என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது.
    • ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விக்கிரவாண்டியில் நடக்கிறது.

    இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கான இறுதிக்கட்ட பணி விக்கிரவாண்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மாநாட்டிற்கு வரும்போது ரோடு ஷோ நடத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் ரோடு ஷோ நடத்த வேண்டாம் என தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத.

    மேலும், தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரி சென்றுவிட்டு அங்கிருந்து மாநாட்டு வர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    • தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது.
    • விஜய் தங்குவதற்கு ஏற்ப விஐபி ரூம் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விக்கிரவாண்டியில் நடக்கிறது.

    இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கான இறுதிக்கட்ட பணி விக்கிரவாண்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    முதல் முறையாக மக்கள் மத்தியில் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு மக்கள் மத்தியில் நேரடியாக அவரை பார்க்கும் ஆர்வமும், அவரது பேச்சை கேட்கும் ஆர்வமும் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு திடலுக்கு இன்றுரவு கட்சி தலைவர் விஜய் வர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விஜய் வாடகை வீட்டில் தங்க இருப்பதாகவும், அந்த வீட்டிற்கு நிர்வாகிகள் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இரவு வந்து மாநாட்டின் பணிகளை கண்காணிக்க உள்ளதாகவும் தகல் வெளியாகியுள்ளது. மேஞம், விஜய், மாநாடு திடலுக்கு உள்ளே தங்குவதற்கு ஏற்ப கேரவன்கள் கொண்டுவதரப்பட்டுள்ளது.

    தங்கும் இடத்தில் இருந்து கேரவன் மூலம் மாநாடு திடலுக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில் மக்கள் அதிக சிரமத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள்.
    • மதுரை மாநகர மக்கள் மழையால் தண்ணீர் தேங்கிய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு மதுரையில் பெய்திருக்கும் கனமழையால் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்ற உடனடி பணிகளை, அவசியப் பணிகளை மேற்கொண்டு மதுரை மக்களைப் பாதுகாக்க வேண்டும். மேலும் தொடர் மழையின் தாக்கத்தில் இருந்து பொது மக்களைப் பாதுகாக்க தொடர் நடவடிக்கை தேவை. தமிழக அரசு மதுரை உள்ளிட்ட மற்றப் பகுதிகளில் மழை பெய்ததால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து பொது மக்களைப் பாதுகாக்க வேண்டும்.

    தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில் மக்கள் அதிக சிரமத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள்.

    குறிப்பாக மதுரை மாநகர மக்கள் மழையால் தண்ணீர் தேங்கிய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மதுரை மாநகர மக்களுக்கு மாநகராட்சி பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு, நிவாரணம் கொடுத்து அவர்களுக்கு உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வருவாய் துறையினர் முன்னிலையில் போலீசார் அந்த மர்மபொருளை கைப்பற்றி பிரித்து பார்த்தனர்.
    • ஆய்வில் அந்த பார்சலில் இருந்தது ‘மெத்தபெட்டமைன்’ என்ற போதை பொருள் என்பது தெரியவந்தது.

    அதிராம்பட்டினம்:

    தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழத்தோட்டம் கடற்கரையில் மர்மபொருள் கிடப்பதாக கடலோர காவல் குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், பட்டுக்கோட்டை கடலோர காவல்குழும இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை வேம்பு, ராஜசேகர், அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர் ஜெகதீசன், ராஜாமடம் வி.ஏ.ஓ. முருகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பார்த்தபோது, கடற்கரை ஓரத்தில் பாலித்தீன் பையில் அந்த மர்மபொருள் கிடந்தது தெரியவந்தது.

    பின்னர், வருவாய் துறையினர் முன்னிலையில் போலீசார் அந்த மர்மபொருளை கைப்பற்றி பிரித்து பார்த்தனர். அப்போது அது போதை பொருள் என்பது தெரியவந்தது. பின்னர், அது எந்த வகையான போதை பொருள்? என்பதை அறிய அதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    ஆய்வில் அந்த பார்சலில் இருந்தது 'மெத்தபெட்டமைன்' என்ற போதை பொருள் என்பது தெரியவந்தது. அதன் எடை 900 கிராம் என்றும், அதன் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிராம்பட்டினம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குபதிவு செய்து போதை பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? கடத்தி வந்தவர் யார்? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆடுகளை வாங்க வியாபாரிகளும், ஆடு வளர்ப்போரும் திரண்டிருந்தனர்.
    • இந்தாண்டு சுமார் 7 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும்.

    கிராமப்புறங்களில் வளரும் ஆடுகள் இந்த சந்தைக்கு கொண்டு வரப்படுவதால், நெல்லை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க வியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ.2 கோடி வரை விற்பனை நடைபெறும்.

    ரம்ஜான், தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில் ஆடுகளை விற்பனை அதிகமாக நடக்கும்.

    வருகிற 31-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதையொட்டி நேற்று காலை முதல் எட்டயபுரம் சந்தைக்கு சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆடுகளை வாங்க வியாபாரிகளும், ஆடு வளர்ப்போரும் திரண்டிருந்தனர். ஆடுகள் கிலோ ரூ.800 என்ற விலையில் ரூ.7 ஆயிரம்முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.

    இதுகுறித்து ஆடு வாங்க வந்த வியாபாரி உதயகுமார் கூறும்போது, ''எட்டயபுரம் சந்தைக்கு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவு ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. விலையும் கடந்தாண்டை விட அதிகமாகவே உள்ளது. ரூ.7ஆயிரம் விலையுள்ள ஆடு ரூ.30 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

    எட்டயபுரம் சந்தைக்கு இந்தஆண்டு வெள்ளாடுகள், நாட்டு செம்மறி ஆடுகள், மயிலம்பாடி, குறும்பை, சீனி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வியாபாரிகளும் அதிகம் வந்துள்ளனர். ஆடுகளின் விலை தான் மிகவும் அதிகமாக உள்ளது. 10 கிலோ எடையுள்ள குட்டியை ரூ.10 ஆயிரம் வரை சொல்கின்றனர். இந்தாண்டு சுமார் 7 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது என்றார்.

    • செல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்திருந்தது.
    • அண்ணே எல்லாம் பண்ணிகிட்டு இருக்கோம் என அவரிடம் அமைச்சர் மூர்த்தி பதில் அளித்தார்.

    மதுரை மாநகரில் நேற்று வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது. நேற்று மாலை ஒரு மணி நேரத்தில் மதுரை மாநகரில் மட்டும் 4.5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. குறைந்த மணி நேரத்தில் அதிகனமழை பெய்ததால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் மதுரையில் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக செல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்திருந்தது. அந்த தண்ணீரே வடியாத நிலையில் நேற்று பெய்த மழையால் மீண்டும் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை வரை செல்லூர், அய்யர்பங்களா, நரிமேடு, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தண்ணீர் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    மாவட்ட நிர்வாகம் தண்ணீரை வெளியேற்றும் பணியை முடுக்கி விட்டுள்ளது. நவீன மின் மோட்டார்கள் மூலம் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மதுரை மாநகர மக்களுக்கு இந்த பருவமழையால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மதுரை செல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் வெள்ள மீட்பு பணிகளை அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவரிடம் வெள்ள மீட்பு பணிகளை முடுக்கி விடுமாறு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை விடுத்தார்.

    அதிகாரிகளிடமும் வெள்ள மீட்பு பணிகள் தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ வலியுறுத்தினார்.

    அண்ணே எல்லாம் பண்ணிகிட்டு இருக்கோம் என அவரிடம் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

    • புதிய கல்வி கொள்கை உலக அரங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • இந்திய கல்வி அமைப்பு மிகப்பெரும் மேம்பாட்டை அடைந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக 31-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சி அரங்கில் நடைபெற்றது.

    விழாவுக்கு தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி தங்க பதக்கங்கள் பெற்ற 111 பேருக்கும், முனைவர் பட்டங்கள் பெற்ற 460 பேருக்கும் என மொத்தம் 571 பேருக்கு நேரடியாக படங்களை வழங்கினார்.

    விழாவில் 33 ஆயிரத்து 821 பேர் பட்டங்கள் பெறுகின்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில் ஆண்டறிக்கையை பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் வாசித்தார்.

    தொடர்ந்து தேசிய புவி அறிவியல் துறை இயக்குனர் சலபதி ராவ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது:-

    புதிய கல்வி கொள்கை உலக அரங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் உள்ள மாணவர்களும் இந்தியாவில் வந்து கல்வி கற்கும் வகையில் இந்திய கல்வித்தரம் உயர்ந்துள்ளது.

    இந்திய கல்வி அமைப்பு மிகப்பெரும் மேம்பாட்டை அடைந்துள்ளது. குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி பெறும் வகையில் கல்வி அமைப்பு நாட்டில் செயல்படுகிறது. உயர் கல்வியில் தொடர்ந்து இந்தியா மேம்பட்டு வருகிறது.

    இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா 2047-ம் ஆண்டு கொண்டாடும் போது உலக அளவில் சமுதாய வளர்ச்சி, பொருளாதாரம் போன்றவைகளில் சூப்பர் பவர் என்ற நிலையில் உலக அளவில் இந்தியா அடையும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான கோவி.செழியன் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார். முன்னதாக தங்கப் பதக்கங்கள் பெற்ற மாணவ-மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.

    விழாவில் தங்கப்பதக்கம் பெற்ற 111 பேரில் 97 பேர் பெண்கள் ஆவர். அதே போல் முனைவர் பட்டம் பெற்ற 460 பேரில் 377 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    பல்கலைகழகங்களில் முனைவர் பட்டம் பெறுபவர்களில் 337 பெண்கள் இடம் பெற்றிருப்பதும், அதிகளவிலான பெண்கள் முனைவர் பட்டம் பெற்றதும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு விற்பனை பண்டக சாலைகள் மூலம் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை செய்யப்பட உள்ளது.
    • அதிரசம்- முறுக்கு காம்போ 190-க்கு விற்பனை செய்யப்படும்.

    தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வருகிற அக்டோபர் 31-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

    பொதுமக்கள் அனைவரும் தீபாவளிப் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு பல்வேறு முன்னேற்பாடுகள் செய்து வருகிறது. அந்த வகையில், மக்கள் ரேஷனில் பொருட்களை பெறும் வகையில் அனைத்து முழு நேர மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகளும் 27-ந்தேதி முழுவதுமாக வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    * தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு விற்பனை பண்டக சாலைகள் மூலம் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை செய்யப்பட உள்ளது.

    * பண்டக சாலை, 65 சுயசேவை பிரிவு மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில் 28-ந்தேதி முதல் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை செய்யப்படும்.

    * அரை கிலோ பச்சரிசி, பாகு வெல்லம், மைதா மாவு, எண்ணெய் உள்ளிட்ட அதிரசம்- முறுக்கு காம்போ 190-க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்தை தடை செய்தும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    • சென்னை தி.நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் ஆகியவற்றை வாங்குவதற்காக பொதுமக்கள் கடை வீதிகளில் அலை மோதுகிறார்கள்.

    இதன் காரணமாக சென்னை உட்பட அனைத்து முக்கிய நகரங்களிலும் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு மக்கள் அதிக அளவில் திரள்கிறார்கள்.

    இதனால் ஜவுளிக் கடைகள், பட்டாசு கடைகள், இனிப்பு மற்றும் பலகார கடைகள் இருக்கும் பகுதிகளில் திருவிழா கூட்டம் போல மக்கள் கூடி வருகிறார்கள்.

    சென்னையில் தி.நகர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த சில நாட்களாகவே மக்கள் அதிக அளவில் கூடி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகிறார்கள்.


    தீபாவளிக்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக்கிழமையான நாளை சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, உள்பட தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    இதன்படி மாநில முழுவதும் 48 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் முக்கிய கடைவீதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பு, பிக்பாக்கெட் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக போலீசார் சாதாரண உடையில் கண்காணித்து வருகிறார்கள். தீபாவளி பொருட்களை வாங்க வரும் மக்கள் தங்களது வாகனங்களை முறையாக நிறுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

    மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்தை தடை செய்தும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    சென்னை தி.நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.


    3 இடங்களில் காவல் உதவி மையமும் ஒரு தற்காலிக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 75 கேமராக்கள் நிறுவப்பட்டு அதன் மூலமாக கூட்டத்தை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    2 டிரோன் கேமராக்களை பறக்கவிட்டு போலீசார் கண்காணிக்கிறார்கள். கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக தொலைபேசி எண்கள் அடங்கிய வளையம் குழந்தைகளின் கைகளில் அணிவிக்கப்பட்டு வருகிறது.

    கூட்ட நெரிசலில் பிக்பாக்கெட் மற்றும் வழிப்பறி கொள்ளையர்களை கண்டுபிடிப்பதற்காக அவர்களை அடையாளம் காட்டிக் கொடுக்கும் 64 கேமராக்களும் தனியாக நிறுவப்பட்டு உள்ளன.

    இந்த கேமராக்கள் குற்றவாளிகள் கூட்டத்துக்குள் புகுந்தால் அவர்களை உடனடியாக காட்டிக் கொடுத்து விடும். அதே நேரத்தில் சாதாரண முறையில் 15 காவலர்கள் அடங்கிய 5 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களும் கூட்ட நெரிசலில் மக்களோடு மக்களாக கண்காணித்து வருகிறார்கள். தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பாரிமுனை ஆகிய இடங்களில் மொத்தமாக 17 கண்காணிப்பு கோபுரங்களை போலீசார் அமைத்து உள்ளனர்.

    அங்கிருந்தபடியே சுழற்சி முறையில் போலீசார் பைனாகுலர் மூலமாக கண்காணித்து சந்தேக நபர்களின் நடமாட்டம் தெரிந்தால் உஷார் படுத்துகிறார்கள். 19 இடங்களில் ஒலிபெருக்கிகள் மூலமாக பொதுமக்கள் உஷாராக இருக்கும்படியும் போலீசார் எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கிறார்கள். 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    கூட்ட நெரிசலில் யாராவது மயங்கி விழுந்தால் அவர்களை உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்துச் செல்ல முறையான இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு உள்ளது.

    தீபாவளிக்கு இன்னும் புத்தாடை, பட்டாசு, இனிப்பு வகைகளை வாங்காதவர்கள் விடுமுறை நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து இடங்களிலும் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் போலீசார் தேவையான கூடுதல் பாது காப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

    குறிப்பாக தி.நகர் ரங்கநாதன் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதேபோன்று ஒவ்வொரு மாவட்டங்களிலும் குறிப்பிட்ட பகுதிகளில் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள். அது போன்ற இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் கூடுதல் கண்காணிப்பு மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் தீபாவளியை மிகுந்த எச்சரிக்கையோடு பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    • பிழை என்பதே வரும் நாட்களில் எந்த விழாக்களிலும் இருக்கக்கூடாது.
    • தேவைப்பட்டால் இதற்குண்டான ஒத்திகை எடுப்பதும் முக்கியம்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேசிய கீதம் இந்தியாவிற்கு எப்படி பெருமை சேர்க்கிறதோ அதே போல தமிழ்த்தாய் வாழ்த்தும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறது. இதனுடைய வரிகள், உச்சரிப்பு பாடும் போது மிக முக்கியம். இதில் பிழை என்பதே வரும் நாட்களில் எந்த விழாக்களிலும் இருக்கக்கூடாது. தேவைப்பட்டால் இதற்குண்டான ஒத்திகை எடுப்பதும் முக்கியம். தமிழ்த்தாய் வாழ்த்தில் அரசியல் கூடாது.

    இதனுடைய நோக்கமே தமிழ்நாடு, தமிழ்வளர்ச்சி, தமிழ்பற்று. இதில் தவறு கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆதாயத்திற்கும், விளம்பரத்திற்கும் மட்டுமே இருக்கக்கூடும். தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் பாடல்கள் என்பதால் சரியாகப் பாட வேண்டும் என்பதையே குறிக்கோளாகக்கொண்டு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னையில் கடந்த முறை 5 நாட்கள் வரையில் தொடர்ந்து பெய்த மழையால் தேங்கிய தண்ணீரையும் உடனடியாக அகற்றினோம்.
    • சென்னையில் தூய்மை பணியாளர்களாகிய நீங்கள் மழை வெள்ளத்தை சரி செய்வதற்கு எப்போதுமே துணையாக இருக்கிறீர்கள்.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை வெள்ளத்தின்போது சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி தூய்மை பணியாளர்களை பாராட்டும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோடு அமர்ந்து உணவு அருந்தினார்.

    இந்த நிலையில் அவர்களை மேலும் ஊக்கப் படுத்தும் வகையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.

    இந்த உதவிகள் வழங்கும் விழாவுக்கு சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்தார்.

    வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை நடந்த விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி செவிலியர்கள், குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் 1280 பேருக்கு போர்வை, லுங்கி, சேலை, பால்பவுடர், பிஸ்கெட், அரிசி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கினார்.

    விழாவில் அவர் பேசியதாவது:-

    சென்னையில் கடந்த முறை 5 நாட்கள் வரையில் தொடர்ந்து பெய்த மழையால் தேங்கிய தண்ணீரையும் உடனடியாக அகற்றினோம். இந்த முறை சென்னையில் மிகப்பெரிய அளவில் மழை பெய்யப் போகிறது என்கிற எச்சரிக்கையை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மழைநீரை வெளியேற்ற துரித நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    4 மாதங்களாக தொடர்ச்சியாக ஆய்வு செய்து மழை வெள்ள பாதிப்பை சரி செய்வதற்கான ஆலோசனைகளை அவர் வழங்கினார்.

    எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் 3 மணி நேரத்தில் அது வெளியேறி விடும் வகையில் அதிகாரி கள் துரிதமாக செயல்பட வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இதன்படி அனைத்து துறை அதிகாரிகளும் செயல்பட்டனர். மாநகராட்சி தூய்மை பணியாளர்களும், மாநகராட்சி ஊழியர்களும் சிறப்பாக பணியாற்றியதால் மழைநீரை சீக்கிரமாக வெளியேற்ற முடிந்தது.

    குழந்தை ஒன்றை ஒரு அம்மா காலையில் நன்கு குளிப்பாட்டி வெளியில் விளையாட அனுப்புவார் . அந்த குழந்தை மாலையில் திரும்பும்போது உடல் முழுக்க மண்ணோடு வரும். அப்போது தாய்க்கு கோபம் ஏற்பட்டாலும் குழந்தையை சுத்தப்படுத்தி சரி செய்வார். அந்த குழந்தைதான் சென்னை. தூய்மை பணியாளர்களாகிய நீங்கள் தான் அம்மா. இது முடிவல்ல ஆரம்பம்தான்.

    சென்னையில் தூய்மை பணியாளர்களாகிய நீங்கள் மழை வெள்ளத்தை சரி செய்வதற்கு எப்போதுமே துணையாக இருக்கிறீர்கள். எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம். வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காக்க நாங்கள் இருக்கிறோம்.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி, மேயர் பிரியா, பரந்தாமன் எம்.எல்.ஏ. உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை முதல் வருகிற 1-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    ×