என் மலர்
சென்னை
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த 24 மணி நேரத்தில் விலகக்கூடும். அதே சமயம், வடகிழக்கு பருவமழை, தமிழகம்-புதுவை-காரைக்கால் பகுதிகள், கேரளா மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பிரதேச பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் துவங்கக்கூடும்.
நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, மேற்கு திசையில் நகர்ந்து, இன்று கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 19-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள - கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் இடங்களிலும் கன முதல் மிக கனமழையும், கடலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
16-ந்தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
17-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
19-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
20-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
21-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான - கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 19-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- தற்போது டாஸ்மாக் கடைகளில் 10-க்கும் மேற்பட்ட பீர் வகைகள் விற்கப்படுகின்றன.
- தற்போது தினமும் சராசரியாக டாஸ்மாக் கடைகளில் ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடி வரை விற்பனை நடைபெறுகிறது.
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் அதற்கு முந்தைய 2 நாட்களும் விடுமுறை தினங்கள் ஆகும். இதையொட்டி டாஸ்மாக் கடைகளில் இந்த ஆண்டு தீபாவளியையொட்டி அதிக அளவில் மது விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி தீபாவளி பண்டிகை கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான மதுபானங்களை கையிருப்பில் வைக்க டாஸ்மாக் நிர்வாகம் அதன் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறைகள் வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்களிலும் மதுபானங்கள் தேவை சீராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதால் முக்கியமான இடங்களில் கூடுதல் மதுபானங்களை இருப்பு வைக்க திட்டமிட்டுள்ளோம். முக்கியமாக பீர் வகைகள் அதிக அளவில் இருப்பு வைக்கப்படும்.
தற்போது டாஸ்மாக் கடைகளில் 10-க்கும் மேற்பட்ட பீர் வகைகள் விற்கப்படுகின்றன. அவற்றில் 5 முதல் 7 வகையான பீர்கள் வேகமாக விற்பனையாகின்றன. அந்த 7 வகை பானங்களும் கையிருப்பில் இருப்பதை கண்காணிக்க மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது தினமும் சராசரியாக டாஸ்மாக் கடைகளில் ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடி வரை விற்பனை நடைபெறுகிறது. வார இறுதி நாட்களில் விற்பனை பொதுவாக 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கும். பண்டிகை காலங்களில், வழக்கமாக 15 சதவீதம் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
கடந்த 2023-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது 3 நாட்களில் ரூ.460 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடந்தது. கடந்த 2024-ம் ஆண்டு 2 நாட்களில் ரூ.438 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்ட வாய்ப்புள்ளது.
டாஸ்மாக்கின் தினசரி வருவாயில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் கிட்டத்தட்ட 40 சதவீதம் பங்களிக்கின்றன. விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களில் விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- பூஜ்ஜிய நேரத்தில் முதலில் எதிர்க்கட்சி தலைவருக்கு பேச வாய்ப்பு தராமல் முதலமைச்சரை பேச அனுமதி அளித்தது ஏன்?
- முதலமைச்சர் கூறிய கருத்துகள் அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தோம்.
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தி.மு.க. அமைச்சர்கள் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் கரூர் சம்பவம் குறித்து விவாதிக்க வலியுறுத்தினோம்.
* கரூர் விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் கேள்விகளை எழுப்பிய பின்னர்தான் முதலமைச்சரை பேச சபாநாயகர் அனுமதித்திருக்க வேண்டும்.
* எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பிய பின் தான் முதலமைச்சர் அதற்கு பதில் கூற வேண்டும், முன்னதாகவே விளக்கம் அளித்தது ஏன்?
* பூஜ்ஜிய நேரத்தில் முதலில் எதிர்க்கட்சி தலைவருக்கு பேச வாய்ப்பு தராமல் முதலமைச்சரை பேச அனுமதி அளித்தது ஏன்?
* முதலமைச்சர் கூறிய கருத்துகள் அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தோம்.
* முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் 41 பேரின் உயிர் பறிபோயிருக்காது.
* போதிய பாதுகாப்பு தராமல் அரசு அலட்சியமாக இருந்ததால் 41 பேர் பலி.
இவ்வாறு அவர் கூறினார்.
- இருக்கை வசதிகள் கொண்ட இந்த ரெயிலில் 1300 பேர் உட்கார்ந்து செல்ல முடியும்.
- மதுரையில் இருந்து சென்னைக்கு அன்று இரவே திரும்பும் வகையில் இந்த சேவை அமைகிறது.
சென்னை:
தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு வசதியாக சிறப்பு ரெயில்கள், பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
17, 18, 19 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்கு ரெயில்களில் இடமில்லை. அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன. இதனால் கடைசி நேரத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மேலும் சில சிறப்பு ரெயில்களை இயக்குவதற்கு தெற்கு ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.
குறிப்பாக தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லக் கூடிய மக்கள் வசதிக்காக மதுரை வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலை (மெமு) இயக்குவதற்கு ஆலோசிக்கப்படுகிறது. இந்த ரெயில் 12 பெட்டிகளுடன் பகல் நேரத்தில் இயக்கப்பட உள்ளது.
இருக்கை வசதிகள் கொண்ட இந்த ரெயிலில் 1300 பேர் உட்கார்ந்து செல்ல முடியும். 700 பேர் நின்று கொண்டு பயணம் செய்ய முடியும் என்பதால் 2000 பேர் வரை பயணிக்கலாம்.
கடைசி நேர கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தீபாவளிக்கு முதல் நாள் வீடு சேரும் வகையில் முன்பதிவு இல்லாத ரெயில் விடப்படுகிறது. இதே போல மதுரையில் இருந்து சென்னைக்கு அன்று இரவே திரும்பும் வகையில் இந்த சேவை அமைகிறது.
மேலும் 18-ந்தேதி இரவு எழும்பூரில் இருந்து மதுரை அல்லது நெல்லைக்கு சிறப்பு ரெயில் இரவு 11 மணிக்கு மேல் இயக்கவும் பரிசீலிக்கப்படுகிறது. இது தவிர தீபாவளி முடிந்து சென்னை திரும்ப வசதியாக ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை மாலையில் சிறப்பு ரெயில்களை அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தமிழ் செல்வன் கூறியதாவது:-
ரெயில்களில் உள்ள காத்திருப்போர் பட்டியலை கண்காணித்து வருகிறோம். சென்னையில் இருந்து தென் மாவட்ட பகுதிக்கு செல்ல கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்க ஆலோசித்து வருகிறோம். குறிப்பாக மதுரைக்கு பகல் நேர முன்பதிவு இல்லாத ரெயில் இயக்கப்படும்.
இரவிலும் சில ரெயில்களை இயக்க ஆலோசித்து வருகிறோம். இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளிவரும். காலி ரெயில் பெட்டிகளை கணக்கெடுத்து அதற்கேற்ப சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளோம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் அந்த நாட்களை கணக்கிட்டு கூடுதல் ரெயில்கள் விடப்படும்.
மேலும் பீகார் மாநிலத்துக்கு செல்ல கூடிய ரெயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வட மாநில தொழிலாளர்கள் பயணத்தை தொடங்கியுள்ளனர்.
அவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்து இருக்கிறோம். கூட்ட நெரிசலை குறைக்க நடைமேடை டிக்கெட் நிறுத்தம் செய்வது, காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு தடை விதிப்பது போன்ற கட்டுப்பாடுகள் ஒரு சில முக்கிய ரெயில் நிலையங்களில் செயல்படுத்தப்படும் என்றார்.
- எப்படியாவது கலவரம் செய்ய வேண்டும், வெளிநடப்பு செய்ய வேண்டும் என அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வந்துள்ளனர்.
- தங்கள் கட்சியினர் பாதிக்கப்பட்டிருந்தால் கூட இப்படி ஒரு போர்க்குரல் அ.தி.மு.க.வினரிடம் இருந்து வருமா எனத் தெரியவில்லை.
சென்னை:
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் விளக்கம் அளித்து பேசினர்.
இதனிடையே, சட்டசபையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் பேசினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* கூட்டணிக்காக தான் அ.தி.மு.க. இப்படி செய்கின்றனர்.
* என்ன கூட்டணி அமைத்தாலும் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
* அதிமுக- தவெக கூட்டணி அமைந்தாலும் மக்கள் சரியான பாடம் புகட்டுவர்.
* எப்படியாவது கலவரம் செய்ய வேண்டும், வெளிநடப்பு செய்ய வேண்டும் என அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வந்துள்ளனர்.
* தங்கள் கட்சியினர் பாதிக்கப்பட்டிருந்தால் கூட இப்படி ஒரு போர்க்குரல் அ.தி.மு.க.வினரிடம் இருந்து வருமா எனத் தெரியவில்லை.
* அ.தி.மு.க. எந்த மெகா கூட்டணி அமைத்தாலும் பயன் தராது என்றார்.
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் பேசினர்.
- அ.தி.மு.க.வினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சென்னை :
தமிழ்நாடு சட்டசபையின் 2-ம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. முதலில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார்.
இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கரூர் கூட்ட நெரிசலில் சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களில் தி.மு.க ஸ்டிக்கர் வந்தது எப்படி? அரசியல் செய்வது யார்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விவாதித்தபோது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் பேசினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து, அ.தி.மு.க.வுக்கு இன்று ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக சபாநாயகர் அப்பாவு பேசினார்.
அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் எதை எதை நீக்க வேண்டும் என்று இருக்கையில் அமர்ந்து சொல்லுங்கள் என்று துரைமுருகன் கூறினார்.
இருப்பினும், சபாநாயகர் இருக்கையின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அமைச்சர்கள் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி அ.தி.மு.க.வினர் முழக்கமிட்டனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க மறுத்ததால் அ.தி.மு.க.வினர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தார்கள்.
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அதிகாரிகள் பேட்டி கொடுக்கவில்லையா?
கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியானபோது கள்ளக்குறிச்சி செல்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூருக்கு விரைந்து சென்றது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தார்கள். ஆனால் கரூரில் அப்பாவி மக்கள் இறந்ததால் அங்கு சென்றேன்.
கரூரில் கூட்ட நெரிசலில் அப்பாவி பொதுமக்கள் மிதிபட்டு இறந்ததால் அங்கு உடனடியாக சென்றேன்.
ஒருநபர் ஆணையம் அமைத்த உடனேயே அதிகாரிகள் சம்பவம் குறித்து பேட்டி அளித்தது ஏன் என இ.பி.எஸ். கேள்வி எழுப்பினார்.
அதற்கு, கரூர் விவகாரத்தை திட்டமிட்டு அரசியலாக்கி பொதுவெளியில் வதந்திகள் பரவியதால் தான் அதிகாரிகள் பேட்டி அளித்தனர்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அதிகாரிகள் பேட்டி கொடுக்கவில்லையா?
கரூர் சம்பவம் தொடர்பாக அரசியல் ரீதியாக இல்லை, அலுவல் ரீதியாக மட்டும்தான் அதிகாரிகள் பேட்டி அளித்தனர் என்று கூறினார்.
- 28-ந்தேதி நள்ளிரவு 1.45 மணி அளவில் உடற்கூராய்வு செய்யும் பணிகள் தொடங்கின.
- 5 மேசைகளில் உடற்கூராய்வு நடைபெற்றது.
சென்னை :
தமிழ்நாடு சட்டசபையின் 2-ம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. முதலில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார்.
இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கரூர் கூட்ட நெரிசலில் சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களில் தி.மு.க ஸ்டிக்கர் வந்தது எப்படி? அரசியல் செய்வது யார்? நள்ளிரவு நேரத்தில் பிரேத பரிசோதனை நடைபெற்றது ஏன்? என்ன அவசரம்? 39பேரின் உடல்கள் காலை 8 மணிக்குள்ளாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது ஏன்? என்று பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்து கூறியதாவது:-
* இறந்தவர்கள் குடும்பத்தாரின் மனநிலையை கருத்தில் கொண்டு மனிதநேய அடிப்படையில் விரைவாக உடற்கூராய்வுகள் நடைபெற்றது.
* 28-ந்தேதி நள்ளிரவு 1.45 மணி அளவில் உடற்கூராய்வு செய்யும் பணிகள் தொடங்கின.
* 5 மேசைகளில் உடற்கூராய்வு நடைபெற்றது. 14 மணி நேரமாக உடற்கூராய்வு நடைபெற்றது.
* உடற்கூராய்வு செய்யப்பட்ட நிகழ்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.
* குஜராத் விமான விபத்தின் போது 12 மணி நேரத்தில் உடற்கூராய்வு நடந்து முடிந்தது.
* உடற்கூராய்வில் சந்தேகம் கிளப்புவது ஏற்புடையதல்ல என்றார்.
- நள்ளிரவு நேரத்தில் பிரேத பரிசோதனை நடைபெற்றது ஏன்? என்ன அவசரம்?
- 39பேரின் உடல்கள் காலை 8 மணிக்குள்ளாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது ஏன்?
சென்னை :
தமிழ்நாடு சட்டசபையின் 2-ம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. முதலில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார். இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,
* இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு கட்சிக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது கிடையாது.
* கரூர் கூட்ட நெரிசலில் சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களில் தி.மு.க ஸ்டிக்கர் வந்தது எப்படி? அரசியல் செய்வது யார்?
* நள்ளிரவு நேரத்தில் பிரேத பரிசோதனை நடைபெற்றது ஏன்? என்ன அவசரம்?
* 39பேரின் உடல்கள் காலை 8 மணிக்குள்ளாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது ஏன்?
* ஒரு உடலை உடற்கூராய்வு செய்ய 1.5 மணிநேரம் ஆகும். ஆனால் 8 மணி நேரத்தில் 39 உடல்கள் உடற்கூராய்வு செய்தது எப்படி?
* அமைச்சர்கள் பதில் அளிக்குமாறு முதலமைச்சரே கூறிய போதிலும் சபாநாயகர் தடுப்பது ஏன்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
- சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர்.
- கரூர் பெருந்துயர சம்பவத்தில் காயம் அடைந்த அனைவரும் தற்போது குணமடைந்தனர்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரின் உடல்கள் அவசரமாக கூராய்வு செய்யப்பட்டது குறித்த சர்ச்சைகளுக்கு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கூட்டத்தின் ஒரு பகுதியினர் ஜெனரேட்டர் அறைக்குள் நுழைந்தனர். தகரக்கொட்டகையை அகற்றி வெளியேற முயற்சித்தனர்.
* ஜெனரேட்டர் அறைக்குள் நுழைந்த நிலையில் விபத்தை தவிர்க்க ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தை துண்டித்து இருக்கிறார்.
* கூட்ட நெரிசலில் சிக்கி சோர்வடைந்தவர்கள் உதவி கோரியதால்தான் அங்கிருந்த போலீசார் ஆம்புலன்ஸ் வரவழைத்தனர்.
* உடற்கூராய்விற்காக 24 மருத்துவர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. அதிகாலை 1.47 மணிக்கு முதல் உடற்கூராய்வு தொடங்கப்பட்டது.
* சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர்.
* 24 மருத்துவர்கள், 16 உதவியாளர்கள் என குழு அமைத்து உடற்கூராய்வு நடத்தி உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.
* அதிகாலை 1.47 மணிக்கு தொடங்கிய உடற்கூராய்வு மறுநாள் பிற்பகல் முடிந்து உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.
* கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
* பிணவறையில் 41 உடல்கள் வைக்க வசதி இல்லாததால் தான் விரைவாக உடற்கூராய்வு செய்யப்பட்டது.
* கரூர் ஆட்சியரின் அனுமதி பெற்று முறையாக உடற்கூராய்வு செய்யப்பட்டு 41 பேர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
* கரூர் பெருந்துயர சம்பவத்தில் காயம் அடைந்த அனைவரும் தற்போது குணமடைந்தனர்.
* ரூ.4.84 கோடி அளவுக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து உதவி வழங்கப்பட்டுள்ளது.
* முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 41 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழக்கப்பட்டது.
* சட்டப்படி இவ்விவகாரத்தை அரசு விரைந்து கையாண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி, பிரசார வாகனம் முன்னோக்கி சென்றது.
- நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்சும் கூட்டத்திற்குள் வரவில்லை.
கரூர் பெருந்துயர சம்பவம் நடைபெற்ற உடன் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் அருகே, விஜயை பின் தொடர்ந்து ஏராளமானோர் வந்தனர்.
* அனுமதிக்கப்பட்ட இடத்தில் தான் பேசுவோம் என த.வெ.க. ஏற்பாட்டாளர்கள் பிடிவாதம் பிடித்தனர்.
* கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக த.வெ.க. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
* காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி, பிரசார வாகனம் முன்னோக்கி சென்றது.
* நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்சும் கூட்டத்திற்குள் வரவில்லை.
* அக்சயா மருத்துவமனை அருகே வாகனத்தை நிறுத்தி பிரசாரம் செய்யுமாறு முன்பே அறிவுறுத்தினோம்.
* கூட்ட நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்கத்தான் கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தது.
* கரூர் துயரத்தை கேள்விப்பட்டதும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை
* மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றபோது த.வெ.க. தொண்டர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கியதால் மீட்புப்பணிகள் பாதித்தது.
* கரூர் சம்பவத்திற்கு முன்பு அதே இடத்தில் இ.பி.எஸ். தலைமையிலான 2 கூட்டங்கள் அசம்பாவிதம் இல்லாமல் சிறப்பாக நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கரூர் கூட்ட நெரிசல் போன்ற துயர சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க கூட்டு முயற்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
- காலை முதல் காத்திருந்த மக்களுக்கு த.வெ.க.வினர் உணவு, தண்ணீர் கூட ஏற்பாடு செய்யவில்லை.
கரூர் பெருந்துயர சம்பவம் நடைபெற்ற உடன் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார்.
அப்போது கரூர் பெருந்துயரம் சம்பவம் தொடர்பாக முதலில் எங்களை பேச அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ். முழக்கமிட்டார்.
முதலமைச்சரை பேசவிடாமல் இ.பி.எஸ். உள்ளிட்ட உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். முதலமைச்சர் பேசியதும் வாய்ப்பு தருவதாக சபாநாயகர் கூறினார்.
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* கரூர் சம்பவம் குறித்து அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசுவதற்கு முன்னதாக விளக்கம் அளிக்கிறேன்.
* கரூர் பெருந்துயர சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி, சோகம் ஏற்பட்டது.
* கரூர் கூட்ட நெரிசல் போன்ற துயர சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க கூட்டு முயற்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
* 41 பேர் உயிர்களை பலி கொண்ட கரூர் துயர சம்பவம் மனதை உலுக்கியது.
* த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கேட்டதால் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
* 3 கூடுதல், 5 துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 517 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
* அனுமதி அளிக்கப்படும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால் அனுமதி வழங்கவில்லை.
* கரூர் த.வெ.க. பிரசாரத்திற்கு வழக்கத்தை விட அதிக போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது.
* மதியம் 12 மணிக்கு த.வெ.க. தலைவர் கரூர் வருவார் என அறிவிப்பு வந்ததால் மக்கள் கூடினர்.
* 7 மணி நேரம் தாமதம் தான் மக்கள் அதிக அளவில் கூடுவதற்கு காரணம் ஆகி விட்டது.
* போதிய குடிநீர், உணவு போன்ற எந்த வசதிகளையும் ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை.
* காலை முதல் காத்திருந்த மக்களுக்கு த.வெ.க.வினர் உணவு, தண்ணீர் கூட ஏற்பாடு செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






