என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Dibharathana"
- விக்னேஸ்வர பூஜையுடன், கணபதி, நவக்கிரக, தன பூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் பூர்ணாஹுதி தீபாரதனை நடைபெற்றது.
- சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்து வலம் வந்து கோபுரத்தை அடைந்து புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வடுகச்சேரி கிராமத்தில் சக்தி விநாயகர்,செல்ல மாரியம்மன், கூத்த பெருமாள் ஐயனார் கோவில்கள் அமைந்துள்ளது.
இக்கோவில்களின் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன், கணபதி, நவக்கிரக, தன பூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் பூர்ணாஹுதி தீபாரதனை நடைபெற்றது.
தொடர்ந்து வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
இன்று காலை யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்து வலம் வந்து கோபுரத்தை அடைந்து புனித நீர் ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, சித்தி விநாயகர், கூத்த பெருமாள் ஐயனார், செல்ல மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கலச நீர் கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
- பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மகாதீபாராதனைக்கு பின் சவுந்திரராஜ பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
- வழியெங்கும் பக்தர்கள் விநாயகர் சிலைகளுக்கு தேங்காய் உடைத்து வழிப்பட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் சக்தி விநாயகர் குழுவினர் சார்பில், 108 விநாயகர் சிலைகள், நாகை, கீழ்வேளூர், சிக்கல், செல்லுார், பாலையூர், நாகூர் மற்றும் நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அனைத்து பகுதிகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மகாதீபாரதனைக்கு பின், நாகை சவுந்திரராஜப் பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. கோவில் வாசலில் மங்கள வாத்தியங்கள் முழங்க புறப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம் மாலையில் புதிய கடற்கரைக்கு வந்தது. வழியெங்கும் பக்தர்கள் விநாயகர் சிலைகளுக்கு தேங்காய் உடைத்து வழிப்பட்டனர்.
புதிய கடற்கரைக்கு வந்த விநாயகர் சிலைகள் சிறப்பு தீபாரதனைக்கு பின் படகுகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு ஆழ்கடல் பகுதியில் விசர்ஜனம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஊர்வலத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பாக கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்