என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழ் மண் சுயமரியாதை கொண்ட மண். ஒரு மொழியை திணித்தால் எப்படி?
- மாநில மொழி மீது வேறு ஒரு மொழியை அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி Bro?
த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மொழி திணிப்புக்கு எதிராக பேசிய விஜய் ஒரு வார்த்தைக்கு கூட 'இந்தி' என்ற வார்த்தையைக் உச்சரிக்காமல் பேசி முடித்தார்.
த.வெ.க. விழாவில் பேசிய விஜய், "மும்மொழி கொள்கை என்ற புதிய பிரச்சனை கிளப்புகின்றனர். கல்வி நிதியை மாநில அரசுக்கு தரமாட்டோம் என கூறுகின்றனர். எல்கேஜி, யூகேஜி பிள்ளைகள் போல் சண்டை போடுகின்றனர். நிதியை கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. நிதிய பெற வேண்டியது தமிழக அரசின் கடமை.
என்ன பிரச்சனை என்று தெரியாமல் சண்டையிடுவது போல் சண்டையிட்டு ஹேஷ்டேக் போட்டு விளையாடுகின்றனர்.இவங்க இரண்டு பேரும் அடித்துக் கொள்வது போன்று அடித்துக்கொள்வார்களாம். இதை நாங்க நம்பணுமாம்
What bro, its very wrong bro என தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளை கிண்டலடித்த விஜய், தமிழ் மண் சுயமரியாதை கொண்ட மண். ஒரு மொழியை திணித்தால் எப்படி? என கேள்வி எழுப்பினார். மேலும், மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக மொழிக்கொள்கையை கேள்விக்குறியாக்கி வேறு மொழியை வலுக்கட்டாயமாக்க திணிப்பதா?
மாநில மொழி மீது வேறு ஒரு மொழியை அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி Bro? எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்; அது தனிப்பட்ட உரிமை. பொய் பிரசாரங்களை புறந்தள்ளிவிட்டு மும்மொழிக்கொள்கையை எதிர்ப்போம்" என்று தெரிவித்தார்.
- முதலமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருப்பது ஏன்?
- மத்திய அரசு, மாநில அரசு இரண்டையும் குறை கூறியுள்ளார் விஜய்.
கோவை:
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-
* தொகுதி மறுசீரமைப்பு நடக்கும் போது எப்படி நடக்கம் என அமித்ஷா தெளிவாக விளக்கி உள்ளார்.
* விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கை உயரும்.
* முதலமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருப்பது ஏன்?
* ஏற்கனவே பிரதமரும் விளக்கமாக பேசி உள்ளனர்.
* தமிழக முதலமைச்சருக்கு தொகுதிகள் குறையும் என்ற தகவலை கொடுத்தது யார்?
* முதலமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருப்பது ஏன்?
* மத்திய அரசு, மாநில அரசு இரண்டையும் குறை கூறியுள்ளார் விஜய்.
* விஜய் நடத்தும் பள்ளியில் மும்மொழி கொள்கை, விஜய் குழந்தைகளுக்கு மும்மொழி.
* த.வெ.க. தொண்டர்களின் குழந்தைகளுக்கு மட்டும் இருமொழியா? விஜய் மேடையில் பொய் சொல்லலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அறிவித்துக் கொண்டு இருக்கிறோம்.
- பண்ணையார்களை அரசியலை விட்டே அகற்றுவதுதான் நமது முதல் வேலை.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் உள்ள ஓட்டலில் நடந்தது. விழாவில் விஜய்யின் பரிணாம வளர்ச்சி குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.
அதன் பிறகு 2-ம் ஆண்டு நிகழ்ச்சிகள் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்றார். பின்னர் கட்சியின் கொள்கைப் பாடல் ஒலிக்கப்பட்டது.
அதன் பிறகு உறுதிமொழி ஏற்கப்பட்டது. விஜய் உள்பட அனைவரும் நெஞ்சில் கை வைத்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் கொள்கை தலைவர்களுக்கும், மொழிப்போர் தியாகிகளுக்கும் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு தளபதி பயிலக சிறார் பயனாளர்கள் மேடைக்கு வந்து பேசினார்கள். அவர்கள் விஜய்க்கு நன்றி தெரிவித்தனர். இதில் பேசிய 2 மாணவிகளுடன் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
கட்சியின் நிர்வாகிகள் சார்பாக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி பேசினார். தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் தஞ்சை ஆர்.விஜயசரவணன் கவிதை வாசித்தார்.
விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியதாவது:-
என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்கள், தோழிகள் எல்லோருக்கும் என்னுடைய வணக்கம். இந்த அரசியல் என்றாலே வேறு லெவல்தான். அரசியலில் மட்டும்தான் வித்தியாசமான ஒன்றை நாம் பார்க்கலாம். யார் யாரை எப்போது எதிர்ப்பார்கள் என்றே நமக்கு தெரியாது. யார்-யாரை எப்போது ஆதரிப்பாளர்கள் என்றே நமக்கு தெரியாது. அதை கணிக்கவே முடியாது. அதனால்தான் அரசியலில் நிரந்தர நண்பனும், நிரந்தர எதிரியும் இல்லை என்று சொல்லி நாம் கேள்விப்பட்டு இருப்போம்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அது ஜனநாயக உரிமை என்று சொல்வார்கள். ஆனால் மக்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்து போன ஒருவன் அரசியலுக்கு வருகிறான் என்றால் அதை கண்டிப்பாக நல்லவர்கள் எல்லோருமே வரவேற்பார்கள். ஆனால் ஒரு சில பேருக்கு மட்டும் எரிச்சல் வரத்தானே செய்யும். அது இருக்கும்தானே.

என்னடா இவன் திடீரென்று ஒருவன் என்ட்ரி கொடுத்து விட்டானே. இதுவரை நாம் சொன்ன பொய்யை எல்லாம் நம்பிக் கொண்டு மக்கள் நமக்கு ஓட்டு போட்டுக் கொண்டு இருந்தார்களே. ஆனால் இப்போது இவன் சொல்வதையெல்லாம் பார்த்தால் மக்கள் மனசுக்கு ரொம்ப நெருக்கமாக வேறு இருக்குதே. அதுவே நமக்கு பெரிய நெருக்கடியாகவும் இருக்குதே. இவனை என்ன செய்யலாம். எப்படி இவனை குளோஸ் பண்ணலாம் என்று ஒரு குழப்பம் வரும். அந்த குழப்பத்தில் கத்துவதா? கதறுவதா? என்று என்ன பண்ணுவது என்று தெரியாமல் வருகிறவன் போகிறவன் எல்லாம் கட்சி ஆரம்பிறக்கிறான் என்று சொல்லி பேச ஆரம்பிப்பார்கள்.
இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் நமக்கு எதிராக பேசுகிறார்கள். இல்லையா? அந்த மாதிரி.
இப்படிப்பட்ட ஒரு அரசியல் களத்தில் கொஞ்சம் கூட ஒரு பயம் இல்லாமல், பதட்டம் இல்லாமல் வருகிற எதிர்ப்புகள் எல்லாவற்றையும் சும்மா இடது கையில் 'டீல்' செய்து கொண்டு தமிழக வெற்றிக் கழகம் முதல் ஆண்டை கடந்து இப்போது 2-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.
இந்த ஒரு கால கட்டம்தான் மிகவும் முக்கியமான கால கட்டம். ஏனென்றால் ஒரு அரசியல் கட்சிக்கு பெரிய பலமே அந்த கட்டமைப்புதான். அதுதான் அந்த கட்சியின் வேர் மாதிரி, அடிப்படை பலமே அதுதான். ஒரு ஆலமரம் போல கட்சி வளர வேண்டும் என்றால் வேர்களும், விழுதுகளும் வலிமையாக இருக்க வேண்டும் அல்லவா? அப்படி நமது அமைப்பை பலப்படுத்தும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அறிவித்துக் கொண்டு இருக்கிறோம். இந்த நேரத்தில் நம் மீது ஒரு புகார். அது என்ன புகார் என்று எனக்கும் புரியவில்லை.
நமது மாவட்ட நிர்வாகிகள் எல்லோருமே இளைஞர்களாகவே இருக்கிறார்களாம். இருந்தால் என்ன? அறிஞர் அண்ணா கட்சி ஆரம்பித்த போது அவர் பின்னாடி நின்றதும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த போது அவரது பின்னாடி நின்றதும் வெறும் இளைஞர்கள்தான். அந்த இளைஞர்களால்தான் 1967-ம் ஆண்டிலும், 1977-ம் ஆண்டிலும் நடந்த தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அதுதான் வரலாறு.
அதே போல் 2026-ல் தமிழக வெற்றிக் கழகம் வரலாறு படைக்கும்.
இப்போது அதே போல் நமது மீது இன்னொரு புகார். அது என்னவென்றால் நமது கட்சி நிர்வாகிகள் எல்லோருமே சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்களாம். அதேதான் இங்கேயும் கேட்கிறேன். ஏன் வரக்கூடாதா? சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான் பெரிசு பெரிசா சாதித்து இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் நம்ம கட்சி எளிய மக்களுக்கான கட்சி தானே அப்படி இருக்கும் போது நமது கட்சி நிர்வாகிகளும் எளிய குடும்பத்தை சேர்ந்தவர்களாத்தான் இருப்பார்கள். நமது கட்சி பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது.
முன்பெல்லாம் அந்த காலத்தில் பண்ணையார்கள் தான் பதவியில் இருப்பார்கள். இப்போது உல்டா... மாறி விட்டது. பதவியில் இருப்பவர்கள் எல்லாம் பண்ணையாராக மாறி விடுகிறார்கள்.
மக்களுடைய நலனை பற்றியோ, நாட்டின் நலனை பற்றியோ, வளர்ச்சிகளை பற்றியோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் பணம் பணம் பணம். எந்தெந்த வழிகளில் எல்லாம் கொண்டு வரலாம் என்று நினைக்கிற பண்ணையார்களை அரசியலை விட்டே அகற்றுவதுதான் நமது முதல் வேலை.
இவ்வாறு விஜய் பேசினார்.
இந்த விழாவில் கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை கொள்கை பரப்பு இணை செயலாளர் ராஜ்மோகன் தொகுத்து வழங்கினார்.
விழா நடைபெறும் பகுதியில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழாவில் பங்கேற்ற 3 ஆயிரம் பேருக்கும் அறுசுவை மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்திருந்தார்.
ஆண்டு விழாவையொட்டி கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறமும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. விஜய் வீடு அமைந்துள்ள நீலாங்கரை முதல் விழா நடைபெறும் சொகுசு விடுதி வரை விஜய்யை வரவேற்று பதாகைகளும் வைக்கப்பட்டு இருந்தன.
- பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் அவர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.
- தமிழக இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
வேங்கிக்கால்:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய கல்விக் கொள்கை என்ற திட்டத்தின் மூலம் தமிழகத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்தியை திணிக்க முயல்கிறது. இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல் திட்டத்தில் ஒன்றானது. ஒரே நாடு ஒரே மொழி என்பதை அடையும் நோக்கத்தோடு மத்திய அரசு செயல்படுகிறது.
தனி நபர்கள் இந்தியை கற்க வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தியா முழுவதும் ஒரே மொழியை பேச வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையை தான் எதிர்க்கிறோம். கல்விக் கொள்கையை ஏற்றால்தான் கல்விக்கான நிதியை தருவோம் என்பது ஏற்புடையதல்ல.
இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இதனை கண்டிக்கிறது. மார்ச் 5-ந் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.
தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த முயற்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு பாராளுமன்ற தொகுதி மறுவரையறை செய்யப்பட உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் மறு வரையறை அமைந்தால் தமிழ்நாடு 8 பாராளுமன்ற தொகுதிகளை இழக்க நேரிடும். ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளது. ஆறுதல் அளிக்கிறது.
நடிகர் விஜய் தேர்தலை சந்தித்தால் தான் அவரை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா, அங்கீகரிக்கிறார்களா என்பது தெரியவரும். பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் அவர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இல்லாத நிலையில் அ.தி.மு.க.வையோ, தி.மு.க.வையோ பலவீனப்படுத்த முடியும் என்று சிலர் கணக்கு போடுகிறார்கள். சினிமா புகழை மட்டும் வைத்து எல்லாவற்றையும் ஓரம் கட்டி விட முடியும் என்று சொல்லிவிட முடியாது. தமிழ்நாட்டு மக்கள் விவரமானவர்கள். தமிழக இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
தமிழக இளைய தலைமுறையினரை அவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் நமக்கு கவலையில்லை.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதைத் தாண்டி வியூகங்களை வகுத்து வெற்றி பெறுவார்.
திருச்சி:
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மற்றும் கட்சியின் சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் தி.மு.க. முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
த.வெ.க. கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் பிரசாந்த் கிஷோருடன் மேடையேறியுள்ளார் நடிகர் விஜய். பிரசாந்த் கிஷோர் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பணியாற்றி விட்டு தற்போது மாற்று கட்சியில் பணியாற்ற சென்றுள்ளார்.
யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் நமக்கு கவலையில்லை. ஏனெனில் பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே விலை போகாதவர்.
தனது கட்சிக்கு டெபாசிட் கூட வாங்காதவர். பீகார் தேர்தல் முடிவுகள் அதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன. அவர் இங்கு வந்து தொகுதி வியூகங்கள் வகுப்பதெல்லாம் எப்படி இருக்கும்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதைத் தாண்டி வியூகங்களை வகுத்து வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நிதியை கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
- எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்; அது தனிப்பட்ட உரிமை.
த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில், மக்கள் நலன் நாட்டின் நலன் எதைப்பற்றியும் கவலைப்படாமல், பணம், பணம் என்ற மனநிலை கொண்ட பண்ணையார்களை அகற்ற வேண்டும் என்று விஜய் பேசினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
* விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்பட உள்ளது.
* பூத் ஏஜெண்டுகளை பலப்படுத்த வேண்டும்.
* த.வெ.க. தமிழகத்தில் முதன்மை சக்தி என்பது நிரூபணமாகும்.
* சாதாரண குடும்பத்திலிருந்து வந்தோர் அரசியலுக்கு வரக்கூடாதா?
* மும்மொழி கொள்கை என்ற புதிய பிரச்சனை கிளப்புகின்றனர்.
* கல்வி நிதியை மாநில அரசுக்கு தரமாட்டோம் என கூறுகின்றனர். எல்கேஜி, யூகேஜி பிள்ளைகள் போல் சண்டை போடுகின்றனர்.
* நிதியை கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. நிதிய பெற வேண்டியது தமிழக அரசின் கடமை.
* என்ன பிரச்சனை என்று தெரியாமல் சண்டையிடுவது போல் சண்டையிட்டு ஹேஷ்டேக் போட்டு விளையாடுகின்றனர்.
இவங்க இரண்டு பேரும் அடித்துக் கொள்வது போன்று அடித்துக்கொள்வார்களாம். இதை நாங்க நம்பணுமாம்
What bro, its very wrong bro என தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளை கிண்டலடித்த விஜய், தமிழ் மண் சுயமரியாதை கொண்ட மண். ஒரு மொழியை திணித்தால் எப்படி? என கேள்வி எழுப்பினார்.
மேலும், மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக மொழிக்கொள்கையை கேள்விக்குறியாக்கி வேறு மொழியை வலுக்கட்டாயமாக்க திணிப்பதா?
மாநில மொழி மீது வேறு ஒரு மொழியை அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி Bro?
எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்; அது தனிப்பட்ட உரிமை.
பொய் பிரசாரங்களை புறந்தள்ளிவிட்டு மும்மொழிக்கொள்கையை எதிர்ப்போம் என்றார்.
தொடர்ந்து Confident ஆக இருங்கள் வெற்றி நமதே என கூறி விஜய் உரையை முடித்துக்கொண்டார்.
- அரசியலில் யார் யாரை எப்போது எதிர்ப்பார்கள் என தெரியாது.
- அரசியலில் மட்டும் தான் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் அதன் தலைவர் விஜய் My Friend, My Brother என பேசத் தொடங்கிய விஜய் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பிரசாந்த் கிஷோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து என் நெஞ்சில் குடியிருக்கும் என்று கூறி உரையை தொடங்கிய விஜய்,
* தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. வரலாறு படைக்கும்.
* அரசியல் என்றால் வேற வெலல் தான். அரசியலில் மட்டும் தான் வித்தியாசமான ஒன்றாக நாம் பார்க்கலாம்.
* அரசியலில் யார் யாரை எப்போது எதிர்ப்பார்கள் என தெரியாது.
* அரசியலில் மட்டும் தான் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை.
* மக்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சுப் போன ஒருவன் அரசியலுக்கு வந்தால், ஒரு சிலபேருக்கு மட்டும் எரிச்சல் வரத்தானே செய்யும்.
* இதுவரை நாம் சொன்ன பொய்யையெல்லாம் நம்பி மக்கள் ஓட்டுபோட்டனரே, இவனை எப்படி நாம் Close பண்ணலாம் என நினைப்பர்.
* குழப்பத்தில் கத்துவதா? கதறுவதா என தெரியாமல் விமர்சனம் செய்கிறார்கள்.
* வருகின்ற எதிர்ப்பை எல்லாம் Left Handல் டீல் செய்து த.வெ.க. இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
* கட்சியை பலப்படுத்தும் பணியை செய்து வருகிறோம்.
* வேரையும் விழுதுகளையும் பலப்படுத்தும் வேலையை தான் நாம் செய்து வருகிறோம்.
* அண்ணா கட்சி ஆரம்பித்த போது பின்னால் நின்றவர்கள் இளைஞர்கள்.
* நமது கட்சி எளிய மக்களுக்கான கட்சி, பண்ணையார்களுக்கான கட்சி அல்ல.
* தவெக பண்ணையாளர்களுக்கான கட்சி அல்ல. சாதாரண மக்களுக்கான கட்சி. அதனால் இங்கு சாதாரண மக்கள் இருப்பர்.
* பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவதே முதல் வேலை.
இவ்வாறு விஜய் பேசினார்.
- தமிழக வெற்றிக் கழகம் விஜய் தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
- தமிழை கற்கவும், தமிழை பேசவும் அனைத்து முயற்சியும் எடுப்பேன்.
த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா கூட்டத்தில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பேசியதாவது:-
* த.வெ.க.விற்கு வியூகம் அமைக்க போவதில்லை. இது மாற்றத்திற்கான காலம்.
* எனது வியூகம் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், சகோதரரும் நண்பருமான விஜய்க்கு தேவையில்லை.
* த.வெ.க. அரசியல் கட்சி அல்ல. பல லட்சம் பேர் இணைந்த இயக்கம்.
* விஜய் ஒரு தலைவர் மட்டுமல்ல, அவர் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்.
* தமிழக வெற்றிக் கழகம் விஜய் தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
* தமிழக வெற்றிக் கழகத்தில் அதிக இளைஞர்கள் உள்ளனர். உங்கள் பணியே உங்கள் வெற்றி.
* தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் தேர்தலுக்கு பின்னர் வியூகவகப்பாளர் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தேன்.
* தமிழை கற்கவும், தமிழை பேசவும் அனைத்து முயற்சியும் எடுப்பேன்.
* தமிழகத்தின் வளர்ச்சி மாடல் இந்தியாவின் சிறந்த மாடல்.
* தமிழகத்தின் வளர்ச்சி மாடலை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.
* அடுத்த வருடம் த.வெ.க. வென்ற பின்னர் உங்களில் பலர் சட்டசபையில் அமருவீர்கள்.
* தமிழக வெற்றிக் கழக வெற்றிக்கு நன்றி சொல்ல தமிழகம் வரும்போது தமிழில் பேசுவேன்.
* வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணில் உள்ளது போல் அரசியல் ஊழலில் தமிழகம் மேலோங்கி உள்ளது.
* லஞ்சம், வாரிசு அரசியல் இல்லை என்றால் தமிழ்நாட்டின் வளர்ச்சி மேலும் சிறந்ததாக இருக்கும்.
* மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் அரசியல் ஊழல் அதிகமாக உள்ளது.
* தமிழக மக்கள் மத அரசியலை வேரூன்ற விடமாட்டார்கள் என நம்புகிறேன்.
* சுனில் கவாஸ்கர், கபில்தேவ் மட்டுமே விளையாடிக்கொண்டிருந்தால், தோனி, சச்சினின் ஆட்டம் எப்படி மக்களுக்கு தெரியவரும் என்றார்.
- 2,642 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை.
- திராவிட மாடல் அரசு மக்களை காக்கும் அரசு, மக்களுக்கான அரசு.
சென்னை:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை 2,642 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்களின் உயிர் காக்கும் சேவை பணிக்கு ஆணை வழங்க என்னை அழைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களை புரிந்து கொள்ளும் மருத்துவர்களாக பணியாற்ற வேண்டும். மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும்.
மருத்துவர்கள் செய்ய கூடியது, மக்களின் உயிர் காக்கும் பணி. மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உங்கள் சேவை இருக்க வேண்டும். மக்களின் நலனை நீங்கள் கவனியுங்கள், உங்கள் நலனை கவனிக்க இந்த திராவிட மாடல் அரசு இருக்கிறது.
திராவிட மாடல் அரசு மக்களை காக்கும் அரசு, மக்களுக்கான அரசு. எத்தனை தடைகள் வந்தாலும், எப்படிப்பட்ட நெருக்கடி வந்தாலும் மக்களுக்கான பணியை திராவிட மாடல் அரசு மேற்கொள்கிறது. சட்ட நெருக்கடிக்கு பிறகுதான் பணி ஆணைகளை வழங்கியுள்ளோம். 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு இருப்பதற்கு காரணம் கலைஞர் உருவாக்கிய மருத்துவ கட்டமைப்புதான். மாவட்டந்தோறும் மருத்துவ கல்லூரிகள், நகரங்கள் தோறும் அரசு மருத்துவமனைகள், கிராமங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என இப்படி கலைஞர் உருவாக்கிய மருத்துவ கட்டமைப்பால் இன்று தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது தமிழ்நாட்டு மருத்துவக் கட்டமைப்பை இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் அனைவரும் பாராட்டும் வகையில் உருவாக்கி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 100 வருடங்கள் ஆகியும் பெரியார் கண்ட கனவு எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
- ரூ.1000 கொடுத்து ரூ.10ஆயிரத்தை பிடுங்கி கொண்டிருக்கிறார்கள்.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது:-
* பிறப்பால் ஒரு தலைவர் உருவாகக்கூடாது, மன்னராட்சி ஒழிக்கப்படவேண்டும் என்கிற ஒரு உண்மையை கூறியதற்காக பல்வேறு சூழ்ச்சிகள் என்னை சூழ்ந்த போது என்னை அழைத்தவர் விஜய்.
* சினிமாவின் உச்சத்தில் இருந்த போது அதனை துறந்து அரசியலுக்கு வந்தவர் விஜய்.
* சாதி அரசியலை பேசி தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று ஊழலை முதற்கண்ணாக கொண்டுள்ளனர்.
* பெரியாரை முன்னிலைப்படுத்தி இன்றைய அரசியல் ஊழல்வாதிகளின் கையில் உள்ளது.
* 100 வருடங்கள் ஆகியும் பெரியார் கண்ட கனவு எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
* 75 வருடங்களாக கொள்கை பேசிய தலைவர்கள் என்ன மாற்றம் செய்தார்கள்?
* தமிழகத்தின் கடன் 9 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
* ஊழல்வாதிகளின் கைகளில் தமிழக அரசியல் இருப்பதை துடைத்தெறிய வேண்டும்.
* 15 வருடங்களாக 5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ள கட்சி அதிமுக.
* வெளிநாட்டில் பொருளாதாரத்தை உருவாக்கி கடன் வாங்குவர், தமிழகத்தின் கடனை உருவாக்கி ஊழல் செய்கின்றனர்.
* சாதி அரசியல் பேசி தேர்தலில் வென்ற போலி கபடதாரிகள்.
* தமிழக அரசியலுக்கு ஒரே மாற்று த.வெ.க., ஒரே மாற்று தலைவர் விஜய்.
* தளபதி என்ற நிலையில் இருந்து தலைவர் என்று பரிமாணத்தை நோக்கி நகர்ந்து வருகிறார் விஜய்.
* ஆளுங்கட்சிக்கு தூக்கத்திலும் இந்த கூட்டத்தை எப்படி அடக்குவது? என்பது பற்றிய எண்ணம் தான் உள்ளது.
* சினிமா துறையில் பல தொழில்களை நடத்தி கொண்டிருக்கும் அரசாக இன்றைய அரசியல் உள்ளது.
* சிறை செல்வதற்கும் த.வெ.க.வினர் தயாராக உள்ளனர்.
* ரூ.1000 கொடுத்து ரூ.10ஆயிரத்தை பிடுங்கி கொண்டிருக்கிறார்கள்.
* எங்களிடம் பணம் இல்லாமல் இருக்கலாம், நல்ல தலைவர்கள்கள் இருக்கிறார்கள்.
* விஜயை பார்த்து நடிகர் என்று கூறுகின்றனர், ஆனால் என் தலைவரை பார்த்து நீங்கள் தான் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
* நம் கொள்கைகளை உள்வாக்கி மேலும் பல தலைவர்கள் வர தயாராக உள்ளனர். பல பூகம்பங்கள் தயாராக உள்ளது என்றார்.
- கையெழுத்து இயக்கத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.
- தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார்.
த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறுகிறது. சுமார் 300 தொண்டர்கள் அரங்கிற்குள் அமர்ந்திருக்க த.வெ.க. தலைவர் விஜய் மாஸாக என்ட்ரி கொடுத்தார். மேடை ஏறியதும் 'Get Out' கையெழுத்து இயக்கத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.
கையெழுத்து இயக்கத்தில் முதல் ஆளாக அதன் தலைவர் விஜய் கையெழுத்திட்ட நிலையில், அவரைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்பட பொறுப்பாளர்கள் கையெழுத்திட்டனர். அப்போது மேடையில் இருந்த பிரசாந்த் கிஷோரையும் கையெழுத்திட த.வெ.க. பொதுச் செயலாளர் ஆனந்த் கேட்டுக் கொண்டார்.
அப்போது, "இல்லை, இல்லை வேண்டாம்" என்றவாரு செய்கையில் தெரிவித்த பிரசாந்த் கிஷோர் கடைசி வரை கையெழுத்திடாமல் நழுவி கொண்டார். த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்காமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கையெழுத்து இயக்கத்திற்காக அரங்கத்தின் மேடையில் வைக்கப்பட்ட பேனரில், "புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்டத் தணிப்பு, அரசியல் கோழைத்தனம், வாக்கு வங்கிகளுக்காக சாதி மற்றும் மற்ற சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நயவஞ்சகம் ஆகியற்றுக்கு எதிராக போராட உறுதியேற்போம்," என எழுதப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- தமிழக அரசு செயல்படாமல் முடங்கி கிடக்கிறது.
- அ.தி.மு.க களத்தில் நின்று மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறது.
தருமபுரி:
தருமபுரியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
கோவை வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியது முழுக்க முழுக்க தி.மு.க.வின் அரசியல் பழி வாங்குதல் நடவடிக்கை ஆகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து தெளிவான அறிக்கை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொடுத்திருக்கிறார்.
தமிழக அரசு செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. இதனை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் கடமையை அ.தி.மு.க களத்தில் நின்று எடுத்து சென்று மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறது.
தி.மு.க அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் முடிவு கட்டுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகி வருகி றார்கள். அதை திசை திருப்பும் வேலையாக சட்ட மன்ற உறுப்பினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோத னையாக இதை பார்க்க முடிகிறது.
ஆகவே இது போன்ற நிகழ்வுகளை எல்லாம் அ.தி.மு.க. அரசு 52 ஆண்டு களாக கடந்து வந்திருக்கிறது. இதுபோன்று பழி வாங்கும் நடவடிக்கைகளால், அ.தி.மு.க. இயக்கத்தையும் இயக்கத் தொண்டர்க ளையும் இயக்கத்தின் செயல்பாடுகளையும் முடக்கி விடலாம் என்று தி.மு.க நினைத்தால் அது சர்வாதிகார போக்காகும். அது நடக்காது. தி.மு.க அரசுக்கு இது ஒரு நிறைவு காலமும், ஒரு முடிவு கால மாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.






