என் மலர்
தெலுங்கானா
- விமான ஊழியர்கள் கழிவறையை திறந்து பார்த்தபோது பயணி ஒருவர் சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்தார்.
- விமான சட்டத்தின் 125-வது பிரிவின் கீழ் முகமது அலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நேற்று முன்தினம் டெல்லிக்கு இண்டிகோ விமானம் பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.
விமானம் புறப்படுவதற்கு முன்பாக விமானத்தில் பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டன.
விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தது. அப்போது விமானத்தின் கழிவறையில் இருந்து புகை வந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் கழிவறையை திறந்து பார்த்தபோது பயணி ஒருவர் சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்தார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முகமது அலி என தெரியவந்தது. இதுகுறித்து ஊழியர்கள் விமான கேப்டனுக்கு தகவல் தெரிவித்தனர்.
விமான சட்டத்தின் 125-வது பிரிவின் கீழ் முகமது அலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரே மாதத்தில் 2-வது வழக்கு என விமான அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பாலம் இடிந்து விழுந்ததால் மக்கள் மறு கரைக்குச் செல்ல முடியவில்லை
- இரு கரைகளையும் இணைக்கும் ஒரு இருப்பு பைப் அங்கு இருந்துள்ளது.
தெலங்கானாவில் நிர்மல் மாவட்டத்தில் உள்ள கல்லூரு கிராமத்தில் நீர்நிலையின் குறுக்கே இருந்த பாலம் இடிந்து விழுந்ததால் மக்கள் மறு கரைக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் பாலம் இல்லாமல் அக்கரைக்குச் செல்ல இளைஞர் ஒருவர் செய்த செயல் பலரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பாலம் இல்லாத நிலையில் இரு கரைகளையும் இணைக்கும் ஒரு இருப்பு பைப் அங்கு இருந்துள்ளது.
எனவே அந்த இளைஞர் அந்த இருப்பு பைப் மீது தொத்தியபடி ஊர்ந்து ஊர்ந்து ஆபத்தான முறையில் மறு கரைக்கு சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- ஜவஹர்நகர் நகரில் நவம்பர் 12 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
- படுகாயமடைந்த நாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
தெலுங்கானாவில் 4 தெரு நாய்களை 3 பேர் சேர்ந்து கொடூரமாக அடித்து கொலை செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்தில் உள்ள ஜவஹர்நகர் நகரில் நவம்பர் 12 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. 3 நாய்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த நாய் ஒன்று தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொல்லப்பட்ட 3 நாய்களில் ஒரு நாய் கர்ப்பமாக இருந்துள்ளது. இந்த சம்பவம் விலங்குகள் நல ஆர்வலர்களிடையே கோவத்தை தூண்டியுள்ளது.
இதனையடுத்து ஜவஹர்நகர் போலீசார் நாய்களை அடித்துக் கொன்ற 4 பேரை கைது செய்தனர்.
- நிலம் கையகப்படுத்த கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினர்.
- கலெக்டர் மீது தாக்குதல் நடத்த தூண்டியதாக நரேந்திர ரெட்டியை கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம், துடியாலா அடுத்த லகசர்லா பகுதியில் 1,350 ஏக்கர் பரப்பளவில் அரசு சிப்காட், மருந்து நிறுவனம் அமைக்க முடிவு செய்தது. சிப்காட் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்காக நிலம் கையகப்படுத்த கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினர். அப்போது கிராம மக்கள் கலெக்டர் மற்றும் அதிகாரிகளை தாக்கி ஓட ஓட விரட்டினர். கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்திய கிராம மக்கள் 16 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் விகாரபாத் கோடங்கல் பி.ஆர்.எஸ். முன்னாள் எம்.எல்.ஏ. நரேந்திர ரெட்டி இன்று காலை கே.பி. ஆர் பூங்காவில் நடைபயிற்சி சென்றார். அப்போது அங்கு வந்த போலீசார் கலெக்டர் மீது தாக்குதல் நடத்த தூண்டியதாக நரேந்திர ரெட்டியை கைது செய்தனர்.
- சரக்கு ரெயில் தடம் புரண்டதால் 20 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- மதுரை - நிஜாமுதீன் ரெயில் பெத்தபள்ளி - நிஜாமாபாத்-முத்கேட்-பிம்பால்குரி வழியாக திருப்பி விடப்பட்டது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ராகவா புரம் மற்றும் ராமகுண்டம் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று இரவு இரும்பு தாது ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் சென்றது.
திடீரென சரக்கு ரெயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் தண்டவாளம் பெருமளவில் சேதம் அடைந்தது. என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்திவிட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தடம் புரண்ட ரெயில் பெட்டிகள் மற்றும் தண்டவாள சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதன் காரணமாக டெல்லியில் இருந்து தென் மாநிலங்களுக்கு செல்லும் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
20 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 4 ரெயில்கள் பகுதி அளவு ரத்து செய்யப்பட்டது. மேலும் 10 ரெயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.
டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் பெத்தப்பள்ளி நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த பயணிகள் அவதியடைந்தனர்.

தடம்புரண்ட ரெயில் பெட்டிகளை அதிகாரிகள் பார்வையிட்ட காட்சி.
இதையடுத்து மதுரை - நிஜாமுதீன் ரெயில் பெத்தபள்ளி - நிஜாமாபாத்-முத்கேட்-பிம்பால்குரி வழியாக திருப்பி விடப்பட்டது.
சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் பெத்தபள்ளி-நிஜாமாபாத்-அகோலா வழியாக திருப்பி விடப்பட்டது.
பிலாஸ்பூர்-நெல்லை ரெயில் மச்சேரியல், பல்ஹர்ஷா, அகோலா, பூர்ணா, நிஜாமாபாத், பெத்தபள்ளி வழியாக திருப்பி விடப்பட்டது.
பயணிகளின் நலனுக்காக உதவி எண்கள் வழங்கப்பட்டு வருவதாக தெற்கு மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
- குரங்கு ஒன்று துள்ளி குதித்து சிவலிங்கம் அருகே வந்து நின்றது.
- குரங்கு சிவலிங்கத்தை பக்தியுடன் வழிபட்டது பக்தர்களை கவர்ந்தது.
தெலுங்கானா மாநிலம் மேட்சல் மல்காஜிகிரி மாவட்டம் கீசரகுட்டாவில் பிரசித்தி பெற்ற ராமலிங்கேஸ்வரசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு பக்தர்கள் பூ தூவி வழிபட்டு வருகின்றனர். நேற்று பக்தர்கள் அங்கு சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது குரங்கு ஒன்று துள்ளி குதித்து சிவலிங்கம் அருகே வந்து நின்றது. அருகில் இருந்த பூ ஒன்றை எடுத்து அடக்கத்துடன் சிவலிங்கத்தின் உச்சியில் வைத்தது. பின்னர் சிவலிங்கத்தின் மீது தலை சாய்த்து பவ்யமாக குரங்கு வழிபட்டது. இதனை கண்டதும் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். குரங்கு சிவலிங்கத்தை பக்தியுடன் வழிபட்டது பக்தர்களை கவர்ந்தது.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. குரங்கு தரிசனம் செய்த பின் பக்தர்கள் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
- ஊழியர்களை வெளியேற்றிவிட்டு அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்களை சரமாரியாக அடித்து நொறுக்கினர்.
- கடந்த தேர்தலின் போது தனது நெருங்கிய நண்பரான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு அல்லு அர்ஜுன் பகிரங்கமாக ஆதரவு அளித்து இருந்தார்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் ஸ்ரீநகர் காலனியில் தனியார் யூடியூப் சேனல் அலுவலகம் உள்ளது. யூடியூப் சேனலில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு எதிராக சில படங்களை அடிக்கடி வெளியிட்டு வந்தனர்.
அதனால் ஆத்திரமடைந்த அல்லு அர்ஜுன் ரசிகர்கள் நேற்று யூடியூப் அலுவலகத்திற்குள் அதிரடியாக புகுந்தனர். அங்கிருந்த ஊழியர்களை வெளியேற்றிவிட்டு அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்களை சரமாரியாக அடித்து நொறுக்கினர்.
கடந்த தேர்தலின் போது தனது நெருங்கிய நண்பரான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு அல்லு அர்ஜுன் பகிரங்கமாக ஆதரவு அளித்து இருந்தார்.
ஜனசேனா கட்சி தலைவரும் அல்லு அர்ஜுனின் மாமாவுமான பவன் கல்யாண் தெலுங்கு தேசம் கூட்டணியில் இருக்கும்போது அல்லு அர்ஜுன் எதிர்தரப்பை சேர்ந்த வேட்பாளருக்கு ஆதரவு அளித்தது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் யூடியூப் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- லாரியின் அடியில் சிக்கிய திவ்யஸ்ரீயின் தலைமுடி மீது லாரியின் டயர் எறியுள்ளது.
- அப்போது அவ்வழியே மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் தனது காரில் வந்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் லாரிக்கு அடியில் சிக்கிய பெண்ணை உள்ளூர் மக்கள் உதவியுடன் மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் காப்பாற்றியுள்ளார்.
திவ்யஸ்ரீ என்ற பெண் மீது லாரி மோதியுள்ளது. இதனால் தடுமாறிய அப்பெண் லாரியின் சக்கரத்திற்கு அருகில் விழுந்துள்ளார். உடனே சுதாரித்த ஓட்டுநர் லாரியை நிறுத்தியுள்ளார். ஆனால் லாரியின் அடியில் சிக்கிய திவ்யஸ்ரீயின் தலைமுடி மீது லாரியின் டயர் எறியுள்ளது. நூலிழையில் உயிர்பிழைத்த அப்பெண்ணின் அலறலை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கும் கூடியுள்ளனர்.
அப்போது அவ்வழியே மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் தனது காரில் வந்துள்ளார். அப்போது கூட்டமாக மக்கள் இருப்பதை கண்ட அவர் காரை விட்டு கீழே இறங்கி, அப்பெண்ணின் நிலையை கண்டு அதிகாரிகளிடம் அவரை மீட்க உத்தரவிட்டார்.
பின்னர் உள்ளூர் வாசிகளின் உதவியுடன் லாரியை சக்கரத்தை உயர்த்தியும் பெண்ணின் தலைமுடியை வெட்டியும் அப்பெண்ணை பத்திரமாக மீட்டு பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அதிகாரிகள் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
- மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து புறப்பட்டார்.
தெலங்கானா மாநிலத்தின் விகாராபாத் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருந்து நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக பொது மக்களிடம் கருத்து கேட்க அரசு அதிகாரிகள் லாகர்சாலா என்ற கிராமத்திற்கு சென்றனர்.
கிராமத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் பிரதீக் ஜெயினுக்கு எதிராக கோஷம் எழுப்பிய கிராம மக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு நிலம் கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
கிராம மக்களின் எதிர்ப்பு, போராட்டம் காரணமாக அந்த பகுதியில் அசாதாரண சூழல் நிலவியது. இதை உணர்ந்து மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானார். எனினும், கிராம மக்கள் அவரை சுற்றி நின்று வாக்குவாதம் செய்தனர். ஒருவழியாக வாகனத்தில் ஏறிக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து புறப்பட்டார்.
மாவட்ட ஆட்சியரை துரத்திய கிராம மக்கள் அவரது வாகனத்தை கற்களால் தாக்கினர். இதில் மாவட்ட ஆட்சியரின் வாகன கண்ணாடி சேதமடைந்தது.
- இவர்களின் காதலை தடுப்பதற்காக தொழிலதிபர் தனது மகளை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார்.
- துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம்,சரூர் நகர், வெங்கடேஸ்வரா காலனி சேர்ந்தவர் 55 வயது தொழிலதிபர். 23 வயதுடைடைய இவரது மகள் அதே பகுதியை சேர்ந்த பல்விந்தர் சிங் என்ற வாலிபரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். மகளின் காதல் விவகாரம் அவரது தந்தைக்கு தெரிய வந்தது. பல்விந்தர் சிங் காதலியை அடிக்கடி சந்தித்து செல்போனில் பேசி வந்தார்.
இவர்களின் காதலை தடுப்பதற்காக தொழிலதிபர் தனது மகளை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். இதனால் பல்விந்தர் சிங் ஆத்திரமடைந்தார். துப்பாக்கியை வாங்கிக்கொண்டு நேராக தொழிலதிபர் வீட்டிற்கு வந்தார்.
தொழிலதிபருக்கு போன் செய்து வீட்டுக்கு வெளியே வரவழைத்தார். அப்போது தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து தொழிலதிபரை நோக்கி சுட்டார். இதில் தொழிலதிபரின் கண்ணில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் பல்விந்தர் சிங்கை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- ஐதராபாத்தில் கன்டெய்னர் லாரியில் தீ விபத்து ஏற்பட்டது.
- இதில் 8 கார்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
ஐதராபாத்:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து தெலுங்கானாவின் ஐதராபாத் நோக்கி கன்டெய்னர் லாரி, புதிய கார்களை ஏற்றிக்கொண்டு நேற்று வந்தது.
அந்த லாரி தேசிய நெடுஞ்சாலை 65-ல் சென்று கொண்டிருந்தபோது ஜகீராபாத் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதில், அந்த லாரியில் இருந்த 8 கார்களும் எரிந்து நாசமடைந்தன. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் கார்கள் எரிந்து சாம்பலாகின.
விசாரணையில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பல குடும்பங்களில் இல்லத்தரசிகள் தாங்கள் படும் நரகத்தை எப்படி பகிர்ந்து கொள்வது என்று தெரியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
- கவுன்சிலிங் செய்யும் போது கூட குடும்ப பெண்கள் உடனடியாக எதையும் வெளிப்படுத்தமாட்டார்கள்.
ஸ்மார்ட்போன்கள் கையில் இருக்கும் நிலையில், சில ஆண்கள் வயது வித்தியாசம் இல்லாமல் எதேச்சையாக உலா வரும் ஆபாச இணையதளங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். அங்கு அவர்கள் பார்க்கும் வீடியோக்களால் சபல நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அட்டூழியங்களை ஏற்படுத்தும் ஆபாசம் இப்போது குடும்ப வாழ்க்கையில் நுழைகிறது. தெலுங்கானா மாநிலத்தில் சில ஆண்கள் தாங்கள் பார்க்கும் கேவலமான காட்சிகளை தங்கள் மனைவியிடம் வலுக்கட்டாயமாக காட்டி.. அப்படி நடந்து கொள்ள வற்புறுத்துகிறார்கள். வீட்டில் சிறு குழந்தைகளும், டீன் ஏஜ் குழந்தைகளும் இருப்பதை மறந்து, தவறாக நடந்து கொள்கின்றனர். இதனால் பெண்களுக்கு நோய் பாதிப்பு மற்றும் தகராறு ஏற்படுகிறது.
மாதந்தோறும் 400-க்கும் மேற்பட்ட குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகின்றன. சமீபகாலமாக இதுபோன்ற உணர்வுப்பூர்வமான பிரச்சினைகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
செல்போனில் ஆபாச படங்களை பார்த்துக்கொண்டிருக்கும் சிலர் குதூகலமடைந்து பரிதாபமாக நடந்துகொள்வதாகத் தெரிகிறது. சமீபத்தில் மியாபூரில் ஒரு நபர் தனது மனைவியை ஆபாச வீடியோக்களை பார்க்கவும், அவற்றைப் பின்தொடரவும் கட்டாய்ப்படுத்தினார். அவள் மறுத்ததால் தனது ஆசையை நிறைவேற்ற மருமகளிடம் தவறாக நடந்து கொண்டார். அவள் அலறி துடித்து மறுத்ததால், வெறித்தனமாக மாறி, சிறுமியை தலைமுடியில் தூக்கி எறிந்து கொன்றான். பல விபரீதங்களை' ஏற்படுத்தும் இந்த ஆபாச இணையதளங்களை முடக்குவது சவாலாக உள்ளது. வெளியாட்களுக்கு வெளிப்படுத்த முடியாத இந்த அநாகரிகத்தால், பல குடும்பங்களில் இல்லத்தரசிகள் தாங்கள் படும் நரகத்தை எப்படி பகிர்ந்து கொள்வது என்று தெரியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
குடும்பத்தாரிடம் சொல்ல முடியாத விஷயமாக இருந்ததால், அவர்கள் வாய் திறக்கவில்லை. அவர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் சிறுநீர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றார். மாதந்தோறும் இதே பிரச்சினையுடன் வருவதால் டாக்டருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கவுன்சிலிங் செய்தபோது கணவனின் குறும்புத்தனங்களை வெளிப்படுத்தினார். 2 வருடங்களாக தான் அனுபவித்த நரகத்தை விவரித்தார். டாக்டர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் அவர் மீது குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நாங்கள் கவுன்சிலிங் செய்யும் போது கூட குடும்ப பெண்கள் உடனடியாக எதையும் வெளிப்படுத்தமாட்டார்கள். அவர்களிடம் தீவிரத்தை விளக்கி, இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல மாட்டோம் என்று உறுதி அளித்த பிறகு ஒரு சிலர் மட்டும் வாய் திறக்கிறார்கள். இந்தப் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிவேகமாக அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. தம்பதியரிடையே ஒரே பிரச்சனை என்றால், இருவருக்குமே ஆலோசனை வழங்குவதன் மூலம் தீர்வு காணலாம் என்றனர்.






