என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • பலத்த காற்றின் காரணமாக கடலில் உள் பகுதியில் கடும் சீற்றமாக காணப்படுகிறது.
    • பைபர் படகுகளில்மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடந்த 2 நாட்களாக காற்று பலமாக வீசி வருகிறது.

    பலத்த காற்றின் காரணமாக கடலில் உள் பகுதியில் கடும் சீற்றமாக காணப்படுகிறது.

    கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் 2 நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை .

    ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கோடியக்கரை, மனியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.

    நேற்று அதிகாலை ஆறுகாட்டுதுறையில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில்மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர்.

    மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டன. 

    • ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை பால் அபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • கோவில் தற்காலிகமாக பூட்டப்பட்டிருந்தது இதனல் பாலாபி ஷேகம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    நாகப்பட்டினம்,:

    நாகப்பட்டினம் மாவட்ட ம், அக்கரைப்பேட்டை மீனவ கிராம முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக புனரமைப்பு பணிகள் கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

    அதனால் ஆண்டு திருவிழா நிறுத்தப்பட்டு ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை பால் அபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் திருவிழா நடத்த 30 பஞ்சாயத்துதாரர்களில் ஒரு தரப்பினரான 18 பேர் மட்டுமே கையெழுத்திட்ட நிலையில் மீதமுள்ளோர் கையெழுத்திடவில்லை.

    இதனால் இருதரப்பினர் இடையே சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க இருதரப்பினரையும் ஒன்றாக இணைந்து திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது‌.இந்நிலையில் இன்று அதிகாலையில் இருந்து பெண்கள், ஆண்கள் என கிராம மக்கள் பாலாபிஷேகம் செய்வதற்காக கோவிலுக்கு வந்துள்ளனர்.

    இந்த நிலையில் மீனவ கிராமத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் கோவில் தற்காலிகமாக பூட்டப்பட்டது.

    இதனால் பாலாபி ஷேகம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கோவில் பூட்டப்பட்ட விசயம் மீனவ கிராமத்தில் தீயாக பரவியது. பாலாபிஷேகம் செய்ய வந்த பக்தர்கள் கோவிலை திறக்க கூறி வலியுறுத்தி வந்தனர்‌.

    இதனை தொடர்ந்து இரு தரப்பு மீனவர்களிடம் நாகப்பட்டினம் வட்டா ட்சியர் கார்த்திகேயன், நாகை டி.எஸ்.பி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருதரப்பு மீனவர்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுப்ப ட்டனர்.

    இந்நிலையில் உரிய பேச்சு வார்த்தை நடத்தி 12 மீனவ பஞ்சாயத்துதாரர்களிடம் கையொப்பம் பெறப்பட்டதை தொடர்ந்து கோவில் கதவு திறக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    • அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
    • அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், அன்னதானம், அபிஷேகமும் பெண்கள் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி வெள்ளத்திடலில் மகாகாளியம்ன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து மதியம் அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், அன்னதானம், அபிஷேகமும் இரவு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியான சாமி வீதியுலா நடைபெற்றது.

    இதில் மகாகாளியம்மன் வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

    தொடர்ந்து அக்னி கப்பரை வீதி உலா நிகழ்ச்சியும், பெரியாச்சி, வீரனுக்கு படையல், விடையாற்றி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்திருந்தனர்.

    • அரசு தேர்வில் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி அடைய வைத்து சாதனை படைத்து வருகிறார்.
    • தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பன்னாள் உயர்நிலைப் பள்ளியில் மோகனசுந்தரம் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவர் 1992ம் ஆண்டு ஆசிரியராக பணியில் சேர்ந்து 8 பள்ளிகளில் கணித ஆசிரியராக பணியாற்றி சுமார் 7 ஆயிரம் மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையாக கற்றுக் கொடுத்து அரசு தேர்வில் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி அடைய வைத்து சாதனை படைத்து வருகிறார்.

    கணித பாடத்தை எளிமை யாக கற்றுத் தந்து அனைத்து மாணவர்களையும் தேர்ச்சிடைய செய்த காரணத்தால் மோகன சுந்தரம் ஆசிரியருக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

    நல்லாசிரியர் சான்றிதழ் உடன் அரசு வழங்கிய 10,000 காசோலையை பள்ளி நிதிக்காக அர் வழங்கியுள்ளார்.

    இதேபோல் மோகனசுந்த ரத்திடம் படித்த பன்னாள் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற மாணவர் கோகூர் பள்ளியில் கணித ஆசிரியராக தற்போது பணியாற்றி வருகிறார்.

    மாணவர்களின் பன்முகத்திறனை வெளிப்ப டுத்தும் வகையில் இவர் கல்வி கற்பித்து வருவதால் இவருக்கும் தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

    ஒரே கிராமத்தில் ஆசிரியர் மோகனசுந்தரத்திற்கும், இவரது மாணவர் ஆசிரியர் சதீஷ் ஆகிய இருவருக்கும் ஒரே மேடையில்நல்லாசி ரியர் விருது வழங்கியதை அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

    • தாயாருடன் பெருமாள் வீதியுலா வந்தும், வெண்ணை குடம், திருக்கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுடன் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
    • பூஜைகளுடன் கொடி இறக்கப்பட்டும், பல்லாக்கு சேவை, விடையாற்றியுடன் விழா நிறைவடைந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தோப்புதுறை அபீஷ்ட வரதராஜ பெரு மாள் கோவிலின் ஆண்டுப்பெருவிழா கொடி இறக்கம், விடையாற்றியுடன் நிறைவடைந்தது.

    இக்கோவிலில் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 31ம் தேதி கொடி ஏற்றப்பட்டு துவங்கியது. நாள்தோறும் உபயதாரர் சார்பில் பல்லாக்கு சேவை, கருட சேவை, அனுமந்த வாகனம், யானை, இந்திர விமானம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தாயாருடன் பெருமாள் வீதி உலா வந்தும், வெண்ணை குடம், திருக்கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுடன் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

    நேற்று பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகளுடன் கொடி இறக்கப்பட்டும், பல்லாக்கு சேவை, விடையாற்றியுடன் விழா நிறைவடைந்தது.

    இதில் ஏராளமான பக்த ர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    • விக்னேஸ்வர பூஜையுடன், கணபதி, நவக்கிரக, தன பூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் பூர்ணாஹுதி தீபாரதனை நடைபெற்றது.
    • சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்து வலம் வந்து கோபுரத்தை அடைந்து புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வடுகச்சேரி கிராமத்தில் சக்தி விநாயகர்,செல்ல மாரியம்மன், கூத்த பெருமாள் ஐயனார் கோவில்கள் அமைந்துள்ளது.

    இக்கோவில்களின் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன், கணபதி, நவக்கிரக, தன பூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் பூர்ணாஹுதி தீபாரதனை நடைபெற்றது.

    தொடர்ந்து வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    இன்று காலை யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்து வலம் வந்து கோபுரத்தை அடைந்து புனித நீர் ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து, சித்தி விநாயகர், கூத்த பெருமாள் ஐயனார், செல்ல மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கலச நீர் கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    • நாகப்பட்டினம் நோக்கி வந்த தனியார் பஸ்சும் நேருக்கு நேராக மேலப்பிடாகை கடைத்தெரு அருகே மோதிக் கொண்டது.
    • படுகாயமடைந்த 4 பேரை மீட்டு நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில சேர்த்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டியை அடுத்த மேலப்பிடாகை கடைத்தெரு அருகே திருத்துறைப்பூண்டியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி அரசு பஸ் சென்றது.

    அப்போது எதிர் திசையில் திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி வந்த தனியார் பஸ்சும் நேருக்கு நேராக மேலப்பிடாகை கடைத்தெரு அருகே மோதி கொண்டது.

    இந்த விபத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோர மரத்தின் மீது மோதி நொறுங்கியது.

    இதில் அரசு பஸ் ஓட்டுநர் பரமேஸ்வரன், பயணிகள் அமீர், சுப்பையன் மற்றும் தனியார் பஸ்சின் ஓட்டுனர் கலையரசன் ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.

    அவர்களை மீட்டு நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில சேர்த்தனர்.

    இதுகுறித்து கீழையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆவணி மாத பவுர்ணமியில் சித்தர் பீடங்களில் வழிபாடு செய்வதனால் மாங்கல்ய பாக்கியம் அருளும் என்னும் நம்பிக்கை நிலவிவருகிறது.
    • மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த ஜீவ பீடத்தை புனரமைப்பு செய்து பூஜைகள் செய்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் ஆவணி மாத பவுர்ணமி வழிபாடு நடந்தது.

    ஆவணி மாத பவுர்ணமியில் சித்தர் பீடங்களில் வழிபாடு செய்வதனால் மாங்கல்ய பாக்கியமும் (திருமணம்), குடும்பத்தினருக்கு ஆன்ம பலத்தை அருளும் என்னும் நம்பிக்கை நிலவி வருகிறது.

    நாகை அருகே நாகூரில் குயவர் மேட்டு தெருவில் 400 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து இங்கே ஜீவ சமாதி நிலையை அடைந்த ஸ்ரீ காங்கேய சித்தர் மடம் உள்ளது.

    மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த இந்த ஜீவ பீடத்தை ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் புனரமைப்பு செய்து தின, வார, மாதாந்திர பூஜையினை செய்து வருகின்றனர்.

    ஆவணி மாத பவுர்ணமி தினத்தன்று சித்தருக்கு தமிழ் முறைப்படி தேவாரம், திருவாசகம் பாடி வேள்வி செய்து அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது.

    உபயத்தினை சிவா குடும்பத்தினர் செய்தனர்.

    இந்த வேள்வியில் நாகை சத்ரு சம்ஹார மூர்த்தி ஆலய நிர்வாகி சிங்காரவேலு மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வேள்வியினை காங்கேய மடத்தின் பூஜகர் வெங்கட்ராமன் மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த ரமேஷ் சிவாச்சாரியார் செய்தனர்.

    நிகழ்ச்சியை காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் செய்தனர்.

    • சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.
    • அதே பகுதியை சேர்ந்த முதியவர் ஜெயக்கொடி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் சிக்கலை அடுத்த சங்கமங்கலம் ஊராட்சி குற்றம் பொருத்தான் இருப்பு கிராம த்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனியாக தூங்கிக் கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த முதியவர் ஜெயக்கொடி (57) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதுபற்றி சிறுமியின் தாய் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஜெயக்கொடியை போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.

    • குறுகிய கால படைத்துறை அலுவலர் பணிக்கு தேர்வு பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்பட்டு வருகிறது.
    • முன்னாள் படைவீரர்கள் மற்றும் கைம்பெண்கள் தங்களது சிறார்களை ராணுவ பணிகளில் சேர்ந்திட ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழகத்திலிருந்து ராணுவப் பணியில் சேர்ந்து பயிற்சி பெறும் முன்னாள்படைவீரர்களின் வாரிசுகளை ஊக்குவிக்கும் வகையில் தொகுப்பு நிதியிலிருந்து தொகுப்பு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதன்படி, முப்படையில் நிரந்திர படைத்துறை அலுவலர் பணிக்கு தேர்வுப்பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சமும், குறுகிய கால படைத்துறை அலுவலர் பணிக்கு தேர்வுப் பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.50000மும் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர பதவிகளின் பணிக்காக தேர்வுப் பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.25000மும் வழங்கப்பட்டு வருகிறது.

    எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீர ர்கள்மற்றும் கைம்பெண்கள் தங்களது சிறார்களை இந்திய இராணுவ பணிகளில்சேர்ந்திட ஊக்குவிக்குமாறு கேட்டு க்கொள்ள ப்படுகிறீர்கள்.

    மேலும் விவரங்கள் அறிய நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகதரைத்தளத்தில் அறை எண். 10 மற்றும் 11-ல் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசிமூலமாகவோ (04365-299765) தொடர்பு கொள்ளலாம் எனதெரிவித்துள்ளார்.

    • பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் கொடிமரத்தை புனிதம் செய்து கொடி இறக்கப்பட்டது.
    • பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி தலைமையில் குடிநீர், பொது சுகாதாரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணியில் கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம் என போற்றப்படும் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், பெருமைக்கு உரியது.

    இதன் ஆண்டு நவநாள் பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது முக்கிய பெருவிழாவான பெரிய சப்பர பவனி நடைபெற்றது

    தொடர்ந்து நேற்று புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பேராலய கீழ் கோவிலில் பிறந்தநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது அதனை தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் கொடிமரத்தை புனிதம் செய்து கொடி இறக்கப்பட்டது ஆலயத்திற்கு உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது

    தொடர்ந்து பேராலய நிர்வாகம் சார்பில் காவல்து றை, தீயணைப்புத் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து துறைக்கும் நன்றி தெரிவி க்கப்பட்டது.

    விழாவில் வேளாங்கண்ணி மாதா பேராலய அதிகாரி இருதயராஜ், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ், நாகை சுகாதாரப் பணிகள் உதவி இயக்குனர்விஜய குமார் ஆகியோர் வழிகாட்டு தலின்படி பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி தலைமையில் குடிநீர், பொது சுகாதாரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லா யிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • புகையிலை ஒழிப்பு தொடர்பான மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த 70 மாணவ- மாணவிகள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றிய அளவிலான நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஜூனியர் ரெட் கிராஸ் (ஜே.ஆர்.சி) ஒரு நாள் பயிற்சி முகாம் திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

    முகாமிற்கு திருமருகல் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் ரவி, ஜெயந்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    வவ்வாலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ், திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் வேம்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஜே.ஆர்.சி யின் ஒன்றிய துணை ஒருங்கிணைப்பாளர் வடிவேல் வரவேற்றார்.

    ஜே.ஆர்.சி-யின் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் நிகழ்ச்சி யினை தொகுத்து வழங்கினார்.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி கருத்தாளராக செயல்பட்டு சேவைப் பணி மற்றும் முதலுதவி தொடர்பான பயிற்சியினை வழங்கினார்.

    முன்னதாக புகையிலை ஒழிப்பு தொடர்பான மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    திருமருகல் ஒன்றியத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 70 மாணவ, மாணவிகள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

    நடுநிலைப்பள்ளிகளின் ஜே.ஆர்.சி ஒருங்கிணைப்பா ளர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.

    ஒன்றிய துணை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் முடிவில் நன்றி கூறினார்.

    ×