பண்ருட்டி அருகே சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பரிதாப பலி

மூதாட்டி மீது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
பண்ருட்டி அருகே சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பரிதாப பலி
Published on

கடலூர்:

சென்னையை சேர்ந்தவர் கலியபெருமாள் இவரது மனைவி மீனா (65) இவர் பண்ருட்டி ஒன்றியம் குடுமியான்குப்பத்திலுள்ள இவரது தங்கை கமலா வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு 10.00 மணி அளவில் மூதாட்டி மீது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது.இதனால் சம்பவ இடத்திலே மீனா பரிதாபமாக இருந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com