என் மலர்
கடலூர்
- பரமசிவத்திடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளனர்.
- வழிமறித்து கம்பியால் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆக்கனூர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு ராஜா என்ற ராஜேந்திரன், கிருஷ்ணன், அசோக்ராஜ், தர்மராஜ் என்ற 4 மகன்கள் உள்ளனர். ராஜேந்திரனை தவிர மற்று 3 பேரும் பரமசிவத்திடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளனர். அப்போது மூத்த மகன் ராஜேந்திரன் பின்னர் பார்ப்போம் என்று கூறி வந்தார். இந்நிலையில் கடைசி மகனான தர்மராஜ் மீண்டும் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் தனது மகன் மற்றும் கும்பலுடன் சேர்ந்து மோட்டார் சைக்களில் சென்ற தர்மராஜ் அவனது அண்ணன் அசோக்ராஜ்சை வழிமறித்து கம்பியால் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து அண்ணன் தம்பியை தாக்கிய கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதலில் தொட ர்புடைய ராஜேந்திரனின் மகன் சக்திவேல் திட்டக்குடி அடுத்த இளமங்களம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தவரை மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் அவரை கைது செய்து அவரிடம் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ராஜேந்திரன் மற்றும் மற்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாதம் தோறும் 2-வது செவ்வாய்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
- வைப்புத் தொகை ரசீதுகள் பெற நட வடிக்கை மேற்கொள்ளுதல்
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-
கடலூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்த பெண் குழந்தைகளில் 18 வயது நிறைவடைந்தும் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்காமல் உள்ள பெண் குழந்தைகள் மற்றும் புதிய பயனாளிகளை சேர்ப்பதற்கும் மாவட்ட கலெக்டர்வளாகம், மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் மாதம் தோறும் 2-வது செவ்வாய் கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை எனில் ரூ. 50 ஆயிரத்திற்கான நிலை வைப்புத் தொகையும், 2பெண் குழந்தைகள் எனில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ. 25 ஆயிரம் நிலை வைப்புத் தொகை செய்யப்பட்டு வருகிறது. முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகளும் ஆக மொத்தம் மூன்று பெண் குழந்தைகளுக்கும் சிறப்பு அனுமதியின் பெயரில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ. 25 ஆயிரம் பெற்று பயனடையலாம்.
முகாமில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளை சேர்த்தல், விண்ணப்பித்த 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், விண்ணப்பித்து நீண்ட நாட்களாக வைப்புத் தொகை ரசீதுகள் பெறாமல் இருப்பவர்களுக்கு வைப்புத் தொகை ரசீதுகள் பெற நட வடிக்கை மேற்கொள்ளுதல், வைப்புத் தொகை ரசீதுகளில் பெயர், பிறந்த தேதி மாற்றம் இருப்பின் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளு வதற்கு இந்த சிறப்பு முகாமில் பொது மக்கள் கலந்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- மூதாட்டி மீது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
கடலூர்:
சென்னையை சேர்ந்தவர் கலியபெருமாள் இவரது மனைவி மீனா (65) இவர் பண்ருட்டி ஒன்றியம் குடுமியான்குப்பத்திலுள்ள இவரது தங்கை கமலா வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு 10.00 மணி அளவில் மூதாட்டி மீது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது.இதனால் சம்பவ இடத்திலே மீனா பரிதாபமாக இருந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆஸ்பத்திரியில் தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- தாக்குதல் நடத்தி சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆக்க னூர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு ராஜா என்ற ராஜேந்திரன், கிருஷ்ணன், அசோக்ராஜ், தர்மராஜ் என்ற 4 மகன்கள் உள்ளனர். இவர்கள் கூலி வேலை செய்து வருகின்ற னர். இவர்களில் ராஜேந்திர னுக்கும், கிருஷ்ணணுக்கும் திருமணம் ஆகிவிட்டது. அசோக்ராஜூக்கும், தர்ம ராஜூக்கும் திருமணம் ஆக வில்லை. ராஜேந்திரனை தவிர மற்று 3 பேரும் பரம சிவத்திடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளனர். அப்போது மூத்த மகன் ராஜேந்திரன் பின்னர் பார்ப்போம் என்று கூறி வந்தார். இந்நிலையில் தற்போது கடைசி மகனான தர்மராஜ் மீண்டும் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். பின்னர் தர்மராஜ் தனது அண்ணன் அசோக்ராசுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் திட்டக்குடி இடைச்செருவாய் அய்யனார் கோவில் அருகே மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ராஜேந்திரன், அவரது மகன் சக்திவேல் மற்றும் சிலர் சேர்ந்து தர்மராஜ், அசோக்ராஜ் சென்ற மோட்டார் சைக்கிளை மறித்து அவர்கள் வைத்தி ருந்த கம்பியால் 2 பேரை யும் பலமாக தாக்கினர். இதில் வலிதாங்க முடியா மல் அசோக்ராஜ் அங்கிருந்து தப்பித்து அய்யனார் கோவில் அருகில் இருந்த காட்டு பகுதிக்குள் சென்றார். தர்மராஜை அந்த கும்பல் தலை, கை, கால்களில் பலமாக தாக்கியது. இந்த தாக்குதலில் தர்மராஜ் ரத்த வெள்ளத்தில் சாலையில் சுருண்டு விழுந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து சென்றது. அந்த வழியாக கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள், வாகனங்களில் வந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து திட்டக்குடி போலீஸ் நிலை யத்திற்கு தகவல் தெரிவித்த னர்.
தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த தர்மராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து தாக்குதல் நடத்திய ராஜேந்திரன் உள்ளிட்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். சொத்திற்காக தம்பியை அண்ணனே கும்பலுடன் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தி சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
கடலூர்:
பண்ருட்டி பங்களா தெரு பிள்ளையார் கோவில் அருகில் பண்ருட்டி டி.எஸ்.பி சபியுல்லா தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் வாலிபர் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்தார். இதை பார்த்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் மோட்டார் சைக்கிளில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்குபதிவு செய்து புதுப்பேட்டை சுண்ணாம்புகார தெருவை சேர்ந்த சம்பத் என்பவரது மகன் முருகன் (வயது 20) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து தங்கம், நல்ல நேரம், குமரன், விஷ்ணு உள்ளிட்ட 91 லாட்டரி சீட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.
- பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்த வண்ணம் இருந்தது.
- பல்வேறு நோய் தாக்கும் அபாயமும் அதிகமாக ஏற்பட வாய்ப்பு இருந்தது.
கடலூர்:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையொட்டி பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல்நேரத்தில் வெயில் சுட்டெரித்து வந்தது.
இதனால் பொதுமக்கள் அன்றாட வேலைக்காக வெளியில் செல்வோர், சாலையில் நடந்து செல்வோர் வெயிலில் தாக்கத்தை தாங்க முடியாமல் அக்னி வெயில் இன்னும் முடியவில்லையா என்று புலம்பிக்கொண்டு சென்றனர். இது ஒருபுறம் இருக்க இந்த வெப்பத்தால் பொதுமக்களின் உடலில் அலற்சி உள்பட பல்வேறு நோய் தாக்கும் அபாயமும் அதிகமாக ஏற்பட வாய்ப்பு இருந்தது.
இந்நிலையில் நேற்று கடலூர் மாவட்டம் முழுவதும் காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்தது. மேலும் நேற்று வாரவிடுமுறை தினம் என்பதால் வெப்பத்திலிருந்து தப்பிக்க ஏராளமனோர் சில்வர் பீச்சில் குவிந்தனர். பின்னர் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசி நள்ளிரவு மழை பெய்தது. இந்த மழையால் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீடுகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இந்த மழை காலை வரை சாரல் மழையாக நீடித்தது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் சாரல் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் சென்றனர். விடிய விடிய பெய்த மழையால் கடலூர் மாவட்டம் முழுவதும் சாலையில் குண்டும் குழிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழை கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், நடுவீரப்பட்டு, குண்டுஉப்பலவாடி, பண்ருட்டி, மந்தாரக்குப்பம், சேத்தியாதோப்பு, விருத்தாசலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்தது.
- உண்டியலை யாரோ மர்ம ஆசாமிகள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுவிட்டனர்.
- கோவில் கேட் மற்றும் உண்டியல் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடலூர்:
வடலூரை அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தில் பள்ளிக்கூட தெருவில் உள்ள சக்திமாரியம்மன் கோவிலில் உள்ள உண்டியலை யாரோ மர்ம ஆசாமிகள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுவிட்டனர். காலை கோவில் பூசாரி ஜோதி வழக்கம் போல் வந்தார். அப்போது கோவில் கேட் மற்றும் உண்டியல் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சந்துரு (வயது 22) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- 38-வது தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சி கடைபிடிக் கப்படு கிறது.
- கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசி னார்.
கடலூர்:
தேசிய கண்தான விழிப்பு ணர்வு நிகழ்ச்சி ஆண்டு தோறும் ஆகஸ்டு 25-ந் தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி வரை கடைபிடிக் கப்படு கிறது. கடலூரில் 38-வது தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் அருண் தம்பு ராஜ் தலைமையில் செவிலி யர்கள், மருத்துவர்கள், கண் மருத்துவர்கள் அனை வரும் கண்தானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். மேலும், கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசி னார். அப்போது அவர் பேசிய தாவது:-
பொதுமக்கள் அனை வரும் கண்தானம் விழிப் புணர்வை ஏற்றுக்கொண்டு இந்தியாவில் பலகோடிக் கணக்கான மக்கள் பார்வை இழப்புடன் இருக்கிறார்கள். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் அதனை சரி செய்வதற்கு நாம் ஒவ்வொருவரும் இறந்த பிறகு நமது 2 கண்களை தானமாக கொடுத்தோமானால் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மூலம் 4 பேருக்கு பார்வை கிடைக்கும். எனவே நாம் அனைவரும் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு தாங்க ளும் தங்கள் குடும்பத்தி னர்களுக்கும், நண்பர்க ளுக்கும் கண்தானத்தின் அவசியத்தை எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன், இணை இயக்குநர் நலப்பணிகள் டாக்டர் சாரா செலின் பால் , துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மீரா , தலைமை கண் மருத்துவர் கேசவன், மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக்பாஸ்கர் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
- பள்ளி சத்துணவு கூட கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்த சிமெண்ட் காரைகள் திடீரென்று பெயர்ந்து சாந்தி தலையில் விழுந்தது.
- புதிய சத்துணவு கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் சன்னியாசி பேட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
இப்பள்ளி வளாகத்தில் சத்துணவு கூடம் இருந்து வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த சாந்தி (வயது 55) என்பவர் சத்துணவு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை சத்துணவு கூடத்தில் ஊழியர் சாந்தி மாணவர்களுக்கு சமைத்துக் கொண்டு இருந்தார். அப்போது கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்த சிமெண்ட் காரைகள் திடீரென்று பெயர்ந்து சாந்தி தலையில் விழுந்தது. அப்போது சாந்தி கதறி துடித்தார்.
இந்த சத்தம் கேட்ட ஆசிரியர்கள் சத்துணவு கூட்டத்திற்கு சென்று பார்த்தபோது சாந்தி துடிதுடித்துக் கொண்டிருந்தார். அவரை உடனடியாக மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் அந்த நேரத்தில் யாரும் உள்ளே செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த சத்துணவு கூடத்தை உடனடியாக இடித்து புதிய சத்துணவு கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
- அடியார்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- பண்ருட்டி யூனியன் அலுவலகம் அருகில் இருந்து திருமுறை ஊர்வலம் நடைபெற்றது.
கடலூர்:
திருவாசகம் என்பது தமிழில் பாடப் பெற்ற ஒரு பக்தி நூலாகும். இறைவன் மீதான துதிப்பாடல்களை சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்காகவும் இறைவனிடம் அழுதும், தொழுதும் பாடியதாகும். இந்த திருவாசகத்தை திருவாசக சித்தர் திருக்கழுகுன்றம் தாமோதரன் உலகம் முழுவதிலும் உள்ள சிவன் கோவிலுக்கு குழுவினரோடு சென்று முற்றோதல் நிகழ்த்தி வருகிறார் கடலூர் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் திருவிழா இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் திருவாசக சித்தர் திருக்கழு குன்றம் தாமோதரன் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கி பண்ணி சையுடன் திருவாசகப் பாடல்களை பாடினார்.
விழாவிற்கு வர்த்தக சங்கத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். வர்த்தக சங்க மாவட்ட செயலாளர் வீரப்பன் முன்னிலை வைத்தார். விழாவில் பண்ருட்டி எம்.எல்.ஏ., வேல்முருகன், பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன், துணைத்தலைவர் சிவா, முன்னாள் அமைச்சர் எம்.சி. தாமோதரன், நகைக்கடை அதிபர் வைரக்கண்னு, எஸ்.பி அருள், தட்சணா கேஸ் அதிபர் வக்கீல் தட்சிணாமூர்த்தி, வக்கீல் தமிழரசன், அகில இந்திய முந்திரி சங்க தேசிய செயலாளர் ராமகிருஷ்ணன், பிரதிபா கேஷ்யூஸ். அதிபர் மாயகிருஷ்ணன், தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்க மாநில தலைவர் கே.என்.சி. மோகன், வானவில் ராஜா மற்றும் அடியார்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது. முன்னதாக பண்ருட்டி யூனியன் அலுவலகம் அருகில் இருந்து திருமுறை ஊர்வலம் நடைபெற்றது.
- இவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் போது ஏதோ தென்படுவதாக தெரிந்துள்ளது.
- கிராம நிர்வாக அலுவலர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு வருகிறார்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே திருநாரையூர் கிராமத்தில் உலக பிரசித்தி பெற்ற பொல்லா பிள்ளையார் கோவில் உள்ளது.இந்த ேகாவில் அருகே உத்ராபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் போது ஏதோ தென்படுவதாக தெரிந்துள்ளது. அதனை தோண்டி பார்த்த போது அடுத்தடுத்து சிலையாக 5-க்கும் மேற்பட்ட சிலைகள் கிடைத்தது. இத்தகவல் காட்டு தீ போல் பரவியது. சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி சோழன், வருவாய் தாசில்தார் தமிழ்ச்செல்வனுக்கு தகவல் தெரிவித்தார். பின்பு குமராட்சி இன்ஸ்பெக்டர் அமுதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் சாமி சிலைகளை பார்வையிட்டனர். அங்கு மேலும் சிலைகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து தோண்டி வருகிறார்கள். இது குறித்து இந்து அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மண் தோண்டும் போது கிடைத்த சிலைகள் சுமார் 200 கிலோவுக்கு மேல் இருக்கும் எனவும் அவைகள் அனைத்தும் ஐம்பொன் சிலை எனவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.சம்பவ இடத்தை இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் வேல்விழி மற்றும் வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் கிராம நிர்வாக அலுவலர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு வருகிறார்கள். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் எங்கள் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பொள்ளாப் பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சிலைகள் கூட இருக்கலாம் எனதெரிவித்தனர். மேலும் கிராமத்தில் தொடர்ந்து ஆய்வு பணிகள் நடத்த வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமையல் கூடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குப்பநத்தம் ஊராட்சி கு.நல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 31.42 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெறு வதையும், அதன் அருகே அப்பள்ளிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமையல் கூடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடலூர் நகராட்சி பகுதியில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டத்தின் கீழ் ரூ.5.85 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருவதையும், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நைனார்குப்பம் - வடலூர் சபை சாலை, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.39.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தையும், ரெங்கநாதபுரம் ஊராட்சியில் மேட்டுவெளி பகுதியில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு ரூ.8.3 கோடி மதிப்பீட்டில் 300 சதுரஅடி அளவில் ஓடு பதித்த தரை தளத்துடன் கூடிய 4 வீடுகள் கொண்ட 41 தொகுப்புகள் மற்றும் 2 தனிவீடுகள் என மொத்தம் 166 வீடுகளுக்கான கட்டு மான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் முதுநகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயா ளிகள் பிரிவின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மருந்து இருப்பு குறித்து ஆய்வு செய்து, அங்குள்ள பொதுமக்களிடம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.






