என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வங்கக்கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது
    • புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து நாளை சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புயல் முன்னெச்சரிக்கை எதிரொலியாக புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    காரைக்காலிலும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    ஏற்கனவே கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.
    • கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து நாளை சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமனை காரணமாக கடலூர், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும், காரைக்காலில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்ப்டு இருந்தது.

    இந்த நிலையில், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மயிலாடுதுறையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் மகாபாதி உத்தரவிட்டுள்ளார்.

    • புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.
    • காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து நாளை சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடலூர் பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக புயல் முன்னெச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதே போல் காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    • புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்.
    • சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து தென் கிழக்கே 830 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, சென்னையில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று காலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

    இந்நிலையல் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கால்வாயில் நடைபெறும் பணிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அரசு அதிகாரிகளுடன் விருகம்பாக்கம் வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். கால்வாயில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். 

    • ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
    • அப்போது, மின் விநியோகம் தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது.

    தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து நாளை சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக ஆறு மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

    மின் விநியோகம் தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வெள்ள நீர் தேங்கும் பட்சத்தில் பயிர்கள் சேதம் அடைவதைத் தடுக்க நடவடிக்கை அவசியம்.

    நிவாரண முகாம்களில் அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    முன்கூட்டியே மக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் உள்பட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

    • ஜி.கே. மணி தலைமையில் நிர்வாகிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    தருமபுரி:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. அதனால் அவர் தினமும் அறிக்கை விட்டுக் கொண்டிருப்பார் என பேசினார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க சார்பில் தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு பா.ம.க கவுர தலைவரும், பென்னாகரம் எம்.எல்.ஏ.வுமான ஜி.கே. மணி தலைமையில் நிர்வாகிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திடீரென பா.ம.கவினர் மறியலுக்கு முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

    பின்னர் போலீசார் பா.ம.க. எம்.எல்.ஏக்கள். ஜி.கே. மணி, வெங்கடேஸ்வரன் மற்றும் ஏராளமான பா.ம.க.வினரை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்று மண்டபத்தில் தங்க வைத்து உள்ளனர். இதில் 500-க்கு மேற்பட்டோர் கைது செய்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆப்பாட்டத்தில் பா.ம.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாநில உரிமை, பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் நலனை பேணி காப்பதில் முதல்வர் கவனமாக உள்ளார்.
    • முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் விரைவில் துணைவேந்தர் நியமனம் செய்யப்படுவர்.

    மதுரை:

    மதுரை அரசு மீனாட்சி கலைக் கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக கல்லூரி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் ஆணையை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க அவரது வழிகாட்டுதலின்படி அரசு கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பல வகை தொழில் நுட்ப கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கான 2024-25 ஆண்டுக்கான பணி மாறுதல் திணை வழியாக ஒளிவு மறைவு அற்ற பொது கலந்தாய்வு நடத்த உத்தரவு விடப்பட்டது.

    அதன் அடிப்படையில் இணைய வழியாக மனு செய்த 377 ஆசிரியர்களின் மனுக்களில் தகுதி உடைய 198 நபர்களுக்கு பணி மாறுதல் ஆணை இன்று வழங்கப்பட்டுள்ளது. அதே போல் தொழில்நுட்பக் கல்லூரியில் பணிபுரியும் 285 நபர்களின் மனுக்கள் பெறப்பட்டு தகுதியுடைய 93 பணியிடங்களுக்கு பணி மாறுதல் ஆணையும் இன்று வழங்கப்பட்டது.

    இதுவரை இல்லாத நிலையில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்று எந்தவொரு ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படைத்த்தன்மையுடன் இந்த அரசு செயல்படுகிறது. பல்கலைக் கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் கவர்னரால் எந்த அளவுக்கு இடர்பாடுகள் நிலவுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

    மாநில உரிமை, பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் நலனை பேணி காப்பதில் முதல்வர் கவனமாக உள்ளார். அத்துடன் அந்த விஷயத்தில் முதலமைச்சர் கண்ணும் கருத்துமாக இருந்து எங்களுக்கு அறிவுரை கூறி வருகிறார். முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் விரைவில் துணைவேந்தர் நியமனம் செய்யப்படுவர். அந்த பணியும் விரைவில் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ள்ளிகளில் கல்வி சார், கல்வி இணை நிகழ்வுகளுக்கான வழிகாட்டு நெறி முறைகள் வழக்கப்பட்டு உள்ளது.
    • போக்சோ சட்டம் குறித்தும் பள்ளி முதல்வர்கள் மூலமாக ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பள்ளி மாணவியர்களிடம் ஒழுக்கக்கேடான முறையில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், தண்டனை வழங்குதல், கட்டாய பணி ஓய்வு, பணி நீக்கம், பணியறவு மற்றும் அவர்களின் கல்விச் சான்றுகளை ரத்து செய்ய பரிந்துரைத்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிச்சாமி அதிரடியாக சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிச்சாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தாளாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு போக்சோ சட்டம் பள்ளிகளில் எஸ்.எஸ்.ஏ.சி. அமைப்பு மற்றும் பள்ளிகளில் கல்வி சார், கல்வி இணை நிகழ்வுகளுக்கான வழிகாட்டு நெறி முறைகள் வழக்கப்பட்டு உள்ளது.

    பள்ளி மாணவியர்களிடம் ஒழுக்கக் கேடான முறையில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன் தண்டனை வழங்குதல், கட்டாய பணி ஓய்வு, பணி நீக்கம், பணி யறவு, மற்றும் அவர்களின் கல்விச் சான்றுகளை ரத்து செய்ய பரிந்துரைத்தல் போன்றவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல் தொடர்பாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, அனைத்து பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு ஆணையிடப்பட்டுள்ளது.

    அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் அனுப்பப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு பள்ளிகளிலும் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் தடுப்பு தொடர்பான தகவல்களை அனைத்து மாணவர்களுக்கும் காலை வழிபாட்டு கூட்டத்தில் ஆசிரியர்கள் விளக்கி கூறுதல் வேண்டும். மாணவர் மனசுப் பெட்டி, 14417 மற்றும் 10980 ஆகிய தொடர்பு எண்கள், மாணவிகள் அறிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் என்.எஸ்.எஸ்., என்.சி.சி. ஸ்கவுட் கைடும், ஜே.ஆர்.சி. போம் அமைப்புகள் பள்ளிகளின் செயல்படுத்துவதற்கு முறையான அனுமதி பெற்றிருத்தல் மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு நடத்துதல் சார்ந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் (போக்சோ) சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையத்தால் குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வெளியிடப்பட்ட யூடியூப் வீடியோ-ஏ.எஸ்.ஓ. பள்ளியில் காண்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், மாவட்டக் கல்வி அலுவலர்களால் பள்ளி முதல்வர்களுக்கு நடத்தப்படும் மாதாந்திரக் கூட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    என்.சி.சி. ஜே.ஆர் சி மற்றும் சாரண-சாரணியர் இயக்கம் போன்ற அமைப்புகள் செயல்படும் பள்ளிகளை முறையாக கண்காணிக்க வேண்டும். இவ்வமைப்புகள் செயல்படும் பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்களா என்பதை பள்ளி ஆய்வு மற்றும் ஆண்டு ஆய்வின்போது உறுதி செய்ய வேண்டும். மேலும் போக்சோ சட்டம் குறித்தும் பள்ளி முதல்வர்கள் மூலமாக ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    பள்ளிகளில் கல்வி சார், கல்வி இணை நிகழ்வுகளுக்கான அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கும் பொருட்டு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தனியார் பள்ளிகள்) அனுப்பப்பட்டுள்ளது.

    ஒரு சில மாவட்டங்களில் இருந்து மாணவிகள் மீது ஒழுக்கக்கேடான செயல்பாடுகள் நடைபெறுவதாக புகார்கள் வரப்பெற்று உள்ளன.

    எனவே அனைத்து பள்ளி முதல்வர் , தாளாளர், ஆசிரியர்கள் ஆசிரியரல்லாத பணியார்களுக்கு மாவட்டக் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் நலத்துறை அலுவலர்கள் சுகாதாரத்துறை அலுவர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்கள் ஆகியோர்களைக் கொண்டு பயிற்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆன்மிக மையம் அமைக்கவோ, கலாச்சார மையம் அமைக்கவோ பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
    • எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மக்களை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் திருவிடந்தைக்கு அருகில் 233 ஏக்கர் நிலப்பரப்பில் ஆன்மிகம் மற்றும் கலாச்சார மையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இத்திட்டத்திற்கு மீனவ மக்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்தும் கூட அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஆன்மிக மையம் அமைக்க இந்து சமய அறநிலையத்துறையும், சுற்றுலாத்துறையும் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

    ஆன்மிக மையம் அமைக்கவோ, கலாச்சார மையம் அமைக்கவோ பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, தமிழ்நாட்டின் பூர்வகுடி மக்களான மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து விட்டு, அந்த மையங்களை அமைக்க வேண்டுமா? என்பது தான் எனது வினா.

    ஆன்மிக மற்றும் கலாச்சார மையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடத்தை தான் மீனவர்கள் அவர்களின் படகுகளை நிறுத்துவது, வலைகள் மற்றும் மீன்களை காய வைப்பது போன்றவற்றுக்காக பயன்படுத்தி வந்தனர். இப்போது அங்கு ஆன்மிக மையம் அமைக்கப்பட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.

    திருவிடந்தையில் ஆன்மிக மற்றும் கலாச்சார மையம் அமைக்கும் திட்டம் மீனவர்களை மட்டுமின்றி, பேரிடர்களுக்கும் வழி வகுக்கும். ஆன்மிக மையம் அமைக்கப்படுவதற்கு அருகில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களில் இயற்கையான மணல் மேடுகள் உள்ளன.

    அவை சுனாமி அலைகளைக் கூட தடுக்கும் வல்லமை பெற்றவை. இந்தத் திட்டத்திற்காக அவை அகற்றப்படும் என்று கூறப்படும் நிலையில், சுனாமியிலிருந்து திருவிடந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு கிடைக்காது. அந்தப் பகுதி தான் நிலத்தடி நீர்வளத்தை சேமிக்கும் தளங்களைக் கொண்டிருக்கிறது. இயற்கையையும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் சிதைத்து விட்டு ஆன்மிக , கலாச்சார மையம் அமைக்க வேண்டுமா? என தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

    ஆன்மிக, கலாச்சார மையம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிப்பதில் காட்டப்பட்ட அசாத்திய வேகம் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கான மாநில அளவிலான சுற்றுச்சூழல் அனுமதி ஒரே நாளில் வழங்கப்பட்டதாகவும், அதுகுறித்த கூட்டத்தில் மீனவ சமுதாய பிரதிநிதிகள் ஒருவர் கூட அழைக்கப்படவில்லை என்றும் மீனவ அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மக்களை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது; உள்ளூர் மக்களால் வரவேற்கப்படும் வகையில் இருக்க வேண்டும். இந்த இரு தகுதிகளையும் பெறாத ஆன்மிக, கலாச்சார மையத்தை திருவிடந்தை பகுதியில் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மறைமலை அடிகளார் பேத்தியும், பட்டதாரியுமான லலிதா தஞ்சாவூர், கீழவாசல், டபீர்குளம் பகுதியில் வசித்து வருகிறார்.
    • ஏழை, எளிய மக்களுடைய நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் மாபெரும் பேரியக்கமாகும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புகழ் பெற்ற தமிழறிஞரும், 'தமிழ் தந்தை' என போற்றப்படுபவருமான மறைமலை அடிகளார் பேத்தியும், பட்டதாரியுமான லலிதா தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தஞ்சாவூர், கீழவாசல், டபீர்குளம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், வீட்டு வாடகை கொடுப்பதற்குக் கூட போதிய வருமானம் இல்லாமல் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாகவும் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஏழை, எளிய மக்களுடைய நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் மாபெரும் பேரியக்கமாகும். அந்த வகையில், 'தமிழ் தந்தை' மறைமலை அடிகளார் பேத்தி லலிதா குடும்பத்திற்கு, அ.தி.மு.க. சார்பில், குடும்ப நல நிதியுதவியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பொதுமக்கள் அனைவருக்கும் தங்குதடையின்றி ஆவின் பால் விநியோகம் செய்யப்படும்.
    • 8 கடைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெறுகிறது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த 'Fengal' என்ற பெயர் சூட்டப்பட்ட உள்ளது.

    இதனிடையே இந்த Fengal புயல் இலங்கை கடற்கரையை தொட்டபடி தமிழ்நாட்டி நோக்கி நகருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் எனவும் 12-20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 4 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், கனமழையை கருத்தில் கொண்டு சென்னையில் 24 மணிநேரமும் ஆவின் சேவை இயங்கும் என அரசு தெரிவித்துள்ளது.

    பொதுமக்கள் அனைவருக்கும் தங்குதடையின்றி ஆவின் பால் விநியோகம் செய்யப்படும் என்றும் அதிகபட்சமாக ஒருவர் 4 பால் பாக்கெட்டுகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக விற்பனை நிலையம் அமைத்து ஆவின் பால் பவுடர் மற்றும் பால் விநியோகக்கப்படும்.

    அண்ணாநகர் டவர், மாதவரம் பால்பண்ணை, வண்ணாந்துரை, பெசன்ட் நகர், வசந்தம் காலனி, அண்ணாநகர் கிழக்கு, சோழிங்கநல்லூர் பால்பண்ணை, விருகம்பாக்கம், சி.பி.இராமசாமி சாலை ஆகிய 8 கடைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வி.சி.க. தலைவர் திருமாவளவன் எடுக்கும் நிலைப்பாட்டை நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக அ.தி.மு.க. கூறுகிறது.
    • த.வெ.க. தலைவர் விஜய், கட்சி தூண்டிலை யாருக்கு போடுகிறார்கள் என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தான்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சீர்காழி சட்டமன்ற தொகுதி நிர்வாக சீரமைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தாமு.இனியவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மேலிட பொறுப்பாளரும், நாகை தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஷா நவாஸ் பங்கேற்று பேசினார் அப்போது அவர் கூறுகையில்:-

    கட்சியை மறுசீரமைத்து அதை உயிரோட்டமாக உயிர்ப்போடு வைத்திருப்பதில் முனைப்போடு இருப்பவர் நமது வி.சி.க. தலைவர் திருமாவளவன். மறு சீரமைப்பு நடவடிக்கையால் தான் தலித் அல்லாதவர்கள் இக்கட்சியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று வேளச்சேரி தீர்மானம் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது. பொதுமக்கள் வாக்களித்து இது பொது கட்சிதான் என அங்கீகரித்துள்ளனர்.

    அதன் விளைவாக தான் இன்று 2 எம்.பி.க்கள், 4 எம்.எல்.ஏ.க்கள், கடலூரில் துணை மேயர் மற்றும் பல்வேறு நகராட்சி, ஊராட்சிகளில் உறுப்பினர்கள் என மிகப்பெரிய கட்சியாக வி.சி.க. வடிவம் பெற்றுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் ஒரு நாள் கூட அரசியல் விவாதங்கள் நடைபெறுவதில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த கூட்டணியில் தொடர போகிறதா? அந்த கூட்டணிக்கு போகபோகிறதா? என்று தான் அரசியல் வட்டாரங்கள் பேசி கொண்டுள்ளனர்.

    வி.சி.க. தலைவர் திருமாவளவன் எடுக்கும் நிலைப்பாட்டை நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக அ.தி.மு.க. கூறுகிறது. திருமாவளவன் அரசியல் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். திருமாவளவன் எடுக்கும் நிலைப்பாடு தான் இன்று அரசியலயே தீர்மானிக்க போகிறது என்ற நிலைக்கு வி.சி.க. வளர்ந்துள்ளது. புதிதாக வரக்கூடிய கட்சிகளும் யாரை எதிர்பார்க்கிறார்களோ, இல்லையோ விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதிர்பார்க்கின்றனர்.

    விக்கிரவாண்டியில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திய த.வெ.க. தலைவர் விஜய், கட்சி தூண்டிலை யாருக்கு போடுகிறார்கள் என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பால அறவாழி, பரசு முருகையன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா, தங்க மணிமாறன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×