என் மலர்
காஞ்சிபுரம்
இந்த நிலையில் முனியப்பனின் செல்போனுக்கு மர்ம வாலிபர் பேசினார். அப்போது ராஜேசை கடத்தி வைத்திருப்பதாகவும் அவரை விடுவிக்க ரூ. 15 லட்சம் தர வேண்டும் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். அதிர்ச்சி அடைந்த முனியப்பன் இது குறித்து உத்திரமேரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே கடத்தல் கும்பல் ராஜேசை திருவண்ணாமலையில் உள்ள காட்டுப்பகுதியில் சிறை வைத்து இருந்தனர். அவரிடம் இருந்த வங்கி டெபிட் கார்டை பறித்த கும்பல் அதன் மூலம் ஏ.டி.எம்.மில் இருந்து ரூ.15 ஆயிரத்தை எடுத்தனர். பின்னர் 2 நாட்களுக்கு பிறகு ராஜேசை விடுவித்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து அவர் அப்பகுதி மக்களிடம் பணம் பெற்று அரசு பஸ் மூலம் உத்திரமேரூர் வந்து சேர்ந்தார். இதுபற்றி உத்திரமேரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ராஜேசிடம் விசாரணை நடத்தினர்.
இதில் கடத்தலில் ஈடுபட்டது சின்னமாங்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த வீரமுத்து, ஒலையூரை சேர்ந்த மகரஜோதி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மேலும் கூட்டாளிகள் மல்லிகாபுரம் சுதீஷ், நெல்வாய் பிரகாஷ், சின்ன மாங்குளம் புருசோத்தமன் ஆகிய 3 பேரை தேடி வருகிறார்கள்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கனடாவில் இருந்து ஜெர்மன் வழியாக விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது கனடா நாட்டை சேர்ந்த கிருஷ்ணகந்தன் (வயது 69) என்பவரது உடைமைகளை சோதனை செய்தபோது, தங்க சங்கிலிகள், தங்க வளையங்கள், டாலர்களை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
அவரிடம் இருந்து ரூ.13 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 430 கிராம் தங்க நகைகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கனடா நாட்டுக்காரரான கிருஷ்ணகந்தனிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சென்னையில் இருந்து இலங்கைக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் ஏற வந்த சென்னையை சேர்ந்த முகமது சலீம் (45) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தனியாக அழைத்துச் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அவர், சவுதி ரியால் மற்றும் அமெரிக்க டாலர்களை தனது உள்ளாடைகளுக்கு உள்ளும், சூட்கேசிலும் மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.
அவரிடம் இருந்து சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து முகமது சலீமின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், கடத்தப்பட இருந்தது ஹவாலா பணமா? என விசாரித்து வருகின்றனர்.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து கடந்த மாதம் 22-ந் தேதி முதல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கடந்த 20 நாட்களுக்கு மேலாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இன்றைய நிலவரப்படி 290 கனஅடி வருகிறது.
இந்த தண்ணீர் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நதி போல் பாய்ந்து செல்கிறது.
இதனை காணும் நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு கிருஷ்ணா கால்வாயில் குழந்தைகளுடன் உற்சாக குளியல் போடுகிறார்கள்.
இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் கால்வாயில் பாயும் தண்ணீரை பார்க்கவும், குளியல் போடவும் கிருஷ்ணா கால்வாயில் திரண்டு வருகிறார்கள். இதனால் அப்போது சுற்றுலா தளம் போல் காட்சி அளிக்கிறது.
இதுபற்றி பொது மக்கள் கூறும்போது, ‘‘கிருஷ்ணா கால்வாயில் பாயும் தண்ணீரை பார்க்க ரம்மியமாக உள்ளது. வெயிலுக்கு இதமாக குளிக்கும் போது உற்சாகம் அளிக்கிறது. கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்லாததால் குடும்பத்துடன் பாதுகாப்பாக குளிக்க முடிகிறது’’ என்றனர்.
பூண்டி ஏரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் 1305 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. சென்னை குடிநீர் தேவைக்காக 114 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
பூண்டி ஏரியில் 196 மி.கனஅடியும் (மொத்த கொள்ளளவு 3231), சோழவரம் ஏரியில் 70 மி.கனஅடியும் (மொத்த கொள்ளளவு 1081), புழல் ஏரியில் 1623 மி.கனஅடியும் (மொத்த கொள்ளளவு 3300) தண்ணீர் இருப்பு உள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 47 ஆயிரம் 461 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 41 ஆயிரத்து 389 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 87.21 சதவீதம் ஆகும்.
கடந்த ஆண்டு 88.85 சதவீதம் தேர்ச்சி பெற்று இருந்தது. தற்போது காஞ்சீபும் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.
மாவட்ட அளவில் காஞ்சீபுரம் 24-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 23-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசு பள்ளியில் மொத்தம் 19 ஆயிரத்து 171 பேர் தேர்வு எழுதி இருந்தனர். இதில் 14 ஆயிரத்து 769 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 77 சதவீதம்தேர்ச்சி ஆகும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 43 ஆயிரத்து 866 பேர் தேர்வு எழுதினர். இதில் 38 ஆயிரத்து 255 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 87.17 ஆகும். கடந்த ஆண்டு 87.57 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. தற்போது 0.40 சதவீதம் தேர்ச்சி குறைவு.
மாவட்ட அளவில் திருவள்ளூர் மாவட்டம் 25-வது இடத்தை பிடித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 90 அரசு பள்ளிகள் உள்ளன. இதில் 16 ஆயிரத்து 340 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 11 ஆயிரத்து 944 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 73.10. கடந்த ஆண்டு 74.28 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. #PlusTwoExamResults #PlusTwoResults #Plus2Result
சோழிங்கநல்லூர்:
சென்னையை அடுத்த ஒக்கியம் துரைப்பாக்கம் ராஜுநகர் 2-வது சாலையில் வசித்து வருபவர் வெங்கட் சம்பத்குமார் (25).
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இவர் இங்கு தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ‘சிட்டி’ வங்கியில் கணக்கு உள்ளது. அந்த கணக்கை இங்கிருந்து நிர்வகித்து வந்தார். அவரது கணக்கில் ரூ.40 ஆயிரம் இருந்தது.
அந்த பணத்தில் கடந்த 4-ந்தேதி ரூ.10 ஆயிரம் திடீரென குறைந்தது. வங்கியில் இருந்து வெங்கட் சம்பத்குமார் பணத்தை எடுக்காத நிலையில் பணம் மாயமானது.
இந்த நிலையில் 10-ந் தேதி மேலும் ரூ.30 ஆயிரம் பணத்தை யாரோ கணக்கில் இருந்து எடுத்து விட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கண்ணகி நகர் போலீசில் புகார் செய் தார்.
போலீசார் இங்குள்ள கிளையில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது மகாராஷ்டிராவில் இருந்து பணம் ஆன்லைன் மூலம் எடுத்து இருப்பதாக வங்கி அதிகாரி தெரிவித்தார்.
வாடிக்கையாளர் கணக்கில் உள்ள பணத்தை வேறு யாரோ எப்படி எடுக்க முடியும் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் விசாரணை நடந்து வருகிறது.
நந்தம்பாக்கம் பரங்கிமலை ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் கமலா (50). அவருக்கு சொந்தமான வீட்டை சுந்தர் (35) என்பவருக்கு வாடகைக்கு விட்டு இருந்தார்.
பெயிண்டர் வேலை செய்து வரும் சுந்தர் தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்துள்ளார்.
இதனால் வீட்டை காலி செய்யும்படி கமலா கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வீட்டை காலி செய்ய முடியாது என்று கமலாவிடம் தகராறு செய்தார்.
வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது திடீரென சுந்தர் கத்தியால் கமலாவை கையில் வெட்டினார். அவரது வலது கையில் வெட்டு விழுந்தது.
இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நந்தம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சுந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர். #Tamilnews
காஞ்சீபுரம்:
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காஞ்சீபுரம் வழியாக காரில் சென்றார். காஞ்சீபுரத்தில் அமைச்சர் உதயகுமார் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
காவிரி வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த தீர்ப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருவதாக அமையும். காவிரி விவகாரத்தில் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் நடத்தும் நாடகம் மக்களிடம் எடுபடாது.
தி.மு.க. மத்திய ஆட்சியில் பங்கேற்ற போதும் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த போதும் தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

ஆனால் அ.தி.மு.க. அரசு சட்டமன்றம், பாராளுமன்றம், மக்கள் மன்றம், நீதிமன்றம் என அனைத்து வகையிலும் காவிரி பிரச்சனையில் அழுத்தம் கொடுத்து தற்போது பெரும் வெற்றி பெரும் நிலையில் உள்ளது.
அந்த வெற்றியில் தி.மு.க. தங்களது பங்களிப்பு இல்லை என்று தெரிந்து தமிழக மக்களுக்கு காலம் காலமாக செய்த துரோகத்தினை மறக்கடிக்க போராட்டம் நடத்தி வேடிக்கை காட்டுகிறது. இந்த வேடிக்கையை பார்ப்பதற்கு மக்கள் தயாராக இல்லை.
எனவே ஸ்டாலின் எடுபடாத இந்த நாடகத்தை நடத்துவதுற்கு பதிலாக சினிமாவிற்கும் மேடைநாடகத்திற்கும் கதை வசனம் எழுதலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அமைப்பு செயலாளர்கள் வி.சோம சுந்தரம், மைதிலி, கே.யு.எஸ். சோமசுந்தரம், வள்ளி நாயகம், தமிழ்வாணன், படுநெல்லி தயாளன் உடனிருந்தனர். #Ministerudayakumar #MKStalin #Cauveryissue
திருவான்மியூர்:
சென்னை நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம், தட்கல் நகர் பொதிகை தெருவை சேர்ந்தவர் விஜய ரங்கன். இவரது மகன் பால முருகன் (வயது28). ஐ.டி. முடித்த இவர் போலீஸ் வேலைக்கு சேர்ந்தார்.
அசோக்நகரில் உள்ள போலீஸ் பயிற்சி அகாடமியில் 2 வருடமாக பயிற்சி பெற்று வந்தார். அவருக்கு கம்ப்யூட்டர் டைப் செய்யும் பிரிவில் பணி வழங்கப்பட்டு இருந்தது.
பாலமுருகனுக்கு விடுமுறை கொடுக்காமல் இரவு பகலாக பணி வழங்கப்பட்டது. அதிக வேலைப்பளு காரணமாக அவர் அவதிப்பட்டு வந்தார்.
இதுதொடர்பாக அவர் தனதுதந்தையிடம் கூறி வருத்தப்பட்டார். அவரிடம் தந்தை ஐ.டி.படித்துவிட்டு ஏன் போலீஸ் வேலைக்கு போக வேண்டும்? வேறு ஏதாவது வேலைப்பார்க்கலாம் என்று கூறி சமாதானப்படுத்தினார். இதனால் கடந்த 2 நாட்களாக பாலமுருகன் வேலைக்கு செல்லவில்லை.
நேற்று இரவு உடனே வேலைக்கு வருமாறு பாலமுருகனுக்கு அழைப்பு வந்தது. இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் மீண்டும் தனது தந்தையிடம் கூறி புலம்பினார். அவர் மகனை சமாதாப்படுத்தினார். ஆனால் பாலமுருகன் ஆறுதல் அடையவில்லை.
இன்று அதிகாலை பாலமுருகன் தனது அறையில் தாயாரின் சேலையை மின்விசிறியில் கட்டி தூக்கில் தொங்கினார். இன்று காலையில் மகனை எழுப்புவதற்காக விஜயரங்கன் அறைக்கதவை திறந்தார். அப்போது மகன் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக தூக்கில் இருந்து மகனை இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாலமுருகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
சென்னை:
வேளச்சேரி அன்னை இந்திரா நகரில் உள்ள லாட்ஜில் அறைகளை வாடகைக்கு எடுத்து சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வேளச்சேரி இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் லாட்ஜில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது 4 அறைகளை வாடகைக்கு எடுத்து சூதாட்டம் நடப்பது தெரிய வந்தது.
சூதாட்டத்தில் ஈடுபட்ட தேனாம்பேட்டையை சேர்ந்த ஜான்சன், புரசைவாக்கத்தை சேர்ந்த ஜோசப், மேற்கு தாம்பரத்தை சேர்ந்த முத்து, குன்றத்தூரை சேர்ந்த வெங்கடேஷ், கொளத்தூர் கங்கேஸ்வரன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சூதாட்டம் நடந்த லாட்ஜ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் சரவணன், முன்னாள் கவுன்சிலரான இவர் தினகரன் ஆதரவாளர் ஆவார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி ஜெயலலிதா ஆட்சியை விட சிறப்பாக நடப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறி இருக்கிறார். அவர் எப்போதுமே காமெடியாகத்தான் பேசுவார். அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
ஹைட்ரோ கார்பன் ஒரு நல்ல திட்டம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார். அவர் மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் நல்லது என்றுதான் சொல்வார். காவிரி நீர் வராதது கூட நல்லதுதான் என்று கூறுவார்கள். ஏன் என்றால் நாம் அங்கு ரியல் எஸ்டேட் செய்யலாம் என்பார்கள். மக்களை கேட்டால்தான் உண்மை தெரியும்.
குட்கா வழக்கில் அரசு மேல்முறையீடு செய்யாது எனறு சொல்லிவிட்டு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருக்கிறார்கள். இந்த அரசு எல்லாவற்றையும் மாற்றி மாற்றித்தான் செய்வார்கள்.
உதாரணமாக ஓ.பன்னீர் செல்வம் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திட்ட மிட்டபடி திறக்கப்படும் என்று கூறி இருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணை திறக்கப்படாது என்று கூறுகிறார்.
பாராட்டும்படி இந்த அரசு எதுவும் செய்யவில்லை. பொய்கள் சொல்லும் இவர்களை எப்படி பாராட்டுவது.
எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இங்கு நடப்பது பா.ஜனதாவின் கிளை அலுவலகம்.
இவ்வாறு அவர் கூறினார்.#TTVdinakaran
சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் விமான நிலையம் 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்தது. தற்போது தான் செயல்படுகிறது. இதற்கு 160 ஏக்கர் நிலமே போதுமானது. பல நாடுகளில் பன்னாட்டு முனையங்களே இந்த அளவு நிலத்தில் தான் இயங்கி வருகின்றன.
சேலத்தில் பலர் விளை நிலங்களை விட்டுவிட்டு கஷ்டப்படுகின்றனர். அங்கு ஒரே ஒரு விமானம் தான் செல்கிறது. விளைநிலங்களை கையகப்படுத்தி 570 ஏக்கரில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டியதில்லை. ஏற்கனவே நிலம் தந்தவர்கள் மீண்டும் தங்கள் நிலங்களை எடுத்துவிடுவார்களோ? என்ற அச்சத்தில் உள்ளனர். ஒருவர் இறந்தே போய்விட்டார்.
மக்கள் விமான நிலையமா? கேட்டார்கள். காவிரியில் இருந்து தண்ணீர் தான் கேட்டனர். ஆனால் அதை தராமல் தஞ்சாவூரில் விமான நிலையம், சேலத்தில் 8 வழிப்பாதை கொண்டு வருகிறோம் என்று கூறுகின்றனர்.
எஸ்.வி.சேகரின் வீட்டின்முன்பு போராடியவர்கள் மீது வழக்கு போடப்பட்டு உள்ளது. ஆனால் போராட்டத்திற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரம் அவரை பாதுகாக்கிறது.
கர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் தண்ணீர் கிடைக்கும் என்று முதலமைச்சர் கூறுகிறார். எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது தண்ணீர் வந்ததா?.
தி.மு.க. மத்திய அரசில் அங்கம் வகித்தபோது அதிக வருமானம் உள்ள துறையாக கேட்டு பெற்றது. மாநிலத்தின் நலனுக்கான துறையை பெற்றிருந்தால் ஈழத்தமிழர்களுக்கு பயனுள்ளதாக இருந்து இருக்கும்.
இவ்வாறு சீமான் கூறினார். #Seeman
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகவில் நடந்துள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும். 5 ஆண்டுகள் ஊழல் இல்லாத சிறந்த ஆட்சியை சித்தராமையா நடத்தி உள்ளார்.
பா.ஜனதா கட்சிக்காக பிரதமர், மத்திய மந்திரிகள், பா.ஜனதா முதல்வர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு பணம் மலைபோல் செலவு செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் காங்கிரஸ்தான் வெற்றி பெறும்.
இந்தியாவில் எந்த கூட்டணியும் ஆயுட்காலம் ஒப்பந்தம் போட்டது இல்லை. கூட்டணி என்பது தேர்தல் நேரங்களில் சீட் மற்றும் வெற்றியின் அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டியது ஆகும். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி தொடர்கிறது.
கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலின்போது தனித்தனியாக தான் போட்டியிட்டோம். சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். தற்போதும் கூட்டணி இருக்கிறது. அது தொடருகிறது. தமிழகத்தில் எதிர்காலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது இலக்கு.
10 ஆண்டுகள் கழித்தோ, 20 ஆண்டுகள் கழித்தோ வரலாம். அதனால் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது என்று அர்த்தமில்லை. காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று கூறினால் தி.மு.க.வை விட்டு வெளியேறுவதாக கருதவேண்டியது இல்லை.
3-வது அணி என்பதே கிடையாது. அதற்கு யார் தலைவர்? அதில் எந்தெந்த கட்சிகள் இருக்கின்றன? 3-வது அணியில் மம்தாவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இருப்பார்களா?... அப்படி உருவாக வாய்ப்பு இல்லை. உருவானாலும் ஆட்சி அமைக்க முடியாது.
பா.ஜனதாவுக்கு மாற்று காங்கிரஸ்தான். பிரதமர் மோடி அகற்றப்பட வேண்டும். காவிரி பிரச்சினையில் 14-ந் தேதி (இன்று) மத்திய அரசு வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
மத்திய அரசு என்ன தாக்கல் செய்கிறது என்பதை பார்ப்போம். இது தொடர்பாக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் அடுத்த கட்டமாக என்ன செய்வது முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






