சிவலிங்கம் மீது தலை சாய்த்து வணங்கிய குரங்கு- பக்தர்கள் பரவசம்

குரங்கு ஒன்று துள்ளி குதித்து சிவலிங்கம் அருகே வந்து நின்றது.குரங்கு சிவலிங்கத்தை பக்தியுடன் வழிபட்டது பக்தர்களை கவர்ந்தது.
சிவலிங்கம் மீது தலை சாய்த்து வணங்கிய குரங்கு- பக்தர்கள் பரவசம்
Published on

தெலுங்கானா மாநிலம் மேட்சல் மல்காஜிகிரி மாவட்டம் கீசரகுட்டாவில் பிரசித்தி பெற்ற ராமலிங்கேஸ்வரசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு பக்தர்கள் பூ தூவி வழிபட்டு வருகின்றனர். நேற்று பக்தர்கள் அங்கு சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது குரங்கு ஒன்று துள்ளி குதித்து சிவலிங்கம் அருகே வந்து நின்றது. அருகில் இருந்த பூ ஒன்றை எடுத்து அடக்கத்துடன் சிவலிங்கத்தின் உச்சியில் வைத்தது. பின்னர் சிவலிங்கத்தின் மீது தலை சாய்த்து பவ்யமாக குரங்கு வழிபட்டது. இதனை கண்டதும் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். குரங்கு சிவலிங்கத்தை பக்தியுடன் வழிபட்டது பக்தர்களை கவர்ந்தது.

இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. குரங்கு தரிசனம் செய்த பின் பக்தர்கள் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com