search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில் வரதட்சணை கேட்டு பெண் மீது தாக்குதல்கணவர்-உறவினர்கள் மீது வழக்கு
    X

    பண்ருட்டியில் வரதட்சணை கேட்டு பெண் மீது தாக்குதல்கணவர்-உறவினர்கள் மீது வழக்கு

    • 20 பவுன் மற்றும் சீர்வரிசைகள் கார் வாங்குவதற்கு இரண்டரை லட்சம் பணம் கொடுத்துள்ளார்.
    • அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி பெரிய கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தயாநிதி மகள் நித்யா ( 25 )என்பவருக்கு விழுப்புரம் மாவட்டம் வளவனூர் கிராமத்தைச் சேர்ந்தராமமூர்த்திமகன் ராமச்சந்திரனுக்கும் ஜனவரி மாதம் 27-ந் தேதி திருமணம் நடைபெற்றது. 20 பவுன் மற்றும் சீர்வரிசைகள் கார் வாங்குவதற்கு இரண்டரை லட்சம் பணம் கொடுத்தும் மேலும் 10 லட்சம் பணம் கேட்டு கணவன் ராமச்சந்திரன், மாமியார்சாந்தி, மாமனார் ராமமூர்த்தி , நாத்தனார்ரம்யாஆகியோர்கள் அடித்து மிரட்டி கொடுமைப்படுத்துவதாக நித்யா பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×