என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காலை 10 மணிவரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
    X

    காலை 10 மணிவரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    • வருகிற 6-ந்தேதி தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னையில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.

    சென்னை :

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற 6-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அந்த வகையில், நெல்லை, தென்காசி, குமரி, தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×