என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    படப்பை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள விவேகானந்தர் நகரில் வசித்து வருபவர் லதா. இவர் மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு அவர் படப்பை பஜார் வீதியில் நடந்து சென்றுகொண்டு இருந்தார்.

    அப்போது பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் லதாவின் கழுத்தில் கிடந்த நகையை பறித்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கிய கணவர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை செய்தனர்.

    போரூர்:

    வளசரவாக்கம் லட்சுமி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேஷ். ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மணிமேகலை.

    இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ராஜேஷ் தினந்தோறும் மது குடித்து வந்து மனைவி மணிமேகலையை தாக்கி வரதட்சணை பணம் கேட்டு வந்தார்.

    இதுகுறித்து கடந்த 19-ந்தேதி வடபழனி மகளிர் போலீஸ் நிலையத்தில் மணிமேகலை புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி வழக்குபதிவு செய்து ராஜேசை கைது செய்தார்.

    பல்லாவரம் அருகே ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த பம்மல் - பொழிச்சலூர் சாலையில் தனியார் வங்கி ஏ.டி.எம். உள்ளது. நேற்று இரவு இந்த மையத்துக்குள் நுழைந்த வாலிபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றார். இது அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் தெரிந்தது.

    இதை மும்பையில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் பார்த்தனர். உடனே சென்னை சங்கர் போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை கைது செய்தனர். அவர் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த அருள்மணி (25) என்பது தெரிய வந்தது. அவர் வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டாரா? என்று விசாரணை நடந்து வருகிறது.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 256 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பியூலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பிரிவு மற்றும் குழந்தைகள் காய்ச்சல் பிரிவு ஆகியவற்றை சுகாதாரத்துறை செயலர் பியூலா ராஜேஷ் ஆய்வு செய்தார்.

    அப்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 256 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு குளோரின் கலந்த குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் வீடுவீடாக சென்று ஏடிஎஸ் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் 3 தளங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு தளத்திலும் மகப்பேறுக்கு தனியாக 40 படுக்கைகளும் உள்ளன. மகப்பேறுக்கென்றே தனியாக புது கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த புது கட்டிடத்தில் கூடுதலாக 50 படுக்கைகள் அமைக்கப்படும்.

    தமிழகம் முழுவதும் 2000 செவிலியர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர். இதற்கான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் மிக விரைவில் அது சரி செய்யப்பட்டு புதிய செவிலியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் பொன்னையா, ஆஸ்பத்திரி முதல்வர் ஹரிகரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக 7 ஏரிகள் முழுவதும் நிரம்பி விட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    காஞ்சிபுரம்:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்குகிறது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்களில் நீர் இருப்பு அதிகரித்து வருகின்றன.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1022 ஏரிகள் உள்ளன. தொடர் மழை காரணமாக 7 ஏரிகள் முழுவதும் நிரம்பி விட்டன. இதே போல் 13 ஏரிகள் 70 சதவீதமும், 60 ஏரிகள் 50 சதவீதமும், 246 ஏரிகள் 20 சதவீதமும் நிரம்பி இருக்கின்றன. இந்த தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மழை நீடித்து வருவதால் ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேநிலை நீடித்தால் இன்னும் ஒரு வாரத்தில் ஏரிகள் அனைத்தும் நிரம்பி விடும்.

    ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    போதிய பயணிகள் இல்லாததால் சென்னை-டெல்லி, டெல்லி- சென்னை விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஆலந்தூர்:

    டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று காலை 8.55 மணிக்கு வரவேண்டிய ஏர் இந்தியா விமானம் வரவில்லை. இதேபோல் சென்னையில் இருந்து டெல்லிக்கு காலை 9.55 மணிக்கு புறப்படக் கூடிய ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது.

    போதிய பயணிகள் இல்லாததால் இந்த 2 விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக பட்சமாக மாமல்லபுரத்தில் 42.2 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை நீடித்தது.

    காஞ்சிபுரத்தில் நேற்று இரவு 10 மணி முதல் தொடர்ந்து நல்ல சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளான கங்கைகொண்டான் மண்டபம், மேட்டுத்தெரு, காந்தி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக மாமல்லபுரத்தில் 42.2 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    காஞ்சிபுரம்- 4.2
    செங்கல்பட்டு- 18.42
    ஸ்ரீபெரும்புதூர்- 6.4
    திருக்கழுக்குன்றம்- 28.2
    திருப்போரூர் - 16.5
    மகாபலிபுரம் - 42.2

    இதற்கிடையே காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியர் பா. ‌பொன்னையா இன்று காலை திடீர் ஆய்வு செய்தார்.

    கொட்டும் மழையில் அவர் குடைபிடித்தப்படி மழை நீர் வெளியேறி செல்லும் வேகவதி ஆறு கால்வாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டார்.

    அப்போது அங்கு கரையோரங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். இதே போல் காவலன் கேட், ஓரிக்கை, சின்னையன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு மழைநீர் செல்ல பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது காஞ்சிபுரம் பெருநகராட்சி பொறுப்பு ஆணையர் மகேந்திரன், நகர்நல அலுவலர் முத்து மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    மாமல்லபுரத்தில் மின்னொளியில் ஜொலிக்கும் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால குடைவரை கோவில்கள், ரதங்கள், பாறைச்சிற்பங்கள் போன்றவை உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன. இவை யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட புராதன சின்னங்களாகவும் விளங்குகின்றன.

    சமீபத்தில் இங்கு நடந்த சீன அதிபர் ஜின்பிங்-பிரதமர் மோடி சந்திப்பால் மாமல்லபுரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது. வரலாற்று சிறப்புமிக்க அந்த சந்திப்புக்காக இங்குள்ள புராதன சின்னங்கள் அனைத்தும் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டன. மேலும் வண்ண விளக்கு அலங்காரத்தால் மெருகூட்டப்பட்டன. இதனால் இரவு நேரத்திலும் மாமல்லபுரம் சிற்பங்கள் மின்னொளியில் ஜொலித்தன.

    ஆனால் பிரதமர் மோடி-ஜின்பிங் சந்திப்பு நடந்த ஒரு நாள் மட்டுமே கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களில் விளக்குகள் எரிய விடப்பட்டன. பின்னர் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

    இதனால் இரவு நேரத்தில் வருகை தந்த சுற்றுலா பயணிகள் மின்னொளி அலங்காரம் இல்லாததால் ஏமாற்றமடைந்தனர். மேலும் மாமல்லபுரத்தில் மின்னொளி அலங்காரம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    விளக்குகள் போடப்பட்டு இருப்பதால் இரவிலும் வெண்ணை உருண்டை பாறைக்கு அருகே திரண்டிருந்த சுற்றுலா பயணிகள்

    இதை ஏற்றுக்கொண்ட தொல்லியல் அதிகாரிகள், மாமல்லபுரத்தில் சில பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் தினந்தோறும் இரவு 9 மணி வரை விளக்கு வெளிச்சத்தில் பயணிகள் சிற்பங்களை கண்டுகளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முதல் மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, கணேசரதம், கிருஷ்ண மண்டபம், பஞ்சபாண்டவர் மண்டபம் உள்ளிட்ட பாரம்பரிய நினைவு சின்னங்களில் வண்ண விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளன.

    இதையறிந்து மாமல்லபுரம் வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலர் ரூ.40 பார்வையாளர் கட்டணம் செலுத்தி விளக்கு வெளிச்சத்தில் புராதன சின்னங்களை கண்டுகளித்தனர்.

    மாமல்லபுரத்தில் இதுவரை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதால் இனிமேல் இரவு 9 மணி வரை விளக்கு வெளிச்சத்தின் பின்னணியில் சிற்பங்களின் அழகிய தோற்றத்தை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கலாம். இதனால் இரவு நேரத்திலும் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாமல்லபுரம் புராதன சிற்பங்களை கண்டுகளிக்க உள்நாட்டு பயணிகளுக்கு தலா ரூ.40-ம், வெளிநாட்டு பயணிகளுக்கு தலா ரூ.600-ம் கட்டணமாக தொல்லியல் துறை வசூலிக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டு மாமல்லபுரத்திற்கு உள்நாட்டு பயணிகள் 25 லட்சம் பேரும், வெளிநாட்டு பயணிகள் 1 லட்சம் பேரும் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இந்த ஆண்டு மாமல்லபுரத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டதாலும், இரு நாட்டு தலைவர்கள் வருகையால் முக்கியத்துவம் பெற்றுள்ளதாலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இந்திய அளவில் முதலிடம் பிடிக்கும் என்றும் சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    நெற்குன்றம் அருகே கணவர் மது குடித்ததால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    போரூர்:

    நெற்குன்றம் மூகாம்பிகை நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் வசந்தகிருஷ்ணன். இவரது மனைவி திவ்யா (26). தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்தார். இவர்களது மகன் லஷ்மிகாந்த் (9). தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். 

    வசந்தகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற வைத்தனர். இந்த நிலையில் நேற்று சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த வசந்த கிருஷ்ணன் மீண்டும் மது குடித்தார். இதனால் கணவன் - மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் வசந்த கிருஷ்ணன் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். கணவர் மது குடித்ததால் மனவேதனை அடைந்த திவ்யா, மகனுடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து அவர் விஷம் குடித்துவிட்டு மகன் லஷ்மிகாந்துக்கும் கொடுத்தார். இதில் இருவரும் வீட்டில் மயங்கி விழுந்தனர். 

    சிறிது நேரத்தில் திவ்யாவின் அண்ணன் வீட்டிற்கு வந்தார். அப்போது திவ்யாவும், லஷ்மிகாந்தும் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக 2 பேரையும் மீட்டு வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி திவ்யா பரிதாப மாக உயிரிழந்தார். லஷ்மிகாந்துக்கு ஆபத்தான நிலையில் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ் பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லாரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (45). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் வாகன ஓட்டுனர் பயிற்சி மையத்தில் பணி புரிந்து வந்தார். 

    வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் சாலையில் பிள்ளைட்பாக்கம் அருகே வந்தபோது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். 

    இதில் காயம் அடைந்த அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 
    இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிவிப்பதற்கான அரிய வகை கருவியை கண்டுபிடித்துள்ள கிங்ஸ் பொறியியல் கல்லூரிக்கு பரிசு வழங்கப்பட்டது.
    சென்னை:

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் இன்று கம்ப்யூட்டிங் கம்யூனிகேஷன் மற்றும் நெட்வொர்க்கிங் டெக்னாலஜிஸ் (ஐ.சி.ஆர்.டி.சி.சி.என்.டி.) தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள பல கல்வி நிறுவனங்களில் இருந்து 196 ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. அதில் 127 கட்டுரைகள்  ஆராய்ச்சி அறிஞர்களால் தேர்வு செய்யப்பட்டது. 

    இதில் சிறப்பு விருந்தினராக கொரிய நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் குங்- டே- கிம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் மன்னர் ஜவகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இந்தக் கல்லூரியின் பேராசிரியரான செந்தில்குமார், கவிதா இருவரும் இணைந்து சாட்டிலைட் மூலம், வருமுன் காப்போம் திட்டமாக எரிமலை, பூகம்பம் மற்றும் கடல் சீற்றம் போன்றவற்றை முன்பே அறிவிப்பதற்கான ஒரு அரிய வகை கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

    உதாரணமாக அந்தக் கருவியைக் கொண்டு ஒரு பகுதியில் பூகம்பம் ஏற்படுவதையும் முன்கூட்டி அறிந்து கொள்ளலாம். அதேபோல் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையாக இருந்தாலும் அந்த கருவி அதை தெரிவிக்கும். அப்போது நாம் போதுமான தண்ணீரை மீண்டும் செலுத்தி பயிரை பாதுகாக்கலாம். 

    கிங்ஸ் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

    இதுபோன்று பல்வேறு வகையில் பயன் அளிக்கும் இந்த கருவியை இக்கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். மேலும் அதற்கான காப்பீட்டு உரிமையும் பெற்று உள்ளனர். அதற்காக கல்லூரி  மாணவர்களை அனைவரும் பாராட்டினர். இந்த அரிய கண்டுபிடிப்புக்காக பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 

    இறுதியாக நாட்டின் மண்வளம் காக்கவும் மழை வேண்டியும் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு விழாவை நிறைவு செய்தனர். மரக்கன்று நடும் விழாவை கொரிய பேராசிரியர் டாக்டர் குங் டே கிம் துவக்கி வைத்தார்.
    மாமல்லபுரத்தில் வெண்ணை உருண்டை பாறையை சுற்றி பார்க்க இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    மாமல்லபுரம்:

    சுற்றுலா தலமாக விளங்கும் மாமல்லபுரத்தில் சமீபத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்கள் கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணை உருண்டை பாறை ஆகிய இடங்களை சுற்றி பார்த்தனர்.

    இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பையொட்டி மாமல்லபுரத்தை அழகுபடுத்தும் பணிகள் நடந்தன. இதையடுத்து சுற்றுலா தலங்களை பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இரு தலைவர்கள் சந்திப்பு முடிந்தபிறகு சுற்றுலா பயணிகளுக்கான தடை நீக்கப்பட்டது. இதையடுத்து மாமல்லபுரத்தில் சுற்றுலா இடங்களை காண தினமும் பொதுமக்கள் வருகிறார்கள்.

    அழகுபடுத்தப்பட்ட அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை பகுதி, கடற்கரை கோவில், ஐந்து ரதம் ஆகிய இடங்களை காண ஆர்வமுடன் வந்தவண்ணம் உள்ளனர். சில நாட்களாக பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் வருகிறார்கள். மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மாமல்லபுரத்தில் குவிந்துள்ளனர்.

    வெண்ணை உருண்டை பாறை அருகே டிக்கெட் கவுண்டர் அமைக்கப்பட்ட காட்சி.


    இந்த நிலையில் வெண்ணை உருண்டை பாறையை சுற்றி பார்க்கவும் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று வெண்ணை உருண்டை பாறை அருகே டிக்கெட் கவுண்டர் அமைக்கப்பட்டது. இதில் ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.600 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

    மாமல்லபுரத்தில் ஐந்து ரதம், கடற்கரை கோவில் ஆகியவற்றை சுற்றி பார்க்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது வெண்ணை உருண்டை பாறையை பார்க்கவும் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இது குறித்து தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் வருகையையொட்டி சுற்றுலா இடங்கள் அழகுபடுத்தப்பட்டு சீர் செய்யப்பட்டன. இதில் வெண்ணை உருண்டை பாறையை சுற்றியுள்ள பகுதிகளில் கொரியன் புல் தரைகள் அமைக்கப்பட்டது. இது போன்று பல வசதிகள் செய்யப்பட்டன. இதையடுத்து வெண்ணை உருண்டை பாறை பகுதியை கூடுதல் கவனத்துடன் பராமரிப்பு செய்வதற்காக இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது” என்றார்.

    புராதன சின்னங்களில் அறிவியல் நிபுணத்துவம் உடைய சிற்பமாக வெண்ணை உருண்டை பாறை திகழ்கிறது. இந்த பாறையை தாங்கி பிடிப்பது போல் போட்டோ எடுக்க உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆசை படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×