search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி

    ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லாரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (45). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் வாகன ஓட்டுனர் பயிற்சி மையத்தில் பணி புரிந்து வந்தார். 

    வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் சாலையில் பிள்ளைட்பாக்கம் அருகே வந்தபோது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். 

    இதில் காயம் அடைந்த அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 
    Next Story
    ×