என் மலர்tooltip icon

    உத்தரகாண்ட்

    • தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்டின் டேராடூனில் இன்று கோலாகலமாக தொடங்கியது.
    • பேட்மிண்டன், ஹாக்கி, டென்னிஸ், கபடி, உள்பட 32 வகையான போட்டிகள் இடம் பெறுகிறது.

    டேராடூன்:

    38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று தொடங்கி பிப்ரவரி 14-ம் தேதி வரை நடக்கிறது.

    டேராடூன், ஹரித்வார், நைனிடால், ஹல்த்வானி, ருத்ராபூர், ஷிவ்புரி, நியூதெக்ரி ஆகிய 7 நகரங்களில் 18 நாட்கள் அரங்கேறும் இந்தப் போட்டியில் 38 அணிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இதில் தடகளம், நீச்சல், துப்பாக்கிச்சுடுதல், மல்யுத்தம், பேட்மிண்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கால்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், கபடி, கோ-கோ உள்பட 32 வகையான போட்டிகள் இடம் பெறுகிறது.

    இந்நிலையில், டேராடூனில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெற்ற கோலாகல தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அது இந்திய விளையாட்டுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.

    ஒலிம்பிக் என்பது வெறும் விளையாட்டுப் போட்டி மட்டுமல்ல. ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடந்தாலும் எல்லாத் துறைகளும் ஆதாயம் அடைகின்றன. இது விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த வசதிகளை உருவாக்குகிறது. இது கட்டுமானத்தை ஊக்குவிக்கிறது, புதிய இணைப்பு, போக்குவரத்து வசதிகளை உருவாக்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக சுற்றுலாவை மேம்படுத்துகிறது. விளையாட்டு வீரர்கள் உள்பட உலகெங்கிலும் உள்ளவர்கள் இந்தியாவுக்கு வருவார்கள்.

    21-ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு என உலகம் இன்று சொல்லிக்கொண்டிருக்கிறது. பாபா கேதாரை வணங்கிவிட்டு, இது உத்தரகாண்டின் தசாப்தம் என்று என் வாயிலிருந்து வந்தது.

    உத்தரகாண்ட் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நேற்று உத்தரகாண்ட் மாநிலம் சீரான சிவில் சட்டத்தை அமல்படுத்தியது. இதற்காக உத்தரகாண்ட் அரசை நான் வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

    கடந்த தேசிய விளையாட்டு போட்டி 2023-ம் ஆண்டு கோவாவில் 5 நகரங்களில் நடந்தது. இதில் மகாராஷ்டிரா 82 தங்கம் உள்பட 230 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    • பலதார மணம், குழந்தை திருமணம், முத்தலாக் போன்ற முறைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும்.
    • அனைத்து மதங்களிலும் பெண் குழந்தைகளுக்கு சமமான சொத்துரிமை வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் பெற்றுள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டு நடந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலின்போது மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என பா.ஜ.க. அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது.

    சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், பொதுசிவில் சட்டத்திற்கான இணையதளத்தை உத்தராகண்ட் முதலமைச்சர் இன்று பிற்பகல் தொடங்கி வைத்தார்.

    திருமணம், விவகாரத்து உள்ளிட்டவை அனைத்து மதத்தினருக்கும் பொது என்பதே இந்த சட்டத்தின் நோக்கம் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியது குறித்து பேசிய உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, "பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்திய முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாறியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 27ஆம் தேதி பொது சிவில் சட்ட தினமாக கொண்டாடப்படும்.

    அனைத்து மதங்களிலும் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது ஆண்களுக்கு 21 ஆகவும் பெண்களுக்கு 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பலதார மணம், குழந்தை திருமணம், முத்தலாக் போன்ற முறைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும். அனைத்து மதத்தினருக்கும் கணவன் அல்லது மனைவி இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். அனைத்து மதங்களிலும் பெண் குழந்தைகளுக்கு சமமான சொத்துரிமை வழங்கப்பட்டுள்ளது

    அரசியலமைப்புச் சட்டத்தின் 342வது பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நமது பழங்குடியினரின் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் இந்த பொது சிவில் சட்டத்திலிருந்து அவர்களை விலக்கி வைத்துள்ளோம். பொது சிவில் சட்டம் எந்த மதத்திற்கோ அல்லது பிரிவினருக்கோ எதிரானது அல்ல" என்று தெரிவித்தார்.

    • விவேக் குமார் திருமண சடங்குகளை செய்கிறார்.
    • விவேக்குமார் பிளஸ்-2 முடித்த பிறகு வேத படிப்பை தொடர்ந்தார்.

    திருமண விழாக்களின் போது சுவாரஸ்யமாக நடைபெறும் சில சம்பவங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிரப்படுவதுண்டு. அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஹரித்துவாரை சேர்ந்த விவேக் குமார் என்பவர் தனது சொந்த திருமணத்தில் அர்ச்சகராக மாறி, வேத மந்திரங்கள் உச்சரித்த காட்சி உள்ளது.

    ராம்பூர் பகுதியில் இருந்து மணமகன் ஊர்வலமாக ஹரித்துவார் வருவது போன்று வீடியோ தொடங்குகிறது. அங்கு மணமேடையில் விவேக் குமார் ஏறியதும் மணமகள் வருகிறார். பின்னர் மேடையில் விவேக் குமார் திருமண சடங்குகளை செய்கிறார்.

    தனது திருமண விழாவில் அவர் வேத மந்திரங்களை உச்சரித்து சடங்குகளை நடத்தியதை அங்கிருந்தவர்கள் வியப்புடன் பார்த்தனர். விவேக்குமார் பிளஸ்-2 முடித்த பிறகு வேத படிப்பை தொடர்ந்தார். ஆரிய சமாஜத்தின் மரபுகளுடான அவரது உறவு திருமணத்தின் போது மந்திரங்களை உச்சரிக்க தூண்டியதாக அவர் கூறினார்.



    • அதிர்ஷ்டவசமாக யார் மீதும் குண்டு பாய வில்லை.
    • சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததாக அரசியல் பிரமுகர்கள் விமர்சனம்.

    உத்தரகாண்ட் மாநிலம் கான்பூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ குன்வர் பிரணவ் சிங் சாம்பியன்.

    இந்த தொகுதியில் தற்போது சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கிய உமேஷ் குமார் என்பவர் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர்கள் இருவருக்கும் அரசியல் மோதல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

    2 பேரும் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, உமேஷ் குமார் எம்.எல். ஏ.வை ஒரு முறைகேடான குழந்தை என்று குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் விமர்சனம் செய்தார்.

    இதனை கேட்டு உமேஷ் குமார் எம்.எல்.ஏ. மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்தனர். அவர்கள் குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் வீட்டின் முன்பாக சென்று கோஷம் எழுப்பினர். அப்போது தைரியம் இருந்தால் நேருக்கு நேர் வா என சவால் விடுத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் நேற்று குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் அவருடைய ஆதரவாளருடன் கையில் துப்பாக்கி ஏந்தியபடி உமேஷ் குமார் எம்.எல்.ஏ.வின் அலுவலக த்திற்குச் சென்றார்.

    அங்கிருந்த ரமேஷ் குமார் எம்.எல்.ஏ.வின் ஆதரவா ளர்களை அவர்கள் தாக்கினர். மேலும் தாங்கள் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் எம்.எல்.ஏ அலுவலகத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

    சரவெடி போல தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் துப்பாக்கிகளில் இருந்து 100 குண்டுகள் பாய்ந்தன. அதில் 70 குண்டுகள் எம்.எல்.ஏ அலுவலகத்தில் உள்ள சுவர்களை துளைத்ததாக கூறப்படுகிறது.

    அதிர்ஷ்டவசமாக யார் மீதும் குண்டு பாய வில்லை. இந்த தாக்குதலில் எம்.எல்.ஏ.வின் உதவியாளர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் கையில் துப்பாக்கியுடன் எம்.எல்.ஏ. அலுவலகத்தை தனது ஆட்களுடன் வலம் வந்து அங்கிருந்து நெஞ்சை நிமிர்த்தியபடி நடந்து சென்றார்.

    சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இந்த காட்சிகள் ஒரு சில நிமிடங்களில் அரங்கேறியது. இது பற்றி தகவலறிந்த போலீசார் மற்றும் உமேஷ் குமார் எம்.எல்.ஏ ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    தனது அலுவலகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை கண்டு உமேஷ் குமார் எம்.எல்.ஏ ஆவேசமடைந்தார். அவரும் ஒரு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் வீட்டை நோக்கி நடந்து சென்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

    இதனை தொடர்ந்து பா.ஜ.க. முன்னாள் எம்எல்ஏ குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் உள்பட 4 பேரை டேராடோனில் போலீசார் கைது செய்தனர்.

    இது தொடர்பாக குன்வர்பிரணவ் சிங் சாம்பியன் கூறுகையில்:-

    தன்னுடைய வீட்டின் முன்பு வந்து உமேஷ் குமார் எம்.எல்.ஏ. தனக்கு சவால் விட்டதால் நான் எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என தெரிவித்து ள்ளார்.

    உத்தரகாண்டில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததாக அரசியல் பிரமுகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

    • பா.ஜ.க. அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது.
    • வலைதளத்தை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைக்கிறார்.

    இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் பெறுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு நடந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலின்போது மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என பா.ஜ.க. அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது.

    சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், இன்று (ஜனவரி 27) உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறது. பொது சிவில் சட்டத்திற்கான வலைதளத்தை அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைக்கிறார்.

    பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடிவடைந்த நிலையில் இன்று இச்சட்டம் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. 

    • பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி உத்தரகாண்ட் வருகிறார்.
    • உத்தரகாண்டில் ஜனவரி 27-ல் பொது சிவில் சட்டம் அமலுக்கு வருகிறது.

    டேராடூன்:

    கடந்த 2022-ம் ஆண்டு நடந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலின்போது பா.ஜ.க. அதன் தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்தது. தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதையடுத்து, அங்கு பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, உத்தரகாண்ட் மாநில தலைமை செயலாளர் கூறியதாவது:

    பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி உத்தரகாண்ட் வருகிறார்.

    அவர் வருவதற்கு ஒரு நாள் முன்னதாக, மாநிலத்தில் ஜனவரி 27-ல் பொது சிவில் சட்டம் அமல் செய்யப்படுகிறது.

    பொது சிவில் சட்டத்துக்கான இணைய தளத்தை முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைக்கிறார்.

    சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல் படுத்தும் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் இருக்கும் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சந்தேகமடைந்த மக்கள் கதவை உடைத்துச் சென்று பார்த்தனர்.
    • போலீசாருக்கு தெரிவிக்காமல் தம்பதியின் உடலை தகனம் செய்ததாக கூறப்படுகிறது.

    உத்தரகாண்ட்:

    கடும் குளிர் காரணமாக மூட்டிய நெருப்பில் மூச்சுத்திணறி தம்பதியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் பிலங்கானா பகுதியின் த்வாரி தப்லா கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மதன் மோகன் செம்வால் (52) மற்றும் அவரது மனைவி யசோதா தேவி (48) ஆகியோர் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள த்வாரி தப்லாவிற்கு வந்திருந்தனர். அப்போது இரவு 11 மணியளவில் கடும் குளிர் காரணமாக நெருப்பை மூட்டி அதனை அறைக்குள் வைத்து கதவை சாத்திக்கொண்டனர். நெருப்பிடம் இருந்து வெளியேறிய புகையால் தூக்கத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.

    மறுநாள் காலை அவர்களது மகன் அவர்களை எழுப்ப கதவை தட்டும் போது எந்த பதிலும் இல்லை. இதனால் சந்தேகமடைந்து கதவை உடைத்துச் சென்று பார்த்தனர். அப்போது அந்த தம்பதி படுக்கையில் இறந்து கிடந்தனர். இதையடுத்து போலீசாருக்கு தெரிவிக்காமல் தம்பதியின் உடலை தகனம் செய்ததாக கூறப்படுகிறது. 

    • ஞாயிற்றுக்கிழமை முகாமின் இறுதி நாளாகும்.
    • தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2025 ஜனவரி 28 முதல் பிப்ரவரி 14 வரை நடைபெறும்

    உத்தரகாண்டில் நடைபெற உள்ள 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிக்கு தயராகி வந்த மைனர்  ஹாக்கி வீராங்கனை பயிற்சியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

    பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பயிற்சியாளர் பானு அகர்வால் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். புகாரின் பேரில், அகர்வாலை கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஹரித்துவாரில் போலீஸார் கைது செய்தனர். அவரின் பயிற்சி சான்றிதழும் ரத்து செய்யப்படுகிறது.

    ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் பகுதியில் கடந்த ஒரு மாதமாக ஹாக்கி தேர்வு முகாமுக்கு மூன்று பயிற்சியாளர்களுடன் சுமார் 30 சிறுமிகள் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை முகாமின் இறுதி நாளாகும்.

    பயிற்சியாளர் அந்த வீராங்கனையை தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி பெற்றோரிடம் கூறியதை அடுத்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

    சிறுமியின் உடல்நிலை ஆரம்பத்தில் நன்றாக இல்லை, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன என்று போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

    உத்தரகாண்டில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2025 ஜனவரி 28 முதல் பிப்ரவரி 14 வரை நடைபெறும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) கடந்த திங்களன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

    • மாணவன் வானத்தை நோக்கி துப்பாக்கி சுடும் வீடியோ இணையத்தில் வெளியாகிள்ளது.
    • மாணவர்கள் பயன்படுத்திய கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் நகரத்தில் 70க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் ஓட்டல் ஒன்றில் ஆண்டு விழா கொண்டாடியுள்ளனர்.

    அப்போது அங்கிருந்த மாணவர்களில் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கி சுடும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் சில மாணவர்கள் கார்களில் ஸ்டண்ட் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள போலீசார் மாணவர்கள் பயன்படுத்திய கார்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடி போதையில் இருந்த இளைஞர் தனது பைக் மூலம் பல வாகனங்கள் மீது மோதியுள்ளார்.
    • இதனால் பலர் காயமடைந்துள்ளனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் கோட்வாரில் இளைஞர் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    குடி போதையில் இருந்த இளைஞர் தனது பைக் மூலம் பல வாகனங்கள் மீது மோதியுள்ளார். இதனால் பலர் காயமடைந்துள்ளனர்.

    இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த இளைஞரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். அப்போது போலீசாரிடம் பிரச்சனை செய்த இளைஞர் வாகனத்தின் கண்ணாடியை உடைத்துள்ளார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • பள்ளத்தாக்கில் இருந்து மக்கள் கயிறுகள் மூலம் வெளியேற்றப்படுகின்றனர்.
    • ஹல்த்வானியில் இருந்து விபத்து நடந்த இடத்திற்கு பதினைந்து ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

    உத்தரகாண்ட் மாநிலம் பீம்டல் அருகே பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,  24க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    அல்மோராவில் இருந்து ஹல்த்வானி பகுதியை நோக்கிச் சென்ற பேருந்து உத்தரகாண்ட் மாநிலம் பிம்தால் நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்து 1500 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.  மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    போலீசார், SDRF குழுக்கள், தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பள்ளத்தாக்கில் இருந்து மக்கள் கயிறுகள் மூலம் வெளியேற்றப்படுகின்றனர்.

    ஹல்த்வானியில் இருந்து விபத்து நடந்த இடத்திற்கு பதினைந்து ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

    4 பேர் உயிரிழந்த நிலையில், 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நேபாள ராணுவ தலைவர் ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல் அணிவகுப்பை மதிப்பாய்வு செய்தார்.
    • ராணுவ வீரர்களின் மீது மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    உத்தரகாண்ட மாநிலம் டேராடூன் ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்த இளம் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடந்தது.

    நேபாள ராணுவ தலைவர்ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல் அணிவகுப்பை மதிப்பாய்வு செய்தார்.

    அணிவகுப்பின் இறுதிக்கட்டத்தில் ராணுவ வீரர்களின் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    ×