என் மலர்
நீங்கள் தேடியது "தொழில் துறை"
- சிறு, குறு நிறுவனங்களுக்கு 500 யூனிட்டு வரை மின் கட்டண உயர்வு இல்லை என்று கூறப்பட்டுள்ளது
- தொழில் துறையை காக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொழில் நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது மின் கட்டணம் உயர்வு என்பது தொழில்துறையை அரசே நசுக்குவதாக உள்ளது.
வீட்டு உபயோக மின் பயன்பாடு சாதாரணமாக நடுத்தர குடும்பத்தினருக்கு மாதம் 250 யூனிட்டு என்றாலே இரண்டு மாதத்திற்கு 500 யூனிட்டுக்கு மேல் வந்துவிடும். ஆனால் சிறு, குறு நிறுவனங்களுக்கு 500 யூனிட்டு வரை மின் கட்டண உயர்வு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் மாதாந்திர மின் பயன்பாடு குறைந்தது மாதத்திற்கே 1000 யூனிட்டுக்கு மேல் வரும் நிலையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கட்டண உயர்வு இல்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. தொழில்கள், வணிக நிறுவனங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும்.
இந்த மின் கட்டண உயர்வின் சுழற்சி இறுதியில் மக்களின் தலையில் தான் சுமை ஏறும் என்பது நிச்சயம். ஆகவே தமிழக அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும், தொழில் துறையை காக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சிறந்த போக்குவரத்து அமைப்பு, வேலைவாய்ப்பு பரிமாற்ற செயல்பாடுகள் இவற்றை மையப்படுத்தி இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
- தொழில் முனைவோரின் கருத்துக்களின் அடிப்படையில் தரவரிசை தீர்மானிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
எளிதாக தொழில் தொடங்கும் தரவரிசையில் கேரளா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.
தொழில் துறைக்கு உகந்த சூழலை உருவாக்கியுள்ள மாநிலத்தை தர வரிசைப்படுத்தும் பட்டியலை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வணிகத்தை மையமாக கொண்ட 2 வகை சீர்திருத்தங்கள் மற்றும் ஏழு வகை குடிமக்களை மையப்படுத்திய சீர்திருத்தங்களில் இந்தியாவிலேயே கேரளா முன்னணியில் உள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு இடம் பெறவில்லை.
பரந்த அளவிலான தொழில்கள் செழிக்க ஏதுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதன் வாயிலாக வியாபாரத்தை எளிதாக்குவதில் கேரளா பெரும் முன்னேற்றமும் கண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற தொழில்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இதற்கான விருதை மத்திய மந்திரி பியூஸ்கோயலிடம் இருந்து கேரள தொழில் துறை மந்திரி ராஜீவ் பெற்றுள்ளார்.
இந்த விருதில் ஆந்திரா 2-வது இடத்தையும், குஜராத் 3-வது இடம், ராஜஸ்தான் 4-வது இடம், 5-வது இடத்தில் திரிபுரா, 6-வது இடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது.
தொழில் துறை மற்றும் குடிமக்கள் சேவை சீர்திருத்தங்கள், பயன்பாட்டு அனுமதி வழங்குதல், வரி செலுத்தும் சீர்திருத்தங்கள், ஆன்லைன் ஒற்றை சாரள முறை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் சான்றிதழ் வினியோகம் செயல்முறையை எளிமைப்படுத்துதல், வருவாய்த் துறை வாரியாக வழங்கப்படும் சான்றிதழ்கள், சிறந்த பொது வினியோக அமைப்பு, உணவு வழங்கல் துறையின் செயல்பாடு, சிறந்த போக்குவரத்து அமைப்பு, வேலைவாய்ப்பு பரிமாற்ற செயல்பாடுகள் இவற்றை மையப்படுத்தி இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
தொழில் முனைவோரின் கருத்துக்களின் அடிப்படையில் தரவரிசை தீர்மானிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






