குன்னூரில் கிணற்றில் பிணமாக மிதந்த சிறுமி கற்பழித்து கொலையா?

குன்னூரில் 4-ம் வகுப்பு மாணவி கிணற்றில் பிணமாக மிதந்தார். அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
என் வாத்தியாரை நினைக்காமல் இருக்க முடியாது- கமல்ஹாசன்

அரசியல் ஆதாயத்திற்காக ராமாபுரம் தோட்ட இல்லத்திற்கு வரவில்லை என்றும் எம்ஜிஆர் போட்ட அஸ்திவாரத்தில் எனக்கும் பங்கு உண்டு என்றும் கமல்ஹாசன் பேசினார்.
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகம் முழுவதும் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் 234 தொகுதியிலும் தி.மு.க. வெற்றி பெறும்- மு.க.ஸ்டாலின் பேச்சு

வருகிற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெரும். அ.தி.மு.க. எதிர்கட்சியாகக் கூட வராது என்று முக ஸ்டாலின் பேசியுள்ளார்.
விபத்து இல்லாத தமிழகம் உருவாக சாலை விதிகளை மதியுங்கள்- எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து, விபத்துகளை தவிர்த்து, விலைமதிப்பற்ற தங்களின் உயிர்களை பாதுகாத்து, விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட மக்கள் உதவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு கலெக்டர் அலுவலகங்கள் முன்பு 29-ந்தேதி பாமக போராட்டம்- ராமதாஸ்

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு கலெக்டர் அலுவலகங்கள் முன்பு 29-ந்தேதி பாமக போராட்டம் நடைபெறும் என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குமரியில் மீண்டும் பலத்த மழை- பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்

பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் இன்று காலையில் நிறுத்தப்பட்டது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 46.15 அடியாக இருந்தது.
பா.ஜனதா முதல்-அமைச்சர் வேட்பாளர் என கோஷமிட்டு அமைச்சர் நமச்சிவாயத்திற்கு வரவேற்பு

மண்ணாடிப்பட்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் தமிழ்மணி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது விழாவிற்கு வந்த அமைச்சர் நமச்சிவாயத்தை பா.ஜனதா முதல்- அமைச்சர் என கோஷமிட்டு வரவேற்றனர்.
சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
கண்டெய்னர் லாரி மோதி படுகாயமடைந்த ஆண் யானை சிகிச்சை பலனின்றி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கண்டெய்னர் லாரி மோதியதில் படுகாயமடைந்த ஆண் யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பாக டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நெல்லையில் வீடுகள் இடிந்து 2 பேர் பலி

நெல்லையில் வீடுகள் இடிந்து 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற வாலிபர் ஒடிசா தப்பினார்- கைது செய்ய தனிப்படை விரைந்தது

செங்குன்றத்தில் மனைவியின் கள்ளக்காதலனை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர் ஒடிசாவுக்கு தப்பி சென்றார். அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
ஓசூர் அருகே நள்ளிரவில் கார் டயர் வெடித்து ரோட்டில் கவிழ்ந்தது- 2 வாலிபர்கள் பலி

ஓசூர் அருகே நள்ளிரவில் கார் டயர் வெடித்து ரோட்டில் கவிழ்ந்து 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 மாதங்களாக நீடிக்கும் தடை- சின்னசுருளி அருவிக்கு வரும் மக்கள் ஏமாற்றம்

சின்னசுருளி அருவிக்கு வரும் மக்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்துவதால் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை தூரத்தில் இருந்தே பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
விருத்தாசலம் பகுதியில் தொடர் மழை- 1,000 ஏக்கர் நெற்பயிர் முளைத்தது

விருத்தாசலம் பகுதியில் கடந்த 1 வாரமாக பெய்து வரும் தொடர் மழையால் 1,000 ஏக்கர் நெற்பயிர் முளைத்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மீண்டும் அச்சுறுத்தும் மழை

கொடைக்கானலில் 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் மழை அச்சுறுத்தி வருகிறது.
எடப்பாடி அருகே மக்கள் கிராம சபை கூட்டம்- மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நாளை நடைபெற உள்ள மக்கள் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
மரக்காணம் அருகே கடலில் குளித்த மாணவன் மாயம்: 2-வது நாளாக தேடுதல் பணி தீவிரம்

மரக்காணம் அருகே காணும் பொங்கலையொட்டி கடலில் குளித்த மாணவன் மாயமானார். அவரை தேடும் பணி 2-வது நாளாக தொடர்ந்தது.
சாத்தூர் அருகே யூனியன் அலுவலக காவலாளி மர்ம மரணம்

சாத்தூர் அருகே யூனியன் அலுவலக காவலாளி மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ரூ.21 லட்சம் மோசடி- தேர்வுத் துறை அதிகாரி கைது

கோவையில் மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்த தேர்வுத் துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.