search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்குவளை கல்லூரியில் பட்டமளிப்பு விழா
    X

    விழாவில் அமைச்சர் பொன்முடி மாணவிக்கு பட்டம் வழங்கினார்.

    திருக்குவளை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

    • கருணாநிதி பிறந்த திருக்குவளையில் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
    • பொறியியல் கல்லூரியில் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை 75 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள அண்ணா பல்கலை க்கழகத்தின் உறுப்பு பொறியில் கல்லூ ரியில் மாணவ ர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

    அண்ணா பல்கலை க்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், உயர்க ல்வித்துறை அமைச்சரும், அண்ணா பல்கலை க்கழகத்தின் இணை வேந்தருமான பொன்முடி பட்டு க்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட 3 அண்ணா பல்கலைக்கழக பொறியி யல் கல்லூரியை சேர்ந்த 333 மாணவ- மாணவி களுக்கு பட்டங்களை வழங்கினார்.

    விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவர் பிறந்த திருக்குவளையில் இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

    முன்பெல்லாம் இன்ஜினியரிங் படிப்ப தற்கு நுழைவு தேர்வு கட்டாயமா க்கப்ப ட்டிருந்தது. இதனால் கிராமப்புற இளைஞர்கள் கல்லூரியில் சேர்வதற்கு கஷ்டப்பட்டு வந்த நிலையை கருத்தில் கொண்டு நுழைவு தேர்வை கலைஞர் ரத்து செய்தார். இதன் மூலம் பொறியியல் கல்லூரியில் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை 25,000 இருந்து 75 ஆயிரம் ஆக உயர்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×