என் மலர்tooltip icon

    கடலூர்

    • போக்குவரத்து விதிகளை மீறி பெங்களூரில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனைசெய்தனர்.
    • இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலூர்:

    பண்ருட்டியில் போலீசார் வாகன சோதனையின் போது ேபாதை பொருட்கள் மூட்டை, மூட்டையாக சிக்கியது. பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், சிறப்பு சப்.இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போக்குவரத்து போலீசார் பண்ருட்டி ராஜாஜி சாலையில் போக்குவரத்தை சீரமைக்கும்பணியில்ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வழி பாதையில் போக்குவரத்து விதிகளை மீறி பெங்களூரில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனைசெய்தனர்.

    காரில் அரசினால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மூட்டை ,மூட்டையாக இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து காரை ஓட்டி வந்த திருச்செந்தூரை சேர்ந்த விக்னேஷ் காரில் பயணம் செய்த மணிக்குமார் ஆகிய இருவரையும் பண்ருட்டி போலீசில்ஒப்படைத்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விழுப்புரம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம், புதுவை மாநிலம் என 7 ஆயிரம் பேர் பணம் கட்டிவந்துள்ளனர்.
    • 9 பேரை சேர்த்து மொத்தம் ரூ.55 லட்சம் பணத்தை கட்டியுள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் விநாயக புரத்தைச் சேர்ந்த மாயக் கிருஷ்ணன் அவரது மனைவி பிரபாவதி மற்றும் மஞ்சுளா, கவுதம், மதி வாணன், முருகன், வீரமணி, செந்தில்குமார், அன்பு ஆகியோர் சேர்ந்து கடந்த 2021 -ம் ஆண்டு த கிரேட் இந்தியா மார்கெட்டிங் கம்பெனி என்ற தனியார் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தனர். அதில் ரூ.50 ஆயிரம் செலுத்தினால் 10 மாதத்தில் ரூ.90 ஆயிரம் வழங்கப்படும்.ரூ.2லட்சம் செலுத்தினால் ரூ.3.60 லட்சம் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தைகளை கூறினர். இதனை நம்பி விழுப்புரம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம், புதுவை மாநிலம் என 7 ஆயிரம் பேர் பணம் கட்டிவந்துள்ளனர். இதனை நம்பிய திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள வேளாந்தாங்கல் கிராமத்தை ேசர்ந்த மன்னுலிங்கம் அவருக்கு தெரிந்த 9 பேரை சேர்த்து மொத்தம் ரூ.55 லட்சம் பணத்தை கட்டியுள்ளனர்.

    இதற்காக வாரந் தோறும் திண்டிவனத்தில் உள்ள அலுவலகத்தில் நடை பெறும் கூட்டத்தில் பங்கேற்று இந்த தவணைகளை செலுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் மாயா கிருஷ்ணன் நடத்தி வந்த அலுவலகம் கடந்த நவம்பர் மாதம் திடீரென பூட்டப் பட்டது. அதன் பின்னர் நிதி நிறுவன உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் உள்பட 9 பேரும் தலைமறைவாகி விட்டனர். அப்போது தான் இரட்டிப்பு பணம் தருவகதாகக்கூறி ஆசை வார்த்தைகளை கூறி பல கோடி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து மன்னு லிங்கம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார். அதன்படி போலீசார் நடத்திய விசாரணையில், இவர்களைப் போன்று சுமார் 7 ஆயிரம் பேரிடம் ரூ.85 கோடி வரை பெற்றுக் கொண்டு தலைமறை வாகிவிட்டது தெரியவந்தது. இது குறித்து மாயா கிருஷ்ணன் உள்ளிட்ட 9 பேர் மீதும் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நிதி நிறுவன ஊழியர்கள் வீரமணி, செந்தில் குமார் ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

    இதனிடையே தலைமறை வாக இருந்த நிதிநிறுவன நிர்வாக இயக்குனர் மாய கிருஷ்ணன் மனைவி பிரபா வதி (36)மாயகிருஷ்னன் சகோதர் அன்பு (50) இரு வரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2பேரும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர். மேலும் நிதிநிறு வன மேலான் இயக்குனர். மாயகிருஷ்ணன் உள்ளிட்ட மற்ற 5 பேரை தேடி தனிப்படை போலீசார் சென்னை சென்றுள்ளனர். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். 

    • மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலங்களில் .ஏற்பட் டுள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.என .கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது
    • மாநில பொதுக்குழு உறுப்பினர் சகாய தேவதாஸ் வர வேற்றார். மாநில துணை செயலாளர் செல்வி தொடங்கி வைத்தார்

    கடலூர்:

    தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6, 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் களைத்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலங்களில் ஏற்பட் டுள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சகாய தேவதாஸ் வர வேற்றார். மாநில துணை செயலாளர் செல்வி தொடங்கி வைத்தார். போராட்டத்தில் மாநில பொருளாளர் குமார், மாவட்ட செயலாளர் அந்தோணி ஜோசப், முன்னாள் மாவட்ட செயலாளர் நாராயணன் ஆகியோர் விளக்க உரை ஆற்றினார்கள். இதில் நிர்வாகிகள் ஹரி கிருஷ்ணன், ஏழுமலை, சுரேஷ், சின்னதுரை, சத்திய பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    • நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி பகுதியில் கொட்டுவதற்கு இடம் இல்லாமல் இருந்து வருகின்றது.
    • கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி பொதுமக்களுடன் நேரில் சென்று குப்பைகள் கொட்டி இருக்கும் இடத்தை பார்வையிட்டார்

    கடலூர்

    நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி பகுதியில் கொட்டுவதற்கு இடம் இல்லாமல் இருந்து வருகின்றது.  இதன் காரணமாக நகராட்சி ஊழியர்கள் ஆறுகள் ஓரமாகவும் மற்றும் மக்கள் அதிகம் வசிக்காத பகுதிகளில் குப்பைகளை கொட்டி எரித்து வருவதாக தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் புகார் இருந்து வந்தன. இந்த நிலையில் தற்போது வைடிப்பாக்கம், மோரை எவரட்புரம் பகுதியில் அகற்றப்படும் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் கொட்டி வருகின்றனர். இதில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து அதனை சரிப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்த நிலையில் இன்று காலை சரவணபுரம் பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்பதனை தரம் பிரித்து பொதுமக்கள் வழங்குவது குறித்து நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதற்காக நெல்லிக்குப்பம் கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது 25, 26, 27 ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் திடீரென்று கமிஷனர் மகேஸ்வரி வாகனத்தை சூழ்ந்து முற்றுகையிட்டனர பின்னர் எந்தவித அனுமதியும் இல்லாமல் குப்பைகள் கொட்டி வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றோம். மேலும் குப்பைகளை எரித்து வருவதால் மூச்சு திணறல், வாந்தி போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டு வருவதால் நாங்கள் மிகுந்த அவதி அடைந்து வருகிறோம். இது தொடர்பாக நீங்கள் நேரில் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி பொதுமக்களுடன் நேரில் சென்று குப்பைகள் கொட்டி இருக்கும் இடத்தை பார்வையிட்டார். பின்னர் இதற்கு மாற்று நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார் . இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது 

    • 24 வயது இளம்பெண். சென்னை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். கடந்த 6 மாதமாக வீட்டில் இருந்தபடி வேலை செய்து வருகின்றார்.
    • சம்பவத்தன்று வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்ற இளம்பெண் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை‌

    கடலூர்:

    கடலூர் முதுநகரை சேர்ந்த 24 வயது இளம்பெண். சென்னை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். கடந்த 6 மாதமாக வீட்டில் இருந்தபடி வேலை செய்து வருகின்றார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்ற இளம்பெண் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சிடைந்த பெற்றோர் இளம்பெண்ணை தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட களமருதூர் காலனி பெரியார் நகரில் பல மாதங்களாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு சரிசெய்யாததால்கு டிதண்ணீர் அந்தப் பகுதிக்கு செல்லாமல் மக்கள் அப் பகுதிகளில் உள்ள விவசாய மோட்டாருக்கு சென்று பிடித்து வந்தனர்.
    • எந்த விதமான நடவடிக்கையும் இல்லா ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று கூடி சாமறியலில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    உளுந்தூர் பேட்ைட அருேக குடிநீர் ேகட்டு ெபாதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட களமருதூர் காலனி பெரியார் நகரில் பல மாதங்களாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு சரிசெய்யாததால்கு டிதண்ணீர் அந்தப் பகுதிக்கு செல்லாமல் மக்கள் அப் பகுதிகளில் உள்ள விவசாய மோட்டாருக்கு சென்று பிடித்து வந்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவருக்கும் தகவல் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லா ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • வி.எம். சுந்தர் (30). இவர் பூச்சி மருந்துகடை நடத்தி வருகிறார். வழக்கம் போல இரவு 9.30 மணிக்கு கடையை பூட்டிவிட்டு, மறுநாள் காலைவந்தபோது ,அதிர்ச்சியடைந்தார்
    • உள்ளே டிராயரில் வைக்கப்பட்டு இருந்த பணம் ரூ.5 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி எல்.என். புரத்தை சேர்ந்தவர் வி.எம். சுந்தர் (30). இவர் பண்ருட்டி 4முனை சந்திப்பில் நகராட்சிக்கு சொந்தமான காந்தி பூங்கா காம்ப்ளக்சில் பூச்சி மருந்துகடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 9ம் தேதி வழக்கம் போல இரவு 9.30 மணிக்கு கடையை பூட்டி சென்று விட்டு மறுநாள் காலை 8.30 மணி அளவில் மருந்து கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டை உடைத்து கடையில்கொள்ளை போனது தெரிய வந்தது.உள்ளே டிராயரில் வைக்கப்பட்டு இருந்த பணம் ரூ.5 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தர் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு, மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்

    . துணை போலிஸ் சூப்பிரண்டு சபியுல்லா நேரில் விரைந்து சென்று கொள்ளை யர்களை பிடிக்க சப்.இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டார். பண்ருட்டியில்இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனிப்படை போலீசார் தொடர் நடவடிக்கை மூலம்கொள்ளையன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் நேமம் பகுதியை சேர்ந்த ஷாகுல் ஹமீத்(60) என தெரியவந்தது. இதனை தொடர்ந்து கேரளாவுக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார்அவனை சுற்றி வளைத்து கைது செய்து பண்ருட்டி அழைத்து வந்தனர். விசாரணையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டி கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பூச்சி மருந்து கடையில் கொள்ளையடித்த கொள்ளையனை ஒரு வாரத்தில் துப்பு துலக்கியபண்ருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார் ஆனந்த் அன்பு ராஜி ஆகியோரை கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினார்.

    • கைரேகை நிபுணர்கள் வீட்டின் கூரை, பீரோ, சிதறிக் கடந்த பொருட்களில் இருந்த கைரைகைகளை பதிவு செய்தனர்.
    • வீடுகள் அதிகமுள்ள பகுதியில் வீட்டின் மேற்கூரையை பிரித்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மந்தாரக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகேயுள்ள மந்தாரக்குப்பம் பெரியார் நகரில் வசித்து வருபவர் முருகன் (வயது 46). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் தனக்கு சொந்தமான கூரை வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் 2 தினங்களுக்கு முன்னர் வெளியூர் சென்றார்.

    இன்று காலை வீடு திரும்பினார். அப்போது கூரை வீட்டின் மேற்கூரை பிரிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சயடைந்தார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக் கிடந்தன. வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழக்கப்பட்டது. சம்பவம் நடந்த வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

    இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வீட்டின் கூரை, பீரோ, சிதறிக் கடந்த பொருட்களில் இருந்த கைரைகைகளை பதிவு செய்தனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பல் மீது மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீடுகள் அதிகமுள்ள பகுதியில் வீட்டின் மேற்கூரையை பிரித்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடலூர் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் தாமரைச்செ
    • கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் எங்களிடம் தெரிவித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு:-           தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் மற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் எங்களிடம் தெரிவித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகையால் எந்தவித பிரச்சனையும் இன்றி கூட்டத்தை நடத்தித் தர வேண்டும்   எங்கள் வார்டு பகுதியில் நாய் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வருகிற ஏப்ரல் 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்தநாள் வருகிறது. மஞ்சக்குப்பத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அப்போது தி.மு.க.வை சேர்ந்த 10 கவுன்சிலர்கள் வெளியில் வேலை இருப்பதாக கூறி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வெளியில் சென்றனர்  மாநகராட்சியில் விடப்படும் டென்டர் குறித்து தகவல் பலகையில் வைக்க வேண்டும். எங்கள் வார்டில் குளம் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜைக்கு என்னை தாமதமாக அழைத்ததால் நான் வரவில்லை. நான் வரவில்லை என்பதற்காக வேறு நபர்களை வைத்து படைப்பது சரியா?. மேலும், அங்கிருந்த 15 குடும்பங்களை நீங்கள் அகற்றிய போது, அந்த மக்களை நான் சமாதானப்படுத்தினேன். அந்த குளம் தூர்வாருவதற்கு என்னை சரியான முறையில் அழைக்கவில்லை. அந்த வார்டில் உள்ள முக்கிய பிரமுகர்களை வைத்து நாங்கள் மீண்டும் பூமி பூஜை போடுவதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும். எங்கள் வார்டில் குப்பைகள் கொட்டுவதும், எரிப்பதும் அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது. இதனை சரி செய்ய வேண்டும்.

    அருள்பாபு (த.வா.க):- மஞ்சக்குப்பம் பெண்ணையாறு கருமகாரிய கொட்டகை பழுதடைந்து உள்ளது. இதனை 15 வார்டுக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்துகின்றனர். இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். கடலூர் மாநகராட்சியில் சிக்னல்கள் சரிவர வேலை செய்யவில்லை. இதனை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  குப்பை அகற்றுவதற்கு வாகனம் வருவதில்லை. நாங்கள் சொன்னால் மதிப்பதில்லை. கழிவு நீர் வாய்க்கால் சரி செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. அதனை உடனடியாக நகராட்சி ஊழியர்கள் மூலம் பிடிக்க வேண்டும். மாநகராட்சி கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் 10 தி.மு.க. கவுன்சிலர்கள் எதற்காக வெளியில் சென்றார்கள் என்பது தெரிய வேண்டும். நானும் சில காலம் முன்பு மேயருக்கு எதிர்ப்பாக இருந்தேன். அதனை பகிரங்கமாக கூறுகிறேன். ஆனால் மாநகராட்சி மேயர் அனைத்து கவுன்சிலர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பணிகள் ஒதுக்கி வழங்கி வருகின்றனர். மக்கள்   உட்கட்சி பிரச்சனைகள் தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் பேச வேண்டாம். பொதுமக்கள் குறைகள் குறித்து பேச வேண்டும். தேவனாம்பட்டினம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகின்றது. அங்குள்ள தனியார் கடைகளை மாநகராட்சி கையகப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்  எங்கள் வார்டில் கழிவு நீர் கலந்த குடிநீர் வருகிறது என கூறி பாட்டிலில் கழிவுநீர் கலந்த குடிநீரையும் சுத்தமாக உள்ள குடிநீரையும் மாநகராட்சி கூட்டத்தில் காண்பித்தார். குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருவதோடு அடிப்படை வசதிகளை உடனடியாக சரி செய்து தர வேண்டும்.   இது சம்பந்தமாக உடனடியாக அதிகாரிகளை அனுப்பி பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்த அரசுக்கு மிகப்பெரிய அவப்பெயர் உருவாக்குவது குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லை என்பதுதான். இதற்கு அதிகாரிகள் என்ன நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.    குப்பை கிடங்கு இல்லாததால் எந்தவித பெரிய பாதிப்பும் இல்லை. தற்போது குப்பை அகற்றுவதற்கு போதுமான ஆட்கள் இல்லை. வாகன வசதிகள் இல்லை. ஆனால் அதற்கு மாறாக அறிவுபூர்வமாக குப்பைகளை அகற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குப்பைகளை தரம் பிரித்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வருங்காலங்களில் இதனை முழுமையாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எங்கள் வார்டில் கட்டி முடிக்கப்பட்ட பூங்கா திறக்கப்படாமல் உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உடனடியாக கொண்டு வர வேண்டும். வரி பாக்கி செலுத்தாத கடைகளை அதிகாரிகள் மூடுவதால் தற்போது நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தின் போது கடைகள் திறக்க வேண்டும் என நாங்கள் கூறும் போது வணிகர்கள் அதிகாரிகளைக் கொண்டு கடைகளை மூடுகிறார்கள். இப்போது எதுக்கு கடைகளை திறக்க கூறுகிறீர்கள் என கேட்கின்றனர். இதன் காரணமாக ஒரு தலைவர் 100 சதவீதம் கடை அடைப்பு போராட்டம் வெற்றி என தெரிவித்துள்ளார் என பேசிக் கொண்டிருந்த போது,

    குறுக்கிட்ட பா.ம.க. கவுன்சிலர் சரவணன், எங்கள் பா.ம.க. தலைவரை ஒருமையில் பேசி உள்ளதால் அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி மேயர் சுந்தரி ராஜா முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் அனைவரும் உங்கள் கட்சித் தலைவரை ஒருமையில் பேசவில்லை இங்குள்ள ஒலிபெருக்கி சரியான முறையில் இயங்காததால் உங்களுக்கு ஒருமையில் பேசுவது போல் கேட்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். ஆகையால் உங்கள் இருக்கையில் அமருங்கள் என தெரிவித்தனர். அப்போது கண்டன கோஷம் எழுப்பிக் கொண்டு தங்கள் இருக்கையில் பா.ம.க. கவுன்சிலர் அமர்ந்தார்.


    எனது வார்டில் சாலை வசதி மிகவும் மோசமாக உள்ளது என அதிகாரிகளை நேரில் அழைத்துக் கொண்டு காண்பித்தேன். ஆனால் எங்கள் வார்டில் சாலை வசதி அமைக்க நிதி ஒதுக்கவில்லை. குடிநீர் இல்லாமல் உள்ள எனது வார்டு மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மஞ்சக்குப்பம் அம்பேத்கர் சிலையை வெண்கல சிலையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


    மாநகராட்சி கூட்டம் நடைபெறும் போது அனைவரும் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். மேயர் என்ற முறையில் அனைத்து வார்டு கவுன்சிலர்களையும் சமமாக கருதி அனைத்து பணிகளும் மேற்கொண்டு வருகின்றேன். மேலும் உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம். அதிகாரிகள் ஒத்துழைப்போடு மாநகராட்சியில் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து இந்த 5 காலங்களில் கடலூர் மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக கொண்டு வர நீங்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கடலூர் மாநகராட்சி கூட்டம் தொடங்குவதற்கு முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக கடலூர் மாநகராட்சி வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

    • அழகுவேல்.இவர்கேரளாவில்பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.இவரதுமனைவி தமிழ்ச்செல்வி (28)குழந்தை எதுவும் இல்லை .
    • 20 நாட்களுக்கு முன்பு கேரளாவிற்கு மனைவியுடன் சென்றார். அங்கு தமிழ்செல்வி இறந்து விட்டார்

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் காலணிடேங்க்தெருவைசேர்ந்தவர்அழகுவேல்.இவர்கேரளாவில்பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.இவரதுமனைவி தமிழ்ச்செல்வி (28)இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகிறது. குழந்தை எதுவும் இல்லை . 20 நாட்களுக்கு முன்பு கேரளாவிற்கு மனைவியுடன் சென்றார். அங்கு தமிழ்செல்வி இறந்து விட்டார். அவரது உடலை பனப்பாக்கத்திற்கு அழகுவேல் கொண்டு வந்தார்.

    இதற்கிடையில் இறந்து போன தமிழ் செல்வி உறவினர்கள் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் .அவர்களிடம் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதால் மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம்போலீசார் ெதாடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • 2 தினங்களுக்கு முன்பு அய்யனார் கடலூர் பஸ் நிலையம் முன்பு உள்ள தனியார் ஓட்டலில் உணவருந்த சென்றுள்ளார்.
    • அப்போது ஓட்டல் ஊழியருக்கும், அய்யனாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் இந்திரா நகரை சேர்ந்தவர் அய்யனார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு அய்யனார் கடலூர் பஸ் நிலையம் முன்பு உள்ள தனியார் ஓட்டலில் உணவருந்த சென்றுள்ளார். அப்போது ஓட்டல் ஊழியருக்கும், அய்யனாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் காயமடைந்த அய்யனார் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இந்த நிலையில் அய்யனார் மற்றும் ஓட்டல் ஊழியர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர் தஷ்ணா தலைமையில் இந்திரா நகரை சேர்ந்த பொதுமக்கள் தனியார் ஓட்டலை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அய்யனாரை தாக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினார்கள். அப்போது போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். மேலும் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திரவாதம் அளித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையம் பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • கால் தண்டவாளத்தில் சிக்கியதால் ரெயில் சக்கரம் அவரது கால் மீது ஏறியது.
    • ரெயில்வே போலீசார் விரைந்து சென்று அந்த மாணவரை மீட்டனர்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் ரெயில் நிலையம் அருகே மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவரின் கால் ரெயிலில் சிக்கி துண்டானது. ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது கால் தண்டவாளத்தில் சிக்கியதால் ரெயில் சக்கரம் அவரது கால் மீது ஏறியது. கால் துண்டாகி வலியால் துடித்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து சென்று அந்த மாணவரை மீட்டு, துண்டான காலோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ×