search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udhyanidhi Stalin"

    • தெற்காசியாவில் முதல் முறையாக சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது.
    • அடுத்த மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரேஸிங் புரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இணைந்து ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 கார் பந்தயம் போட்டியை நடத்துகிறது.

    சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது. சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சுற்றளவில் இரவு போட்டியாக நடத்தப்பட உள்ளது.

    தெற்காசியாவில் முதல் முறையாக ஸ்ட்ரீட் சர்க்யூட் பார்முலா 4 பந்தயம் சென்னையில் நடைபெறுகிறது. பார்முலா 4 கார்பந்தயம் நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது.

    இந்நிலையில், பார்முலா 4 கார் பந்தயத்துக்காக தீவுத்திடலில் சாலை அமைக்கும் பணிகளை இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.

    அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், திட்டமிட்டபடி இப்போட்டிக்கான பணிகள் 10 நாட்களில் நிறைவடையும். 3 வருடம் இப்போட்டியை நடத்துவதற்கு கையெழுத்திட்டுள்ளோம். அடுத்த 2 வருடமும் தொடர்ந்து போட்டிகள் நடத்தப்படும். விளையாட்டு மற்றும் சுற்றுலா ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து சென்னை தீவுத்திடலில் இப்போட்டியை நடத்துகிறோம் என தெரிவித்தார்.

    ×