என் மலர்tooltip icon

    சென்னை

    • புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகாலை முதல் லேசான மழையும், மேகமூட்டத்துடனும் காணப்படுகிறது.

    கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகாலை முதல் லேசான மழையும், மேகமூட்டத்துடனும் காணப்படுகிறது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், கடலூர், காஞ்சி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.

    தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.

    • மத்திய அரசுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது.
    • எழும்பூரில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் நனைந்தபடி போராட்டம் நடத்தினர்.

    வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி சென்னையில் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மத்திய அரசுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது.

    எழும்பூரில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் நனைந்தபடி போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது:-

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக கொண்டு வருவது ஏன்?

    திடீரென போலி வாக்காளர்களை கண்டு பிடித்தது போல பேசுவது ஏன்?

    ஈரோடு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போட்டது தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா?

    ஒரே மாதத்தில் 6 கோடி வாக்காளர்களை எப்படி சரிபார்க்க முடியும். ஓராண்டு கால அவகாசம் எடுத்து எஸ்ஐஆர் பணிகளை செய்திருக்க வேண்டும்.

    ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கான வாக்காளர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

    எங்களை போன்ற வளர்ந்து வரும் கட்சியினர் எஸ்ஐஆர்-ஐ எப்படி எதிர்கொள்ள முடியும்?

    குறைந்தது ஒரு கோடி பேர் தங்களது வாக்குரிமையை இழப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • உயிரிழந்தோர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    சென்னை:

    தெலுங்கானாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்ட பக்தர்கள் பயணித்த பேருந்து மீது டீசல் லாரி மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர். இதனிடையே, இந்த விபத்தில் இருந்து 24 வயதான வாலிபர் ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.

    நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் தொடர்பாக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அ.தி.முக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தெலங்கானா மாநிலத்தில் இருந்து மெக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டு, மதீனா நகருக்கு செல்லும் வழியில் பேருந்து விபத்தில் சிக்கி 42 இந்தியர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தோர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார். 



    • இந்த விபத்தில் இருந்து ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.
    • இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.

    அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 பேர் பலியானார்கள். இதனிடையே, இந்த விபத்தில் இருந்து ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.

    நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் தொடர்பாக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மதீனா அருகே நடந்த துயரமான பேருந்து விபத்தில் பல இந்திய யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் முழு மருத்துவ சிகிச்சை பெற்று விரைவில் குணமடைவர் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார். 



    • தடம் மாறாத பயணம் - தொற்றா நோய்களின் கட்டுப்பாடு எனச் சாதனை படைத்து, ஐ.நா. விருதை வென்ற திட்டம்
    • களத்தில் உறவென நின்று மக்களைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள மக்களைத் தேடி மருத்துவம்!

    தடம் மாறாத பயணம் - தொற்றா நோய்களின் கட்டுப்பாடு எனச் சாதனை படைத்து, ஐ.நா. விருதை வென்ற இத்திட்டத்தின், 2 கோடியே 50 லட்சமாவது பயனாளியான தஞ்சை மாவட்டம் தென்னங்குடியைச் சேர்ந்த மனோன்மணி அவர்களுக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களுக்கு வாழ்த்துகள்!

    நலமான தமிழ்நாட்டை உருவாக்கிடும் இத்திட்டத்தைக் கண்காணித்து சிறப்புறச் செயல்படுத்திவரும் துறையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், களத்தில் உறவென நின்று மக்களைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார். 



    • பஸ் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது.
    • பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 இந்தியர்கள் பலியானார்கள்.

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.

    அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 இந்தியர்கள் பலியானார்கள்.

    இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 42 பேரின் குடும்பத்தினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில்," தெலுங்கானாவிலிருந்து மக்கா புனிதப்பயணம் சென்ற பேருந்தும் டீசல் லாரியில் மோதிய விபத்தில் 42 இஸ்லாமியர்கள் உயிரிழந்தது அதிர்ச்சி, வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதுடன் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரண உதவி செய்ய வேண்டும்" என்றார்.

    • எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசியல் ரீதியாக எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.
    • புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மாநில தலைவர் வைத்திலிங்கம், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் அனந்தராமன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்த பணிகளை இந்தியா கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

    அதேநேரம் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த பீகார் மாநிலத்திலும் சிறப்பு சீர்திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் செய்து முடித்து தேர்தலையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

    இதற்கிடையில் 2-ம் கட்டமாக 2026-ல் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கடந்த 27-ந்தேதி முதல் வாக்காளர் சிறப்பு சீர்திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இந்த மாநிலங்களில் 51 கோடி வாக்காளர்களின் பெயர்கள், முகவரிகள் சரிபார்க்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    ஆனால் இந்த பணிகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக தொடர்ந்து பல கட்சிகள் புகார் கூறி வருகின்றன. இன்னொரு பக்கத்தில் வாக்காளர்களுக்கு உதவுவதற்காக அரசியல் கட்சியினரும் தேர்தல் ஆணைய அலுவலர்களுக்கு உதவி வருகிறார்கள்.

    எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசியல் ரீதியாக எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.

    தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 5 கோடியே 90 லட்சத்து 13 ஆயிரத்து 184 பேருக்கு சிறப்பு திருத்தத்துக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    சிறப்பு திருத்த பணிகள் நடந்து வரும் 12 மாநிலங்களிலும் உண்மையான கள நிலவரம் என்ன? வாக்காளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? என்பது பற்றி ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டு உள்ளார்.

    இந்த ஆலோசனைக் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திரா பவனில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வரும்படி 12 மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இருந்து மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், மேலிட பொறுப்பாளர்கள் கிரீஸ் சோடங்கர், சூரஜ்ஹெக்டே ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மாநில தலைவர் வைத்திலிங்கம், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் அனந்தராமன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் மாவட்ட தலைவர்களை தேர்வு செய்வதற்காக டெல்லி மேலிடம் அமைத்துள்ள 38 பேர் கொண்ட குழுவுடனும் ராகுல்காந்தி ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் 38 பேரையும் டெல்லிக்கு வரும்படி ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார்கள்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் உருவாகி இருக்கும் கூட்டணி சர்ச்சைகள் தொடர்பாகவும் டெல்லி மேலிடத்தில் பேசுவதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்து உள்ளார்கள். அதற்காக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் ஆகிய 3 பேரும் இன்று பிற்பகலில் டெல்லி செல்கிறார்கள்.

    டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அவர்கள் தங்குவதற்கு அறை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலையில் இந்த தலைவர்கள் தமிழக பொறுப்பாளர்கள் கிரீஸ் சோடங்கர், அகில இந்திய தலைவர் கார்கே ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார்கள்.

    காங்கிரஸ்-த.வெ.க. கூட்டணி ஏற்படலாம். இது தொடர்பாக டெல்லி தலைவர்கள் விஜய்யுடன் பேசி வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே தி.மு.க.வுடனான கூட்டணி முறியலாம் என்ற கருத்தும் காங்கிரசுக்குள் பரவி வருகிறது. தற்போதைய சூழலில் தி.மு.க.வுடன் கூட்டணி நீடிக்க வேண்டும் என்பதையே கட்சியின் மூத்த நிர்வாகிகள் விரும்புகிறார்கள். இது தொடர்பாக தங்கள் கருத்துக்களை டெல்லி தலைவர்களிடம் விளக்குவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    • வார இறுதி நாளான 15-ந்தேதி சவரன் ரூ.92,400-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் உயர்ந்து அனைத்து தரப்பு மக்களையும் விழிபிதுங்க வைத்தது. மேலும் காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என இருவேளையிலும் தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்ததால் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். கடந்த 13-ந்தேதி சவரன் ரூ.95ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. அதனை தொடர்ந்து விலை குறைந்து வார இறுதி நாளான 15-ந்தேதி சவரன் ரூ.92,400-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,540-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.92,320 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 173 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    16-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,400

    15-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,400

    14-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,920

    13-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.95,200

    12-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,800

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    16-11-2025- ஒரு கிராம் ரூ.175

    15-11-2025- ஒரு கிராம் ரூ.175

    14-11-2025- ஒரு கிராம் ரூ.180

    13-11-2025- ஒரு கிராம் ரூ.183

    12-11-2025- ஒரு கிராம் ரூ.173

    • வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களால் நடத்தப்படும் சோதனையில் அது புரளி என்பது தெரியவருகிறது.
    • வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

    தமிழகத்தில் சமீப காலமாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களால் நடத்தப்படும் சோதனையில் அது புரளி என்பது தெரியவருகிறது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் அஜித், அரவிந்த்சாமி, லிவிங்ஸ்டன், நடிகை குஷ்பு மற்றும் இயக்குநர் முருகதாஸ் ஆகியோர் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.

    வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், காவல்துறையினர் சோதனை நடத்தினர். சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்த நிலையில், மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • காமராஜர் நகர், குறிஞ்சி நகர், அண்ணா நெடுஞ்சாலை, நேரு நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (18.11.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    தரமணி: எம்ஜிஆர் சாலை, சாந்தியப்பன் சாலை, கோதண்டராமன் தெரு, பெருங்குடி, ஓஎம்ஆர், காமராஜர் நகர், குறிஞ்சி நகர், அண்ணா நெடுஞ்சாலை, நேரு நகர், கொட்டிவாக்கம், சீனிவாச நகர், ஜெயேந்திரா காலனி, திருவள்ளுவர் தெரு, கற்பக விநாயகர் தெரு, டெலிபோன் நகர், சர்ச் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    • புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகாலை முதல் லேசான மழையும், மேகமூட்டத்துடனும் காணப்படுகிறது.

    சென்னை:

    கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகாலை முதல் லேசான மழையும், மேகமூட்டத்துடனும் காணப்படுகிறது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கன முதல் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
    • இதனால் ஆர்ப்பாட்டம் வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தி.மு.க.வினரால் நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளுக்குக் காரணமான தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்களின் சார்பில் 17.11.2025, திங்கட்கிழமை காலை 10 மணியளவில், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளதால், மேற்கண்ட கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு 20.11.2025, வியாழக்கிழமை காலை 10 மணியளவில், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×