search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sacrificial"

    • மூதாட்டி மீது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    கடலூர்:

    சென்னையை சேர்ந்தவர் கலியபெருமாள் இவரது மனைவி மீனா (65) இவர் பண்ருட்டி ஒன்றியம் குடுமியான்குப்பத்திலுள்ள இவரது தங்கை கமலா வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு 10.00 மணி அளவில் மூதாட்டி மீது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது.இதனால் சம்பவ இடத்திலே மீனா பரிதாபமாக இருந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குத்துவிளக்கில் விழுந்து பெண் பலியானார்.
    • செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை செல்லூர் சத்தியமூர்த்தி 6-வது தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ஹேமலதா (வயது42). சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவருக்கு வலிப்பு நோய் வந்தது.

    அப்போது அங்கிருந்த குத்துவிளக்கின் மீது பிரேமலதா தவறி விழுந்தார். இதில் காயமடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரசாந்த்(வயது 16) பெருமாள் ஏரி குளத்தில் மதியம் 2 மணி அளவில் நீரில் இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தில் பிரசாந்த் மூழ்கினார்.
    • போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் ஏரியில் மூழ்கிய பிரசாந்தின் உடலை ஏரியில் தேடினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு காலணி வடக்கு தெருவை சேர்ந்தவர் அருள். இவரது மகன் பிரசாந்த் (வயது 16). இவர் வேகாக்கொல்லையில் உள்ள முந்திரி தூசி கம்பெனியில் தூசி அல்லும்வேலை செய்து வந்தார்.    வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றபோது அரசடிகுப்பத்தில் உள்ள பெருமாள் ஏரி குளத்தில் மதியம் 2 மணி அளவில் நீரில் இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தில் பிரசாந்த் மூழ்கினார்.இது குறித்த தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் மற்றும் போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் ஏரியில் மூழ்கிய பிரசாந்தின் உடலை ஏரியில் தேடினர். வெகுநேர தேடுதல் வேட்டைக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் பிரசாந்தின் உடலை மீட்டனர்.பின்னர் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆறுமுகம் மகன் தினேஷ் (வயது 26) என்பவர் வேப்பூர் வந்துவிட்டு மீண்டும் பெரியநெசலூர் செல்ல சேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
    • ஆட்டோ டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த தினேஷ் ஆட்டோவிலிருந்து தவறி சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் தினேஷ் (வயது 26) என்பவர் வேப்பூர் வந்துவிட்டு மீண்டும் பெரியநெசலூர் செல்ல சேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். பயணிகளை ஏற்றி கொண்டு வேப்பூர் சேலம் சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது நயகரா பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோ டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த தினேஷ் ஆட்டோவிலிருந்து தவறி சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தார் அவரை உடன் சென்றவர்கள் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகு சேர்த்தனர், அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைகாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே மதில் சுவரில் மோதி முதியவர் பலியானார்.
    • தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி தாலுகா காடாம்புலியூர் பி.ஆண்டிகுப்பத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 57). இவர் நேற்றிரவு 10 மணிக்கு மாம்பட்டு வினித் கார்டன் எதிரே மெயின் ரோட்டில் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி வினித் கார்டன் எதிரே உள்ள பள்ளத்தில் விழுந்து, மதில் சுவரில் மோதி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இது பற்றி தகவலறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து கமலக்கண்ணன் உடலை கைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலியானார்.
    • இச்சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூத்தி யார்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் காசி விசுவநாதன்(26), கட்டிட தொழிலாளி.

    இவர் இரவு நேரத்தில் வயலில் தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது காசி விசுவநாதன் மீது அந்த வழியாக வந்த ரெயில் மோதியது.

    இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த நிலையில் காசி விஸ்வநாதன் நீண்டநேர மாகியும் வீடு திரும்பாததால் காலையில் உறவினர்கள் தேடிப்பார்த்தனர். அப்போது காசி விசுவநாதன் தண்டவாளத்தில் உடல் சிதறி இறந்து கிடந்தது தெரியவந்தது. மதுரை ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோத னைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பனைமரத்தின் பனை மட்டை கீழே விழுந்து அதில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் அவரை கொட்டியுள்ளது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே பட்டீஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி ஜெயலட்சுமி 70. இவர் நேற்று முன்தினம் அங்கு உள்ள கடை ஒன்றில் பால் வாங்க சென்றுள்ளார்.

    அப்போது அந்த கடையின் அருகே உள்ள பனைமரத்தின் பனை மட்டை கீழே விழுந்து அதில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் அவரை கொட்டியுள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

    இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாண்டி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    ×