search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gang of thieves"

    • தேசிய நெடுஞ்சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
    • முன்னுக்குபின் முரணாக கூறியதால் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தம் மற்றும் இதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருடு போய்வந்தது. இதனால் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளை குறிவைத்து திருடும் கும்பலை பிடிக்க திட்டக்குடி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் திட்டக்குடி அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது இந்த சர்வீஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் லாட்ஜ் அருகே சந்தேகத்திற்கு இடமாக கும்பல் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த போலீசார் அங்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்குபின் முரணாக கூறியதால் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்கள் திட்டக்குடி மா.புடையூர் பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் ராஜகோபால் (வயது 24), போத்திரமங்கலம் முத்தழகன் மகன் ராஜா (20), பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் பகுதியை சேர்ந்த அசோக்குமார் மகன் வசந்தகுமார் (20), திருமாந்துறை அண்ணாநகர் வீரமுத்து மகன் அன்பரசன் (20) என்பது தெரியவந்தது.

    மேலும் ராமநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மோட்டார் சைக்கிள்களை திருடி செல்வதை ஒப்பு க்கொண்டனர். இவர்கள் இரவு, பகல் நேரத்தில் கூட சாலை மற்றும் வீட்டின் அருகே நின்று கொண்டிருக்கும் மோ ட்டார் சைக்கிள்களை கள்ள ச்சாவி பயன்படுத்தியும், மோட்டார் சைக்கிளில் போடப்ப ட்டுள்ள லாக்கை உடைத்தும் இந்த திருட்டில் ஈடுபட்டு வந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து திருடும் கும்பலான ராஜகோபால், ராஜா, வசந்தகுமார். அன்பரசன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து தொடர்ந்து வேறுபகுதியில் இந்த மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு உள்ளனாரா என விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 3 விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • ரூ.3,000 பணத்தை எடுத்து சென்றுவிட்டனர்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    பாணாவரம் அருகே உள்ள கீழ்வீராணம் அடுத்த சூரைகுளம் ரோட்டு தெருவை சோ்ந்தவா் சரோஜா (75). இவர்களுக்கு 2 பெண்பிள்ளைகள். இருவருக்கும் திருமணம் முடித்து வெவ்வேறு இடங்களில் குடும்பத்தி னருடன் வசித்து வருகின்றனா்.

    இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்க்கு முன் சரோஜாவின் கணவா் இறந்துவிட்டார். சரோஜா மட்டும் தனியாக வசித்து வருகின்றாா்.

    இந்நிலையில் தனியாக இருப்பதால் அதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு நேற்று இரவு தூங்க சென்றுள்ளாா்.

    நள்ளிரவில் வீடு புகுந்த திருட்டு கும்பல் பீரோவில் இருந்த 1½ பவுன் தங்க நகை, ரூ.3,000 பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி நகரில் ஆரணிப்பாளையம் காந்தி ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம கும்பல் திருடிச் சென்றனர்.

    கோவில்களில் திருட்டு

    இதேபோல ஆரணிப்பா ளையம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவிலிலும் பூட்டை உடைத்து மர்ம கும்பல் உண்டியலை தூக்கிச் சென்றனர்.

    மேலும் ஆரணி - சேத்துப் பட்டு நெடுஞ்சாலையில் சக்தி நகரில் அமைந்துள்ள முக்கிய அம்மன் கோவிலிலும் உண்டியல் பூட்டை உடைத்து திருடிச் சென்றனர்.

    கோவில்களில் திருட்டை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச் சந்திரன், ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். அதில், கொள்ளையர்கள வேலூர் ஓட்டேரி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த தனுஷ் (வயது 20), 17 வயது சிறுவன் மற்றும் வந்தவாசியை அடுத்த கீழ்கொவளைவேடு பகுதியை சேர்ந்த பிரபுதேவா (22) என்பது தெரியவந்தது.

    அவர்கள் 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் உல்லாச வாழ்க்கைக்காக கோவில் உண்டியல்களில் நகை, பணத்தை திருடியது தெரியவந்தது.

    ைகதான 3 பேரையும் ேகார்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் தனுஷ், பிரபுதேவா ஆகியோரை வேலூர் சிறையிலும், 17 வயது சிறுவனை கடலூர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு கார்த் திகேயன் பாராட்டினார்.

    • நள்ளிரவில் அங்கு வந்த மர்மகும்பல் ஆட்டு கொட்டகையில் இருந்து ஆடுகள் சிலவற்றை திருடி சென்றனர்.
    • பாமர மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த ஆடு திருடும் கும்பலால் ஏழை மக்கள் பெரும் பாதிப்படைந்து உள்ளனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55) ஆடு மேய்த்தல் தொழில் செய்து வருகிறார். இவரிடம் வெள்ளாடு செம்மறியாடு உட்பட மொத்தம் 32 ஆடுகளை தனது வீட்டின் பின்புறம் ஆட்டுக் கொட்டகை அமைத்து மேய்த்து வருகிறார்.நேற்று வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மாலையில் வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகைகள் அடைத்து வைத்துவிட்டு தூங்கச் சென்றார்.

    நள்ளிரவில் அங்கு வந்த மர்மகும்பல் ஆட்டு கொட்டகையில் இருந்து ஆடுகள் சிலவற்றை திருடி சென்றனர். இன்று காலை சுப்பிரமணியன் வீட்டின் பின்புறம் ஆட்டுக்கொட்டைக்கு சென்று பார்த்தபோது கோட்டையில் இருந்த ஆடுகளில் 15 ஆடுகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இன்று புதன் கிழமை உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆட்டுச் சந்தையில் விற்பனைக்காக மர்ம நபர்கள் திருடி சென்றிருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்ப டையில் சுப்பிரமணியன் அவரது மகனுடன் உறவினர்களும் சேர்ந்து காலையிலே உளுந்தூர்பேட்டையில் நடக்கும் ஆட்டுச் சந்தைக்கு சென்று தேடினர். ஆனால் அங்கு சுப்பிரமணியனின் ஆடுகள் எதுவும் இல்லை.

    இது குறித்து சுப்பி ரமணியன் திருவெ ண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடு திருடும் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.முன்னதாக ஆனத்தூர் அருகே உள்ள பகுதியில் ஒரு மூதாட்டி வீட்டில் ஆட்டுக்கோட்டையில் இருந்து ஆடுகளையெல்லாம் கார் மூலம் ஆடு திருடும் கும்பல் திருடி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து பாமர மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த ஆடு திருடும் கும்பலால் ஏழை மக்கள் பெரும் பாதிப்படைந்து உள்ளனர். எனவே உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு ஆடு திருடும் கும்பலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென ஏழை விவசாய பெருங்குடி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.  

    ×