என் மலர்
மதுரை
- அ.தி.மு.க.வை பாதுகாக்க தொண்டர்கள் மனித வெடிகுண்டாக மாறுவார்கள் என்று மதுரை ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பேசினர்.
- அ.தி.மு.க. தொண்டர்கள் விஸ்வரூபம் எடுப்போம் என்பதை ஆளும் தி.மு.க.வுக்கு சவாலாக தெரிவித்துக் கொள்கிறேன்.
மதுரை
மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் இன்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் மறு வடிவமாக திகழ்ந்து வருகிறார்.
அவரது தலைமையில் இன்று அ.தி.மு.க. இயக்கம் ஒன்று பட்டுவிட்டது. இனி யாரைப் பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. அவர் தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக விரைவில் வருவார். அந்த நம்பிக்கை மக்கள் மன்றத்தில் பரவலாக ஏற்பட்டுள்ளது.
எடப்பாடியார் மதுரைக்கு வரும் போதெல்லாம் மக்கள் எழுச்சி அதிகரித்து வருகிறது. இதை பொறுக்க முடியாத தி.மு.க. பொய் வழக்கை பதிவு செய்துள்ளது.
உடனடியாக எடப்பாடி மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் இல்லாவிட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் தொடர்ந்து வீதிக்கு வந்து இந்த அரசை தூக்கி எறியும் வரை போராடுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
கடந்த 11-ந் தேதி மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் மக்கள் எழுச்சி பயணத்தை இடைக்கால பொது செயலாளர் எடப்பாடியார் தொடங்கினார். இந்த எழுச்சி பயணத்தின் வெற்றியை தடுக்க தி.மு.க. அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது. தொடக்கம் முதலே போலீசார் நிகழ்ச்சி களுக்கு அனுமதி தராமல் மறுத்துவிட்டனர்.
நீதிமன்றத்தில் முறையிட்டு பட்டா நிலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி பெற்றோம். அதே நேரத்தில் தி.மு.க.வின் பி. டீம் என்று அழைக்கப்படும் சில துரோகிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அங்கு போலீசார் அனுமதி அளித்தனர். இது எந்த வகையில் நியாயம்?.
அ.தி.மு.க. இயக்கத்தை எப்படியாவது அழித்து விடலாம். ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.
எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க. வலுவோடும் பொலி வோடும் செயல்பட்டு வருகிறது. மக்கள் தமிழகத்தின் அடுத்த முதல்வராக எடப்பாடி யாரை கொண்டு வர வேண்டும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ஆனால் ஒரு பொய்யான வழக்கை மனசாட்சியின்றி தி.மு.க. அரசு இன்றைக்கு அவர் மீது போட்டுள்ளது.யாரோ பெயர் தெரியாத, விலாசம் தெரியாத ஒருவர் கொடுத்த புகாரை ஏற்று எடப்பாடியார் மீது பொய் வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். யார் சொல்லி இவர்கள் வழக்கு போட்டார்கள்? என்றெல்லாம் எங்களுக்கு தெரியும்.
இதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் அ.தி.மு.க.வை பாதுகாக்க ஒவ்வொரு தொண்டனும் மனித வெடிகுண்டாக மாறுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த அரசு அ.தி.மு.க.வை சீண்டிப்பார்க்க வேண்டாம்.பழிவாங்க நினைப்பதை விட்டு விட்டு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் ஆட்சிக் கட்டிலில் இருந்து தூக்கி எறியப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ததன் காரணமாக மக்களிடம் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க. இன்றைக்கு ஒரு பொய்யான வழக்கை பதிவு செய்திருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதை நாம் மதுரை மண்ணில் இருந்து கண்டிக்க கடமைப்பட்டுள்ளோம். இதற்காகத்தான் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது இங்கே திரண்டிருக்கிறோம். அ.தி.மு.க. இயக்கம் சாதாரண இயக்கமல்ல. இந்த இயக்கம் தொண்டர்களால் கட்டுக்கோப்பாக கட்டமைக்கப்பட்டதாகும்.
இந்த இயக்கத்தை அழித்து விடலாம். ஒழித்து விடலாம் என்று யாராவது நினைத்தால் அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். இதுவரை யாரும் செய்யாத ஒரு செயலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் மீது பொய்யான புகாரை கொண்டு வழக்குப்பதிவு செய்கிறார். எடப்பாடி பழனிசாமியும் கடந்த 4 ஆண்டுகளில் முதல்வராக இருந்து மு.க. ஸ்டாலின் மீது எந்த பொய் வழக்கையாவது போட்டாரா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
ஆளுகின்ற மமதையில் ஸ்டாலின் இதுபோன்று பொய் வழக்குகளை போட்டு வருகிறார். தி.மு.க.வுக்கு தமிழ்நாடு பட்டா போட்டு கொடுக்கப் பட்டுள்ளதா? என்பதை சிந்திக்க வேண்டும் விரைவில் மக்கள் உங்களை மாற்றுவார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் நீங்கள் செய்தது போல இனி செய்ய முடியாது. அப்போது உங்கள் நிலைமை எப்படி ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள். அ.தி.மு.க. இயக்கம் ராணுவ கட்டுப்பாட்டோடு இருக்கும் இயக்கமாகும். இது தேன்கூடு. இந்த தேன்கூட்டில் கம்பை வைத்தால் என்னவாகும் என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
அ.தி.மு.க.வை சீண்டி பார்ப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு கொடுத்த வாக்கு றுதிகளை நிறைவேற்றுங்கள். மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்துங்கள் என்று எச்சரிக்கை கடமைப்பட்டுள்ளோம். இனிமேலும் அ.தி.மு.க. தலைவர்கள் மீதும், அ.தி.மு.க. மீதும் காவல்துறையை கொண்டு பொய் வழக்கை போட நினைத்தால் அ.தி.மு.க. தொண்டர்கள் விஸ்வரூபம் எடுப்போம் என்பதை ஆளும் தி.மு.க.வுக்கு சவாலாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பெரியார் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
- இதனால் பஸ் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.
மதுரை
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பில் பெரியார் பஸ் நிலையம் புதிதாக கட்டப்பட்டு அதன் ஒரு பகுதி பயன்பாட்டில் உள்ளன.
புதிய பஸ் நிலையத்தில் உள்ள பிளாட் பாரங்களில் பழக்கடை உள்ளிட்டவற்றை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது.
மேலும் இந்த கடைகள் மூலம் குப்பைகளும் அதிக ரித்தது. இதனால் சுகாதார சீர்கேடும், பயணிகளுக்கு தொந்தரவும் ஏற்பட்டது.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் இன்று பஸ் நிலையத்தில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு செய்த பழக்கடைகளை அகற்ற முற்பட்டனர்.
அப்போது வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் பஸ் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.
- பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் தி.மு.க. அரசு என எச்.ராஜா குற்றச்சாட்டியுள்ளார்.
- மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடந்தது.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட பா.ஜனதா சார்பில் தல்லா குளத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு கோரிக்கை மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடந்தது. இதில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-
தி.மு.க. அரசு பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. அவர்களை அம்பேத்கார்தான் தட்டிக்கேட்க வேண்டும். எனவே தான் அவரது சிலைக்கு மனு கொடுத்து உள்ளோம்.
திராவிட கட்சிகள் பட்டியலின மக்களுக்கு அநீதி செய்கிறது. அவர்கள் மீது தாக்குதல் நடத்திவரும் தி.மு.க.வுடன் திருமாவள வன் எதற்காக கூட்டணி வைத்துள்ளார். மத்திய அரசு பட்டியலின சமூகத் துக்கு ஒதுக்கிய பல கோடி ரூபாய் நிதியை பயன்படுத்தா மல் அதனை தமிழக அரசு திருப்பி அனுப்பி மோசடி செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட தலைவர் சுசீந்திரன் உடனிருந்தார்.
- டாஸ்மாக் கடையை அகற்றகோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- பெண்கள் உள்பட 300 பேர் பங்கேற்றனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கேசம்பட்டி ஊராட்சிக் குட்பட்ட சாணிப்பட்டியில் மேலூர்-நத்தம் சாலையின் பிரதான பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இங்கு வருவோர் மது குடித்து விட்டு போதையில் சாலையில் விழுந்து கிடப்ப தும், சிலர் தகராறில் ஈடுபடு வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
எனவே சாணிப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர் பாக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
சாலை மறியல்
இதை கண்டித்தும், டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை சாணிப்பட்டி, கேசம்பட்டி, அருக்கம்பட்டி, கடுமிட்டான் பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை முன்பு மேலூர்-நத்தம் சாலையில் திரண்டனர்.அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறி யலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேலவளவு போலீ சார் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் நடந்தும் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வரவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் ஊரில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். கிராமத்தை சேர்ந்த ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். அதுவரை எங்கள் போராட் டம் தொடரும் என்றனர்.
- பிளஸ்-2 தேர்வை ஆர்வத்துடன் எழுதிய மாணவ-மாணவிகளை பறக்கும் படையினர் கண்காணித்தனர்.
- காலை 10 மணிக்கு தமிழ் மொழி பாட தேர்வு தொடங்கியது.
மதுரை
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு தொடங்கி யது. இந்த தேர்வை 8.75 லட்சம் மாணவ-மாணவி கள் எழுதினர்.
மதுரை மாவட்டத்தில் 18, 734 பேர் மாணவர்களும், 18,723 மாணவிகளும் என மொத்தம் 37,457 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.
119 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு நடந்தது. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதி னர். காலை 10 மணிக்கு தமிழ் மொழி பாட தேர்வு தொடங்கியது.
தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்கு வந்தி ருந்தனர். அவர்கள் புத்தகங்களுடன் கடைசி நேர தயாரிப்பில் மும்முர மாக ஈடுபட்டு இருப்பதை காண முடிந்தது. மாணவ-மாணவிகளுக்கு ஆசிரி யர்களும் தேர்வு குறித்து அறிவுரைகளை வழங்கினர்.
தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களை தவிர வேறு எந்த பொருட்களையும் கொண்டு செல்லக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்க ப்பட்டிருந்தது. எனவே மாணவ-மாணவிகள் தீவிர சோதனைக்குட்படுத்த ப்பட்ட பின்னர் 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது ஹால்டிக்கெட் சரி பார்க்கப்பட்டது.
தேர்வு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரிய-ஆசிரியைகள் ஈடுபடுத்தப்பட்டனர். தலைமை ஆசிரியர்கள், உயர் கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டது. அவர்கள் தேர்வு மையங்க ளுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
முன்னதாக தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அதிகாரி நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் 7,920 மாணவர்கள், 8,147 மாணவிகள் என மொத்தம் 16,067 பேர் இன்று தேர்வு எழுதினர். 65 மையங்களில் தேர்வு நடந்தது.
சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 7,625 மாணவர்கள், 8,808 மாணவிகள என மொத்தம் 16 ஆயிரத்து 433 மாணவ மாணவிகள் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதினர்.
விருதுநகர் மாவட்டத்தில் 10,985 மாணவர்கள், 12,383 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 368 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.
ஒவ்வொரு ஆண்டும் விருதுநகர் மாவட்டம், மாநில அளவில் பிளஸ்-2 தேர்வு சதவீதத்தில் முதலிடம் பெற்று வருகிறது. இந்த ஆண்டும் அதனை தக்க வைக்க மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் தேர்வுக்கு தீவிரமாக தயார்படுத்தினர்.
3 மாவட்டங்களிலும் பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்களுக்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தி னர்.
தமிழ் மொழி பாட ேதர்வுடன் இன்று தொடங்கிய பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் 3-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.
- சோழவந்தான் அருகே மருத்துவ முகாம் நடந்தது.
- இந்த முகாமில் 900-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன்காப்போம் அரசு சிறப்பு பொதுமருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமைதாங்கினார்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முனியசாமி முன்னிலை வகித்தார். சுகாதாரஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மருத்துவர்கள் அருண்கோபி, ஹரிபிரசாத், கிஷாமகேஷ், செல்வி உள்பட 8 டாக்டர்கள் நோயாளிகளை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கினர்.
கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகா ஞானசேகரன், சுகாதாரஆய்வாளர்கள் கிருஷ்ணன், ராமகிருஷ்ணன், பிரபாகரன், இனியகுமார், சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கண்ணன் நன்றி கூறினார். இந்த முகாமில் 900-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர்.
- மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடந்தது.
- சாஸ்தா மகளிர் மன்ற தலைவி நாக பாண்டீஸ்வரி வரவேற்றார்.
வாடிப்பட்டி
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மதுரை மாவட்ட நேரு யுகேந்திரா, போடிநாயக்கன்பட்டி சாஸ்தா மகளிர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பாண்டியராஜபுரம் அரசு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
கருப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா தொடங்கி வைத்தார். கபடி, குண்டு, ஈட்டி, வட்டு எறிதல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல போட்டிகள் மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்டது.
இதில் மாணவர் பிரிவில் சர்க்கரை ஆலை பள்ளி கபடி போட்டியிலும், வாடிப்பட்டி தனியார் கல்லூரி மாணவிகள் கைப்பந்து போட்டியிலும் வெற்றி பெற்றனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ராஜேஷ்குமார் பரிசு வழங்கினார்.
நேரு யுவகேந்திரா மாநில இயக்குநர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தனியார் கல்வி அறக்கட்டளை சேர்மன் ஆண்டி, தனியார் நர்சிங் கல்லூரி முதல்வர் சிலம்பு செல்வி முன்னிலை வகித்தனர்.
சாஸ்தா மகளிர் மன்ற தலைவி நாக பாண்டீஸ்வரி வரவேற்றார். உடற் கல்வி ஆசிரியர்கள் ராஜா, செந்தில்குமார், சந்திரமோகன், வெள்ளைச்சாமி, வசந்தகுமார் ஆகியோர் நடுவராக இருந்தனர். வசந்த் நன்றி கூறினார்.
- குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
- ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் 3-வது வார்டான கல்லாங்குத்து பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சரியான சாலை வசதி இல்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கல்லாங்குத்து பகுதியில் சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
குடி தண்ணீருக்காக அவர்கள் நீண்டதூரம் செல்ல வேண்டி யிருந்தது. குடிநீர் பிரச்சி னையை சரிசெய்ய அதிகாரி களிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
இதை கண்டித்தும், குடிநீர், சாலை வசதியை செய்து தரக்கோரி இன்று அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட பலர், வார்டு கவுன்சிலர் முத்துகுமார் தலைமையில் தேனூர் பஸ் நிறுத்தம் முன்பு திரண்டர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி சோழவந்தான்- தேனூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் தேவைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
மறியல் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
- காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை,
மதுரை புதுராமநாதபுரம் சாலை சிமெண்ட் ரோடு மின்வாரிய அலுவலகம்- மாநகராட்சி அலுவலகம் முன்புள்ள குப்பை ெதாட்டியின் அருகில் கடந்த 28-ந்தேதி சிறுகாயங்களுடன் 38 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்தார். அவரை 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 9-ந் தேதி பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இறந்த வாலிபரின் பெயர் லக்ஸ்கோ என்று மட்டும் தெரியவந்தது. வலது பக்க நெற்றியில் காயத்தழும்பும், மார்பின் நடுவில் கருப்பு மச்சமும் காணப்படுகிறது.
வெள்ளை கலர் அரைக் கை சட்டை அணிந்துள்ளார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குடிபோதையில் 13 பேர் கும்பல் மோட்டார் சைக்கிள்களில் நீச்சல் குளத்துக்கு வந்தனர்.
- இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.
மதுரை:
மதுரை மேலபனங்காடி, சக்கரத்தாழ்வார் நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 35). இவர் தல்லாகுளம் தங்கராஜ் சாலையில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்தில், மேற்பார்வையாளராக உள்ளார்.
சம்பவத்தன்று மாலை இவர் பணியில் இருந்தபோது குடிபோதையில் 13 பேர் கும்பல் மோட்டார் சைக்கிள்களில் நீச்சல் குளத்துக்கு வந்தனர். அப்போது அவர்களது வாகனம் நீச்சல்குளத்தின் நுழைவு வாயிலில் மோதியது. இதில் கதவு சேதமடைந்தது. இதை பிரேம்குமார் தட்டி கேட்டார். அவருக்கு ஆதரவாக சிலர் அங்கு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் 16 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.
அதன்படி வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஜெகநாதன் ஆலோசனையின்பேரில் தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தினர்.
கோஷ்டி மோதலில் ஈடுபட்ட மனோஜ், கரும்பாலை கீழத்தெருவை சேர்ந்த விஸ்வா (23), காமாட்சிராஜன், விஷ்ணு வர்தன், சரவணகுமார், சிவ குமார், முகமதுஅப்துல்லா, பிரேம்குமார், அருண்பாண்டி, சுந்தரபாண்டி, ரமேஷ், நமச்சிவாயம், தினேஷ் ஆகிய 13 பேரை கைது செய்தனர்.
இதே வழக்கில் விஸ்வா கொடுத்த புகாரின்பேரில் நீச்சல்குளத்தின் மேற்பார்வையாளர் பிரேம்குமார் உள்பட 3 பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.
- ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.
- தி.மு.க. அரசு மற்றும் போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர்.
மதுரை:
சிவகங்கை மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.
மதுரை விமான நிலைய உள்வளாகத்தில் இருந்து வெளியே வருவதற்காக சிறிய பஸ்சில் எடப்பாடி பழனிசாமி பயணம் செய்தார். அப்போது அதே பஸ்சில் இருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகர் ராஜேசுவரன், எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசி தனது செல்போனில் படம் பிடித்தார்.
இதனால் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர்கள் அவரை தடுத்தனர். அப்போது அங்கு மோதல் ஏற்பட்டது. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக இருதரப்பிலும் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அ.ம.மு.க. பிரமுகர் ராஜேசுவரன் அளித்த புகாரின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், செந்தில்நாதன் எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் மீது, அ.தி.மு.க.வினர் கொடுத்த புகாரின்பேரில் ராஜேசுவரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை 11 மணிக்கு மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் கருப்புச்சட்டை அணிந்திருந்தனர். அவர்கள் தி.மு.க. அரசு மற்றும் போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. மாவட்ட துணை செயலாளர் வில்லாபுரம் ராஜா, முன்னாள் மேயர் திரவியம், நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், அண்ணாதுரை, பைக்காரா கருப்புசாமி, சோலைராஜா, முத்துவேல், கலைச்செல்வம், கே.வி.கே. கண்ணன், பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன், பரவை ராஜா, வழக்கறிஞர் ரமேஷ், நிலையூர் முருகன், ராஜேந்திரன், ஓம்.கே. சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.வினர் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- வடமாநில தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
- வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.
திருமங்கலம்
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்திகள் பரவியதால் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச்சென்றனர். இந்தநிலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பல்வேறு நடவ டிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டது. வதந்தி பரப்பி யவர்கள் கைது செய்யப்ப ட்டனர்.
இந்த நிலையில் தமிழக காவல்துறை மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் தொழில் பேட்டையில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலா ளர்களை வரவழைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் திருமங்கலம் துணை போலீஸ் சூப்பி ரண்டு வசந்தகுமார் தலைமை தாங்கி பேசும்போது கூறுகையில், ''வட மாநில தொழி லாளர்களுக்கு பாது காப்பான சூழ்நிலை உருவாக்கிட வேண்டும். அவர்களின் குறைகளை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய வேண்டும். ஏதேனும் புகார்கள் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கலாம்'' என்றார்.
மதுரை தொழிலாளர் துறை இணை ஆணையர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான வதந்தி பரவியது. இதனைப் பரப்பிய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தொழில் அமைதியாக நடைபெற வேண்டும். இதற்காக தொழிலதிபர்கள் மற்றும் வட மாநில தொழிலா ளர்களை அழைத்து விழிப்பு ணர்வு கூட்டம் நடத்தி வருகிறோம்.
இதன் ஒரு பகுதியாக கப்பலூர் தொழிற்பேட்டையில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களை அழைத்து அறிவுரை வழங்கினோம். வட மாநில தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம். சம்பளம் மற்றும் வேறு பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கலாம். மேலும் சொந்த மாநிலத்திற்கு சென்ற தொழிலாளர்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கப்பலூர் தொழிற்பேட்டை தொழிலதிபர் சங்க தலைவர் ரகுநாத ராஜா பேசியதாவது:-
கப்பலூர் தொழிற்பேட்டையில் 16 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 2500-க்கும் மேற்பட்ட வட மாநில தொழி லாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். இவர்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடு க்கப்பட்டுள்ளது.
உள்ளூர் தொழிலா ளர்களை விட அவர்களுக்கு நல்ல முறையில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வதந்திகளால் வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். அவர்கள் மீண்டும் வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






