search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உளுந்தூர்பேட்டை அருகே குடிதண்ணீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
    X

    பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

    உளுந்தூர்பேட்டை அருகே குடிதண்ணீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

    • திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட களமருதூர் காலனி பெரியார் நகரில் பல மாதங்களாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு சரிசெய்யாததால்கு டிதண்ணீர் அந்தப் பகுதிக்கு செல்லாமல் மக்கள் அப் பகுதிகளில் உள்ள விவசாய மோட்டாருக்கு சென்று பிடித்து வந்தனர்.
    • எந்த விதமான நடவடிக்கையும் இல்லா ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று கூடி சாமறியலில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    உளுந்தூர் பேட்ைட அருேக குடிநீர் ேகட்டு ெபாதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட களமருதூர் காலனி பெரியார் நகரில் பல மாதங்களாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு சரிசெய்யாததால்கு டிதண்ணீர் அந்தப் பகுதிக்கு செல்லாமல் மக்கள் அப் பகுதிகளில் உள்ள விவசாய மோட்டாருக்கு சென்று பிடித்து வந்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவருக்கும் தகவல் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லா ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×