என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஆலந்தூரில் குடிநீர் பணிகளை மேற்கொள்ள விடுபட்ட 82 தெருக்களுக்கு ரூ.13 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.

    சென்னை:

    ஆலந்தூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் தா.மோ. அன்பரசன் சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனரை நேற்று நேரில் சென்று சந்தித்தார்.

    அப்போது ஆலந்தூர், முகலிவாக்கம், மணப்பாக்கம் பகுதிகளில் விடுபட்ட பகுதிகளுக்கு மெட்ரோ குடிநீர் கிடைக்க நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தினார்.

    ஆலந்தூர் பகுதியில் ரூ.66 கோடி செலவில் மெட்ரோ குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்ட போது அங்குள்ள 160,161,162, 164,165,166 ஆகிய வட்டங்களில் உள்ள 82 தெருக்களிலும் மெட்ரோ குடிநீர் பணிகள் செயல்படுத்தப்படாமல் விடுபட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்.

    இது பற்றி சட்டமன்றத்தில் ஏற்கனவே பேசியதாகவும், அமைச்சர் இதை நிறைவேற்றி தருவதாக கூறியதையும் சுட்டிக்காட்டினார்.

    விடுபட்ட 82 தெருக்களிலும் குடிநீர் பணியை மேற்கொள்ள ரூ.13 கோடியே 71 லட்சம் அளவுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்காமல் உள்ளதால் விரைந்து நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    ஆலந்தூரில் குடிநீர் பிரச்சினையை போக்க நெம்மேலி கடல் குடிநீரையும் வழங்குமாறு வலியுறுத்தினார்.

    இதே போல் மணப்பாக்கம், முகலிவாக்கம் பகுதிகளில் உள்ள 156,157 ஆகிய வட்டங்கள் சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்டு 7 ஆண்டு ஆகியும் மெட்ரோ குடிநீர் இணைப்பு வழங்காமல் உள்ளதை சுட்டிக்காட்டியதுடன் அங்கும் மெட்ரோ குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யும் படி கேட்டுக் கொண்டார்.

    ஆதம்பாக்கம் பாலாஜி நகரில் 96- 2001-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட கழிவு நீர் வெளியேற்றும் நிலையத்தின் திறன்- குடியிருப்பு பகுதி அதிகரித்ததால் போதிய திறன், சக்தி இல்லாமல் உள்ளது.

    எனவே கூடுதலாக ஒரு வெளியேற்றும் நிலையம் அமைத்து தர வேண்டும் என்றும், 156,157,158 ஆகிய வட்டங்களில் பாதாள சாக்கடை வசதிகளை அமைத்து தருமாறும் கேட்டுக் கொண்டார்.

    இது தொடர்பாக தனித் தனியாக 5 கோரிக்கை மனுக்களையும் வழங்கினார்.

    மாமல்லபுரத்தில் புராதன சின்னம் பகுதியில் குரங்குகள் தொல்லையால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான அர்ஜுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்து ரதம், பிடாரி ரதம், புலிக்குகை மற்றும் மலைப்பகுதி குடவரை கோவில்களைகான வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

    புராதன சின்னங்கள் அனைத்தும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    இங்கு குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சில சுற்றுலா பயணிகள் குரங்குகளை சீண்டுவதால் சிலரை கடித்த சம்பவங்களும் நடந்துள்ளது.

    மேலும் சுற்றுலா பயணிகளின் குளிர் பானங்கள், உணவுகளை பறித்து குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. குரங்குகளை கட்டுப்படுத்துவது வனத்துறையினர் பொறுப்பு என்பதால் தொல்லியல்துறை காவலர்கள் இதனை கண்டு கொள்வதில்லை.

    இதனால் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளுக்கும் குரங்குகளால் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. குரங்குகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள்கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரின் போது கருணாநிதி நடத்திய உண்ணாவிரத நாடகத்தால் ஏராளமான இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதாக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கடுமையாக விமர்சனம் செய்தார். #KPMunusamy #ADMK #Karunanidhi
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மேற்கு, கிழக்கு, மத்திய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இலங்கை ராணுவத்துக்கு உதவிய தி.மு.க.- காங்கிரசை கண்டித்து காஞ்சீபுரம் காந்திரோடு பெரியார் தூண் அருகில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன். காஞ்சீபுரம் மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், அமைப்பு செயலாளர்கள் வி.சாமசுந்தரம், மைதிலி, மீனவர் பிரிவு செயலாளர் எம்.சி.முனுசாமி, எம்.பிக்கள் மரகதம் குமரவேல், கே.என்.ராமச்சந்திரன், ஜெயவர்த்தன், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. மதனந்தபுரம் கே.பழனி முன்னிலை வகித்தனர். அமைச்சர் பென்ஜமின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியதாவது:-



    இலங்கையில் போர் நடந்த சமயம், அங்கு வாழும் லட்சக்கணக்கான தமிழ் மக்களை காப்பாற்ற ஆயுதம் தாங்கிய போராளிகள் உருவானார்கள். எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த போது அந்த போராளிகள் தமிழர்களை காப்பாற்ற தங்களை வளர்த்துக் கொள்வதற்கும் போராடுவதற்கும் பயிற்சியை மேற்கொள்ள தமிழ்நாட்டை நாடினார்கள், அவர்களுக்கு எம்.ஜி.ஆர்.ஆதரவு கொடுத்தார்.

    எம்.ஜி.ஆர். அரசியல் சட்டத்தை பற்றி கவலைப்படாமல், இறையாண்மையை பற்றி கவலைப்படாமல் தமிழ் குலம் எங்கிருந்தாலும் பாதுகாப்பு கொடுப்பேன் என்று அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தார். இந்திய திருநாட்டில் யாரும் செய்யமுடியாத அளவிற்கு ரூ.4 கோடியை விடுதலை போராளிகளுக்காக வழங்கினார். மறைமுகமாக பல்வேறு உதவிகளை ஸ்ரீவிடுதலைப் போராளிகளுக்கு எம்.ஜி.ஆர். செய்தார்.

    பின்னர் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடத்தியது. 2008-2009ல் இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்தது. விடுதலைப்போராளிகள் இலங்கையின் தாக்குதலை முறியடிக்க கொரில்லா தாக்குதல் செய்து வெற்றி பெற்றார்கள்.

    இந்திய அரசு இலங்கை அரசுக்கு முறையாக ஆயுதம் வழங்காத வரை விடுதலை போராளிகள் வெற்றி பெற்றனர். அப்போது ராஜபக்சே மத்திய அரசை அணுகினார். இந்திய அரசிடம் உதவி கேட்டார். அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு இலங்கை அரசுக்கு விமானங்களை, ஹெலிகாப்டர்களை, வட்டியில்லாத கடனாக கொடுத்தது.

    அங்கு விடுதலைபுலிகளை சாய்ப்பதற்கும், இலங்கை தமிழர்களை அழிப்பதற்கும் இந்த உதவிகளை இந்திய அரசு வழங்கியது. இலங்கைக்கு நமது ராணுவ என்ஜினீயர்களை அனுப்பி வைத்தது. இந்த நிகழ்ச்சி அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டது. கருணாநிதி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். மத்திய அரசுக்கு கொடுத்திருந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்திருக்க வேண்டும். மத்திய அரசை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்.

    இலங்கையில் பதுங்கு குழியில் இருந்த தமிழ் பெண்கள், குழந்தைகள் வெளியே வந்தபோது இலங்கை அரசு போர் விமானங்களை அனுப்பி ஆயிரக்கணக்கான பேர்களை கொன்று குவித்தது. இதற்கு காரணமான தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளை தண்டிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. போராடிக் கொண்டிருக்கிறது.

    தி.மு.க.வில் கருணாநிதி இல்லையென்றால் ஸ்டாலின் இல்லை. அதே போன்று ராமதாஸ் அரசியலுக்கு வந்ததால்தான் அன்புமணி வந்தார். ஆனால் அ.தி.மு.க.வில் விசுவாசம் மிக்க அடிமட்டத் தொண்டன் கூட பதவிக்கு வர முடியும். ஆனால் தி.மு.க. வாரிசு அரசியல் செய்கிறது. இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடந்து தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது கருணாநிதி மத்திய காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளித்துக் கொண்டு இருந்தார். ஏனென்றால் தி.மு.க. வினருக்கு பதவி மட்டுமே முக்கியம்.

    தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருந்த போது கருணாநிதி சென்னையில் உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார். சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு பின் மத்திய அரசு இலங்கை அரசிடம் பேசி விட்டது. அங்கு போர் நிறுத்தப்பட்டு விட்டது. எனவே என்னுடைய உண்ணாவிரதத்தினை முடித்துக் கொள்கிறேன் என கூறி உண்ணாவிரத நாடகத்தினை முடித்துக் கொண்டார். இவருடைய வார்த்தையினை நம்பி பதுங்கு குழியில் இருந்த பெண்கள், குழந்தைகள் என லட்சக்கணக்கானோர் வெளியே வந்த போது தரை வழியாகவும் வான் வழியாகவும் இலங்கை தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றது.



    இப்படி காங்கிரசுடன் சேர்ந்து தி.மு.க. செய்த துரோகத்தினை கடந்த வாரம் ராஜபக்சே அம்பலப்படுத்தினார். ஆட்சியினை தக்க வைக்க தமிழர்களின் தன்மானத்தினை விலையாகக் கொடுத்தவர் தான் கருணாநிதி. இன்று ஸ்டாலின் அ.தி.மு.க.வைப் பார்த்து முதுகெலும்பு இல்லாதவர்கள் எனக் கூறுகிறார். தன்மானத்தோடு ஆட்சி செய்பவர்கள் நாங்கள். ஆனால் உங்கள் கட்சி அலுவலத்திலேயே சோதனை நடத்திய காங்கிரஸ் கட்சியோடு பதவி சுகத்திற்காக இன்றும் கூட்டணி வைத்துள்ள கட்சிதான் திமுக. எங்களைக் குறை சொல்ல ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.யூ.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் வள்ளிநாயகம், மாவட்ட அவைத்தலைவர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ரஞ்சித்குமார், பெரும்பாக்கம் ராஜசேகர், நிர்வாகிகள் தும்பவனம் ஜீவானந்தம், காஞ்சி பன்னீர் செல்வம், அத்திவாக்கம் ரமேஷ், அக்ரி நாகராஜ், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, டபிள்யூ.பி.ஜி.சரவணன், கரூர் மாணிக்கம், பாலாஜி. ஜெயராஜ் கலந்து கொண்டனர். #KPMunusamy #ADMK #Karunanidhi
    காஞ்சீபுரத்தில் தொழில் அதிபர் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #kidnapping

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை, திருவேங்கடம் நகரில் வசித்து வருபவர் பசூல் ரகுமான் (65). தொழில் அதிபர். இவர் காஞ்சீபுரம் மேட்டுத்தெரு, ராஜவீதி பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு 11 மணி அளவில் அவர் ராஜவீதியில் உள்ள சூப்பர்மார்க்கெட்டை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் தனியாக வீட்டுக்கு புறப்பட்டார்.

    காஞ்சீபுரம் காந்தி ரோட்டில் வந்த போது பின்னால் வந்த ஆம்னி கார் திடீரென பசூல்ரகுமான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார்.

    உடனே காரில் இருந்த 5 பேர் கும்பல் பசூல் ரகுமானுக்கு முதலுதவி செய்வது போல் பேச்சு கொடுத்தனர். திடீரென அவர்கள் பசூல் ரகுமானை கத்தி முனையில் மிரட்டி காரில் ஏற்றி கடத்தி சென்று விட்டனர்.

    நள்ளிரவு நேரம் என்பதால் அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனால் கடத்தல் குறித்து உடனடியாக வெளியே தெரியவில்லை.

    இதற்கிடையே பசூல் ரகுமானின் மகன் ஜயாலுதீனின் செல்போன் எண்ணுக்கு கடத்தல் கும்பல் போன் செய்தனர். அப்போது அவரிடம், “உங்கள் தந்தை பசூல் ரகுமானை கடத்தி உள்ளோம். அவரை விடுவிக்க ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், தந்தை கடத்தல் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிக்கு தகவல் தெரிவித்தார். டி.ஐ.ஜி. தேன்மொழி உத்தரவுப்படி கடத்தல் கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

    மேலும் கடத்தல்காரர்கள் தப்பிச் செல்வதை தடுக்க காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 3 மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இச்சம்பவத்தால் காஞ்சீபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஜயாலுதினின் செல்போனுக்கு மீண்டும் தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல் பணம் குறித்து கேட்டனர். இதனை பதிவு செய்த போலீசார் கடத்தல் கும்பலின் இருப்பிடம் குறித்து ஆய்வு செய்தனர்.

    அவர்கள் காஞ்சீபுரத்தை அடுத்த தூசி அருகே மாமண்டூர் பகுதியில் சென்று கொண்டு இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதனை அறிந்து கடத்தல் கும்பல் அதிகாலை 3 மணி அளவில் மாமண்டூர் வயல்வெளி பகுதியில் பசூல் ரகுமானை இறக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    நிம்மதி அடைந்த பசூல் ரகுமான் அங்கு வசிப்பவர்களிடம் செல்போன் வாங்கி கடத்தல் கும்பல் விட்டு சென்றது குறித்து மகன் ஜயாலுதீனுக்கும், உறவினர்களுக்கும் தெரிவித்தார்.

    போலீசார் விரைந்து சென்று பசூல் ரகுமானை மீட்டனர். அவரிடம் கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிககை எடுத்து வருகின்றனர். #kidnapping

    தமிழகத்தில் ஜனவரி முதல் நடந்துள்ள ஊழல்களை பட்டியலிட்டு கவர்னரிடம் மனு அளிப்போம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார். #Ramadoss #PMK
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த தாம்பரத்தில் தமிழக அரசின் ஊழலை எதிர்த்து பா.ம.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் பா.ம.க. தான் ஆட்சிக்கு வரும் என பலர் எனக்கு போன் செய்து சொல்கிறார்கள். அன்புமணி கூட்டத்தில் இளைஞர்கள் அதிக அளவில் கூடுகிறார்கள். அண்ணாவை போல அன்புமணிக்கு அடுக்கு மொழி பேச தெரியாது. ஆனால் தமிழகத்தை பற்றி பல மணி நேரம் பேசுவார்.

    1967-ல் ஏற்பட்ட மாற்றம் மீண்டும் ஏற்பட போகிறது. 1967-க்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் இல்லை. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது ஊழல் தொடங்கியது. தற்போது எப்படி ஊழல் நடந்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

    தமிழகத்தில் அன்புமணி மாற்றத்தை கொண்டு வருவார் என மக்கள் நம்புகிறார்கள். மக்கள் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். மக்கள் தங்களுடைய ஓட்டை விலைக்கு விற்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் தொடர்பாக கொடுக்கப்பட்ட நோட்டீஸ் குறித்து பேசிய டாக்டர் ராமதாஸ் “நீங்கள் எல்லாரும் ‘தினத்தந்தி’ பத்திரிகையை படிப்பீர்கள். அதில் படிக்க, படிக்க செய்திகள் இருக்கும். பக்கங்களும் அதிகமாக இருக்கும். அதே போல் இந்த நோட்டீஸ் உள்ளது” என்றார்.

    அதனை தொடர்ந்து கூட்டத்துக்கு பின்னர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    12 வருடத்தில் 7 ஆயிரம் விவசாயிகள் தமிழகத்தில் தற்கொலை செய்துள்ளனர். இதைப்பற்றி தான் சிந்தனை செய்கிறோம். தமிழகத்தில் பினாமி ஆட்சி தான் நடக்கிறது.

    தமிழக அரசின் மீது 18 ஊழல் புகார்களை கவர்னரிடம் 2 முறை மனுவாக கொடுத்திருக்கிறோம். அதை அவர் வரிக்கு வரி படிக்கிறார். ஆனால் நடவடிக்கை இல்லை.

    இந்த ஜனவரி முதல் நடந்துள்ள ஊழல்களை பட்டியலிட்டு மீண்டும் கவர்னரை சந்தித்து மனு கொடுப்போம். பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பொதுக்குழு கூடி முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணை மந்திரி ஏ.கே.மூர்த்தி, நடிகர் ரஞ்சித், மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேசன், மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் வக்கீல் சுரேஷ், மாவட்ட செயலாளர் விநாயகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  #Ramadoss #PMK

    பூஞ்சேரி அருகே மனைவியுடன் தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். கூலித் தொழிலாளி. இவர் மது பழக்கத்தக்கு அடிமையானதால் மனைவி நாகம்மாள் சண்டை போட்டு விட்டு மகள்களை அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனால் மனமுடைந்த கோவிந்தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பாலவாக்கத்தில் சொத்து தகராறில் தாயை குத்திக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Murder

    திருவான்மியூர்:

    நீலாங்கரையை அடுத்த பாலவாக்கம் மணியம்மை தெருவை சேர்ந்தவர் ராணி அம்மாள் (64). இவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

    இந்த நிலையில், ராணி அம்மாள் தனக்கு சொந்தமான வீடு, நிலம் ஆகியவற்றை ஒரு மகனுக்கும், ஒரு மகளுக்கும் கொடுக்க முடிவு செய்தார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

    இதையடுத்து ராணி அம்மாளின் 3-வது மகன் பர்ணபாஸ் தாயின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆட்டோ ஓட்டிவரும் இவர், தாயிடம் உள்ள வீடு, நிலம் ஆகியவற்றை எல்லா குழந்தைகளுக்கும் சமமாக கொடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

    ஆனால், ராணி அம்மாள் அதை ஏற்கவில்லை. தன்னை ஆதரித்து காப்பாற்றும் குழந்தைகளுக்குத்தான் கொடுப்பேன் என்று கூறி விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் தாய்க்கும்- மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    நேற்று இரவு பர்ணபாஸ் ஆட்டோவில் வீடு திரும்பினார். அப்போது ராணி அம்மாள் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டு இருந்தார். அவரை பர்ணபாஸ் கத்தியால் குத்தி கொலை செய்தார். அவர் அணிந்திருந்த நகை, கம்மல் ஆகியவற்றை எடுத்துச் சென்று மனைவியிடம் கொடுத்தார். அவை ரத்தக்கறையுடன் இருந்ததால் பர்ணபாஸ் மனைவி அதிர்ச்சி அடைந்தார்.

    இதற்கிடையே, சொத்து கொடுக்காத ஆத்திரத்தில் தனது தாயை பர்ணபாஸ் கொலை செய்தது தெரிய வந்தது. தகவல் அறிந்ததும் பாலவாக்கம் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார்கள்.

    இதையடுத்து, தப்பி ஓடமுயன்ற பர்ணபாசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலைக்கு வேறு யாரும் தூண்டுதலாக இருந்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் அ.தி.மு.க. அரசின் ஊழலை கண்டித்து பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகிறார். #PMK #Ramadoss
    தாம்பரம்:

    காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் அ.தி.மு.க. அரசின் ஊழலை கண்டித்து இன்று மாலை தாம்பரம் சண்முகம் ரோட்டில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

    கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகிறார். மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, மாவட்ட செயலாளர் விநாயகம், துணை பொதுச் செயலாளர் இரா.வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். #PMK #Ramadoss

    பாலாற்றில் தடுப்பணைகளை கட்டி மழைநீரை சேமித்து வைக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார். #AnbumaniRamadoss
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு பழைய பஸ்நிலையம் அருகே பாலாறு விழிப்புணர்வு கூட்டம் பா.ம.க. சார்பில் நடைபெற்றது. மாநில துணை பொது செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் கணேசமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டுபேசியதாவது:-

    பாலாறு பகுதிகளில் மணல் கொள்ளை போவதை தடுத்து நிறுத்தி தடுப்பணை கட்ட வேண்டும்.

    ஆந்திரா, கர்நாடகம் போன்ற பக்கத்து மாநிலங்களில் 12 அடியாக இருந்த தடுப்பணைகளை 17 அடியாக உயர்த்தி உள்ளது. 1992-ம் ஆண்டு போடப்பட்ட விதிகளை மீறி கர்நாடகம் 14 ஏரிகளில் 17 தடுப்பணைகளை கட்டி உள்ளது.

    இதனால் தமிழகத்திற்கு வரவேண்டிய நீர் தடுத்து நிறுத்தப்படுகிறது. நாம் மழைநீரை சேமிக்காமல் கடலில் விட்டு விடுகிறோம்.

    மழை நீரினால் மாவட்டத்தில் உள்ள 317 ஏரிகள் நிரம்பி வந்தது. தற்போது 124 ஏரிகள் அரைகுறையாக மழைநீர் முழு கொள்ளவை எட்டாமல் உள்ளது.

    பாலாற்றில் நீர் ஆதாரம் குறைந்துவிட்ட நிலையில் கிடைக்கின்ற நீரை வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும்.மேலும் மாற்று நீர் ஆதாரங்களையும் தேடுவது ஒன்றே தீர்வாகும்.

    தென்பெண்ணை, செய்யாறு, பாலாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். பாலாற்றில் தடுப்பணைகளை கட்டி மழைநீரை சேமித்து வைக்க வேண்டும்.

    காஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக பாலாறு விளங்குகிறது. பாலாற்றில் நமது உரிமைகளை மீட்டெடுப்பதற்காக நாம் அனைவரும் கை கோர்ப்போம். பாலாற்றை காப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, பொது செயலாளர் வடிவேல் ராவணன், மாநில பொருளாளர் திலக பாமா, கிழக்கு மாவட்ட செயலாளர் ராம்குமார், என்.எஸ்.ஏகாம்பரம், இலந்தோப்புவாசு வக்கீல் சக்கரபாணி உள்பட கலந்து கொண்டனர்.

    முன்னதாக காஞ்சீபுரம் அடுத்த வாலாஜாபாத் பகுதியில் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பழைய பாலாற்றை மீட்டுக் கொண்டுவர வேண்டும். பாலாற்று பிரசாரம் போல், தாமிரபரணி, காவிரி, வைகை, அத்திக்கடவு அவினாசி, அட்டப்பாடி திட்டம், கொள்ளிடம் தடுப்பணை உள்ளிட்ட நீர்நிலைகள் பாதுகாப்பு, நீர் மேலாண்மைத் திட்டம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அடுத்த 4 ஆண்டு காலத்தில் 20 நீர்த் திட்டங்களை செயல்படுத்த, சுமார் ரூ.1 லட்சம் கோடியை ஒதுக்க வேண்டும். அதன்மூலம், ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி செலவு செய்து, தாமிரபரணி, அத்திக்கடவு அவினாசி, 58 கால்வாய்த் திட்டம், தோனிமடு திட்டம், நல்லாறு, பாண்டியாறு, தென்பெண்ணை, பாலாறு இணைப்புத் திட்டம், காவிரி குண்டாறு திட்டம் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்’’ என்றார்.

    அவருடன் மாவட்ட செயலாளர் உமாபதி, மாநில துணை பொதுச்செயலாளர் பொன் கங்காதரன், மகேஷ் குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    பின்னர் நேற்று இரவு காஞ்சீபுரம் காந்தி ரோட்டில் பாலாற்றை பாதுகாப்பது தொடர்பான பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். #AnbumaniRamadoss

    சென்னை எம்.ஜி.ஆர். நகரில் கணவருடன் தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    போரூர்:

    சென்னை எம்.ஜி.ஆர். நகர் சிவா விஷ்ணு கோயில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சீதா (வயது29). நேற்று இரவு செந்தில்குமார் குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவி சீதாவுடன் தகராறில் ஈடுபட்டார்.

    இதனால் மனவேதனை அடைந்த சீதா வீட்டில் இருந்த மண்எண்ணெய் தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சீதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    மாமல்லபுரம் அருகே கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம், அணுபுரம், நெய்குப்பி, கரியச்சேரி பகுதிகளில் தொடர்ந்து வீடுகளின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் நடந்து வருகிறது. இது குறித்து சதுரங்கபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அப்பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட மேடவாக்கம் பகுதியை சேர்ந்த சரவணன், அவரது நண்பர் சதீஷ்ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 3பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    ரபேல் விமானம் வாங்கியதில் பா.ஜனதா இமாலய ஊழல் செய்துள்ளதாக முதல்-மந்திரி நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #RafaleDeal #Narayanaswamy

    ஆலந்தூர்:

    புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    “பெட்ரோல்- டீசல் விலையை உயர்த்துவதற்கான அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது. மாநில அரசிடம் இல்லை. காங்கிரஸ் ஆட்சியின் போது பெட்ரோல் - டீசல் விலை மிக குறைவாக இருந்தது. தற்போதுள்ள பா.ஜனதா ஆட்சியில் கச்சா எண்ணை விலை குறைவாக இருக்கிற போதும் சென்னையில் ரூ. 85, மும்பையில் ரூ.90, கொல்கத்தாவில் ரூ.89 என அதிகமாக உள்ளது.

    மத்திய அரசு பெட்ரோலை சுத்திகரித்து மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு விட்டர் 32 ரூபாய், 34 ரூபாய் என கொடுக்கும் போது நமது நாட்டு மக்களுக்கு விலை குறைவாக கொடுக்க முடியவில்லை. மக்கள் மீது மத்திய அரசு சுமையை ஏற்றுகிறது. அதற்கு காரணம் தவறான அணுகுமுறை மற்றும் பொருளாதார கொள்கை.

    பெட்ரோல்- டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர நான் எதிர்க்கவில்லை. பா.ஜனதா கட்சி ஆளும் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான முதல் மந்திரிகள் தான் எதிர்க்கிறார்கள். மாநிலத்துக்கு நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள்.

    2015-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின் போது பிரதமர் மன்மோகன் சிங் பிரான்ஸ் சென்று 126 ரபேல் விமானம் வாங்க ஒப்பந்தம் செய்தார். ஒரு விமானம் ரூ.576 கோடி என விலை நிர்ணயிக்கப்பட்டது.

    ஆனால் பிரதமர் மோடி 26 விமானங்கள் மட்டும் எங்களுக்கு போதும் என்று சொல்லி ஒரு விமானத்துக்கு ரூ.1670 கோடி என விலை நிர்ணயம் செய்து ஒப்பந்தம் செய்துள்ளார். இதனால் நாட்டுக்கு ரூ. 41 ஆயிரம் கோடி நஷ்டம்.

     


     

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரபேல் விமானம் வாங்க போட்ட ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு துறை, பாதுகாப்பு துறை அமைச்சகங்களுக்கு தெரியாதா?

    பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தர வேண்டும் என பிரதமர் மோடி கூறினார் என பகிரங்கமாக கூறி இருக்கிறார். ரிலையன்ஸ் ஒரு திவாலான நிறுவனம், அதற்கு சாதகமாக மோடி செயல்பட்டு வருகிறார். அதில் மாபெரும் இமாலய ஊழல் நடைபெற்று இருக்கிறது.

    காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்யும் பிரதமர் மோடி ரபேல் விமானம் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு வாய் திறக்க மறுக்கிறார். இது குறித்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகிறது. பாராளுமன்ற குழு விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

    போபர்ஸ் ஊழலை சொல்லி காங்கிரசை விமர்சனம் செய்யும் பா.ஜனதா ரபேல் போர் விமானத்தில் நடைபெற்ற ஊழலுக்கு பதில் சொல்ல வேண்டும். ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பா.ஜனதாவுக்கு இனி இறந்த காலம் தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #RafaleDeal #Narayanaswamy

    ×