய விழாவுக்கு, விழாக்குழு தலைவர் முடியப்பன் தலைமை தாங்கினார்.
ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜசேகரன், ஊராட்சி தலைவர் வைத்திலிங்கம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அறிவொளி, மேலாண்மை க்குழு தலைவர் ஹேமா வைரவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிராமத்தினரால் ரூ.3 லட்சம் மதிப்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நூலகத்தை கோட்டாட்சியர் மதியழகன் முன்னிலையில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் சட்டப்பே ரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ, தாசில்தார் ஜெயசீலன், கல்வி அலுவர்கள் ராஜமாணிக்கம், விமலா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பையன், பங்குத்தந்தைகள் ஜான்கென்னடி, வின்சென்ட், தலைமையாசிரியர் சிவருகு நாதன், கலை, பண்பாட்டு பயிற்றுநர் அம்பிகாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
முன்னாள் ஊராட்சி தலைவர்கள் செல்லப்பன், ஜான்முத்து, மலர்விழி தமிழழகன், ஹெல ன்ஜான்முத்து, தனியார் நிறுவன மேலாளர் சுந்தரராஜன் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.முன்னதாக தலைமையா சி்ரியை வாணி அனைவ ரையும் வரவேற்றார்.
ஆசிரியை கலையரசி அறிக்கை வாசித்தார்.
முடிவில் ஆசிரியை ராஜாத்தி நன்றி கூறினார்.
விழாவில் பள்ளிக்கு நிலம் கொடுத்த குடும்பத்தினர், சிறப்பிடம் பிடித்த மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
- ஆண்டு விழா செப்டம்பர் 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
- இந்த பேராலயம் கீழை நாடுகளின் ‘லூர்து’ நகர் என்று அழைக்கப்படுகிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பேராலயத்தின்எதிரே வங்கக்கடல் உள்ளதால் வேளாங்கண்ணி சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
இந்த பேராலயம் கீழை நாடுகளின் 'லூர்து' நகர் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் 29-ந்தேதிஆண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா செப்டம்பர் மாதம் 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பேராலயத்தின் முகப்பு பகுதியில் மரக்கட்டைகள் மூலம் சாரம் அமைத்து தொழிலாளர்கள் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பெண்கள் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகபட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே கூரத்தாங்குடி கிராமத்தில் சிவா விஷ்ணு கோயில் அமைந்துள்ளது. திருக்கடையூரில் எமனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்க எமன் லிங்கம் பிடித்து வழிபட்ட ஸ்தலம் என்பது இதன் சிறப்பு.
இக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு தாயார் ஸ்ரீ குங்குமவள்ளி அம்மனுக்கு 108 குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர் ,சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து ஏராளமான பெண்கள் சுமங்கலிகள் குத்து விளக்கை அம்பாளாக பாவித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர் அதைத் தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து முன்னரே கண்டறியும் நுண்ணறிவு பயிற்சி.
- கலவரங்களை போலீசார் எவ்வாறு எளிதாக கையாள வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் பெருகிவரும் குற்றத்தினை தடுக்க பல்வேறு முயற்சிகள் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அவற்றின் ஒரு பகுதியாக நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் சென்னை மறுபரிசீலனை சிறப்பு கிளை பயிற்சி பள்ளி உளவுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தன் , நாகை மாவட்ட தனிப்பிரிவின் போலீசார் அனைவருக்கும் சிறப்பு நுண்ணறிவு பயிற்சியளித்தார்.
மேலும் இச் சிறப்பு பயிற்சியில் தீவிரவாத ஊடுருவலை தடுத்தல், பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து முன்னரே கண்டறியும் நுண்ணறிவு பயிற்சி, கோவில் திருவிழாக்களில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு கையாளுதல் , சாதிக் கலவரங்கள், மற்றும் மதக் கலவரங்கள் போன்ற நிகழ்வுகளை போலீசார் எவ்வாறு எளிதாக கையாள வேண்டும் என்ற சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
- ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது.
- நாகூரில், ரூ.33.20 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளை ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகராட்சி வார்டு எண் 4, நாகூர் பட்டினச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூபாய் 12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது.
அதை, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கெளதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
தொடர்ந்து அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்க ப்பட்டன. அதுபோல், நாகூர் மியான் தெரு நகராட்சி இஸ்லாம் நடுநிலைப் பள்ளியில் ரூ.6.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர், வார்டு எண் 02 நாகூர் செய்யது பள்ளி குளத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் ஆகிய திட்டப்பணிகள் உள்பட நாகூரில் ரூ.33.20 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளை ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்கள் அஞ்சலி தேவி நாகரெத்தினம், பதுரு நிஷா மற்றும் நகராட்சி செயற் பொறியாளர் ஆகியோர் பங்கேற்றனர்.
- சென்னை அழைத்து சென்று தர்காவில் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கோடங்கி பூஜை செய்தார்.
- உமா மகேஸ்வரியை கடத்திய கணவன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் சந்தைப்பேட்டையை சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரை புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் காதலித்து கடந்த 2022 டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்தார்.
திருமணம் முடிந்த பின்னர் மனைவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு தினமும் அவரை அடித்து துன்புறுத்தியதால், திருமணமான 4 மாதத்தில் உமா மகேஸ்வரி கணவரை பிரிந்து தாயார் தனலெட்சுமியுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி தாயாருடன் சாலையில் நடந்து சென்ற உமாமகேஸ்வரியை மாரிமுத்து தனது நண்பர்களுடன் வந்து காரில் கடத்திச் சென்றார். இதுகுறித்து, தனலெட்சுமி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். உமாமகேஸ்வரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது தாய் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் மகேஸ்வரி தான் சென்னையில் உள்ளதாக தாயாருக்கு தகவல் அளித்ததன் பேரில் மயிலாடுதுறை போலீசார் உமாமகேஸ்வரியை மீட்டு மயிலாடுதுறை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில், போலீசாரிடம் உமாமகேஸ்வரி அளித்துள்ள வாக்குமூலத்தில், தன்னை காரில் கடத்திய கணவன் மாரிமுத்து, மயக்க மருந்து கொடுத்து மயக்கமடைய செய்தார். தொடர்ந்து ராமநாதபுரம் அழைத்து சென்று தனக்கு செய்வினை வைத்துவிட்டதாக அங்கு தர்கா ஒன்றில் மாந்திரீகம் செய்தார். பின்னர் சென்னை அழைத்து சென்று தர்காவில் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கோடங்கி பூஜை செய்தார். அவருடன் வாழ மறுத்ததால் சென்னையில் நடுரோட்டில் விட்டு விட்டு சென்றுவிட்டார் தெரிவித்துள்ளார்.
கணவன் தன்னை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாக உமாமகேஸ்வரி கூறியதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தாயாருடன் அனுப்பி வைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். இன்று மயிலாடுதுறை நீதிமன்றத்தில் அவர் ஆஜர் படுத்தப்படுகிறார். உமா மகேஸ்வரியை கடத்திய கணவன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
- அம்மனுக்கு பால், பன்னீர், உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள குறிச்சி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீமழைமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆலய த்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு குறிச்சி அபிராமி அம்மன் ஆலயத்தில் இருந்து விரதம் இருந்த 108 பெண்கள் கஞ்சி கலையங்களை சுமந்து வந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.
அதனைதொடர்ந்து அம்மனுக்கு பால் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது அதனை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பி க்கப்பட்டது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு கஞ்சி பிரசாதமாக வழங்க ப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- ஆடிப்பூர விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதார ண்யேஸ்வரர் திருக்கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் தம்பதி சமேதரராய் திருமண காட்சி அளித்த தலம், நான்கு வேதங்களும் பூஜித்த தலம். இங்குள்ள வேதநாயகி அம்மனுக்கும், சரஸ்வதிக்கு சரஸ்வதியின் வீணையின் ஒலி இனிமையானதா? அம்மனின் குரல் வலிமை இனிமையானதா என்ற போட்டி ஏற்பட்டது.
அப்போது வீணையின் ஒலியை விட அம்மனின் குரல் இனிமையானதாக இருந்ததால், இந்த கோயிலில் உள்ள சரஸ்வதி வீணை இல்லாமல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதே நேரத்தில் அம்மனுக்கு யாழை பழித்த மொழியம்மை என்ற பெயா் வரலாயிற்று.
இப்படி சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் ஆடிபூர திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு ஆடிப்பூர விழா கொடியேற்றம் 12.7.23 தொடங்கி நடந்து வருகிறது. தினந்தோறும் காலை மாலை அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது.
21.7.23 வெள்ளி இரவு ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராத னைகளும், அர்ச்சனைகளும் நடந்தது. பின்பு இரவு மின் விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரி க்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்பாள் எழுந்தருளி வீதியுலா நடந்தது. வீதியுலாவின் போது 10க்கும் மேற்பட்ட நாதஸ்வரக் கலைஞர்கள் கலந்து கொண்ட இன்னிசை கச்சேரி நடந்தது.
இதில் ஏராளமான பெண்கள் உட்பட பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரசு போக்குவரத்துக் கழக வேதாரண்யம் கிளையினர் செய்திருந்தனர்.
- தற்கொலைக்கு முயன்றவரை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த மருங்கூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் ஜெயக்குமார் (வயது 33). கூலித்தொழிலாளி. இவரின் தங்கை ராஜகுமாரி என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாகவும், இதனால் ஜெயக்குமார் மனநலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் ராஜகுமாரியின் நினைவு நாளில் ஜெயக்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர்.
அங்கு ஜெயக்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜெயக்குமார் மனைவி அமராவதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முகாமில் மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
- முடிவில் ஆசிரியை கற்பகவல்லி நன்றி கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட தேசிய பசுமை படை பொறுப்பாசிரி யர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நாகூர் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
பள்ளிக்கல்வித்துறை சுற்றுச்சூழல் துறை கிரேடு எப் தொண்டு நிறுவனம் , நாகூர் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய பயிற்சி முகாமை முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி துணை ஆய்வாளர் ராமநாதன், நாகூர் ரோட்டரி கிளப் செயலர் ரமேஷ், பொருளாளர் கரிகாலன், தலைவர் இமையாத் அலி கிரெசென்ட் பள்ளியை சேர்ந்த ஆசிரியைகள் சியாமளா , பானு , மாலதி, பணி நிறைவு நகர் நல அலுவலர் அறிவழகன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
கருத்தாளர்களாக தோட்டக்கலை துறை சந்தோஷ், ஊட்டச்சத்து உணவு முறை துறை பேராசிரியர் ரிபாத் நிஷா, சுற்றுச்சூழல் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
அமிர்தா வித்யாலயா மற்றும் வித்யாஷ்ரம் மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முன்னதாக நாகை மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கி ணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் வரவேற்புரை ஆற்றினார்.
முடிவில் ஆசிரியை கற்பகவல்லி நன்றி கூறினார்.
- குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கப்பட்டது.
- 43 கிராமங்களில் 6 ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டது.
நாகப்பட்டினம்,
நாகப்பட்டினம் கீழ்வேளூரில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) தேவேந்திரன் தலைமை தாங்கினார்.
வட்டார ஆத்மா குழு தலைவர் கோவிந்தராசன் முன்னிலை வகித்தார். கீழ்வேளூர் வட்டார அளவில் 43 கிராமங்களில் 6 ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் 20 விவசாயிகளுக்கு யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் உரங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கீழ்வேளூர் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜலட்சுமி, ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன், துணைத்தலைவர் புருஷோத்தமதாஸ், பேரூராட்சி மன்ற தலைவர் இந்திராகாந்தி, துணைத் தலைவர் சந்திரசேகரன், ஆத்மாகுழு உறுப்பினர்கள் பழனியப்பன், அட்சயலிங்கம், துணை வேளாண்மை அலுவலர் பிரான்சிஸ், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.






