என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடத்தில் அபிஷேகம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அருகே வடக்கு பொய்கைநல்லூரில் உள்ள கோரக்க சித்தர் ஆசிரமத்தில் ஆண்டுதோறும் பவுர்ணமி ஐப்பசி பரணி விழா 2 நாள்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஐப்பசி மாத பவுர்ணமி விழா நேற்று கோரக்க சித்தர் ஆசிரமத்தில் கோலாகலமாக தொட ங்கியது. இதை யொட்டி விழாவின் முதல் நாளான நேற்று அன்னாபிஷேகம் நடைபெ ற்றது.

    முன்னதாக கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடத்தில் மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதை யடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பி க்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் வேலைகளை திறம்பட செய்ய வேண்டும்.
    • 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுப்பதை கலெக்டர் பார்வையிட்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பொறக்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்குழுவினை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.மேலும் இந்த குழுவில் இடம் பெறும் மாணவ மாணவிகள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் வேலைகளை திறம்பட செய்து பள்ளியின் வளர்ச்சிக்கு வழி வகுக்க வேண்டும் என மாணவ மாணவர்களுடைய கேட்டுக் கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் ஜெயந்தி,வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர்,ஒன்றிய குழு துணை தலைவர் திருமேனி,ஊராட்சி மன்ற தலைவர் சீதளா பாலாஜி,பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி, திருக்கண்ணபுரம் வருவாய் ஆய்வாளர் ரம்யா மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உடன் இருந்தனர். அதனை தொடர்ந்து திருக்கண்ண புரம் அரசினர் மேல்நி லைப்பள்ளியில் பள்ளிப்பா ர்வை திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு மாண வர்களுக்கு வேதியியல் பாடம் எடுப்பதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அன்பழகன், சரவணன் மற்றும் சி.முத்துசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் ரமேஷ் , சரவணன், கணே சன், செந்தில்குமார் , செல்வ ம் , ரவிச்சந்திரன், பாலசு ப்ரமணியன், சித்ரா, வளர்மாலா, ராணி , அந்துவன்சேரல்ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ மாநில உயர்ம ட்டக்குழு முடிவின்படி, புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் , சரண் விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் வழங்கிட வேண்டும்,

    உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள காலிப் பணியி டங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், 2002 முதல் 2004 தொகுப்புஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பணிக்காலத்தை வரண்முறைசெய்திட வேண்டும் என்பது உள்ளி ட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி 1.11.23 அன்று நாகப்பட்டினம் அவுரி த்திடலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்து வது என்று முடிவெ டுக்க ப்பட்டது. முடிவில் சத்து ணவு ஊழியர் சங்க மாவ ட்டச் செயலாளர் அருளே ந்திரன் நன்றி கூறினார்.

    • இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்பவர்கள் தரமான மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்க வேண்டும்.
    • உபயோகித்த எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது.

    நாகப்பட்டினம்:

    அடுத்த மாதம் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள் மற்றும் தயாரிக்கப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை அதிகரித்து வருகிறது. தரமான பொருள் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்ய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்ட த்தில், உணவு பாதுகாப்பு த்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்

    புஷ்பராஜ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மற்றும் நட வடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம், நாகூர் பகுதியில் நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன், தயாரிக்கப்பட்ட இனிப்பு கள், காரம், எண்ணெய், நெய், பாசிப்பரு ப்பு, கடலைப்பருப்பு, கடலை மாவு, போன்ற பலகாரங்கள் தயாரிக்கத் தேவையான மூலப்பொ ருட்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டவை உணவு விற்பனை நிலையங்களில் உணவு மாதிரிகளாக எடுக்கப்பட்டு, ஆய்வுக்காக உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தார்.

    ஒரு உணவு விற்பனை நிலையத்தை நியமன அலுவலர் புஷ்பராஜ், உணவு பாதுகா ப்பு அலுவலர் அன்பழகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்ட பொழுது, தயாரிப்பு விபரம் முறையாக இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்ப ட்டிருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் கைப்ப ற்றப்பட்டு, முழுமையான விபரத்துடன் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற உத்தரவுடன் மீண்டும் நிறுவன உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதையடுத்து நியமன அலுவலர் புஷ்பராஜ் அளித்த பேட்டியில்,

    இனிப்பு , கார வகைகள் விற்பனை செய்பவர்கள் தரமான மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்க வேண்டும். உபயோகித்த எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படு த்தக்கூடாது. உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை மேற்கொள்ளும் பகுதி சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.

    அனைத்து உணவு விற்பனையாளர்களும் உரிமம் , பதிவுச் சான்று பெற்றிருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ஐ மீறுபவர்கள்மீது கடுமையா ன நடவடிக்கை எடுக்க ப்படும். பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் அல்லது புட்சேப்டி ஆப் வழியாகவும் புகார் தெரிவிக்கலாம். உரிய முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். புகார்தாரர் விபரம் ரகசியம் காக்கப்படும் என்றார்.

    • நடப்பாண்டு சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
    • அறுவடை நேரத்தில் பெய்த மழையால் காய வைத்த நெல்மணிகள் நனைந்து போனது.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதற்கு முக்கிய ஆதாரமாக காவிரி தண்ணீர் உள்ளது. நாகை மாவட்டத்தில் நடப்பாண்டு சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் காவிரி ஆற்றில் போதிய அளவு தண்ணீர் திறக்கப்படாததால் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர் வறட்சியால் பாதிக்க ப்பட்டது.

    எஞ்சிய பயிர்களை மோட்டார் பம்பு செட்டுகள் மூலமாகவும், நீர்நிலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை எஞ்சின் மூலமாக வயலுக்கு பாய்ச்சியும் தற்போது விவசாயிகள் அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் அறுவடை நேரத்தில் பெய்த மழையால் காய வைத்த நெல்மணிகள் நனைந்து போனது. இவ்வாறு மழையில் நனைந்த நெல்லை விவசாயிகள் சாலையில் போட்டு காய வைத்து வருகின்றனர். குறிப்பிட்ட அளவுக்கு மேல் நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் கொள்முதல் நிலையத்தில் நெல்லை எடுக்க மறுக்கின்றனர்.

    தண்ணீர் இன்றி வறட்சியால் கஷ்டப்பட்டு காப்பாற்றி வந்த நெல்மணிகள் கடைசி நேரத்தில், ஈரப்பதத்தால் கை விரித்து விட்டதே என்று நாகை விவசாயிகள் வேதனை தெரிவி க்கின்றனர். மேலும் வறட்சி பாதிப்புக்காக அரசு அறிவித்த நிவாரண தொகையும் தற்போது வரை வந்து சேரவில்லை. இருந்தும் பல்வேறு சிரமங்களை தாண்டி அறுவடை
    செய்ததால், திடீரென பெய்த மழையால் காய வைத்த நெல் மணிகள் நனைத்து விட்டன.

    மேலும் தற்போது விட்டு, விட்டு பெய்து வரும் மழையால் நெல்மணிகளை காய வைப்பதில் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் எனவே நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும். அப்போதுதான் நஷ்டத்தில் இருந்து விவசாயி கள் ஓரளவாவது தப்பிக்க முடியும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நேற்றிரவு வீட்டின் அருகே உள்ள வயலுக்கு சென்றார்.
    • சிகிச்சை பலனின்றி ஜெயரஞ்சனி பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணி அருகே உள்ள தெற்கு பொய்கை நல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் . இவரது மனைவி ஜெய ரஞ்சனி (வயது 31). இவர் நேற்றிரவு வீட்டின் அருகே உள்ள வயலுக்கு சென்றார். அப்போது திடீரென கட்டு விரியன் பாம்பு கடித்தது.

    இதில் மயங்கி விழுந்த ஜெயரஞ்சனியை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயரஞ்சனி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விழாவில் அமைச்சர் ரகுபதி பங்கேற்று பேசினார்.
    • பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட் அனைவரையும் வரவேற்றார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை மாலி எம்.எல்.ஏ., முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, நகர்மன்ற தலைவர் புகழேந்தி, கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குனர் உதயம் முருகையன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர். சுந்தரராஜன், ஆத்மா குழு உறுப்பினர் மகாகுமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட் அனைவ ரையும் வரவேற்றார். தொடர்ந்து, பேச்சு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

    • ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • வருகிற 30-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதிஉலா நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், வடக்கு பொய்கைநல்லூரில் கோரக்கர் சித்தர் ஜீவசமாதி பீடம் உள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

    அதிலும், ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான ஐப்பசி பவுர்ணமி விழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு நாளை மதியம் சுவாமிக்கு அன்னாபி ஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்ப டும். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

    அதனை தொடர்ந்து, வருகிற 29-ந் தேதி பரணி விழா நடைபெற உள்ளது.

    அன்று இரவு 8 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்படும்.

    தொடர்ந்து, 30-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதிஉலா காட்சிகள் நடைபெற உள்ளது.

    இதற்காக இன்று காலை முதலே அதிகளவில் கோவிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    • மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.
    • அம்மனுக்கு கலசநீர் கொண்டு அபிஷேகம் நடைபெற்று, தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆர்ச்யில் அமைந்துள்ள பழமைவாய்ந்த அருள்மிகு சூரியமூர்த்தி சுவாமிகள் கோவில் அமைந்து ள்ளது.

    இந்த கோவிலில் குடமுழுக்கு நடைபெறுவதற்காக கோவில் திருப்பணிகள் நிறைவுற்ற 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

    கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அனுஞக்ஞை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி , கோ பூஜை, தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

    அதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகளுடன் பூர்ணாஹூதி தீபாரதனைகள் நடைப்பெற்றது. தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜை முடிவுற்று மஹா பூர்ணாஹூதி நடைபெற்று யாகசாலை பூஜைகள் நிறைவடை ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.

    சிவாச்சாரியார் கடங்கங்களை சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீசூரியமூர்த்தி சுவாமிக்கு கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

    பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அம்மனுக்கு கலச நீர் கொண்டு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.

    இக்கும்பாபிஷேகத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்ககள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • ஹெல்மெட் ல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நோட்டிஸ்கள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    வாகன விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டம் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    அதன்படி ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மோட்டார் சைக்கிளில் சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    நாகை செம்போடை ஆர்.வி கல்லூரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் போலீஸ் சூப்பிரண்ட் ஹர்ஷ் சிங் தலைமையில் 150 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியில் ஈடுபட்டனர்.

    செம்போடை ஆர் வி இன்ஜினியரிங் கல்லூரியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியானது வேதாரண்யம் சென்று முடிக்கப்பட்டு பின்பு பொதுமக்கள் மத்தியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நோட்டிஸ்கள் வழங்கப்பட்டது.

    • மரக்கன்றுகள் நடும் பணி நடை பெற்றது.
    • மரங்களுடன் வாழும் போது தூய்மையான காற்று கிடைக்கிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேதாரண்யம் நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் தலைமை வகித்தார்.

    நாகை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திகா மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி வைத்து பேசியதாவது:- மரங்கள் உயிரின் சுவாசம் போன்றது மரங்க ளுடன் வாழும் போது தூய்மையான காற்று கிடைக்கிறது.

    இதனால் மனிதனின் வாழ்நாள் அதிகரிக்கிறது.

    எதையும் உணர்ந்து பார்க்கும் போது தான் அதன் சிறப்புகள் வெளிப்படும் அப்படித்தான் மரங்கள் மரங்களை நட்டு அவற்றுடன் பேச கற்றுக் கொள்ளுங்கள் அவற்றின் பயன் முழுமையாக கிடைக்கும் தற்போது திருமண விழாக்களில் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது இது நமக்குள் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை உணர்த்துகிறது என்றார்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் டி.எஸ்.பி சுபாஷ்சந்திரபோஸ், வழக்கறிஞர் சங்க தலைவர் பாரி வழக்கறிஞர் சங்க செயலாளர் பாரதிராஜா, துணை தலைவர் வெங்கடேஷ், பொருளார் மதியழகன் துணை செயலாளர் வீரகுமார் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் மணிவண்ணன், குமரவேல், மாதவன், அறிவுச்செல்வன், பாலசுப்பிரமணியன், அன்பரசு, மகேஷ், .கலியராஜன், ராஜசேகர், சுதாகர், ராஜ்குமார், குலாளன் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள், வழக்கறிஞர் எழுத்தர்கள், தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

    • 1200 விசைப்படகுகளும், 6000 பைபர் படகுகளும் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து இருந்தனர்.
    • நான்கு நாட்களுக்கு பிறகு இன்று காலை நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மற்றும் பைபர் படகு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    நாகப்பட்டினம்:

    வங்கக்கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தொடர்ந்து நாகை மாவட்ட மீன்வளத்துறையினர் ஆழ்கடல் செல்லும் விசைப்படகு மீனவர்கள் மற்றும் பைபர் படகு மீனவர்கள்கடலுக்கு செல்ல தடை விதித்தனர்.

    இதனால் நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், நாகூர், சிருதூர் வேளாங்கண்ணி விழுந்தமாவடி, புஷ்பவனம், கோடியக்ககரை வேதாரணியம் ஆற்காடுதுறை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் 1200 விசைபடகுகளும், 6000 பைபர் படகுகளும் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து இருந்தனர்.

    நேற்று ஹாமூன் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து அவர்களுக்கான தடையை மீன்வள துறையினர் விலக்கிக்கொண்டு நேற்று மாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கத் தொடங்கினர்.

    இதனால் நான்கு நாட்களுக்கு பிறகு இன்று காலை நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மற்றும் பைபர் படகு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    முன்னதாக மீனவர்கள் அவர்களுக்கு தேவையான டீசல், ஐஸ் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களைபடகுகளில் ஏற்றினர். பின்னர் அவர்களின் இஷ்ட தெய்வமான கடல் மாதாவை வணங்கி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

    ×