என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயி கொலை வழக்கில் வாலிபர் கைது
    X

    விவசாயி கொலை வழக்கில் வாலிபர் கைது

    • செந்தில்குமார் அவரது நண்பரான கார்த்திகேயனை இரும்பு கம்பியால் சரமாரியாக அடித்துள்ளார்.
    • கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த செந்தில்குமாரை போலீசாரை கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா மணியன்தீவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 55) விவசாயி.

    இவரும் அதே பகுதி நந்தவனகுலதெருவை சேர்ந்த செந்தில் குமார் (வயது 40) என்பவரும் நெருங்கிய நண்பர்கள் நேற்று இருவரும் மதுபோதையில் இருந்துள்ளதாக தெரிகிறது.

    அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து செந்தில்குமார் நண்பர் கார்த்திகேயனை இரும்பு கம்பியால் அடித்துள்ளார்.

    இதில் தலையில் அடி பட்ட கார்த்திகேயன் சிகிச்சைக்காக வேதாரண்யம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் நேற்று இறந்தார்.

    புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் உடலை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் செந்தில் குமார் தலைமறைவானார்.

    அவரை வேதாரண்யம் போலீசார் தேடி வந்தனர்.

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ்ஷிங் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    இந்நிலையில் வேதாரண்யம் போலீசார் நண்பரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த வழக்கில் தலைமறைவான செந்தில்குமாரை கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×