என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்.பி. உதயகுமார்"

    • எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக தற்போது சிக்குண்டு கிடப்பதால், தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறது
    • இபிஎஸ் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் ஓபிஎஸ் துணை முதலமைச்சராக இருந்தார்.

    தலைமைப் பண்பிற்கான அறிகுறி துளியும் இல்லாத எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக தற்போது சிக்குண்டு கிடப்பதால், தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்திருந்தார்.

    இது குறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே. ராஜு மதுரையில் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை வரவேற்றுவிட்டு அவரது காரில் ஏறும்போது, அவர் வேறு காரில் வருமாறு அறிவுறுத்தப்பட்டார்.

    இந்தக் காட்சி அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. இது செல்லூர் ராஜுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அவமரியாதை.

    இதேபோன்று, மாநிலங்களவை உறுப்பினரான தம்பிதுரை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவிக்க முற்பட்டபோது அதைத் தெரிவிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்தக் காட்சியும் அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது.

    இது தம்பிதுரைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழுக்கு. இதுபோல் வெளிவராத சம்பவங்கள் ஏராளம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றிணைய வேண்டுமென்று வலியுறுத்துபவர்கள் குறி வைத்து அவமரியாதை செய்யப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், இபிஎஸ்க்கு தலைமைப் பண்பு இல்லை என்ற ஓபிஎஸ் விமர்சனங்களுக்கு ஆர்.பி. உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

    செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்.பி. உதயகுமார், "கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர் ஓபிஎஸ். அப்போது கட்சியின் எதிர்காலம், கட்சி தொடர்களின் எதிர்காலம் குறித்து ஓபிஎஸ்நினைத்து பார்த்திருந்தால் இந்த இயக்கத்திற்கு இவ்வளவு சோதனைகள் வந்திருக்காது. இபிஎஸ் அவர்களின் தலைமை பண்பை பேசுவதற்கு முன்பு ஓபிஎஸ் அவர்கள் தான் தலைமை பண்போடு இருக்கிறோமோ என்பதை நினைத்து பார்க்க வேண்டும். இபிஎஸ் அவர்களின் தலைமை பண்பை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொண்டு தான் முதலமைச்சராக முன்மொழிந்தார்கள். இபிஎஸ் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் ஓபிஎஸ் துணை முதலமைச்சராக இருந்தார். தற்போது ஓபிஎஸ் குற்றம் சாட்டுவது அவருடைய இயலாமையை தான் வெளிக்காட்டுகிறது" என்று தெரிவித்தார். 

    • அரசு எந்திரத்தையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கீழ் கொண்டு வருவது என்பது ஒரு தவறான முன் உதாரணமாகும்.
    • உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டு வந்து அதை வளர்ச்சி என்ற பெயரில் அவர்கள் நடத்துகிற நாடகம்.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் கூறியதாவது:-

    தமிழக இளைஞர் நலம் விளையாட்டு மேம்பாட்டு சிறப்பு திட்ட செயலாக்குத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மதுரையில் கடந்த 9-ந்தேதிஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திலேயே அமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி வருவாய் வட்டாட்சியர் உள்ளிட்ட சில அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக அரசு செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டிருந்தது .

    குறிப்பாக இதுபோன்ற ஆய்வு கூட்டத்திலே மனுக்களின் சிலவற்றை மட்டும் வைத்துக் கொண்டு ஆய்வு செய்து அதன் அடிப்படையிலேயே அலுவலர் அவர்களின் செயல்பாடுகளை நிர்ணயிப்பது என்பது ஏற்புடையதாகாது.

    இன்றைக்கு விளையாட்டு துறை அமைச்சர் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வளர்ச்சி திட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம் என்ற பெயரிலே அவர்களுடைய மரபுகளை மீறி அனைத்து துறைகளுடைய அலுவலகங்களிலும் அவர் ஆய்வு செய்வதாக அரசு ஊழியர் சங்கத்தினர் முகம் சுளிக்கின்றனர். பொதுவாக அனைத்து துறைகளுடைய அலுவலர்கள் ஆய்வு செய்கின்ற அந்த அதிகாரம் என்பது நாம் அறிந்த வகையிலே முதலமைச்சர் மட்டும்தான் அனைத்து துறைகளிலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரம் பெற்றவராக உள்ளார் என்பதை நாம் அறிகின்றோம்.

    உதயநிதி ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் எல்லாம் அமைச்சரவையில் இருக்கும் போது தனிப்பட்ட முறையில் அவரை முன்னிலைப்படுத்தி ஒட்டுமொத்த அரசு எந்திரத்தையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கீழ் கொண்டு வருவது என்பது ஒரு தவறான முன் உதாரணமாகும்.

    முதலமைச்சருக்கு மகனாக பிறந்த ஒரே காரணத்திற்காக ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் விளையாட்டு துறை அமைச்சரின் கீழே கொண்டு வருவது என்பது தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுவரை யாரும் கண்டிராத கேட்கிறாத பார்த்திராத ஒரு தவறான முன் உதாரணமாக அமைந்திருக்கிறது.

    அதோடு தன் ஆய்வுகளில் கவனத்தை ஈர்ப்பதற்காக இதுபோன்ற ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பெயரிலே அவசரக்கதியிலேயே முழுமையான விசாரணை செய்யாமல் போதிய விளக்கத்தை பெறாமல் நடவடிக்கை எடுப்பது என்பது முழுக்க முழுக்க ஒரு அரை வேக்காட்டுத்தனமான நடவடிக்கையாக தான் அரசு ஊழியர்கள் பார்க்கிறார்கள்.

    ஆகவே இன்றைக்கு முதலமைச்சராக அமெரிக்காவில் இருக்கின்ற போது அறிவிக்கப்படாத முதலமைச்சராக ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் அரசின் முழு நிர்வாகத்தையும் உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டு வந்து அதை வளர்ச்சி என்ற பெயரில் அவர்கள் நடத்துகிற நாடகம்.

    எது எப்படி ஆயினும் கலெக்டர் தலைமையில் நடைபெறுகின்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் குறிப்பாக மதுரையிலே வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மீதான நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அரசு ஊழியர்கள் வருவாய் துறை ஊழியர்கள் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதை முதலமைச்சர் கவனத்தில் எடுத்து இது போன்ற மரபு மீறி நடத்தப்படும் ஆய்வுக் கூட்டங்களை தடுத்து நிறுத்தி ஒரு தவறான முன்உதாரணம் அரசு நிர்வாகத்தில் ஏற்படுத்தி விட கூடாது என்பதை உரிய விளக்கத்தோடு இதற்கு ஒரு தீர்வு காண அமெரிக்காவில் இருக்கின்ற முதலமைச்சர் முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழக அரசு செயல்படாமல் முடங்கி கிடக்கிறது.
    • அ.தி.மு.க களத்தில் நின்று மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறது.

    தருமபுரி:

    தருமபுரியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    கோவை வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியது முழுக்க முழுக்க தி.மு.க.வின் அரசியல் பழி வாங்குதல் நடவடிக்கை ஆகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து தெளிவான அறிக்கை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொடுத்திருக்கிறார்.

    தமிழக அரசு செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. இதனை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் கடமையை அ.தி.மு.க களத்தில் நின்று எடுத்து சென்று மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறது.

    தி.மு.க அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் முடிவு கட்டுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகி வருகி றார்கள். அதை திசை திருப்பும் வேலையாக சட்ட மன்ற உறுப்பினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோத னையாக இதை பார்க்க முடிகிறது.

    ஆகவே இது போன்ற நிகழ்வுகளை எல்லாம் அ.தி.மு.க. அரசு 52 ஆண்டு களாக கடந்து வந்திருக்கிறது. இதுபோன்று பழி வாங்கும் நடவடிக்கைகளால், அ.தி.மு.க. இயக்கத்தையும் இயக்கத் தொண்டர்க ளையும் இயக்கத்தின் செயல்பாடுகளையும் முடக்கி விடலாம் என்று தி.மு.க நினைத்தால் அது சர்வாதிகார போக்காகும். அது நடக்காது. தி.மு.க அரசுக்கு இது ஒரு நிறைவு காலமும், ஒரு முடிவு கால மாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அடிப்படையில் சபாநாயகர் நல்ல முடிவு எடுப்பார் என்று ஆர்.பி. உதயகுமார் பேட்டியளித்துள்ளார்.
    • திருமங்கலம் அருகே உள்ள மறவன் குளம் ஊராட்சிக்குட்பட்ட வையம்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திறந்து வைத்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள மறவன் குளம் ஊராட்சிக்குட்பட்ட வையம்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ஆன்லைன் ரம்மியால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழக அரசு தற்போது அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.

    இந்த அவசர சட்டமானது 6 மாத காலத்துக்குத்தான் இருக்கும். நிரந்தர சட்டமாக ஆன்லைன் ரம்மியை கொண்டுவர வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடாக உள்ளது.

    சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்-அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் கூடிய கடிதத்தை கொறடா எஸ்.பி.வேலுமணி சபாநாயகரிடம் கொடுத்து ள்ளார்.

    ஒரு பக்க கடிதத்தை எவ்வளவு நாட்கள் ஆய்வு செய்கிறார்? என்பது தெரியாது. அவர் ஆய்வு செய்து இந்திய ஜனநாயகத்தை காக்கக்கூடிய நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன். ஆனால் சபாநாயகரின் செயல்பாடுகள் ஒருதலை பட்சமாக இருப்பது தெரிகிறது. எனவே சபாநாயகர் முடிவு நல்ல முடிவாக இருக்கும் என நம்புகிறோம். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்னும் தமிழக அரசு கையாளவில்லை.கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வட கிழக்கு பருவமழைக்கும் முன்னதாகவே பாதிக்கப்படக்கூடிய 400-க்கும் மேற்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களை பாதுகாத்தோம். அதேபோல் தற்போதைய தி.மு.க. அரசு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களை காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து விடத்த குளம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், திரளியில் தரைப்பாலம், கட்ராம்பட்டி கிராமத்தில் நியாய விலை கடை ஆகியவற்றை ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இதில் திருமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன், பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன், யூனியன் சேர்மன் லதா ஜெகன், மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், சிவசுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகிகள் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வம், திருப்பதி, சரவணபாண்டி, சிங்கராஜ்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம், ராமசாமி, கள்ளிக்குடி, துணை சேர்மன் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் உச்சப்பட்டி செல்வம், சிவரக்கோட்டை ஆதிராஜா, நிர்வாகிகள் பாண்டி, கண்ணபிரான், கோடீஸ்வரன், ரமேஷ், கப்பலூர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×