என் மலர்
மேற்கு வங்காளம்
- கவர்னர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
- இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.மம்தா பானர்ஜி மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார்.
மேற்கு வங்கத்தில் கவர்னராக இருப்பவர் ஆனந்த் போஸ். மாநில அரசுக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்திற்காக தற்போது மேற்கு வங்கம் வந்துள்ளார். அவர் இரவில் ராஜ்பவனில் தங்க உள்ளார். இந்நிலையில் தற்போது திடீர் திருப்பமாக ராஜ்பவனில் பணியாற்றும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர், கவர்னர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
அங்குள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் அவர் புகார் கொடுத்துள்ளார். உடனே அவரை போலீசார் 'ஹரே தெரு' காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் எழுத்துப்பூர்வமாக கவர்னர் மீது புகார் கொடுத்தார்.

அதில் தன்னை கவர்னர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி 2 நாள் பிரசார பயணத்திற்கு வந்துள்ளதால் தற்போது இது தொடர்பாக விசாரணை செய்ய வரும் போலீசாரை ராஜ் பவனுக்குள் நுழைய கவர்னர் தடை விதித்து உள்ளார்.
- நான் மக்களுக்கு சேவை செய்ய எனது வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்புகிறேன்.
- காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தேர்தலுக்கு முன்பே தோல்வி பயத்தில் தொகுதிக்கு வராமல் இருக்கிறார்கள்.
மேற்குவங்கம்:
உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் 15 தொகுதி வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை மட்டும் அறிவிக்காமல் இருந்தது
இதனிடையே அமேதியில் ராகுலும், ரேபரேலி தொகுதியில் பிரியங்காவும் களம் இறக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீண்ட இழுபறிக்கு பிறகு ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும், கே.எல். சர்மா அமேதி தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதை மேற்குவங்கத்தில் இன்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகளால் வளர்ச்சியை கொண்டு வர முடியாது. வாக்குக்காக சமூகத்தை பிளவுபடுத்துவது மட்டுமே அவர்களுக்கு தெரியும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர், பாகீரதியில் வெறும் 2 மணி நேரத்தில் இந்துக்களை மூழ்கடித்து விடுவார்கள் என்று வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இது என்ன பேச்சு மற்றும் அரசியல் கலாச்சாரம்? இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. மேற்கு வங்கத்தில் இந்துக்களை இரண்டாம் குடிமக்களாக திரிணாமுல் காங்கிரஸ் ஆக்கியது போல் தெரிகிறது.
சந்தேஷ்காலியில் எங்கள் தலித் சகோதரிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது. இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை எழுந்தது. ஆனால் குற்றவாளியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாதுகாத்தது.
இதற்கு குற்றவாளியின் பெயர் ஷாஜகான் ஷேக் என்பதுதான் காரணமா? ஒரு வாக்கு வங்கி மனித நேயத்திற்கு மேல் இருக்க முடியுமா?
காங்கிரஸ் வெளிப்படையாகவே ஓட்டு ஜிகாத்தை ஆதரிக்கிறது. அதை இந்தியா கூட்டணியும் ஆதரிக்கிறது.
அரசியலமைப்பை மாற்றவும், தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டைப் பறிக்கவும், ஜிகாதி வாக்கு வங்கிக்கு இடஒதுக்கீடு வழங்கவும் காங்கிரஸ் விரும்புகிறது.
இங்கு நான் தலித், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் சகோதரர்களுக்காக வந்துள்ளேன். எஸ்.சி, எஸ்.டி.யினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும். பிற்படுத்தப்பட்டோருக்கு எதிர்க்கட்சிகள் எதுவும் செய்யவில்லை. வாக்கு வங்கி அரசியலை எதிர்க்கட்சிகள் நிறுத்தி கொள்ள வேண்டும்.
நான் மக்களுக்கு சேவை செய்ய எனது வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்புகிறேன்.
மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாகத் தருமாறு காங்கிரசுக்கு நான் சவால் விடுத்தேன். ஆனால் அவர்கள் பதில் கூறாமல் அமைதியாக இருக்கிறார்கள்.
காங்கிரஸ் இளவரசர் (ராகுல்காந்தி) மிகவும் பயந்து போய் இருக்கிறார். அவர் அமேதி தொகுதியை பார்த்து அங்கு போட்டியிடாமல் பயந்து ஓடி விட்டார். தற்போது அவர் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். அமேதியில் போட்டியிட பயம் ஏற்பட்டதால் தொகுதி மாறியுள்ளார்.

ராகுல்காந்தி ஏற்கனவே தோல்வி பயத்தில் உள்ளார். அவர் வயநாடு தொகுதியில் தோல்வியை சந்திப்பார். ரேபரேலி தொகுதியில் அவருக்கு தோல்விதான் ஏற்படும்.
வயநாட்டில் தோற்று விடுவோம் என அவருக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது. இதனால் அவர் புதிய தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கும் அவருக்கு தோல்வி காத்திருக்கிறது.
அடுத்து அவர் மூன்றாவது தொகுதியை தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தேர்தலுக்கு முன்பே தோல்வி பயத்தில் தொகுதிக்கு வராமல் இருக்கிறார்கள்.
அச்சப்பட வேண்டாம் என அனைவரையும் பார்த்து கூறும் அவர்கள், அமேதி தொகுதியை பார்த்து அச்சப்படுகின்றனர்.
நான் அவர்களை பார்த்து கூறுகிறேன் அச்சப்பட வேண்டாம். ஓடி, ஒளிய வேண்டாம்.
சோனியா காந்தி தேர்தலில் போட்டியிட பயந்து மேல்சபை எம்.பி ஆகி உள்ளார். இப்படிப்பட்டவர்களால் எப்படி ஆட்சி அமைக்க முடியும்? என்றார்.
- இந்த வருடம் நாம் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பத்தை சந்தித்து வருகிறோம்.
- கடந்த சில வருடங்களில் நாம் ஏப்ரல் மாதம் இதுபோன்ற வெப்பத்தை எதிர்கொண்டது கிடையாது.
பெங்கால் சூப்பர் ஸ்டார் தேவ் (தீபக் அதிகாரி) திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கட்டல் (Ghatal) மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். 3-வது முறையாக தொடர்ந்து களம் காண்கிறார்.
இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரத்த தானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
ரத்த வங்கிகள் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. ரத்த தானம் செய்வது மிகப்பெரிய பணி. மக்கள் ரத்த தானம் செய்ய வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். ரத்த தானம் செய்வது யாரோ ஒருவருக்கு புதிய வாழ்வு கொடுப்பதாகும்.
இந்த வருடம் நாம் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பத்தை சந்தித்து வருகிறோம். கடந்த சில வருடங்களில் நாம் ஏப்ரல் மாதம் இதுபோன்ற வெப்பத்தை எதிர்கொண்டது கிடையாது. ஆகவே, மரங்கள் நடும் இந்த முயற்சியை எடுத்துள்ளேன். நான் 9 லட்சம் வாக்குகள் பெற்றால், 9 லட்சம் மரங்கள் நடுவேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவரை எதிர்த்து பா.ஜனதா ஹிரன் சட்டர்ஜி என்ற பெங்கால் நடிகரை களம் இறக்கியுள்ளது. காங்கிரஸ் ஆதரவில் சிபிஐ தபன் கங்குலியை நிறுத்தியுள்ளது. இந்த தொகுதிக்கு மே 25-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
- திரிணாமுல் கட்சிக்கு வாக்களிப்பது பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பது போன்றது என்றார்.
- ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பா.ஜ.க.வின் பி டீம் என திரிணாமுல் குற்றம்சாட்டியது.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தின் மூர்ஷிதாபாத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து நடந்த தேர்தல் பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த முறை 400 இடங்கள் கிடைக்காது. ஏற்கனவே பிரதமர் மோடியின் கையிலிருந்து 100 இடங்கள் நழுவிவிட்டன.
காங்கிரசையும், சி.பி.ஐ(எம்)யையும் வெற்றிபெறச் செய்வது அவசியம்.
காங்கிரசும், சி.பி.எம்.மும் வெற்றிபெறவில்லை என்றால் மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது என்பது பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பது போன்றது.
எனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதைவிட பாஜகவுக்கு வாக்களிப்பது நல்லது.
ஆகவே திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காதீர்கள். காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என தெரிவித்தார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வின் குரலாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இருக்கிறார். அவர் பா.ஜ.க.வின் பி டீம் என குற்றம்சாட்டியது.
- தபாஸ் ராய் உண்மையான தலைவர். அவருடைய கதவு கட்சியின் தொண்டர்கள் மற்றும் மக்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும்.
- பல தசாப்தங்களாக அவரை எனக்குத் தெரியும். துரதிருஷ்டவசமாக அவரது வழி தற்போது மாறுபட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ். இவர் பா.ஜனதா வேட்பாளருடன் மேடையில் தோன்றியதுடன், அவரை பாராட்டி பேசியுள்ளார். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குணால் கோஷை மாநில பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுளள்து.
கட்சியின் கொள்கைக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் நீக்கப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் அடுத்த தலைமுறை தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட குணால் கோஷ், கடந்த மாதம் செய்தி தொடர்பாளர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் பதவிகளை ராஜினாமா செய்ய விருப்பும் தெரிவித்திருந்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அவருடைய செய்தி தொடர்பாளர் பதவிக்கான ராஜினாமாவை ஏற்றுக் கொண்டது. மற்ற பதவிகளில் நீடிக்க கேட்டுக் கொண்டது.
இருந்த போதிலும் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்தார். அவரது அறிக்கைக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கொல்கத்தாவின் வடக்கு தொகுதியின் சுதிப் பந்தோபாத்யாய் பேரணியில் குணால் கோஷ் கலந்து கொள்ளவில்லை. ஆனால், பா.ஜனதா வேட்பாளர் தபாஸ் ராய் நடத்திய ரத்த தானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் குணால் கோஷ் பேசும்போது "தபாஸ் ராய் உண்மையான தலைவர். அவருடைய கதவு கட்சியின் தொண்டர்கள் மற்றும் மக்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும். பல தசாப்தங்களாக அவரை எனக்குத் தெரியும். துரதிருஷ்டவசமாக அவரது வழி தற்போது மாறுபட்டுள்ளது.
தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறும் என்றும், பதவியை தக்கவைக்க எந்த விதமான நேர்மையற்ற வழிமுறைகளும் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் நான் நம்புகிறேன். மக்கள் அவர்களுடைய வாக்குகளை சுதந்திரமாக வாக்களிக்கட்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான் மாநில பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
- முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்கு சதவீதத்தை பார்த்த பிறகு, பா.ஜனதா தோல்வியடையும் என்பதை நாம் உறுதியாக நம்ப முடியும்.
- மீதமுள்ள ஐந்து கட்ட தேர்தல்களிலும் அவர்கள் தோல்வியை சந்திப்பார்கள்.
சிறுபான்மையினர் அதிக அளவில் வசிக்கும் முர்ஷிதாபாத், ஜாங்கிபுர் மக்களவை தொகுதிகளில் மம்தா பானர்ஜி அடுத்தடுத்து தேர்தல் பிரசார பேரணியில் கலந்த கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் வரும்போதெல்லாம் அவர்கள் ஒரு விசயத்தை பயன்படுத்துவார்கள் அல்லது வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்துவார்கள். இந்த முறை அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக பொது சிவில் சட்டத்தை எடுத்துள்ளார்கள். அது குறித்து பரப்புரை செய்கிறார்கள். தேர்தல் சொல்லாடலைத் தவிர அதில் வேறு ஏதும் இல்லை. இதனால் இந்துக்கள் எந்த வகையிலும் பயனடையமாட்டார்கள்.
வாக்குமுறை மற்றும் முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்கு சதவீதத்தை பார்த்த பிறகு, பா.ஜனதா தோல்வியடையும் என்பதை நாம் உறுதியாக நம்ப முடியும். மீதமுள்ள ஐந்து கட்ட தேர்தல்களிலும் அவர்கள் தோல்வியை சந்திப்பார்கள். பா.ஜனதாவுக்கு பயம் மற்றும் பீதி ஏற்பட்டுள்ளது. தற்போது காவி முகாம் தோற்கடிக்கப்பட வேண்டும்.
யாராவது ஒருவர் தவறில் ஈடுபட்டால், அதை சரி செய்து கொள்ள முடியும். ஆனால், 26 ஆயிரம் வேலைகளை (ஆசிரியர்கள் வேலை நியமனம் செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது) பறித்தது ஏற்றுக் கொள்ள முடியாதது. இது பா.ஜனதாவின் சூழ்ச்சி. உங்களின் வேலைகளை பறித்த அவர்களுக்கு வாக்கு அளிக்காதீர்கள்.
சிஏஏ சட்டப்பூர்வமான குடிமக்களை வெளிநாட்டினர்களாக்குவதற்கான பொறியாகும். சிசிஏ-வை அமல்படுத்தினால், என்.ஆர்.சி. பின்பற்றப்படும். நாங்கள் இரண்டையும் மேற்கு வங்காளத்தில் அனுதிக்கமாட்டோம். அவர்கள் என்ஆர்சி-யை பயன்படுத்த விரும்புகிறார்கள். நான் அனுதிக்கமாட்டேன்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுப்பட்டார்.
- உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர்.
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த மார்ச் மாதம் கொல்கத்தாவில் உள்ள காளிகாட் வீட்டில் கீழே விழுந்ததில் அவருக்கு நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டது. 69 வயதான அவர், கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தது வந்தார். பின்னர் பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுப்பட்டார்.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று பிரசாரத்தில் ஈடுப்பட்டார். பிரசாரம் முடிந்து துர்காபூர் பகுதியில் ஹெலிகாப்டரில் ஏறும்போது நகரக்கூடிய படிக்கட்டுகளில் மம்தா நடந்து சென்ற போது நிலை தடுமாறி கால் தவறி கீழே விழுந்தார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
நிலை தடுமாறி தவறி விழுந்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர். பின்னர் மம்தா தனது பயணத்தை தொடர்ந்தார்.
அசன்சோலுக்குச் செல்வதற்காக துர்காபூரில் இருந்து சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- சந்தேஷ்காலியில் உள்ள ஒரு காலி இடத்தில் சிபிஐ வேண்டுமென்றே சோதனை.
தேர்தல் நாளில் சந்தேஷ்காலியில் சிபிஐ சோதனை நடத்தியதற்கு எதிராக மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மக்களவைத் தேர்தலின் போது அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸின் (AITC) நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், தேர்தல் நாளன்று, மேற்கு வங்க மாநிலம், சந்தேஷ்காலியில் உள்ள வெற்று இடத்தில், சிபிஐ நேர்மையற்ற சோதனையை நடத்தியுள்ளது.
பலமுறை பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட போதிலும், மத்திய புலனாய்வு அமைப்புகள் நாடு முழுவதும், குறிப்பாக தேர்தல் காலத்தில் சோதனை மேற்கொண்டு வருகிறது. அவற்தை தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் உள்ளது.
2ம் கட்ட வாக்குப்பதிவான நேற்று, குறிப்பாக மேற்கு வங்கத்தில், டார்ஜிலிங், ராய்கஞ்ச் ஆகிய மூன்று பாராளுமன்றத் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிக்கத் திரண்டிருந்தனர்.
தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது, சந்தேஷ்காலியில் உள்ள ஒரு காலி இடத்தில் சிபிஐ வேண்டுமென்றே கண்ணியமற்ற சோதனையை நடத்தியது.
தேசிய பாதுகாப்புப் படையின் (என்எஸ்ஜி) வெடிகுண்டு படை உள்ளிட்ட கூடுதல் படைகளை சிபிஐ வரவழைத்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான சோதனையின் போது வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக, "சட்டம் ஒழுங்கு" என்பது முற்றிலும் மாநில அரசின் வரம்பிற்கு உட்பட்டது என்றாலும், சிபிஐ அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன் மாநில அரசு மற்றும்/அல்லது காவல்துறை அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய அறிவிப்பை வெளியிட வேண்டும். ஆனால் வெளியிடவில்லை.
மேலும், மாநில காவல்துறையில் முழுமையாக செயல்படும் வெடிகுண்டு செயலிழக்கும் குழு உள்ளது. இது போன்ற சோதனையின் போது வெடிகுண்டு படை தேவை என்று சிபிஐ கூறியிருந்தால், முழு நடவடிக்கைக்கும் உதவியிருக்க முடியும்.
இருப்பினும், அத்தகைய உதவி எதுவும் கோரப்படவில்லை.
அரசு நிர்வாகம் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பே இதுபோன்ற சோதனையின்போது ஊடகவியலாளர்கள் உடனிருந்தனர் என்பது மேலும் ஆச்சரியமாக உள்ளது.
இந்த நேரத்தில், சோதனையின் போது ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக ஏற்கனவே நாடு முழுவதும் செய்தியாக இருந்தது. இந்த ஆயுதங்கள் உண்மையில் தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையின் போது மீட்கப்பட்டதா அல்லது சிபிஐ/என்எஸ்ஜியால் ரகசியமாக புதைக்கப்பட்டதா என்பதை உறுதியாக அறிய வழி இல்லை.
மேற்குறிப்பிட்ட சம்பவங்களின் முழு வரம்பும், சிபிஐ வேண்டுமென்றே ஊடகங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்ததைக் குறிக்கிறது. இதனால் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அதன் வேட்பாளர்களுக்கு எதிராக நாடு முழுவதும் அவமதிப்பு உள்ளது.
அதனால், தேர்தல் காலத்தில் சிபிஐ உட்பட எந்த ஒரு மத்திய புலனாய்வு நிறுவனத்தாலும் அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் செயல்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத வகையில் உடனடி வழிகாட்டுதல்கள்/கட்டமைப்பை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- நாட்டின் பாதுகாப்பிற்காக நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் திரும்பப் பெற விரும்புகிறார்கள்.
- திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் மாநிலத்தில் மோதலில் இருப்பது போல் பாசாங்கு செய்கின்றன.
கொல்கத்தா:
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலம் வடக்கு மால்டாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
இந்தியாவின் வளர்ச்சிக்கு மேற்கு வங்காளம் ஒரு காலத்தில் உந்துதலாக இருந்தது. சமூக சீர்திருத்தங்கள், அறிவியல், தத்துவ, ஆன்மிக முன்னேற்றங்கள் மற்றும் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தாலும் கூட முக்கிய பங்காற்றியது. ஆனால் முதலில் இடதுசாரிகளும் பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், மாநிலத்தின் பெருமையையும், மரியாதையையும் குலைத்து, வளர்ச்சியைக் கூட தடுத்தது.
திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கு வங்காளத்தில் பல ஆயிரம் கோடி ஊழல் மட்டுமே நிலவுகிறது. மத்திய அரசு வழங்கிய நிதி திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த கட்சி செய்த ஊழல்களுக்கு மக்கள் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.
பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தன. அதே நிலைதான் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் அவர்களுக்கு காத்திருக்கிறது.
நாட்டின் பாதுகாப்பிற்காக நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் திரும்பப் பெற விரும்புகிறார்கள். இந்திய கூட்டணி 370-வது பிரிவை ரத்து செய்ய விரும்புகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் சொல்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தின் பல பயனாளிகளில் தலித்துகளும் அடங்குவர். இந்திய கூட்டணி உங்களது சொத்துக்களை கொள்ளையடிக்க பார்க்கிறது.
ஏழை மக்களின் சொத்துக்கள் அனைத்தையும் விசாரிக்கப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து எக்ஸ்ரே மிஷின் கொண்டு வந்து, நாட்டில் உள்ள அனைவருக்கும் எக்ஸ்ரே எடுப்பார்கள், நகை, சொத்து உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் கைப்பற்றி, அதில் ஒரு பகுதியை தங்கள் வாக்கு வங்கிக்கு கொடுக்க நினைக்கின்றனர். ஆனால் அதற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாமல் திரிணாமுல் காங்கிரஸ் அமைதி காத்து ஆதரவளிக்கிறது.
வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு உங்களது நிலங்களை கொடுத்து அவர்களை இங்கு திரிணாமுல் காங்கிரஸ் குடியமர்த்துகிறது. இந்த வாக்கு வங்கிக்கு உங்கள் சொத்துக்களை கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. நீங்கள் உயிருடன் இருக்கும்போதும், இறந்த பிறகும் கூட காங்கிரஸ் உங்களை கொள்ளையடிக்கும்.
திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் மாநிலத்தில் மோதலில் இருப்பது போல் பாசாங்கு செய்கின்றன. ஆனால் உண்மையில் இந்த இரு கட்சிகளின் குணமும் சித்தாந்தமும் ஒன்றுதான். திருப்திப்படுத்துவது அந்த கட்சிகள் இடையே பொதுவான விஷயம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- நாடு முழுவதும் வெப்ப அலை வீசி வருகிறது. இருப்பினும், 7 கட்டமாக தேர்தல் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
- ராஜ்நாத்சிங்கோ அல்லது நிதின் கட்காரியோ பிரதமர் ஆகியிருக்கலாம்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் போல்பூர் பாராளுமன்ற தொகுதியில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
நாடு முழுவதும் வெப்ப அலை வீசி வருகிறது. இருப்பினும், 7 கட்டமாக தேர்தல் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
முன்பெல்லாம் மே 2 அல்லது 3-ந்தேதியுடன் தேர்தல் பணிகள் முடிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு கடுமையான வெயிலுக்கிடையே 3 மாதங்களாக இழுக்கின்றனர்.
பா.ஜனதாவை திருப்திப்படுத்தவே தேர்தல் கமிஷன் 3 மாத காலத்துக்கு 7 கட்டமாக தேர்தலை ஏற்பாடு செய்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
துர்காபூர்-பர்தாமன் தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
அவர் தற்போது மோடியின் கருணையால் வாழ்ந்து வருகிறார். தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள மோடிக்கு தினமும் வணக்கம் வைக்கிறார்.
ராஜ்நாத்சிங்கோ அல்லது நிதின் கட்காரியோ பிரதமர் ஆகியிருக்கலாம். அப்படியென்றால் பிரச்சனை இருக்காது. கொஞ்சமாவது மரியாதை தெரிந்த ஒரு ஜென்டில்மேன் பிரதமர் பதவியில் இருக்கும் திருப்தி கிடைக்கும்.
ராஜ்நாத்சிங்குக்கு மரியாதையுடன் சொல்லிக் கொள்கிறேன். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, பொது சிவில் சட்டம் ஆகியவற்றை அமல்படுத்துவதை எதிர்ப்போம். நீங்கள் எவ்வளவு வலிமையானவர் என்று பார்த்து விடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கட்சிகளை உடைக்கும் விளையாட்டில் இறங்க பா.ஜனதா முயற்சி செய்தும், அதில் வெற்றி பெற முடியவில்லை.
- எங்கள் கட்சியில் இருந்து இரண்டு எம்.பி.க்களை அவர்கள் இழுத்துக் கொண்டனர்.
மேற்கு வங்காளத்தில் உள்ள முர்சிதாபாத் மக்களவை தொகுதிக்கான பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி ரோடு ஷோ நடத்தினார்.
அப்போது அபிஷேக் பானர்ஜி கூறியதாவது:-
கட்சிகளை உடைக்கும் விளையாட்டில் இறங்க பா.ஜனதா முயற்சி செய்தும், அதில் வெற்றி பெற முடியவில்லை. எங்கள் கட்சியில் இருந்து இரண்டு எம்.பி.க்களை அவர்கள் இழுத்துக் கொண்டனர். அதற்குப் பதிலாக அவர்களுடைய எம்.பி.க்கள் அர்ஜுன் சிங், பாபுல் சுப்ரியோ எங்கள் கட்சியில் இணைந்தனர்.
சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனையை பயன்படுத்தி தபாஸ் ராய்-ஐ இணைத்துக் கொண்டது. பா.ஜனதாவின் குறைந்தது டாப் 10 தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய வரிசையில் உள்ளனர். சரியான நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது கதவை திறக்கும். பா.ஜனதா மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்படும்" என்றார்.
இதற்கு பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சமிக் பட்டச்சார்யா பதில் கூறுகையில் "இது தொடர்பாக கூறுவதில் ஒன்றுமே இல்லை. மேற்கு வங்காளத்தில் தோல்வியை சந்திக்க இருக்கும் விரக்தியில் அரசியல் சொல்லாடல்தான் இது. மக்களவை தேர்தல் முடிந்த உடன், திரிணாமுல் காங்கிரஸ் அட்டை பெட்டை போல் சிதைந்து போகும்" என்றார்.
- பா.ஜனதா வேட்பாளர் ராஜு பிஸ்டாவை ஆதரித்து சிலிகுரியில் உள்ள ஹில் கார்ட் சாலையில் பா.ஜனதா ரோடு ஷோ நடத்தியது.
- மத்திய மந்திரிகள் கிரண் ரிஜிஜு மற்றும் நிசித் ப்ரமாணிக், மேற்கு வங்காள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுவேந்தி அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ராஜு பிஸ்டாவை ஆதரித்து சிலிகுரியில் உள்ள ஹில் கார்ட் சாலையில் பா.ஜனதா ரோடு ஷோ நடத்தியது.
இதில் மத்திய மந்திரிகள் கிரண் ரிஜிஜு மற்றும் நிசித் ப்ரமாணிக், மேற்கு வங்காள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுவேந்தி அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது EVM தொடர்பாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், இது தொடர்பாக சுவேந்து அதிகாரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு சுவேந்தி அதிகாரி "EVM குறித்து அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். காங்கிரஸ் கட்சி கர்நாடகா மற்றும் தெலுங்கானா தேர்தலில் வெற்றி பெற்றபோது EVM சரியானது. பா.ஜனதா தலைமையிலான என்.டி.ஏ. 400 இடங்களுக்கு மேல் பிடிக்கும் வகையில சென்று கொண்டிருக்கிறது" என்றார்.






