search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாம்பரம் கொள்ளை"

    • ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியரின் வீட்டின் அருகே வசிப்பவர்கள் கொள்ளை குறித்து தாம்பரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • தகவலின் பேரில் வந்த போலீசார் பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே பொருட்கள் சிதறி கிடந்துள்ளது.

    தாம்பரம்:

    தாம்பரம் சி.டி.ஓ. காலனி 2-வது தெரு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். இவர் கடந்த 3 நாட்கள் முன்பு திருச்சியில் உள்ள உறவினர் இல்லத்திற்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார். இந்த நிலையில் இன்று வீட்டின் அருகே வசிப்பவர்கள் சென்றபோது மின்வாரிய ஊழியரின் வீட்டின் கதவுகள் திறந்த நிலையில் கிடந்தது. இது குறித்து உடனடியாக தாம்பரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் வந்த போலீசார் பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. இது குறித்து உடனடியாக வீட்டின் உரிமையாளர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். கண்ணன் உடனடியாக திருச்சியில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாகவும் அவர் வந்த பின்பே நகைகள்-பணம் எவ்வளவு கொள்ளை போனது என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    இதுபோல் அதே பகுதியில் மற்றொரு வீட்டில் உரிமையாளர்கள் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த கொள்ளையர்கள் வீட்டின் உள்ளே ஆள் இருப்பதைக் கண்டு வீட்டின் மதில் சுவர் உள்ள கேட்டை மட்டும் உடைத்து அங்கு அழகுக்காக வைத்திருந்த விலை உயர்ந்த பறவைகளை மட்டும் கூண்டில் இருந்து திருடி சென்றுள்ளனர். இது குறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×