search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அபீஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் விழா நிறைவு
    X

    சிறப்பு அலங்காரத்தில் அபீஷ்ட வரதராஜ பெருமாள்.

    அபீஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் விழா நிறைவு

    • தாயாருடன் பெருமாள் வீதியுலா வந்தும், வெண்ணை குடம், திருக்கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுடன் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
    • பூஜைகளுடன் கொடி இறக்கப்பட்டும், பல்லாக்கு சேவை, விடையாற்றியுடன் விழா நிறைவடைந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தோப்புதுறை அபீஷ்ட வரதராஜ பெரு மாள் கோவிலின் ஆண்டுப்பெருவிழா கொடி இறக்கம், விடையாற்றியுடன் நிறைவடைந்தது.

    இக்கோவிலில் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 31ம் தேதி கொடி ஏற்றப்பட்டு துவங்கியது. நாள்தோறும் உபயதாரர் சார்பில் பல்லாக்கு சேவை, கருட சேவை, அனுமந்த வாகனம், யானை, இந்திர விமானம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தாயாருடன் பெருமாள் வீதி உலா வந்தும், வெண்ணை குடம், திருக்கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுடன் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

    நேற்று பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகளுடன் கொடி இறக்கப்பட்டும், பல்லாக்கு சேவை, விடையாற்றியுடன் விழா நிறைவடைந்தது.

    இதில் ஏராளமான பக்த ர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×