என் மலர்
கோயம்புத்தூர்
- பக்தர்கள் வெள்ளிங்கிரி மலையெறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்து விட்டு சுப்பாராவ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
வடவள்ளி:
கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலையின் ஏழாவது மலை உச்சியில் சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க கடந்த மாதம் 12-ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறுவதற்கு வனத்துறை அனுமதி அளித்தது.
இதனை தொடர்ந்து நாள்தோறும் பக்தர்கள் வெள்ளிங்கிரி மலையெறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சுப்பா ராவ்(வயது57). டாக்டரான இவர் தனது நண்பர்களுடன் சம்பவத்தன்று கோவைக்கு வந்தார்.
பின்னர் வெள்ளிங்கிரி மலையடிவாரத்திற்கு வந்து மலையேற தொடங்கினார். 4-வது மலையில் நடந்து கொண்டிருந்த போது, சுப்பாராவிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.
அடிவாரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, டோலி மூலம் அடிவாரத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வந்த 108 மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்து விட்டு சுப்பாராவ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதேபோல் சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தை சேர்ந்தவர் தியாகராஜன்(35). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவரும் தனது நண்பர்கள் 12 பேருடன் வெள்ளிங்கிரி மலையேறினார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் மலை இறங்கி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இன்று அதிகாலை தேனியை சேர்ந்த பாண்டியன் (40) 2வது மலை அருகே மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் முதல் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதய பிரச்சினை உள்ளவர்கள் மலையேறுவதை தவிக்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்
- இதனையொட்டி கோவை சரவணம்பட்டி பகுதியில் பாரதிய ஜனதா கட்சி செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது
பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இதனையொட்டி கோவை சரவணம்பட்டி பகுதியில் பாரதிய ஜனதா கட்சி செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநில தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பல்வேறு தேர்தல் வியூகங்கள் குறித்து கட்சியினரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது பேசிய அண்ணாமலை, "கோவை ஒரு காலத்தில் மிகவும் குளுமையாக இருந்தது. தற்போது இரண்டு முதல் மூன்று டிகிரிகள் வரை வெயில் அதிகரித்து விட்டது. மாநகரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கவே முடியாத நிலை இருக்கிறது. மக்கள் முகக்கவசங்கள் இல்லாமல் வெளியே வர முடியாத அளவுக்கு தூசி படர்ந்து இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் திராவிட அரசுகள் தான். இதையெல்லாம் மாற்றுவதற்காக மக்கள் பாஜகவை தேர்வு செய்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
கோவையில் வெப்பம் அதிகரிப்பதற்கு திராவிட அரசுகள் தான் காரணம் என அண்ணாமலை பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் இதனை கிண்டல் செய்து வருகின்றனர்.
- தமிழகம் முழுவதும் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களையும் ஆதரித்து 3, 4 நாட்கள் பிரசாரம்.
- தேர்தலில் பா.ஜ.க. வென்று மீண்டும் பிரதமராக மோடி வருவார்.
கோவை:
பாரதிய ஜனதா மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தேர்தல் நெருங்கும்போது ஏப்ரல் 10-க்கு பிறகு தி.மு.க.-அ.தி.மு.க. ஆகிய பங்காளி கட்சிகள் ஒன்று சேரும். என்னை தோற்கடிக்க தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் ஒன்று சேர்ந்து போராடும்.

குளுமையாக இருந்த கோவையில் 2 டிகிரி வெப்பம் அதிகரிக்க திராவிட கட்சிகளே காரணம் ஆகும். கோவையில் இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியவில்லை. மாஸ்க் இல்லாமல் இருக்க முடியவில்லை.
பணம் செலவிடமாட்டேன் என நான் பேசியதை எடப்பாடி பழனிசாமி முழுமையாக கேட்கவில்லை. டீ குடிக்க மற்றவர்களிடம் காசு வாங்கி கொடுப்பவர் தான் எடப்பாடி பழனிசாமி. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கூட கொள்ளையடித்தவர்கள் என்னை விமர்சிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-
நான் வருகிற புதன்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளேன். அடுத்து மாநில தலைவர் என்ற முறையில் தமிழகம் முழுவதும் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களையும் ஆதரித்து 3, 4 நாட்கள் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் தேர்தல் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
நீங்கள் வேட்பாளராக இருந்தால் எப்படி பணியாற்றுவீர்களோ, அதே போல் பணியாற்ற வேண்டும். அடுத்த 25 நாட்கள் நாம் எப்படி பணியாற்ற போகிறோம் என்பதே வெற்றியை உறுதி செய்யும்.

கோவையில் நாம் வெற்றியை சுவைத்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டது. வெவ்வேறு காரணங்களால் வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கிறோம். 20 ஆண்டுகள் ஆனாலும் நமது பழைய பணிகளை மக்கள் போற்றுகின்றனர்.
2 டிரங்கு பெட்டிகளுடன் 2002-ல் கோவைக்கு படிக்க வந்தேன். கடின உழைப்பிற்கு மரியாதை கொடுக்கும் ஊர் இந்த ஊர். கோவையில் பிறந்து வாழ்ந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டேன். தற்போது தேர்தலில் போட்டியிடுகிறேன். கோவை மீது எனக்கு பாசம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கோவை எங்களது கோட்டை என்று பலரும் சொல்லி வருகின்றனர். கோட்டையில் ஓட்டைபோட நான் வரவில்லை. மக்களின் மனங்களை வெல்லவே வந்துள்ளேன்.
இந்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை. மக்களை சந்திப்பது மட்டுமே நமது எண்ணம். டிபன் பாக்ஸ் கொடுத்தோம், வேறு பரிசு பொருட்கள் கொடுத்தோம் என்று வெற்றி பெற வேண்டும் என்பது இல்லை. தேர்தலில் பா.ஜ.க. வென்று மீண்டும் பிரதமராக மோடி வருவார். இதில் 400 தொகுதிகளில் வெற்றியா, 450 தொகுதிகளில் வெற்றியா என்பது கேள்வி?
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை.
- 400 தொகுதிகளில் வெற்றியா, 450 தொகுதிகளில் வெற்றியா என்பது கேள்வி?
கோவை:
கோவை சரவணம்பட்டியில் இன்று நடந்த பா.ஜ.க நிர்வாகிகள் கூட்ட த்தில் பா.ஜ.க. மாநில தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-
நான் வருகிற புதன்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளேன். அடுத்து மாநில தலைவர் என்ற முறையில் தமிழகம் முழுவதும் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களையும் ஆதரித்து 3, 4 நாட்கள் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் தேர்தல் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
நீங்கள் வேட்பாளராக இருந்தால் எப்படி பணியாற்றுவீர்களோ, அதே போல் பணியாற்ற வேண்டும். அடுத்த 25 நாட்கள் நாம் எப்படி பணியாற்ற போகிறோம் என்பதே வெற்றியை உறுதி செய்யும்.
கோவையில் நாம் வெற்றியை சுவைத்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. வெவ்வேறு காரணங்களால் வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கிறோம். 20 ஆண்டுகள் ஆனாலும் நமது பழைய பணிகளை மக்கள் போற்றுகின்றனர்.
2 டிரங்கு பெட்டிகளுடன் 2002-ல் கோவைக்கு படிக்க வந்தேன். கடின உழைப்பிற்கு மரியாதை கொடுக்கும் ஊர் இந்த ஊர். கோவையில் பிறந்து வாழ்ந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டேன். தற்போது தேர்தலில் போட்டியிடுகிறேன். கோவை மீது எனக்கு பாசம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கோவை எங்களது கோட்டை என்று பலரும் சொல்லி வருகின்றனர். கோட்டையில் ஓட்டை போட நான் வரவில்லை. மக்களின் மனங்களை வெல்லவே வந்துள்ளேன்.
இந்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை. மக்களை சந்திப்பது மட்டுமே நமது எண்ணம். டிபன் பாக்ஸ் கொடுத்தோம், வேறு பரிசு பொருட்கள் கொடுத்தோம் என்று வெற்றி பெற வேண்டும் என்பது இல்லை. தேர்தலில் பா.ஜ.க. வென்று மீண்டும் பிரதமராக மோடி வருவார். இதில் 400 தொகுதிகளில் வெற்றியா, 450 தொகுதிகளில் வெற்றியா என்பது கேள்வி?
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜமேஷா முபினுடன் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
கோவை:
கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு 23-ந் தேதி கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) பலியானார்.
தீபாவளிக்கு முந்தைய தினத்தில் மக்கள் கூட்டத்தில் காரை வெடிக்க செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்த ஜமேஷாமுபினும், அவரது கூட்டாளிகளும் திட்டமிட்டிருந்த நிலையில் அந்த சதியில் சிக்கி ஜமேஷா முபினே பலியானார்.
இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். ஜமேஷா முபினுடன் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் வீடுகளில் சோதனையும் நடத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் இதுவரை குற்றவாளிகள் பிடிபடாமல் உள்ளனர். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கார் குண்டுவெடிப்பில் கைதானவர்களுக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் என்.ஐ.ஏ. தற்போது விசாரணையில் இறங்கி உள்ளது.
இதுதொடர்பாக முகமது உசேன், ஜமேசா உமரி உள்ளிட்ட 3 பேரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். அவர்கள் இன்று சென்னையில் இருந்து கோவை அழைத்து வரப்பட்டனர்.
என்.ஐ.ஏ. அதிகாரி விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் அவர்கள் 3 பேரையும் கோவைக்கு அழைத்து வந்தனர். கோவை குனியமுத்தூரில் உள்ள அரபிக்கல்லூரி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். மேலும் ஆசாத் நகர் பகுதிக்கும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
- கோவையில் பறக்கும் படையினரின் கண்காணிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.
- சோதனைச்சாவடிகள் வழியாக வரும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
கோவை:
கோவை பாராளுமன்ற தொகுதியில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதன் காரணமாக இந்த தொகுதி மாநில அளவில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் திரும்பி பார்க்கும் தொகுதியாக மாறி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மும்முனை போட்டி நிலவினாலும் கோவையில் இந்த போட்டி இன்னும் மிக கடுமையாக உள்ளது.
மற்ற அரசியல் கட்சியினருக்கு சிம்ம சொப்பனமாக திகழும் அண்ணாமலையை வீழ்த்தும் நோக்கில் இந்த தொகுதியில் மற்ற கட்சிகளின் களப்பணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் கட்சியான தி.மு.க. கோவை பாராளுமன்ற தொகுதியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் இந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுக்காமல் அந்த கட்சியே பெற்று களமிறங்கி உள்ளது. தற்போது அண்ணாமலை போட்டியால் மிக கவனமாக காய்களை நகர்த்தி வருகிறது. முன்னாள் மேயரான கணபதி ராஜ்குமாரை வேட்பாளராக களமிறக்கி தீவிர களப்பணியில் குதித்துள்ளது. வரும் நாட்களில் இந்த தொகுதியில் வாக்கு சேகரிப்பு பணியை மேற்கொள்ள அமைச்சர்கள் பலர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல அ.தி.மு.க.வும் கடுமையான போட்டியில் இறங்கி உள்ளது. கோவையை தங்கள் கோட்டையாக கருதும் அந்த கட்சி செல்வாக்கை தக்க வைக்க களமிறங்கி உள்ளது.
அண்ணாமலை வருகையால் ஏற்பட்ட மிக கடுமையான போட்டியால் மற்ற தொகுதிகளை விட இந்த தொகுதியில் பணமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். வாக்காளர்களை கவரும் வகையில் பணம், பரிசு பொருட்கள் அதிகளவில் வழங்கப்படலாம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கோவையில் தற்போது களமிறங்கி உள்ள பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். கோவையில் என்னை வீழ்த்தும் நோக்கில் கோடிக்கணக்கான ரூபாய் கொண்டு வந்து செலவு செய்வார்கள். பணமழை இங்கே பொழியும், இலவசங்கள் அள்ளித்தரப்படும். ஆனால் நான் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டேன் என கூறி உள்ளார்.
கோவை தொகுதியில் பணப்புழக்கம் அதிகம் இருக்க வாய்ப்பு இருப்பதால் பறக்கும் படையினர் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளனர். தனிப்படைகளின் எண்ணிக்கையும் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. தனிப்படையினர் இரவு- பகல் பாராமல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சோதனைச்சாவடிகள் வழியாக வரும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது கோவையில் பறக்கும் படையினரின் கண்காணிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை ரூ.1 கோடியே 68 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 72 வழக்குகள் பதிவாகி உள்ளது. பரிசு பொருட்கள் என்று எதுவும் சிக்கவில்லை. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுக்கப்படுகிறதா என்பதைதொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனர்.
- பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக வரும்போது கோவை உலக அளவில் சிறந்து விளங்கும்.
- தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வளர்ச்சி வர வேண்டும்.
கோவை:
கோவை விமான நிலையத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை பாராளுமன்ற தொகுதியை பொருத்தவரை 3 வேட்பாளர்களுக்கு இடையே நடக்கும் போட்டி இல்லை. 70 ஆண்டுகளாக தமிழகத்தில் நடக்கக்கூடிய அதர்மம் ஒரு பக்கமும், தர்மம் ஒரு பக்கமும் உடையதான தேர்தல். தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு பணமழை கோவையில் பொழியும்.
பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக வரும்போது கோவை உலக அளவில் சிறந்து விளங்கும். 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். ஜூன் 4-ந் தேதி தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
எனக்கு டெல்லி அரசியலில் விருப்பம் இல்லை. தமிழக அரசியலில்தான் அதிக விருப்பம். பிரதமர் மோடியின் உத்தரவுக்கு இணங்க கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன்.
தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வளர்ச்சி வர வேண்டும். தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
பிரதமர் தமிழகத்திற்கு ஏன் அடிக்கடி வருகிறார் என்றால் இங்கு வெற்றி பெறும் எம்.பி.க்கள் மூலம் தமிழகத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, தமிழகத்தை மாற்றி காட்டுவோம். அதற்காக தான் பிரதமர் மோடி சபதம் எடுத்து களத்தில் இறக்கி உள்ளார்.
கோவை தொகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் கொண்டு வந்து செலவு செய்வார்கள். ஆனால் நான் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கமாட்டேன். பா.ஜனதா எதுவும் செலவு செய்யாது. தமிழக வரலாற்றில் செலவு குறைந்த தேர்தலாக இந்த தொகுதி தேர்தல் இருக்கும்.
கடந்த தேர்தலின்போது அறிவித்த அதே அறிக்கையை தி.மு.க. வெளியிட்டுள்ளது. இதில் எதையும் அவர்கள் நிறைவேற்றபோவது இல்லை.
மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை காட்ட வேண்டும். தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையில் இருந்து தொடங்கும். நான் பெரிய வேட்பாளர் இல்லை. கோவை மக்களை நம்பி அவர்களுடன் சேர்ந்து 2 ஆண்டுகளில் இந்த மாற்றம் தமிழகத்தில் எடுத்து செல்லும் சாதாரண நபர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஆர்.நல்லகண்ணுவை 54,077 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று 2-வது முறையாக எம்.பி. ஆனார்.
- 2 முறை இந்த தொகுதியை பா.ஜ.க. வென்றபோது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சாதித்துள்ளது
கோவை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதா கடந்த 1998-ல் வெற்றி பெற்றது.
பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று முதன்முறையாக எம்.பி. ஆனார். தி.மு.க. வேட்பாளர் கே.ஆர். சுப்பையனை எதிர்த்து 4,49,269 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசு 13 மாதங்களில் கவிழ்ந்தது.
இதையடுத்து 1999-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஆர்.நல்லகண்ணுவை 54,077 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று 2-வது முறையாக எம்.பி. ஆனார்.
2004 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் 3-வது முறையாக போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயனிடம் தோல்வி அடைந்தார். 2014-ல் 4-வது முறையாக பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. வேட்பாளர் நாகராஜனிடம் வெற்றி வாய்ப்பை இழந்து 2-ம் இடத்தை பிடித்தார்.
பின்னர் 2019-ல் பா.ஜ.க. சார்பில் 5-வது முறையாக போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பி.ஆர். நடராஜனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். கோவை தொகுதியில் பா.ஜ.க. வென்று 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது அண்ணாமலை வேட்பாளராக களமிறங்கி உள்ளார். 2 முறை இந்த தொகுதியை பா.ஜ.க. வென்றபோது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சாதித்துள்ளது. ஆனால் இந்த முறை தி.மு.க., அ.தி.மு.க.வும் தனித்தனியாக களம் காண்கின்றன. இங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. இதனால் ஓட்டுகள் சிதற வாய்ப்புள்ளது. இதில் அண்ணாமலை வெற்றிக்கணக்கை தொடங்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- 14 சோதனைச்சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
- பதட்டமான பகுதிகளில் கூடுதலாக தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்க வேண்டும்.
கோவை:
கோவை மாவட்டம் கேரள மாநிலத்தின் எல்லையில் உள்ளது. இந்த 2 எல்லைகளிலும் மொத்தம் 14 சோதனைச்சாவடிகள் உள்ளன. நடுப்புணி, வடக்கு காடு, ஜமீன் காளியாபுரம், கோபாலபுரம், வேலந்தாவளம், வீரப்ப கவுண்டனூர், வாளையார், செம்மனாம்பதி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த 14 சோதனைச்சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம், பரிசுப்பொருட்கள் மற்றும் மதுபானங்கள் கடத்த வாய்ப்பு உள்ளதால் அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக மற்றும் கேரள மாநில அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, திருச்சூர் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் தேஜா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழகம் - கேரள மாநில எல்லையாக உள்ள கோவை மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடிகள் வழியாக வரும் வாகனங்களை தணிக்கை மேற்கொண்டு பணம், மதுபானங்கள், போதைப்பொருட்கள், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட சோதனைச்சாவடிகளில் வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணி மேற்கொள்வது.
சோதனைச்சாவடிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். பதட்டமான சோதனைச்சாவடிகளை கண்டறிய வேண்டும். பதட்டமான சோதனைச்சாவடிகளை கண்டறிய வேண்டும். பதட்டமான பகுதிகளில் கூடுதலாக தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்க வேண்டும்.
மதுபானங்கள் கொண்டு செல்வதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும், வெளிநாட்டு மதுவகைகள் இரு மாநிலங்களுக்கு இடையே நடமாட்டத்தை கண்காணிக்க வாகன சோதனை மற்றும் கண்காணிப்பை மேம்படுத்த வேண்டும்.
மேற்கண்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
- பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோவில் எந்தவித தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் மீறவில்லை.
- எல்லோரை போலவும் பிரதமரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வ மிகுதியில் பள்ளி மாணவர்கள் தன்னெழுச்சியாகவே பங்கேற்றுள்ளனர்.
கோவை:
கோவை மாவட்டத்தில் கடந்த 18-ந் தேதி பிரதமர் மோடி பங்கேற்ற பிரமாண்ட வாகன பேரணி (ரோடு ஷோ) நடைபெற்றது. இதில் பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இவர்களுக்கு மத்தியில் பள்ளி சீருடையில் மாணவ, மாணவிகளும் வாகன பேரணியில் பங்கேற்று வரவேற்றனர். இதற்கு தி.மு.க உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு, பிரதமர் மோடியின் பிரமாண்ட ரோடு ஷோவில் மாணவர்களை பங்கேற்க வைத்ததாக சாய்பாபா கோவில் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதேபோல் பிரதமரின் வாகன பேரணியில் பங்கேற்றதாக வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியிடம் விளக்கம் கேட்டு, தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் செந்தில் நோட்டீஸ் வழங்கினார்.
இதற்கிடையே பிரதமரின் பேரணியில் மாணவர்கள் பங்கேற்ற சம்பவம் தொடர்பாக பா.ஜனதா மாவட்ட தலைவரிடமும் விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.
அந்த நோட்டீசுக்கு கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் ரமேஷ்குமார், தேர்தல் நடத்தும் அலுவலரான சுரேஷ் என்பவரிடம் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோவில் எந்தவித தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் மீறவில்லை. பிரதமர் மோடியை பார்ப்பதற்காக அனைவரும் அங்கு திரண்டிருந்தனர்.
இந்த பேரணியில் நாங்கள் மாணவர்களை பங்கேற்க செய்யவில்லை. மாணவர்கள் பிரதமருக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்துவது, துண்டு பிரசுரங்களை வினியோகிப்பது என எந்த பிரசார பணியிலும் ஈடுபடவில்லை.
எல்லோரை போலவும் பிரதமரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வ மிகுதியில் பள்ளி மாணவர்கள் தன்னெழுச்சியாகவே பங்கேற்றுள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில் பள்ளி மாணவர்கள் பிரதமரை நேரில் பார்க்க வருவதில் எந்த தவறும் இருப்பதாக கருதவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- அ.தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதி வேட்பாளராக லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
- தனபால் தற்போது அவினாசி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
கோவை:
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே இவர் 2 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார். கடந்த பல மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணியை தொடங்கி களப்பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதி வேட்பாளராக லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் முன்னாள் சபாநாயகர் ப.தனபாலின் மகன் ஆவார். இவர் அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
இவருக்கு முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., தமிழ்ச்செல்வன் என்ற பெயரை வைத்துள்ளார்.
இவரது திருமணத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைத்துள்ளார்.
தனபால் தற்போது அவினாசி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்த சட்டமன்ற தொகுதி நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தான் வருகிறது. இதனால் தங்களுக்கு சாதமாக இருக்கும் என கருதி லோகேஷ் தமிழ்ச்செல்வன் களமிறக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவுக்கு, லோகேஷ் தமிழ்ச்செல்வன் கடும் நெருக்கடி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியில் பாரதிய ஜனதாவும் களமிற ங்குவது உறுதியாகி உள்ளது. இதனால் நீலகிரி தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும்.
- கோவை ஈஷா மையத்தின் சத்குரு கடந்த 4 வாரமாக தலைவலியால் அவதிப்பட்டு வந்தார்.
- ஆனாலும் மகா சிவராத்திரி மற்றும் டெல்லியில் நடந்த கூட்டங்களில் சத்குரு பங்கேற்றார்.
கோயம்புத்தூர்:
கோவை ஈஷா மையத்தின் நிறுவனரான சத்குரு கடந்த 4 வாரங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். ஆனாலும், மகா சிவராத்திரியிலும் டெல்லியில் நடந்த மற்ற கூட்டங்களிலும் சத்குரு முழுமையாக பங்கேற்றார்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் சத்குரு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். தற்போது அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை. சத்குருவின் உடல் நிலையில் முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, அப்பல்லோ மருத்துவர் வினித் சூரி கூறுகையில், சத்குரு எங்களால் ஏற்படுத்தப்பட்ட மருத்துவ நடவடிக்கைகளைத் தாண்டி தன்னைத் தானே அவர் குணப்படுத்திக் கொள்கிறார். சூழ்நிலைகள் கடுமையாக இருந்தபோதிலும், மிகவும் சவாலான சூழ்நிலைகளைக் கூட எவ்வாறு அழகாகச் சமாளிக்க முடியும் என்பதை சத்குரு நிரூபித்துக் காட்டுகிறார் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள வீடியோவில், மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட்டு நலமுடன் இருப்பதாகவும், டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
#WATCH | Spiritual guru and founder of the Isha Foundation, Sadhguru Jaggi Vasudev, has undergone emergency brain surgery at Apollo Hospital in Delhi after massive swelling and bleeding in his brain.
— ANI (@ANI) March 20, 2024
(Video source: Sadhguru Jaggi Vasudev's social media handle) pic.twitter.com/ll7I8sGP7o






