என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த மழையால் 7 ஏரிகள் நிரம்பின
Byமாலை மலர்22 Oct 2019 6:59 AM GMT (Updated: 22 Oct 2019 6:59 AM GMT)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக 7 ஏரிகள் முழுவதும் நிரம்பி விட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம்:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்குகிறது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்களில் நீர் இருப்பு அதிகரித்து வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1022 ஏரிகள் உள்ளன. தொடர் மழை காரணமாக 7 ஏரிகள் முழுவதும் நிரம்பி விட்டன. இதே போல் 13 ஏரிகள் 70 சதவீதமும், 60 ஏரிகள் 50 சதவீதமும், 246 ஏரிகள் 20 சதவீதமும் நிரம்பி இருக்கின்றன. இந்த தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழை நீடித்து வருவதால் ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேநிலை நீடித்தால் இன்னும் ஒரு வாரத்தில் ஏரிகள் அனைத்தும் நிரம்பி விடும்.
ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்குகிறது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்களில் நீர் இருப்பு அதிகரித்து வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1022 ஏரிகள் உள்ளன. தொடர் மழை காரணமாக 7 ஏரிகள் முழுவதும் நிரம்பி விட்டன. இதே போல் 13 ஏரிகள் 70 சதவீதமும், 60 ஏரிகள் 50 சதவீதமும், 246 ஏரிகள் 20 சதவீதமும் நிரம்பி இருக்கின்றன. இந்த தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழை நீடித்து வருவதால் ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேநிலை நீடித்தால் இன்னும் ஒரு வாரத்தில் ஏரிகள் அனைத்தும் நிரம்பி விடும்.
ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X