search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடல் சீற்றத்தால் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
    X

    ஆறுகாட்டுதுறையில பைபர் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

    கடல் சீற்றத்தால் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

    • பலத்த காற்றின் காரணமாக கடலில் உள் பகுதியில் கடும் சீற்றமாக காணப்படுகிறது.
    • பைபர் படகுகளில்மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடந்த 2 நாட்களாக காற்று பலமாக வீசி வருகிறது.

    பலத்த காற்றின் காரணமாக கடலில் உள் பகுதியில் கடும் சீற்றமாக காணப்படுகிறது.

    கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் 2 நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை .

    ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கோடியக்கரை, மனியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.

    நேற்று அதிகாலை ஆறுகாட்டுதுறையில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில்மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர்.

    மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டன.

    Next Story
    ×