என் மலர்tooltip icon

    சென்னை

    • சிறு, குறு நிறுவனங்களுக்கு 500 யூனிட்டு வரை மின் கட்டண உயர்வு இல்லை என்று கூறப்பட்டுள்ளது
    • தொழில் துறையை காக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழில் நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது மின் கட்டணம் உயர்வு என்பது தொழில்துறையை அரசே நசுக்குவதாக உள்ளது.

    வீட்டு உபயோக மின் பயன்பாடு சாதாரணமாக நடுத்தர குடும்பத்தினருக்கு மாதம் 250 யூனிட்டு என்றாலே இரண்டு மாதத்திற்கு 500 யூனிட்டுக்கு மேல் வந்துவிடும். ஆனால் சிறு, குறு நிறுவனங்களுக்கு 500 யூனிட்டு வரை மின் கட்டண உயர்வு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

    ஆனால் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் மாதாந்திர மின் பயன்பாடு குறைந்தது மாதத்திற்கே 1000 யூனிட்டுக்கு மேல் வரும் நிலையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கட்டண உயர்வு இல்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. தொழில்கள், வணிக நிறுவனங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும்.

    இந்த மின் கட்டண உயர்வின் சுழற்சி இறுதியில் மக்களின் தலையில் தான் சுமை ஏறும் என்பது நிச்சயம். ஆகவே தமிழக அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும், தொழில் துறையை காக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்டு சதிகார காவிக் கூட்டம்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பக்கப்பலமாக நின்று நம் தாய் மண்ணை காப்போம்!

    தி.மு.க. சார்பில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற வீடியோவை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

    தமிழ்நாட்டின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்டு சதிகார காவிக் கூட்டம் நம் மாநில உரிமைகளை பறிக்க துடிக்கிறது.

    தமிழர்களின் மண், மொழி, மானம் காக்க அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஓரணியில் இணைவோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பக்கப்பலமாக நின்று நம் தாய் மண்ணை காப்போம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஸ்டாலின் ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல்.
    • பொம்மை முதல்வரின் தறிகெட்ட ஆட்சியில் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

    மேலும், கழுத்துப் பகுதியில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

    இது முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை!

    ஸ்டாலின் ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல். இதனை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்வந்து விசாரிக்க வேண்டும்.

    இந்த நிலையில், அஜித்குமார் உயிரிழந்ததற்கு காரணம் "வலிப்பு" என FIR பதிவு செய்துள்ளது ஸ்டாலின் அரசின் காவல்துறை.

    "Deja Vu" எல்லாம் இல்லை- விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது மு.க.ஸ்டாலின் எந்த பச்சைப்பொய்யை சட்டப்பேரவையில் கூச்சமின்றி சொன்னாரோ, அதே பொய்யை அப்படியே அஜித்குமாருக்கு மீண்டும் சொல்கிறது ஸ்டாலினின் காவல்துறை.

    நீங்கள் இப்படியெல்லாம் தில்லுமுல்லு செய்வீர்கள் எனத் தெரிந்து தான், எனது அறிவுறுத்தலின்படி, மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் #JusticeForAjithkumar பதாகைகளை ஏந்தி, நீதிக்கான குரலாக ஒலித்தனர்.

    நாடு முழுக்க #JusticeForAjithkumar #NationWithAjith என பெரும் அதிர்வலைகளை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய முதல்வர் முக.ஸ்டாலின் எங்கே ஒளிந்துக் கொண்டிருக்கிறார்?

    "ஆய்வுக் கூட்டம் நடத்துகிறோம்; CBCID-க்கு மாற்றுகிறோம்" என்ற உங்கள் நாடகங்களை சில ஊடகங்கள் நம்பலாம். மக்களும் சரி, நாங்களும் சரி- துளி கூட நம்பவில்லை!

    பொம்மை முதல்வரின் தறிகெட்ட ஆட்சியில் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள்.

    போலீஸின் போலி FIR மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை CBI-க்கு மாற்ற வேண்டும்.

    இக்கொலைக்கு காவல்துறைக்கு பொறுப்பான பொம்மை முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில் அளிக்க வேண்டும்!

    வீடியோ ஷூட் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் ஸ்டாலின் அவர்களே? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்! என்று கூறியுள்ளார். 



    • கடந்த ஒரு வாரமாக குறைந்து வந்த தங்கம் விலை இன்றும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விலை உயர்ந்துள்ளது.
    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.

    இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 71,320 ரூபாய்க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், மாத தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,020 ரூபாய்க்கும் சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72,160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரமாக குறைந்து வந்த தங்கம் விலை இன்றும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    30-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,320

    29-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,440

    28-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,440

    27-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,880

    26-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    30-06-2025- ஒரு கிராம் ரூ.119

    29-06-2025- ஒரு கிராம் ரூ.119

    28-06-2025- ஒரு கிராம் ரூ.119

    27-06-2025- ஒரு கிராம் ரூ.120

    26-06-2025- ஒரு கிராம் ரூ.120

    • போலீஸ்காரர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் சில மோசமானவர்களும் இருக்கிறார்கள்.
    • போலீசாரை நான் கேட்டுக்கொள்ளும் ஒரே விஷயம் கொஞ்சம் மனுஷங்களா நடந்துக்கோங்க... மிருகமா இருக்காதீங்க...

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் தாடி பாலாஜி கண்டன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

    2 நாட்களாக மனசு ரொம்ப நெருடலா இருக்கு... ஒரு சம்பவத்தை பற்றி...

    கோவில் பாதுகாவலர் அஜித் குமார் எந்த தப்பும் செய்யவில்லை. தப்பு பண்ணியிருந்தால் நீங்கள் தண்டனை கொடுப்பது சரி.

    கோவிலுக்கு வருவதே நல்லாயிருக்கணும் என்று வேண்டிக்கொள்ள வருகிறார்கள். இவர்கள் காரில் வந்துவிட்டு பார்க் பண்ண தெரியலைன்னு அந்த தம்பி சொல்லுறாரு. அப்படி இருந்தும் நீங்க போய் சாமி கும்பிட்டுவிட்டு வாங்க.. நான் யாரையாவது வைத்து பார்க் செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

    கோவில் சென்று வந்தவர்கள் வண்டியில் இருந்த நகையை காணவில்லை என்று சொல்கிறார்கள்.

    உடனே ஏன் இவர் மேல் புகார் கொடுக்கிறார்கள்.

    நான் என்ன கேட்கிறேன் இவர் தப்பு செய்தாரா இல்லையா என்று தெரியாமல் ஒருத்தரை அடிப்பதற்கு காக்கி சட்டைக்கு என்ன ரைட்ஸ் இருக்கு...

    ஏற்கனவே சாத்தான்குளத்தில் தந்தை, மகனுக்கு நடந்தது பற்றி பதிவு செய்துள்ளேன்.

    போலீஸ்காரர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் சில மோசமானவர்களும் இருக்கிறார்கள்.

    ஏன்ப்பா... கஞ்சி போட்டு, சட்டையை அயர்ன் பண்ணா விரைப்பா தான் இருப்பியோ...

    அடிக்கும்போது அந்த வாலிபர் கத்தி உள்ளார். வலி இருக்காதா... சக மனுஷனை போட்டு அந்த அடி அடிக்குறீங்களே... நீங்கள் எல்லாம் மனுஷங்களா... காக்கி சட்டை போட்ட எமனுங்களா... அறிவு வேண்டாம்.

    அதாவது மீதி இருக்கும் நாட்களிலாவது அரசாங்கம் இதுபோன்ற விஷயங்களை strict பண்ணி, இந்த மாதிரி விஷயத்தை encourage பண்ணாம இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

    அந்த வாலிபருக்கு நடந்த சம்பவத்தால் மனசு ரொம்ப சங்கடமாக இருக்கிறது.

    போலீசாரை நான் கேட்டுக்கொள்ளும் ஒரே விஷயம் கொஞ்சம் மனுஷங்களா நடந்துக்கோங்க... மிருகமா இருக்காதீங்க... என்று தெரிவித்துள்ளார்.

    • கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
    • வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தோல்வியை மக்கள் பரிசாக அளிப்பார்கள்.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அஜித்குமார் காவல் மரண வழக்கில் மக்கள் மனத்தில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. எந்த அளவிற்குக் கொடூரமாக, மனிதாபிமானம் அறவே அற்று, சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக, தமிழக உள்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் காவல் துறை நடந்துகொள்கிறது என்பதை இந்தச் சம்பவம், வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழக அரசு, முதலில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது. தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்குப் பிறகும், உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தலையீட்டிற்குப் பிறகும் தான் காவல் துறை தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது என்பதை நாடறியும்.

    இந்த ஆட்சியின் போது நடந்த பல்வேறு காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன, அவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவர் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை இந்த அரசு பெற்றுத் தந்துள்ளதா? கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அந்த 24 பேரின் மரணம் தொடர்பாக, வெள்ளை அறிக்கையைத் தமிழ்நாடு உள்துறை அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும்.

    அஜித்குமார் காவல் மரண வழக்கில் காவல் துறையினரே கொலைக் குற்றவாளிகள் என்பதால், இதனைத் தமிழ்நாடு காவல் துறை விசாரித்தால், விசாரணை நியாயமாக நடைபெறாது. எனவே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, விரைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அது போலவே இந்த வழக்கிலும் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும்.

    இத்தகைய கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என்று உள்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உறுதியும் உத்திரவாதமும் அளிக்க வேண்டும். இல்லையேல் பாமர மக்களை வதைக்கும் அதிகார துஷ்பிரயோக மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையிலான இந்த அராஜக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வரலாற்றில் திமுக நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தோல்வியை மக்கள் பரிசாக அளிப்பார்கள் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 17-ந்தேதி வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க கடைசி நாளாகும்.
    • விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்ய ஆட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவி அளிக்க அரசு உத்தரவிட்டுஉள்ளது. மாற்றுத்திறனாளிகள், தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உள்ளாட்சியில் பதவிகளை பெறும் வகையில், சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

    அதன்படி, தற்போது அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும், தலா ஒரு தகுதியான மாற்றுத்திறனாளி நபருக்கு, நியமன கவுன்சிலர் பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக இணைய இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

    பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றத்திற்கு https://chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியிலும், பிற மாநகராட்சி/நகராட்சி மன்றத்திற்கு https://tnurbantree.tn.gov.in/whatsnew என்ற இணையதள முகவரியிலும், பேரூராட்சி மன்றத்திற்கு https://tn.gov.in/dtp அல்லது https://dtp.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் இன்று முதல் 17-ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    வருகிற 17-ந்தேதி வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்ய ஆட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • சாஸ்திரி நகர், காமராஜர் சாலை, வால்மீகி தெரு, ஸ்ரீராம்நகர், குமரகுரு 1 முதல் 4-வது தெரு வரை.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (02.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    பெசன்ட்நகர் : சாஸ்திரி நகர், காமராஜர் சாலை, வால்மீகி தெரு, கலாஷேத்ரா சாலையில் ஒரு பகுதி, லட்சுமிபுரம், ஸ்ரீராம்நகர், குமரகுரு 1 முதல் 4-வது தெரு வரை.

    ஆலந்தூர் : எம்கேஎன் ரோடு, டிவிஏசி காவலர் குடியிருப்புகள், குப்புசாமி காலனி, புதுபேட் தெரு, ஏகாம்பர தபேதர் தெரு, ரெயில்வே ஸ்டேஷன் சாலை, அழகிரி சாலை, வேதகிரி தெரு, மண்டி தெரு, ஜின்னா தெரு, முத்தம்ஜி தெரு, காஜி சாஹிப் தெரு, இப்ராஹிம் தெரு, அஜர்கானா தெரு, லஷ்கர் தெரு.

    பல்லாவரம்: கடப்பேரி அன்னை இந்திரா நகர், நியூ காலனி 12 முதல் 14-வது மெயின் ரோடு, 6-வது குறுக்கு தெரு, உமயாள்புரம், சாரதி தெரு, தபால் அலுவலகம், பழைய டிரங்க் சாலை, பல்லாவரம் பஸ் நிலையம், ஜனதா தியேட்டர், சீனிவாச பெருமாள் கோவில் தெரு, ரங்கநாதன் தெரு, பழைய சன்னதி ரோடு, சர்ச் ரோடு, காவலர் குடியிருப்புகள், ஆர்பி ரோடு தெரேசா பள்ளி, பிள்ளையார் கோவில் தெரு, ஐஜி சாலை, கண்ணபிரான் தெரு, யூனியன் கார்பைடு காலனி, கோவலன் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, நடேசன் சாலை, க்ரஷ் தெரு, பல்லாவரம் கிழக்கு நகரின் பகுதி.

    சோழிங்கநல்லூர் : மாடம்பாக்கம் கண்ணதாசன் தெரு, கருணாநிதி தெரு 1 முதல் 7, விசாலாட்சி நகர், ஜான் தெரு, தாமஸ் தெரு, விக்னராஜபுரம் 6வது தெரு, கோபால்புரம் நகர், விக்னராஜபுரம் மோஹி புளோரன்ஸ், குரு கணேஷ் நகர், பார்தசாரதி நகர், கோவிலம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, காந்தி நகர், சத்யா நகர், கொளத்தூர்.

    அம்பத்தூர் : அடையாளம்பட்டு, கேஜி அபார்ட்மெண்ட்ஸ்.

    • தட்கல் டிக்கெட் மோசடி தொடர்பாக 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து IRCTC நீக்கியது.
    • அரசு அங்கீகரித்த பிற அடையாள ஆவணங்களும் விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ரெயில் முன்பதிவு டிக்கெட்டை பெறுவதற்கு பெரும்பாலானோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்கை பயன்படுத்தி வருகின்றனர். போலி ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்குகளால் தட்கல் முன்பதிவு டிக்கெட் பெறுவதில் பயணிகள் பெரும் சிக்கலை சந்தித்து வந்தனர். இதைத்தொடர்ந்து சுமார் 2½ கோடி போலி ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்குளை ரெயில்வே நிர்வாகம் நீக்கி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

    அதேவேளையில், ஜூலை 1-ந் தேதி முதல் ஆதார் ஓ.டி.பி. அடிப்படையில் மட்டுமே தட்கல் முன்பதிவு டிக்கெட்டுகளை பெற முடியும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது.

    ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்குகளை வைத்துள்ள பயனாளர்கள் தங்களது ஆதாரை இணைக்க ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியது.

    இந்த நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் செயலியில், ஆதார் உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே இன்று முதல் இருந்து 'தட்கல்' டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

    பயனர்களின் அடையாளத்தை உறுதி செய்ய ஆதார் மட்டுமின்றி, அரசு அங்கீகரித்த பிற அடையாள ஆவணங்களும் விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் தொடர்ச்சியான ஞானம் கிடைக்க வாழ்த்துகிறேன்.
    • பிற்போக்குத்தனமான சித்தாந்தங்களுக்கு எதிராக எப்போதும் வலுவாக நிற்க வாழ்த்துகிறேன்.

    இன்று பிறந்தநாளை கொண்டாடும் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் இருவருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

    வெங்கையா நாயுடு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் தொடர்ச்சியான ஞானம் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதேபோல் உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில்,

    உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

    வி.பி.சிங் அவர்களின் மண்ணில் சமூகநீதியின் ஜோதியை முன்னெடுத்துச் சென்று, முற்போக்கான அரசியலுக்கு வழிவகுத்து, உங்கள் தந்தை முலாயம் சிங் அவர்களின் பெருமைமிக்க மரபில், பிற்போக்குத்தனமான சித்தாந்தங்களுக்கு எதிராக எப்போதும் வலுவாக நிற்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • வருகிற 6-ந்தேதி தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னையில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.

    சென்னை :

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற 6-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அந்த வகையில், நெல்லை, தென்காசி, குமரி, தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • ஜூலை மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
    • வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    சென்னை:

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும்.

    அந்த வகையில், ஜூலை மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது

    சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை 57 ரூபாய் 5௦காசுகள் குறைந்து ரூ.1,823.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868-க்கு விற்பனையாகிறது. 

    ×